Olindhirukkiren
5/5
()
About this ebook
Related categories
Reviews for Olindhirukkiren
3 ratings0 reviews
Book preview
Olindhirukkiren - Indira Soundarrajan
http://www.pustaka.co.in
ஒளிந்திருக்கிறேன்
Olindhirukkiren
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
‘டேவிட் கோவர்’ என்று வெளிநாட்டுக்காரர். இவர் இந்து மதத்தால் கவரப்பட்டு இந்தியா வந்தார். புத்தகங்கள் வாயிலாக இந்து மதம் பற்றி அறிந்திருந்த இவர் தனக்கு வழிகாட்டி அருளுரை கூறிட ஒரு ஞான குருவைத் தேடி அலைந்தார். இறுதியில் ஒரு பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலம் வரும் சமயம் ஒரு குருவிடம் ஒன்றினார். அவர் பார்ப்பதற்குப் பரதேசி போல இருந்தார். ஆனால் உடம்பில் இருந்து வாசம் வீசியது. டேவிட் கோவருக்கு அது ஆச்சர்யமளித்தது. அப்போது அவர் சொன்ன தகவல்கள் விசித்திரமானவை.
"நான் இந்த மண்ணில் விளையும் எதையும் உண்பதில்லை. பஞ்ச பூதங்களின் கலவையாகத்தான் எல்லா உணவுகளும் உள்ளன. எனவே அவற்றை உண்டால் உடம்பில் மலப் பையில் அவை போய்ச் சேரும். மலப்பை சேர்ந்த உடம்பில் வியர்வை முதல் எல்லாமே நாற்றம் கொள்ளும். காற்றை மட்டும் உணவாக உட்கொள்ள முடியும். அதோடு சில வேர்களை மென்று அதன் எச்சிலை விழுங்கினால் நமது உடம்பும் வாசம் கொள்ளும். இப்போது என் உடம்பு, உடம்பு அல்ல. அது ஒரு ‘பூ’ என்றார்.
ச
த்யநாரயணன் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான். ஆபீஸ் யூனிஃபார்மில் பார்க்க வித்தியாசமாகத் தெரிந்தான். சட்டைப்பாக்கெட்டில் அவனது நேம் பேட்ஜைக் காணவில்லை. கூடவே குவாலிட்டி அட்டை என்று ஒன்றையும் அவன் ஆபீசில் கொடுத்திருந்தனர். அந்த இரண்டும் இல்லாமல் யாராக இருந்தாலும் ஆபீசுக்கு வரக்கூடாது. இது அவனது நிறுவனத்தின் டிசிப்ளின் சார்ந்த விஷயம்.
சத்யநாரயணனுக்கு கொஞ்சம் மறதி அதிகம். ஆகையால் அடிக்கடி அந்த நேம் பேட்ஜையும், குவாலிட்டி அட்டையையும் வீட்டிலேயே விட்டு விடுவான்.ஆபீசில் செக்யூரிட்டி கேட்டைக் கடக்கும் போது செக்யூரிட்டி வாட்ச்மேன் கவனித்து விட்டுக் கேட்பான். அப்போதுதான் அதை மறந்து விட்டதே நினைவுக்கு வரும்.திரும்ப வந்து அதை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு போனால்தான் உள்ளே விடுவார்கள். அப்படி திரும்ப வந்து செல்லும் போது ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டு அந்த ஒரு மணி நேரத்தக்கு சம்பளம் இல்லை என்றாகி விடும்.
இதெல்லாம் அவன் மறதிக்கு கொடுக்கும் விலை. அவனது மறதி பற்றி அவன் மனைவி கவிதாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவளே இப்போதெல்லாம் செக்யூரிட்டி வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
யூனிஃபார்மை மாட்டிக் கொண்டு அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது ஓடி வந்து ஒரு பார்வை பார்த்தாள்.
யூனிஃபார்ம் மட்டும் போட்டிருந்தான். தலை வாரியிருந்தான். வழக்கமாக மீனாட்சி குங்குமத்தை வைத்துக் கொள்வான். அதுவும் அதோடு சேர்ந்து நேம் பேட்ஜ் அட்டையும் மிஸ்ஸாகி இருந்தது.
இன்னிக்கு பொட்டு வைக்க மறந்தாச்சு. கூடவே நேம் பேட்ஜும் எடுத்துக்க மறந்தாச்சு. சட்டையை விட்டு நேம் பேட்ஜை எடுத்து வைக்காதீங்கன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்க… உங்களோட தினசரி இதே ரோதனையாப் போச்சு…
என்று முனங்கிக் கொண்டே வந்து நேம் பேட்ஜை சட்டைப் பாக்கெட்டில் வைத்து விட்டாள் கவிதா. அப்படியே, இன்னிக்கு என்ன உங்களுக்கு சந்திராஷ்டமி நாளா?பொட்டு வெச்சுக்கவும் மறந்துட்டீங்களே…
என்று உள்ளே போய் மீனாட்சி குங்குமத்தையும் எடுத்து வந்து வைத்து விட்டாள்.
அதன் பிறகுதான் அவன் கிளம்ப முடிந்தது.
அவளும் சலிப்புடன் உள்ளே செல்லத் தொடங்கினாள். வீட்டு வாசலில் நடந்த இந்தக் கூத்தைப் பார்த்தபடியே இருந்தாள் எதிர் வீட்டு பங்கஜம் மாமி!
பங்கஜம் மாமி ஒரு வினோதமான பேர்வழி.
மிகவும் ஆசாரமானவள். சதா சர்வ காலமும் ஜபமாலையும் கையுமாக ‘ராமா ராமா’ என்று ஜெபித்துக் கொண்டிருப்பாள். நாளுக்கொரு விரதம். வேளைக்கொரு குளியல் என்று ஒரு பெண் சந்நியாசினியாகவே திகழ்பவள். அதே சமயம் யார் எங்கே போகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதும் மாமிக்கு அத்துபடி. அதிலும் கவிதா எதைச் செய்தாலும் அதைக் கவனித்து கவிதாவிடமே ரீ ஆக்ட் செய்வதில் மாமிக்கு ஓர் அலாதி ஆனந்தம். இதனால் கவிதாவும் மாமியை ‘கழுகுக் கண்ணி’ என்று தான் அழைப்பாள்.
அன்றைக்கும் மாமிக்கு மூக்கில் நமைச்சல் எடுத்தது. அடியே கவிதா…
என்று தன் வீட்டு முகப்பில் இருந்தபடியே குரலெடுத்தாள்.
என்ன மாமி…?
என்று கவிதாவும் பதில் குரல் கொடுத்தாள்.
உன் ஆம்படையான் மறதிதான் ஜெகப்பிரசித்தமாச்சே… அதுக்கு நான் ஒரு வழி சொல்லி இருந்தேன் இல்லியா?
என்ன வழி?
சரிதான். உனக்கே இப்ப ஞாபக மறதியாக்கும்? நன்னா யோசிச்சுப் பார்.ருத்ர உபாசகர் தியாகையா சுவாமிகள்னு ஒருத்தரைப் பத்திச் சொன்னது மறந்து போச்சா நோக்கு?
அட, ஆமால்ல…மறந்தே போச்சு மாமி…
என்ன மறதியோ…நீயும் சரி, உன் ஆத்துக்காரனும் சரி… முதல்ல அந்த சுவாமிகளைப் போய்ப் பாருங்கோ. அவர் ஒரு ரட்சை தருவார். அதைக் கட்டிண்டா மறதியெல்லாம் பறந்து போயிடும்…
அது சரி…அவர் இப்ப எங்க இருக்கார்?
"நம்ம பக்கத்துத் தெரு