Roja Malarum Neram
4/5
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5
Related to Roja Malarum Neram
Related ebooks
Sutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsKaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Naandhan Avan! Rating: 5 out of 5 stars5/5Meendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Yezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsJenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsVaira Bommai Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Thapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Vidupattavai Viraivil...! Rating: 5 out of 5 stars5/5Innum Sila Tajmahalgal Rating: 5 out of 5 stars5/5Yaathumaki Nindral Rating: 5 out of 5 stars5/5Thenkizhakku Minnal Rating: 5 out of 5 stars5/5Vadakke Oru Pudhayal! Rating: 0 out of 5 stars0 ratingsAathma Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Nizhalai Varuven Rating: 0 out of 5 stars0 ratingsMayavanam Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Kanbathellam Unmai Rating: 5 out of 5 stars5/5Aadu Puli Aattam Rating: 0 out of 5 stars0 ratingsSorna Regai Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Saranagadhi Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Roja Malarum Neram
2 ratings1 review
- Rating: 3 out of 5 stars3/5good thriller; the suspect was identified with the first murder
Book preview
Roja Malarum Neram - Indira Soundarajan
http://www.pustaka.co.in
ரோஜா மலரும் நேரம்
Roja Malarum Neram
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
யாரோ சொன்னாங்க…என்னன்னு?
மணி ஓசை வரும் முன்னே…
கொலை வரும் பின்னே!
ச
ந்தோஷமாகத் தென்பட்டான் பிரசாத்.
சந்தோஷமென்றால் சமுத்திரமளவு சந்தோஷம்!
அவனைப் பரவசப்படுத்தி ஜோதிமயமாக்கிய சேதியைச் சொன்ன சாரதா, அடக்கமாக அதே சமயம் அவனுக்கு நிகரான சந்தோஷத்தோடும் வெட்கத்தோடும் தலைகுனிந்திருந்தாள்.
சட்டென்று அவனைத் தன் பக்கமாய் இழுத்து அணைக்கிறான் பிரசாத். அவள் துவண்டும் சிவந்தும் சிலிர்க்கும் சமயம் அந்த பங்களாவுக்குள்ளே கைலாசத்தின் வாக்குவாலீஸ் ஹாரன் சப்தத்தோடு பிரவேசித்திருந்தது.
விடுங்க… மாமா வந்துட்டாரு…
சாரதா அவன் அணைப்பில் சிருங்காரமாய் சிணுங்கி விலகப் பார்த்தாள். அவனும் காரின் சப்தம் கேட்டு, சட்டென்று அவளை விலக்கினான்.
கூடவே அதிசயமாக மிக அதிசயமாக கம்பீரமாக நிமிர்ந்தான்.
கோட்டும் சூட்டும் சரசரக்க, வி.ஐ.பி. சூட்கேஸ் சகிதம் உள்ளே நுழைந்தார் கைலாசம். அப்படி அயர் நுழையும் போதெல்லாம் பூனைபோல் பதுங்கிக் கொண்டு, அவரது தேடலில் அகப்படாமல் நழுவப் பார்க்கும் ஒருவனாக இல்லாமல், இன்று அவன் நிமிர்ந்து நின்று தன்னை எதிர்கொள்வதில் கைலாசத்துக்குள் லேசாக ஆச்சரிய மின்னல்.
என்ன விஷயம்?
கழுத்தை அதுவரை இறுக்குவது தெரியாமல் இறுக்கிக்கொண்டிருந்த டையை இளக்க மாக்கியபடியே சாரதாவைப் பார்த்தார் கைலாசம்.
அயர் அப்படிப் பார்த்த மறுவினாடியே, சாரதா அவரை நெருங்கிச் சென்று அயர் கால்களில் விழுந்தாள்.
கார் சாவியை சாரதாவிடம் கொடுக்க வந்த டிரைவர் கண்ணாயிரம், சைலாசம் அவிழ்த்துக்கொடுக்கும் கோட்டையும் ஷ_க்களையும் வாங்கி உரிய இடத்தில் வைக்க ஓடிவந்த வேலாயுதம், டைனிங்ஹாலை விட்டு எதேச்சையாக எதன் பொருட்டோ வெளியே வந்த சமையல்காரி பட்டம்மாள்… எல்லோருமே ஆச்சரியமாக காலில் விழுந்த சாரதாவைப் பார்க்க…
என்னம்மா, என்ன விஷயம்?
ஆவல் தாளாமல் ஒலியோடு பிரிகிறது கைலாசத்தின் உதடுகள்.
உங்க பிள்ளை அப்பாவாகப் போறார் மாமா!
நிதானமாக, ஆனால் அழுத்தமாக அந்தச் சேதியைச் சொன்னாள் சாரதா.
நெஜமாவா சாரதா? நெஜமாவா சொல்றே?
திடும்மென்று அலையடிக்கும் சந்தோஷத்தில் அவருக்குள் வார்த்தைகள் வெளிவர சிரமப்பட்டன.
ஆமாப்பா, டாக்டரே வந்து பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டுப் போயிருக்காரு
பிரசாத் ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குப் பிறகு தைரியமாய் அயர் எதிரே வாய் திறந்தான்.
‘டைரக்டர்ஸ் போர்டு மீட்டிங்… யூனியனோடு போனஸ் பேச்சுவார்த்தை… புதிய எந்திரங்களின் எரெக்ஷன்’ என்று தனது தொழிற்சாலை சம்பந்தமாய் அவரது மூளையைக் கசங்கவிட்டுக்கொண்டிருந்த சகல விஷயங்களும் ஒரு ஓரமாய் ஒதுங்கிக்கொள்ள, பளபள விழிகளோடு பிரசாத்தைப் பார்த்தார்எப்பொழுதும் சுட்டெரிப்பது போலவே பார்த்துப் பார்த்து, ‘ஒழிஞ்சு போ சனியனே’ என்று கத்தி, வெடவெடத்துப் போய் நெஞ்சைக் கைகளில் பிடித்துக்கொண்டு, பக்கத்து சோபாவில் சரிந்து விழுந்து விடுபவராக இல்லாமல், இன்று அயர் அப்படிப் பார்ப்பதில் அவனுக்குள் அத்திபூத்தது. இதுதானே அவனுக்குத் தேவை!
வைத்யநாத தீட்சதன் சொன்னா சொன்னபடி நடக்கும். அவன் சொன்னபடிதான் எல்லாம் நடந்துருக்கு. அணுகூட பிசிகினதில்லை. அவன்தான் சொன்னான் ‘கைலாசம், உனக்கு வேறு வாரிசே கிடையாது. இப்ப இருக்கற உன் ஒரே பையன்தான் உன் சந்ததிக்கே முற்றுப்புள்ளி
ன்னு. நான்சுட நம்பிட்டேன். நீகூட முற்றுப்புள்ளி வைக்கற மாதிரிதானே நடந்துகிட்டே? ஆனா, இன்னிக்கு இந்தச் சேதியைக் கேக்கறச்சே என்னாலயே நம்பமுடியலை. வைத்யநாத தீட்சதன் வாக்குகூட பொய்யாகுமா என்ன?" கைலாசத்தின் ஆச்சரியமான பேச்சு ஏனோ பிரசாத்தை தலைகுனிய வைத்தது. சாரதா மட்டும் கூர்மையாக அதைக் கேட்டு இதழ்க்கடையில் அலட்சியமான ஒரு புன்சிரிப்பைத் தேக்கியிருந்தாள்.
இனியும் அங்கே நின்றுகொண்டிருந்தால் அது ஆபத்தில் முடியும் என்பது போல் வேலைக்காரர்கள் விவேகமாக ஒதுங்கியிருந்தார்கள்.
சாரதாவின் புன்னகை கைலாசத்தை லேசாய் கிள்ளியது.
என்னம்மா… அர்த்த புஷ்டியா சிரிக்கறே…என்ன விஷயம்?
நைச்சியமாகக் கேட்டார்.
ஒண்ணுமில்ல மாமா. சுயசம்பாத்தியத்துனாலயும் கடுமையான உழைப்புனாலயும் நூறை ஆயிரமாக்கி, ஆயிரத்தை லட்சம் கோடின்னு ஆக்கியிருக்கற நீங்க, யாரோ ஒரு ஜோசியர் சொன்னதை நெனச்சி தீர்க்கமாப் பேசறதைப் பார்த்தா, என்னால சிரிக்காம இருக்க முடியலை.
சாரதாவின் பதில் அவரை மேலும் கிள்ளியது.
நீ பேசறதைப் பார்த்தா உனக்கு ஜாதகம்ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை இல்லாத மாதிரி தெரியுதே?
கேட்டார்.
நான் அதைப்பத்தி நெனக்கறதேயில்லை.
தப்பும்மா… சின்னப் பொண்ணு. அனுபவமில்லாத தனால இப்படிப் பேசறே.
உங்க ஜாதகக் கணிப்பு பொய்யானதை பார்த்ததுக்குப் பிறகுமா மாமா இப்படி ஒரு பேச்சு உங்ககிட்டே?
"பத்துல ஒண்ணு பழுதுபட்டுப் போறது சகஜம்மா. ஆனா வைத்யநாதன்கிட்ட அதுகூட ஆகிநான் பார்த்ததில்லை. அவன் காசுக்கு மாரடிக்கிற காலணா ஜோசியனில்லம்மா. சரஸ்வதிகிட்டளே பாடம் படிச்ச மேதை. நான் அவனுக்கு வக்காலத்து வாங்கறதா நெனச்சுக்காதே. பிரசாத்தோட ஜாதகத்தைப் பார்த்துட்டு அவன் சொன்னதை நீ கேட்டிருந்தா ஆடிப்போயிருப்பே… அவன் சொன்னதுக்கு ஏற்ற மாதிரிதானம்மா இந்தப் பயலும் இருந்தான்.
ஏறத்தாழ ஏழுவருஷம் கஞ்சா, அபின் எல்.எஸ்.டி., பெத்தடின், ஹெராயின், மாண்ட்ரக்ஸ்னு இவன் சாப்பிடாத வஸ்து உண்டா? நரம்பு தளர்ந்து, நாடி தளர்ந்து பைத்தியத்தைவிடக் கேவலமா கிடந்ததை நீ பார்த்திருந்தா தூக்குமாட்டிச் செத்தே போயிருப்பே! இவனும் மனுஷனாகி இன்னிக்கு உனக்குப் புருஷனா, நாளைக்கு ஒரு பிள்ளைக்குத் தகப்பனா ஆகப்போறான்னா அதுக்குக் காரணம் யாருன்னு நெனைக்கிறே?"
நீளமாகப் பேசி இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு ஆழமாய் சாரதாவுக்குள் ஊன்றிய கைலாசத்தை அவள் புரியாமல் பார்க்கிறாள்.
நீதாம்மா. அதுக்குக் காரணம் நீதான்! என்னதான் அவன் சிகிச்சைகள்னால மனுஷனா மாறியிருந்தாலும் துணிஞ்சு அவனுக்கு கழுத்தை நீட்டி, மூணு வருஷமா பொறுமையாகக் காத்திருந்து, இன்னிக்கு என் வம்சத்தை ஒரு வாரிசைத் தரப்போறியே…உன்னை நினைச்சா…
கைலாசம் தன்னை மறந்து உருகிச் கசிந்தார். சாரதா அவரின் புகழாரத்தைச் சூடிக்கொள்ள தான் தகுதியற்றவள் என்பதுபோல் மீண்டும் தலைகுனிய, கைலாசம் மிடுக்காய் சட்டென்று நிமிர்ந்தார்.
ரைட் இந்த சந்தோஷமான நாளை விமரிசையா கொண்டாட வேண்டியதுதான். சாரதா என்.பி.ஏ.வுக்கு போன் பண்ணி உடனே என்னைப் பார்க்கச் சொல்லு…
என்றார் குதூகலத்தோடு.
அவள் டெலிபோனை நாடி நகரவும் பிரசாத் உடனே இடைவெட்டினான்.
சாரி டாட்
என்றான். பிறகு ஆர்ப்பட்டமான கொண்டாட்டமெல்லாம் வேண்டாம் டாட். எல்லாத்தையும் வளைகாப்பு சமயம் பார்த்துக்கலாம். இந்தச் சந்தர்ப்பதுல அவளுக்கு திருஷ்டி படக்கூடாது
என்றான்
கைலாசத்தை அவன் பேச்சு சிரிக்க வைத்து, சிந்திக்கவும் விட்டது.
"டேய்! நீயா இப்படிப் பேசறே? பார்ட்டி, கொண்டாட்டம்னா ஆலாப் பறக்கறப் பயலாச்சே நீ! அதோடு திருஷ்டி, அது இதுன்னு பொறுப்பா அள்ளிவிடுறியே. வெரிகுட்! உன் விருப்பப்படியே வளைகாப்பை ஜமாய்ச்சுடுவோம். அட்லீஸ்ட் அந்த ஜோசியக்கார திட்சிதருக்காவது ஒரு விருந்து கொடுத்துடுவோம். என்ன? கேட்டார்.
இலகுவாகத் தலையை அசைத்து அதை அங்கீகரித்தாள் சாரதா.
சாரதா, உன் அப்பா, அம்மாவுக்கு முதல்ல இந்தச் சேதிய செல்லுல சொல்லு.ய என் பொண்ணைக் கிணத்துல பிடிச்சுத் தள்ளிட்டேன்னு சொல்லி என்கிட்டேயே புலம்பிட்டுப்போன உன் அப்பன் இந்த சேதியைக் கேட்டு அப்படியே தலைகுனியணும்!
கைலாசம் விடாது பிரஸ்தாபித்தார். வீடே தலைகீழாய் மாறிப்போனது போல் ஒரு பிரமை அவருக்குள்.
பிரசாத் புதிய உடைகளுக்குள்ளே புகுந்துகொண்டு அயர் எதிரே போய் நின்றான்.
இந்தக் கண்றாவி தாடிய எப்ப எடுக்கப்போறே?
பாசம் கலந்த கிண்டல் கைலாசத்திடம். அவன் அதைக் கேட்டுக் கஷ்டப்பட்டு சிரித்தான்.
கொஞ்சம் பணம் வேணும் டாட்
என்றான்.
என்கிட்ட கேட்டா, போய் உன் பொண்டாட்டி கிட்ட கேளு!
அவனுக்கு முகத்திலறைந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் சுணங்கியவனாய் சாரதா எதிரே போய் நின்றான்.
சாரதா, கொஞ்சம் பணம் வேணும்!
எதுக்குங்க?
வேணும்ன்னா…
அதான் எதுக்குன்னு கேக்கறேன்?
அவள் பதிலால் அவன் சோர்ந்து, மேலும் பேசாமல் திரும்ப எத்தனிக்க, அவள் அவன் தோளைப் பற்றி, எவ்வளவுங்க?
என்று கேட்டாள். அவனிடம் பதிலில்லை. அவள்விடவில்லை.
நீங்க திரும்பவும் அந்தச் சனியன் பிடிச்ச பழக்கத்துக்கு அடிமையாகிடக் கூடாதுங்கறதனால தாங்க கேக்கறேன்…
அவன் அந்தப் பேச்சால் இறுகிப்போய் அவளை வெறித்தான்.
சந்தோஷமான நாள் இன்னிக்கு நமக்கு. நீங்க இப்படி இருக்கக்கூடாது!
அவனைப் பார்த்துக் கெஞ்சலோடு பேசினாள். அவன் இறுக்கம் தளரவேயில்லை.
நல்லா நிமிர்ந்து நடங்க. யாராவது ஒரு மாதிரி பார்த்துச் சிரிச்சா கூப்பிட்டு இந்தச் சந்தோஷமான விஷயத்தைச் சொல்லி அவங்க முகத்துல கரியைப் பூசுங்க. வாழ்க்கை இனிமே நமக்குத்தான். இந்தாங்க சாவி, தேவைப்பட்டதை எடுத்துக்குங்க!
இதமான அவள் பேச்சில் அவன் மனம் கொஞ்சம் இளகியது.
"ஆமாம் சாரதா, புழு மாதிரி என்னைப் பார்த்த கூட்டம் ஒண்ணு இருக்கு. அவங்களைத் தலைகுனிய வெச்சாதான்