Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்
மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்
மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்
Ebook151 pages2 hours

மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அறிவுன்னா என்ன? கல்வித்திட்டதுலே படிச்ச எல்லாருக்குமே ஏன் அறிவு கிடைக்கல்லே? அறிவை விடுங்க, உயர்கல்வி படிச்சு பட்டம் வாங்கின எல்லோருக்கும் ஒரு வேளை சோத்துக்காவது வழி கிடைச்சுதா?
சிந்தனையின்னா என்ன? நம்ம கல்வித்திட்டத்திலே சிந்தனை செய்ய சொல்லிக் கொடுக்கிறார்களா?
கல்வித்திட்டத்தின் மூலம் நாம் அறிவாளியாகவும் , பேரறிவாளியாகவும் மாறுவது எப்படி?
ஆனால் கல்வியாளர்களும், தலைவர்களும், இதை ஏற்பதில்லை. மக்கள் எழுச்சியுற்றால் மாத்திரமே பயன் தரும் கல்வி
மாணவருக்கும், சமுதாயத்திற்கும் பயன் தரும். சுமார் 11 கோடி பட்டதாரிகள் (2011 சென்சஸ் தெரிவிப்பது) வேலை தேடுகிறார்கள்.
வேலை கிடைக்காவிட்டால் செய்த செலவு, கழித்த நேரம் அத்தனையும் வீண், இல்லையா?

Languageதமிழ்
PublisherN.Natarajan
Release dateMar 21, 2015
ISBN9781311536921
மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்
Author

N.Natarajan

Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.

Read more from N.Natarajan

Related authors

Related to மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்

Related ebooks

Reviews for மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள்

Rating: 4.75 out of 5 stars
5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் - N.Natarajan

    Publishing Particulars

    புத்தகத் தலைப்பு;

    அறிவாளியாகவும் பேரறிவாளியாகவும் மாறுவது எப்படி.

    ஆசிரியர்:

    Natarajan.naga@gmail.com

    முதல் பதிப்பு: 2013

    CONTENTS

    0. இந்தப் புத்தகத்தை, எழுதக் காரணமான, மற்றும் உதவிய என் நண்பர், மிலிடரி கந்தசாமி அண்ணன். ஒரு அறிமுகம்

    1. அறிவுள்ளவரும் அறிவில்லாதவரும்

    2 ஒட்டுக் கேட்ட உரையாடல்கள்

    3 அறிவுள்ளவனும், அறிவில்லாதவனும்

    4. ஒரு பட்டதாரியின் குமுறல்

    5. ஞானிகளும் அறிவும்

    6. அறிவும் சீன ஞானிகளும்

    7 வாழ்வின் இரு பெரும் பாதைகள் - அறிவும் - நம்பிக்கையும் .

    8. கல்விக் கூடங்களா? இல்லை, கல்விக் கோவில்களா?

    9 அறிவின் ஆழங்களும் -அறிவைத் தேடும் விதங்களும்.

    10. சிந்தனை செய்தால்- கிடைக்கின்ற செய்தியை அறிவா மாத்தலாம்

    11. பேரறிவாளராக மாற என்ன செய்யணும்?

    12. தோரணங்கள் கட்டி பேரறிவாளராவது எப்படி?.

    13. வரிவடிவங்கள் - (Patterns)

    14. யாருக்கு, எந்த விதமான கல்வி, எந்த அளவு தேவை?

    முடிவுரை

    ஒரு அறிமுகம்

    கந்தசாமி அண்ணன் என்கிற ஒரு நண்பர், ஒரு கிராமத்திலே 10 கிளாஸ் வரை படிச்சு, வளந்து, மிலிட்டிரிலே சேர்ந்து, இந்தியாவின் பல பாகங்களிலே வேலை செஞ்சிருக்காரு,

    ரிடையரானப்புரம், சொந்த ஊருக்கே திரும்பி வந்து அங்கேயே செட்டில் ஆயிட்டாரு. அவரோட அனுபஅறிவு, சமூகநோக்கம், பரந்த மனப்பான்மை, கடினமான எந்த செய்தியையும் எளிமையா விளக்கும் திறமை, வசதி வந்தும் கூட ஒரு எளிமையான வாழ்க்கையை நடத்துகிற மனம், ஏழைகள் மீது இரக்கம் எல்லாமே, என்னை மிகவும் கவர்ந்தது.

    கந்தசாமி அண்ணனை ஒரு நாள் பாத்து பேசாட்ட தூக்கம் கூட வராதுன்னா பாருங்களேன்.

    அவர், என்னோட ஏழைகள் (ஏழைகள் வறுமையைத் தொலைப்பது எப்படின்னு) என்கிற புத்தகம் சிறப்பா அமைய ஒரே ஒரு காரணம், கந்தசாமி அண்ணனின் முழு ஈடுபாடு.

    அவரோட பேரை ஒரு இணை எழுத்தாளரா, போட்டுக்கறேன் என்று சொன்னப்போ, தீர்மானமாக, தீவிரமாக மறுத்துவிட்டார். கந்தசாமி அண்ணனுக்கு, இந்த புத்தகத்தை அர்ப்பணிக்கிறேன்,

    என். நடராஜன்

    பங்களூரு

    முகவுரை

    இரு எழுத்தாளர்கள், இணைந்து உரையாடலாக ஒரு முகவுரை.

    கந்தசாமி:  வாசகர்கள், இந்த புத்தகத்தைப் படிச்சதோட பயனை முழுவதா அடையுணுமின்னா, ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கையை அல்லது செய்தித் தாளைப் புரட்டுவதைப் போலப் படிக்கக் கூடாது.

    நடராஜன் : வாரப் பத்திரிக்கை அல்லது செய்தித்தாள் படிக்கிறது அவசியம் இல்லை என்று சொல்ரீங்ளா?

    கந்தசாமி: அப்படித் தப்பா நினைக்க வேண்டாம். அறிவு இல்லாத இடம் அண்டத்திலே எங்கேயும் இல்லை. வாழ்க்கையிலே நம்மச் சுத்தி நடக்கிறதை அறிவது ரொம்ப அவசியம். அதைத் தெரிஞ்சுக்காம நலமா வாழமுடியாது.

    நடராஜன்:  நாம செய்தித் தாளிலே படிக்கிற செய்தி மற்றும் பத்திரிக்கைகளிலே படிக்கிற கதைகள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குத்தான் பயன்படும். அதனாலே, இவை எல்லாமே தன்னிச்சையாக மனதிலே இருந்து அல்லது நினைவுகளே இருந்து கலைஞ்சு இல்லேன்னா கரைஞ்சு போயிடுமில்லையா?

    கந்தசாமி:  அப்படிப் படிகிறபோது, செய்தியிலே அடங்கிய அறிவுவைப் பிரிச்சு சேமிச்சு வச்சிகிட்டப்புரம், மற்றது மறந்து போனாத் தப்பில்லே. ஆனா அதுக்கு முறையான வழி வகை ஏதும் நம்ம முறையா தெரிஞ்சுக்கல்லே.

    நடராஜன்: நமக்கு, ஏன் படிக்கிற, கேக்கிற பல செய்திகள் மறந்து போகுது? கல்வியோட பயன் மக்களுக்கு ஏன் முழுவதா கிடைக்கல்லேன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ரீங்களா?

    கந்தசாமி: அறிவை அடைய மூணு விஷயம் வேணும்.

    மொதல்லே நினைவாற்றல். நம்ம எல்லாரோட மனசுக்குள்ளாரேயும் ஒரு சேமிப்பு அறை, இல்லேனா ஒரு சேமிப்புப் பெட்டி இருக்கறதா நெனைச்சுப்போம். இயற்கையோ, இல்லை, இறைவனோ (சரியாகத் தெரியவில்லை) பொறக்கறப்போ எல்லாருக்கும் சின்னதாத்தான் சேமிக்கிற பெட்டியத் தந்திருக்கு. அதுலே நன்மையும் இருக்கு. தீமையும் இருக்கு. சரியா பயன் படுத்தினா வாழ்க்கை வளமாவும் மனசு மகிழ்ச்சியாவும் இருக்கும். இல்லையினா தொல்லைதான்.

    எல்லா நினைவுகளும் அங்கே போய் சேருதா? சின்ன வயசிலே துக்கமான செய்திகள் அதிகம் வரும். அது போயி சேமிப்புப் பெட்டிலே அடைஞ்சுட்டா சீக்கிரமே நிரம்பி வழிய ஆரம்பிச்சுடும். புதிசா கிடைக்கிற நல்ல செய்தி சேர இடமில்லாம ஆயிடும். அதுமேலேதான் நம்ம சிந்தனை ஓடிக்கிட்டுருக்கும்.

    நாம வளர வளர, நினைவாற்றலையும் சிறிய பயிற்சிகள் செஞ்சு வளத்துக்கலாம். பள்ளிக்கூடம் போறோம். அங்கே படிச்சதை சேர்க்க, மொதமொதல்லே, ஒரு நியாயமான காரணத்துக்குக்காக மனசுலே சேமிப்பிடம் தேவைப்படுது.

    அதுக்கப்புரம் வேலைக்கி போயி, குடித்தனம் பண்ற காலம் எல்லாம் கடந்து, சாவர வரைக்கும் செய்தி மற்றும் சேர்த்த அறிவைச் சேர்க்க இடம் தேவைப் படுது. சேமிப்பு பெட்டிய பெரிசு பண்ணிக்கிட்டே போகணும். தேவையில்லாத எல்லாத்தையும் மனசிலேருந்து வெளியேற்ற பழகனும். எல்லாமா சேர்த்து, அவசியமான அறிவு மனசுலேருந்து காணப் போகாம செய்யரத்துக்கு நினைவாற்றல் என்கிறோம்.

    நடராஜன்:  சரி, அடுத்த ரெண்டு என்ன?

    கந்தசாமி: நமக்கு, படிச்சு, கேட்டு, பார்க்கிறதுலே நெரய செய்தியா நமக்கு வருது. அதைத்தான், இந்த சேமிப்புப் பெட்டிலே அடைச்சு வச்சு அதைத் தான் அறிவுன்னு பயன் படுத்துறோம். நாம் பெரும்பாலும் அடைவது செய்திகள்தான். அறிவல்ல. செய்திகள் அறிவை அடையரத்துக்கு ஒரு மூலப்பொருள்.

    நடராஜன்: செய்திகள் அரிசி, காய்கறி மாதிரி இல்லையா? அதை வச்சு சாப்பாடு செய்யலாம். அப்படித்தானே?

    கந்தசாமி: சுத்தமா சொல்லிட்டீங்க. அதிலே கூட மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள பொருளைச் சமைக்காம சாப்பிடலாம். பழ வகைகளை ஒரு உதாரணமா சொல்லிடலாம். செய்தியும் அப்படித்தான். சில செய்திகளே அறிவாகும். காய்கறிகளை சமைச்சு உணவா மாத்தரோம் இல்லியா, அப்படியே செய்தியையும் சிந்தனை செய்தால், அது அறிவா மாறிடும். இது இரண்டாவது.

    நடராஜன்: அது என்னமா, அறிவையும் உணைவையும் சுலபமா இணைச்சுட்டீங்க?

    கந்தசாமி: இது ஒரு பெரிய விஷயம் இல்லீங்க. இயற்கையிலே பல நிகழ்வுகள்ளோட வரிவடிவங்களிலே ஒத்துமை இருக்கு. இதை ஆங்கிலத்துலே (Patterns) என்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுகளை கொஞ்சம் கவனமா பாத்தா, இதோட நாம ஏற்கனவே அறிஞ்சதோட ஒத்துப் பார்த்து கவனிச்சாலே போதும். டப்புனு பிடிச்சிடலாம்.

    நடராஜன்: அப்ப அறிவு தயாரா என்றுமே எங்குமே கிடைக்காதா?

    கந்தசாமி: ஏன் இல்லை? திருக்குரள், ஆத்திச்சூடி என்று ஆரம்பிச்சு ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கு. சிந்தனையில் சிறந்த, கருணை மிகுந்த மகான்கள் தயாரிச்சு வைத்த அறிவுக் குவியல்கள்.

    புரியாதவனுக்கும் புரியவைக்க அறிவு புதைக்கப்பட்ட கதைகள் ஆயிரமாயிரம். அதுலே எல்லாமே அறிவு, ரெடிமேட் சட்டை பேண்ட்போல, தயாரா, விதவிதமா தயாரா இருக்கு.

    ஆனா, அதைக் கூட படிச்சுத் தெரிஞ்சுகிட்டு பயனடைய அறிவு தேவைப்படுது. நம்ம மக்கள் ஒரு தமாசான ஆளுங்க. இதை எதையும் திரும்பிக்கூட பாக்க மாட்டாங்க.

    நடராஜன்: குற்றவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், பொரியியல் நிபுணர்கள் கூட தங்கள் வேலையைச் செய்ய இந்த அணுகு முறைத்தான் பின்பற்றுகிறார்கள் இல்லையா? சாதாரண மற்ற நான்கு முறைச் சிந்தனைகளோடு கலக்காமல், தனியா பேரளிவானவரா எப்படி மாறுவது என்று தனியா பாக்கப் போறோம் என்று சொன்னீங்க. மூணாவது என்ன?

    கந்தசாமி: செய்தியைச் சிந்திச்சு அறிவா மாத்தினதை தோரணமா தொங்கப் போடணும். இது மூணாவது.

    நடராஜன்: இது என்ன புதிசா சாப்பாடுலேந்து, அரசியலுக்கு தாவிட்டீங்க?

    கந்தசாமி: நட்ராஜ்சார். கொஞ்சம் கவனிங்க. தோரணம் அரசியல் இரண்டையும் இணைசீங்க சரி. வேறே எங்கெல்லாம் தோரணம் கட்டறோம்? கோவில் திருவிழாக்களிலே தோரணம் கட்டுறோம். துணியினால சின்னச் சின்ன கட்சிக் கொடி பண்ணித் தோரணம் பண்றோம். வீட்டிலே எப்போ என்ன விசேஷம் கொண்டாடினாலும் மாவிலையிலலையிலே, பூவுலே தோரணம் செஞ்சு கட்டறோம்.

    எல்லா வீட்டிலேயும் துணியத் தோச்சு தோரணமா கட்றோம்.

    Enjoying the preview?
    Page 1 of 1