ஏழைகள்
By N.Natarajan
5/5
()
About this ebook
ஏழ்மை கொடியது. ஏழ்மைக்குக் காரணம் (1) ஏழைகள் அறியாமை - கற்பதில் ஆர்வம் இல்லாமை சிந்திக்கும் திறன் இல்லாமை. (2) அரசியல் தலைவர்கள் - அறியாமையை பயன் படுத்தி ஏழ்மையை வளர்த்து வரும் அரசாங்கம்.
இந்தப் புத்தகத்திலே, ஏழைகளின் ஏழ்மைக்குக் காரணங்கள். இதைப் படித்து ஏழ்மைக்குக் காரணமான பலவற்றை தவிர்க்கலாம்.
அடுத்த புத்தகம் ஏழைகள் செல்வந்தராவது எப்படி என்பது.
N.Natarajan
Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.
Read more from N.Natarajan
ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5மனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsவேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் செல்வந்தராவது எப்படி? Rating: 5 out of 5 stars5/5என் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஅடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் Rating: 0 out of 5 stars0 ratings
Related to ஏழைகள்
Related ebooks
Nirangal Iranthana Rating: 2 out of 5 stars2/5Karunaagapura Giraamam Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsSithra Salabam Rating: 0 out of 5 stars0 ratingsVeduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsPani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsMaakolam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Thedalgal Rating: 0 out of 5 stars0 ratingsKasangiya Kaakithangal Rating: 0 out of 5 stars0 ratingsகருநாகபுர கிராமம் Rating: 0 out of 5 stars0 ratingsIthanai Naalai Engirunthai? Rating: 5 out of 5 stars5/5Thoorangal Nagarkindrana Rating: 5 out of 5 stars5/5Gyanaguru Happiness - January 2024 Rating: 0 out of 5 stars0 ratingsAvan Rating: 3 out of 5 stars3/5வானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsKal Vaazhai Rating: 0 out of 5 stars0 ratingsகாதலடி நீ எனக்கு..! Rating: 0 out of 5 stars0 ratingsமனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsThotti Meengal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayaraagam Rating: 5 out of 5 stars5/5Nambikkai Vetri Perum Rating: 0 out of 5 stars0 ratingsBoodha Kannadi Samy! Rating: 0 out of 5 stars0 ratingsMugam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for ஏழைகள்
1 rating0 reviews
Book preview
ஏழைகள் - N.Natarajan
Publishing Particulars
Title
ஏழைகள்
Author
N. நடராஜன் .
Smashwords.com
CONTENTS
1 முன்னுறை
2 ஏழைகள் பலவிதம்
3 ஏழைகளில் பலர் , ஏழைகளாவே வாழ்ந்து சாவத்துக்கு பொருப்பு யாராயிருக்கும் ?
4 சில பிரபலமான ஏழைகள் .
5 சில கடந்த கால ( மாஜி ) ஏழைகள் .
6 நாம் இரண்டு வழிகளில் ஏழையாகிறோம்
7 தான் விரும்பாமலேயே நாம் ஏழையாவது ஏன் ?
8 கடவுளும் ஏழைகளும்
9 ஏழை இல்லாத ஒரு உலகம்
10 ஏழைகளை , ஏழ்மை ஏன் தொடர்கிறது ?
11 ஏழ்மையை ஓழிக்க ஏழைகளின் உதவி தேவை .
12 ஏழ்மையை விரட்ட என்ன செய்யணும் ? என்ன என்ன தெரியணும் ?
13 வேகமாக வரும் செல்வம் ,,,,,
14 கடவுளும் கந்தசாமி அண்ணனும் .
15 நல்ல வாழ்க்கை எது ? அறிவைத் தேடி , அறிவால் வாழ்வது .
முடிவுரை
முகவுறை
வாசக நண்பர்களே, இந்த புத்தகத்தோட சிறப்பு என்ன தெரியுமா?
கந்தசாமி அண்ணன்னு ஒரு நண்பர் சொல்லி, நான், எழுதினது. அது யாரு இந்த கந்தசாமி? அவரு என்ன ஒரு மேதாவியா. என்று நீங்க கேட்கலாம்.. சந்தேகமே இல்லை. மேதாவியே தான்.
கந்தசாமி, ஒரு சின்ன கிராமத்துலே பிறந்து, வளர்ந்து அரசாங்க பள்ளியில் பத்து கிளாஸ் வரை படிச்சுட்டு மிலிட்டரில்லே சேர்ந்தார். இந்தியாவுலே பல பகுதியிலே வாழ்ந்தவரு, இன்று படிச்ச பலருக்கு புத்தகம் படிக்கிற வழக்கமே கிடையாது. இவர் படிக்காத தலைப்பே இல்லை என்று சொல்லலாம். என்னோட புத்தகங்கள் எல்லாமே படிச்சு, எனக்கு ஒரு நல்ல ரசிகராயிட்டாரு.
எந்த புத்தகம் கெடச்சாலும் படிப்பாரு. அதுலேருந்து, தவறாம, அறிவு தேடிப் புடிப்பாரு.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டுக்கு வருவாரு. ஏழைகளோட பிரச்சனைகள், அதை எப்படி எல்லம் தீர்க்கலாம் என்பது குறித்து விவாதம் பண்ணுவாரு. என் புத்தகத்திலிருந்தே நிரைய பாயிண்டுகளே எடுத்து எனக்கே சொல்லுவாரு.
கந்தசாமி எதைச் சொன்னாலும், சொல்ற விதம் ரொம்ப எளிமையா இருக்கும். அவருடைய கற்றுத் தெளிந்த அறிவு, அனுபவ அறிவு என்ற இரண்டும் மட்டுமில்லாமல் அவரோட ஆன்மிக அறிவு கூட ரொம்ப ஆழந்தான்.
அவரு எப்போதும் சொல்கிற மாதிரி, எதக் கேட்டாலும், படிச்சாலும், பார்த்தாலும் இதிலிருந்து நாம கத்துக்கிட்டது என்னன்னு சிந்திக்கணும்.,
சும்மா பொழுது போக புத்தகத்தைப் புரட்டினால் ஒரு பிரயோசனமும் இல்லேம்பாரு.
ஏழையா பொறதுட்டேன்னு அழுதா பிரயோசனம் இல்லே. வாழ்கையிலே ஓடப்பழகனும். ஓஞ்சு உட்காந்து விடக் கூடாது என்பார்.
நாங்க இரண்டு பேரும் கலந்து, மனித்தன் ஏழையாகமல் இருப்பது எப்படி, ஏழைகள் ஏழ்மைய ஓட்டுவது எப்படின்னு ஆராச்சி பண்ணிட்டோம்.
இதை மிலிட்டரி கந்தசாமி அண்ணன், சொல்கிரார். படிக்கிறவங்க மனசிலே பதிய வைக்க, தகுந்த சில கதைகளையும் சில உண்மை நிகழ்ச்சிகளையும் உதாரணமாகச் சொல்லுவார்.
இப்போ, அருமை ஏழைகளே, (ஏழையாகும் விளிம்பில் இருப்பவர்களே) இந்த புத்தகத்தை கவனமாகப் படிங்க. ஏதாவது தெரியவில்லை என்றால் சொல்லுங்க, கந்தசாமி அண்ணணைக் கேட்டு பதில் போடறேன்.
இந்த புத்தகத்தைப் படிச்சுட்டு படிச்சதை மனசுலே கெட்டியா பதிச்சுருங்க. எந்த முடிவை எடுக்கும் முன்னாடி இதுலே கந்தசாமி அண்ணன் சொன்ன விசயம் ஏதாவது, கவனிக்க வேண்டியது இருக்கான்னு பாருங்க.
அப்படி இருந்துச்சுன்னா, அப்படியே கந்தசாமி அண்ணன் சொல்கிற மாதிரி செய்து விடுங்கள். அப்ப ஏழ்மை ஓடுதா இல்லியான்னு பாருங்க.
இப்போலேந்து கந்தசாமி சொல்லுவாரு, நான் அதை எழுதிடுவேன். அப்பப்ப சந்தேகம் வரப்போ அவரைக் கேள்வி கேப்பேன். என் கேள்வியையும் அவரு பதிலயும் அப்படியே எழுதிடுவேன்.
நடராஜன்
கந்தசாமி அண்ணனின் முகவுரை
அன்புள்ள ஏழைகளே
ஔவையாரு, சுப்பிரமணிய பாரதி, ராமலிங்க வள்ளலாரு இவர்களெல்லாம், ரொம்ப அறிவோட வாழ்ந்தவங்க மட்டுமில்லை. ஏழைகள் மேலே ரொம்ப கருணை உள்ளவங்க.
இந்த முணு பேரும், முக்கியமா, ஏழ்மையப் பற்றி, பசிக் கொடுமையைப் பற்றியும், சுத்தமா தெரிஞ்சவங்க.
அவங்களுக்கு என் வணக்கத்தைச் சொல்லி நான் சொல்ல வந்ததை ஆரம்பிக்கறேன்.
ஏழைகள் கறிவேப்பிலை மாதிரி:
ஏழைங்க பெருமைப்படக் கூட நிறைய இருக்கு. அதைப் போகப் போக பார்க்கலாம்.
சமையலுக்கு கறிவேப்பிலை எத்தனை அவசியமோ அதைவிட, ஏழைங்க சமுதாயத்திற்கு ரொம்ப ரொம்ப அவசியமானவங்க.
கறிவேப்பிலை இல்லாம கூட சமையல் செய்யலாம். ஆனால் ஏழைகள் இல்லாம அரசியலும் சரி ஆண்டவனும் சரி அழிஞ்சிருவாங்க. இது உறுதி.
அட அரசியல் அழிவது புரிகிறது, ஆனால் ஆண்டவன் ... புரியலியேன்னு சொல்லுவீங்க!! அதை இப்போதைக்கு மனசு ஓரத்திலே வச்சிருங்க.
ஓட்டங்கள் என்ற தலைப்பில் வரும் ஒரு புத்தகம், நடராஜன் சாரு எழுதராரு. அதப்பத்தி என்னுடன் நிரைய விவாதம் பண்ணுவாரு. அது ஆண்டவனை எப்படி அழிய வைக்கும். சுத்தமா புரிய வைக்கும். இப்போதக்கி, நாம கறிவேப்பிலைக்குப் போயிருவோம்.
எல்லோரும் கறிவேப்பிலையை கடையிலேருந்து தவறாம வாங்கி வருவாங்க. பத்திரமாக அதப் பாதுகாத்து, கழுவி, கறியிலே போட்டு விடுவாங்க. சமைச்ச பிறகு, முதல் வேலையா, கறிவேப்பிலையே தனியாக பிரிச்சு எடுத்து எறிஞ்சுடுவாங்க இல்லீங்களா?
ஏழைங்களோட நிலைமயும் அப்படித் தான். ஏன்? பின் வரும் பக்கங்கள்ள விவரமா பாத்துருவோம்.
கிரிகெட் ஆடரவுங்க, சினிமா நடிகருங்க அரசியல் வாதிகளைப் பற்றி சுருக்கம்மா பணக்காரனப் பற்றி எல்லோரும் புத்தகம் போடராங்க டிவிலே செய்தியா வரும் பத்திரிக்கையிலே பக்கம் பக்கமா எழுதுவாங்க..
ஏழைங்களே பத்தி, அவங்க கஷ்டம் என்னா? அவங்களை எப்படி நல்லா வாழ வைக்கலாம் என்று யாராவதும் ஒரே ஒரு புத்தகமானும் எழுதிருக்காங்களா?
இதுவரை யாரும் எழுதல்லே. இப்போ நானும். நடராஜன் சாருமா சேர்ந்து இதே எழுதறோம்.
ஏழைகளே, கவலையை விட்டிருங்க. இதைச் சுத்தமா படித்து புரிந்து கொண்டு, உங்கள் ஏழ்மையை தரும் துயரை ஓட ஓட விரட்டுங்க.
ராணுவத்திலே வேலை பாத்து, நாட்டுலே மூல முடுக்குலெல்லாம் வாழ்ந்திருக்கேன். பட்டப்படிப்பு எதுவும் படிக்கல்லே. கதைகள், சரித்திரம் மட்டுமில்லே செய்திகளில் வரக்கூடிய பல விசயங்களை, உதாரணமா நாட்டு நடப்பு, உள்ளூர் செய்தி, உலகச் செய்தி, பொருளாதாரம், நல்லது, கெட்டது என்று நிரைய படிச்சிருக்கேன். நாலு விசயம் தெரிஞ்சவங்களோட விவாதம் பண்ணுவேன்.
ஆனாலும் பெரிய படிப்பு படிச்சவனுக்கு தெரியாத பல விசயங்களே பளிச்சுன்னு சொல்வதிலே எனக்கு வரமாதிரி ஒரு திறமை, பட்டம் வாங்கினவன் பலருக்கும் இல்லேன்னு நடராஜன் சாரு அடிக்கடி சொல்லுவாரு.
நிரைய ஆளுங்க (குறிப்பா தலைவர்கள்) ஏழையா பிறந்துட்டு, தனக்கு நல்ல வாழ்வு வந்த உடனே ஏழையோட பிரச்சனை மறந்துடுவாங்க. அது கூட பரவாயில்லே, நம்ம மத்தியிலேயே வாழ்ந்து நம்மளையே ஏழையாக்குகிற மனுசங்களையும் தெரியும்.
கந்துவட்டி மீட்டர் வட்டிக்கு கடன் தருவது பிர்லாவோ அம்பானியோ இல்லை. நல்ல வாழ்வு வந்த சில முன்னாள் ஏழைகள்தான். ஒன்றும் அறியாத ஏழைகளை கெட்ட பணக்காரர்களுடைய அடிமையா மாத்துகிர வேலை எல்லாம் செய்கிறது யாரோட வேலை? வேகமா பணக்காரனானாகத் துடிக்கிர ஒர் ஏழைதான்.
நான் அப்படி ஒரு ஆளு இல்லை. இப்போ மிலிட்டரி வேலை பாத்து ரிட்டயராகி பென்சன் வாங்கிட்டுருக்கேன். இப்ப நான் ஏழை இல்லேன்னு ஒதுங்கிற டைப் இல்லே.
ஏழைங்க வறுமைய தொலச்சிட்டு நல்லா வாழரது எப்படி என்று கண்டுபிடிக்கறதுலேயும், அதே செயல் படுத்தரதுலேயும் மும்முரமா இருக்கேன்.
ஏழைகளே, இந்த புத்தகத்துலே எல்லாத்தையும் புட்டு புட்டு வைதிருக்கிறோம். நல்லா படிச்சு மனசிலே வாங்கி, மறந்துடாம அதுபடி வாழறதுன்னு முடிவு செய்து விட்டால், உங்களோட வறுமை ஓடிடும். உங்க பலம் மற்றும் பலவீனம் எல்லாத்தையும் நீங்களே தெரிந்து கொள்ள உதவும்.
அந்த அறிவு இருக்கே, அது உங்களை பிறவியிலிருந்து பிடிச்சிருக்குற ஏழ்மையை அறுத்து ஏறியவும், விடாமல் விரட்டும் கஷ்டதிலேருந்து விடுதலையும் கிடைக்க உதவும்.
ஏழ்மையைக் விரட்டறது ரொம்ப சுலபம் தான். ஆனா கொஞ்ச ஏழைங்கதான் ஏழ்மைய விரட்ட முயற்சி எடுக்கிறார்கள்.
அதிலேயும் கொஞ்சம் பேரு தப்பான வழிலே பணம் பண்ணப் போறாங்க. அப்புரமா ரொம்ப வேதனப் படராங்க. முதலில் நாலு காசு சேத்துட்டா தனக்கு அதிகமா மூளை இருக்கிறதா கணக்கு போடராங்க. அடிவாங்கி அவதிப்படும் வரை தவறான வழியிலே