Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yandhira Jaalam
Yandhira Jaalam
Yandhira Jaalam
Ebook112 pages1 hour

Yandhira Jaalam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100700223
Yandhira Jaalam

Read more from Indira Soundarajan

Related to Yandhira Jaalam

Related ebooks

Related categories

Reviews for Yandhira Jaalam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yandhira Jaalam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    யந்திர ஜாலம்!

    Yandhira Jaalam !

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ‘ரூபாய்களில் சொரூபம்அரூபம் என

    இரண்டு இருக்கிற மாதிரி யந்திரங்களிலும் அரூப

    சொரூப யந்திரங்கள் உள்ளன.இதில் சொரூப

    மாகத் தெரியும் யந்திரங்களை அரூபமாக உள்ள

    மந்திரங்களே இயக்குகின்றன!’

    ஸ்ரீ சாக்த கர்மாணங்களிலிருந்து…

    காயம்.

    அலம்பிவிட்டது போல் இருந்தது.கபாலி கோயில் கோபுரத்தில் புறாக்களின் வட்டம் வேறு.பக்கமாகத்தான் இருக்கிறது அந்தத் தெரு.

    ஒண்டுக் குடித்தன வீடுகளின் ஒட்டு மொத்த சங்கமம்.சுண்ணம் வெளுத்த திட்டிச் சுவர்கள்.காரை உதிர்ந்த மாடித்தரைகள்முடிந்த இடத்தில் முளைவிட்டிருக்கும் பூவரசம் பிஞ்சுச் செடிகள்…

    நடுத்தரத்திற்கும் கீழேயும், கீழ்த்தரத்திற்கு மேலேயும் நடுவில் ஒரு தரம் இருக்கிறது.அதைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி இடம் தான் பொருந்தி வரும்.மாதம் முன்னூறோ நானூறோ வாடகை.பத்துப்பதினைந்து குடிகளுக்கு பொதுவாக ஒரு கக்கூஸ்ஒரு மணிநேரம் மாரடித்தால் ஒரு பக்கெட் தண்ணீர் தரும் அடி குழாய்இதில் போட்டியிட ஒரு பெரும் கூட்டம்.

    போட்டியிட்டு தண்ணீர் அடித்து குளித்து முடித்து விட்டு மொட்டை மாடிக்கு சந்தியா வந்தனம் செய்யவும் வந்துவிட்டார் ராமேஸ்வரய்யர்.

    ஒற்றை நாடி சாரீரம்.உடம்பில் சதையைவிட எலும்பு கூடுதல் என்பது பார்த்த கோணத்தில் அபிப்ராயமாகிவிடும்.தாடை முடியைக் கூட நான்கைந்து மாதமாகச் சிரைக்கவில்லை போலும்?வானின் கிழக்கில் சூரியன், மேகம் மூடாதபடிக்கு தோற்றம் காட்ட அவனை நோக்கி நிற்கும்ராமேஸ்வரய்யர் சந்தி செய்யத் தொடங்கினார்.காதில் கற்பகாம்பாள் கோயில் தேவாரப் பாசுரத்தின் மெலிதானப் பாய்ச்சல்.அதை புறந்தள்ளியபடி உள்புகுகிறது சந்தி மந்திரம்.

    அச்சுதாயநம…

    அனந்தாயநம…

    கோவிந்தாயநம…

    நீர்த்தாரைகள் கீழ் சிந்திக் தெறிக்கின்றன.ஓர் ஓரமாக அந்த மொட்டை மாடியில் இன்னமும் எழுந்திருக்காதபடி வேட்டியை போர்வையாக்கிக் கொண்டு படுத்திருக்கும் சில பிராமணஜந்துக்கள்.

    அதில் ஒருவன் தலையில் இருந்து வேட்டி விலக்கி கண் கசக்கி ராமேஸ்பரய்யரைப் பார்த்தான்.

    குட்மார்னிங் என்றான் சற்று இளக்கமாகவும் இளக்காரமாகவும்! ராமேஸ்வரய்யரும் பிராணாயாமம் செய்தபடி அவனை வெறித்தார்.

    விடிஞ்சுடுத்தா? அவனிடம் ஆயாசிப்பு.பின்கொட்டாவி.அதற்குப்பின் மூக்குப்பொடி டப்பி எடுத்து ஓர் உறிஞ்சு.

    செகண்ட் ஷோ போனேன்…அதான் அசந்துட்டேன் என்றவன் அடுத்து தூங்குபவனை காலால் உதைத்தே எழுப்பப் பார்க்க ராமேஸ்வரய்யர் சந்தியிலிருந்து விலகினார்.

    அடேய் பாவி… ஏண்டா தூங்கறவனை உதைக்கறே அதுவும் காலால? மகாபாவம்டா…

    அவன் சிரித்தான்

    இதுக்குத்தான்… இப்படி உங்களை கத்த விடத்தான்! என்றவன் எழுந்திருக்கும் அந்த இன்னொருவனைப் பார்த்தான்.அவனிடமும் அகண்டகொட்டாவி.

    என்ன சாமி… காலங்காத்தால வந்து இப்படி தூக்கத்தக் கெடுக்கறீங்க…?

    நான் தூக்கத்தைக் கெடுக்கறேனா… மணி என்ன தெரியுமா?

    அது எவ்வளவானா என்ன… இப்ப எந்த ஆபீசுக்குப் போய் கையெழுத்துப் போடணும்…?எனக்கு பீச்சாங்கரைல முறுக்கு விக்கற வேலைஉங்களுக்கு குளத்தங்கரைல தர்ப்பையும் பூணூலையும் விக்கறது வேலை.இந்த தடிராயனுக்கு லாட்டரிசீட்டு விக்கற வேலை.அத எப்ப செஞ்சா என்ன.அவன் எகத்தாளமாக பேசுகிறான்.ராமேஸ்வரய்யர் முறைக்கிறார்.பின் சந்தியை தொடரப் பார்க்கிறார்.கத்தரித்தது ஒரு குரல்.அது கிட்டாவினுடையது.

    கிட்டா ராமேஸ்வரய்யருக்கு இருக்கும் கறிவேப்பிலை புத்ரன்.

    அப்பா… அழைக்கிறான்.திரும்புகிறார்.குளித்து முடித்து கிட்டா பார்க்க பளிச்சென்று இருந்தான்.வேட்டி சட்டை நெற்றியில் பட்டை.

    என்ன கிட்டா…?

    வர நாழியாகுமா?

    ஆமாம்… ஒரு அரைமணியாகும். இன்னும் சந்தியே ஆரம்பிக்கல.இந்த தடிப்பசங்க வாயைப் பிடுங்கிண்டு இருக்காங்க… ஆமா என்ன விஷயம்?

    ஒண்ணுமில்லப்பா அவன் தயங்கியபடி படிகளில் திரும்பி இறங்கினான்.

    அவனையும், அவரையும் பார்த்தபடியே அங்கு தூங்கி எழுந்தவர்கள் பாயைச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றனர்.ஒருவன் ராமேஸ்வரய்யரை பிராண்டினான்.

    என்ன ஸ்வாமி… கிட்டாவுக்கு டி.வி.எஸ்.ல வேலை கிடைச்சிடும், ஏற்பாடு செஞ்சிருக்கேன்னேளே… என்ன ஆச்சு?

    ராமேஸ்வரய்யரிடம் பெருமூச்சு.

    நல்லபிள்ளை… நிறைய மார்க்கும் வாங்கியிருக்கான்.அவனையும் உம்மாட்டம் உபாத்யாயத்துல இழுத்து விட்டுடாதேள்.இது உம்மோட போகட்டும்.

    ராமேஸ்வரய்யர் முறைப்பைத் தொடர்ந்தார்.

    என்ன பாக்கறேள்… உபாத்யாயம் பண்ண பட்டப்படிப்பு எதுக்கு? யோசியும்…

    நான் யோசிச்சா ஆச்சா… வேலை கிடைக்க வேண்டாமா? அவர் தடுமாற்றத்துடன் சந்தியாவந்தன தம்ளரின் நீர்த்தாரைகளைச் சிதறவிட்டார்.

    அப்படி கிடைக்காததாலதான் நாங்கள்லாம் முறுக்கு, லாட்டரின்னு விக்க கிளம்பிட்டோம்.

    அது சரி… எப்ப கிடைக்கணுமோ அப்பதானே கிடைக்கும்.

    அதுவரை அவனும் எதாவது நம்மப்போல விக்கட்டுமே.மாமி அழகா அப்பளம் போட்றா.அதை கடைல கொண்டுபோய் போட்டா நூத்துக்கு ஒண்ணே கால் ரூபா… கணக்கு போட்டுக்கோங்கோ ஆயிரத்துக்கு பன்னிரண்டரை.இரண்டாயிரத்துக்கு இருவத்தஞ்சு.அஞ்சாயிரம் தாராளமா தள்ளலாம்.அறுபது ரூபா ஆச்சே…

    அவர்கள் பேசியபடி கீழிறங்க ராமேஸ்வரய்யர் கலங்கிப் போய் வானையே வெறித்துப் பார்த்தார்.

    2

    ‘மந்திரங்களால் இயங்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1