Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma... Athma... Anuppama...
Amma... Athma... Anuppama...
Amma... Athma... Anuppama...
Ebook93 pages49 minutes

Amma... Athma... Anuppama...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
LanguageUnknown
Release dateMay 2, 2016
ISBN6580100700131
Amma... Athma... Anuppama...

Related categories

Reviews for Amma... Athma... Anuppama...

Rating: 4 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma... Athma... Anuppama... - Indira Soundarrajan

    http://www.pustaka.co.in

    அம்மா… ஆத்மா… அனுபமா!

    Amma… Aathma… Anupama!

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ‘உயிரானது உடம்பில் எங்கிருக்கிறது? அது எப்படிப்பட்டது? காற்றுதான் உயிரா? இல்லை உடம்பில் அடங்கியுள்ள உஷ்ணம்தான் உயிரா? அதுவுமில்லை –ஓடும் ரத்தம், துடிக்கும் இதயம். எது உயிர்…?

    நினைக்கும் மனதில் உயிர் ஒளிந்து கொண்டிருப்பதாக கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை?

    -கௌசிக் ஆச்சார்யா

    மௌ

    ண்ட் ரோடில் இருக்கிறது வானவில் பத்திரிக்கை அலுவலகம். தப்பு தப்பு…‘அண்ணாசாலை’ என்று அது மாற்றம் பெற்று பலப்பல வருடங்கள் ஆகியும் மௌண்ட்ரோட் என்றுதான் என் ஞாபகச் செல்கள் அறிவிக்கை செய்கின்றன. (மூளையே திருத்திக் கொள்).

    ‘சரி… வானவில் பத்திரிக்கைக்கு என்ன… விஷயத்திற்கு வா என்கிறீர்களா? வரத்தான் போகிறேன். பத்திரிக்கைக்கு எந்த நேரத்தில் வானவில் என்று பெயர் வைத்தார்களோ தெரியாது… பத்திரிக்கை அலுவலகமும் வானவில்லாக வண்ணமயமாகத்தான் காட்சியளித்தது.

    ஒரு கொடுமை.

    கொடுமையிலும் கொடுமை.

    இந்த பத்திரிக்கையில் நூத்துக்கு எண்பது பேர் பெண்கள். இத்தனைக்கும் இது ஒன்றும் பெண்கள் பத்திரிக்கை கிடையாது.

    இருந்தும் பொட்டச்சிகளின் ராஜ்யம்! (படவா பொட்டச்சின்னு இளக்காரமாவா பேசறே…. பின்னிருவோம் ஆமா. பொட்டச்சியாம்ல பொட்டச்சி. தடிப்பயலே!)

    அடைப்புக் குறிக்குள் இருக்கும் கமென்ட்டுகள் யாருடையது என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். அதுவும் என் உபயம்தான். என் வயிற்றெரிச்சலை நிச்சயம் இந்த பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஆகவே லபோ திபோவென்று அவர்களாக கத்திக் கூப்பாடு போடுவதற்குள் நானாக போட்டுவிட்டால் அது கொஞ்சம் பெட்டராக இருக்கும் இல்லையா?

    எல்லாம் சரி… நான் யார் என்று கேட்கிறீர்களா?

    நான்தான் ராஜாமணி. எழுபதுகளில் விஜயகுமார்களும், ஜெய்சங்கர்களும் திரையில் ஜனித்த காலத்தில் தான் நானும் ஜனித்தேன். இருந்தும் என்பெயரில் ஒரு மாடர்னிடி இல்லாதபடி என் தாத்தா ஞாபகமாக ராஜாமணி என்று என் அப்பா ஒரு அழுக்குப் பிடித்த பெயரை வைத்துவிட்டார். (ராஜாமணி என்றால் உன்னதமான அரசன் என்று ஒரு பொருள் உண்டாம்!)

    டேய், ராஜாமணி…கூஜாமணி என்று சந்தத்தோடு சேர்த்து எல்லோரும் திட்டுவதற்கு தோதாக… எனக்கென்று பெரிதாக ஒரு சரித்திரமெல்லாம் கிடையாது.

    சரியான சொரிப்பயல்தான் நானும்!

    கோனார் நோட்ஸை விற்று மார்னிங்ஷோ போயிருக்கிறேன். துண்டுபீடியை எடுத்து இழுத்துப் பார்த்து இருமியிருக்கிறேன். இந்துநேசன், வாலிபம் பத்திரிக்கைகளை பாடப் புத்தகத்துக்குள் வைத்து படித்திருக்கிறேன்.

    மொத்தத்தில் எல்லா எழவும் எடுத்தபின் தான் நான்.

    மிடில் கிளாஸ் இளைஞர்களின் ஒரிஜினல் பயோடேட்டாவை கணக்கில எடுத்தால் இந்த கழுதைகள் எல்லாம்தானே அதில் அகப்படும்?

    இந்த மிடில்கிளாஸ் கூட்டத்திற்கென்றே கண்டுபிடித்து வைத்திருக்கிற குமாஸ்தா உத்யோகமோ இல்லை அட்டெண்டர், ஜூனியர் அசிஸ்டென்ட் இத்யாதிகளோ எனக்கு கட்டோடு பிடிக்கவில்லை.

    புரட்சிகரமா எதையாவது செய்து கார், பங்களா என்று வாங்கி ஒரு தர்பார் நடத்திப் பார்க்க வேண்டும். இதுதான் எனது ஆசை.

    அப்படியானால் அதற்கு ஒரு வழிதான் இருப்பதாக என் நண்பர்கள் சொன்னார்கள். என்ன என்று கேட்டேன். ஃபைனான்ஸ் கம்பெனி நடத்திவிட்டு ஓடிப்போய் விடச் சொன்னார்கள். இல்லாவிட்டால் சினிமாவில் சேரச் சொன்னார்கள்.

    முன்னதைச் செய்ய துரோக புத்தி இருக்கவேண்டும். பின்னதற்கு உருவம் ஒத்துழைக்க வேண்டும். ஒரு அப்பா வேஷத்துக்குக்கூட நான் லாயக்காக மாட்டேன். கட்டை குட்டையான ஒரு மாதிரி சரீரம் எனக்கு…

    இப்படியாக அவர்கள் சொன்ன இரண்டு சந்தர்ப்பங்களும் எனக்குப் பொருந்தவில்லை. சரி நமக்கு இந்த ஜென்மத்தில் பணக்கார தகுதியில்லை என்று என் மனதை என்னால சமாதானப்படுத்த முடியவில்லை.

    அப்பொழுதுதான் வானவில் பத்திரிக்கையைப் பார்த்தேன். அதில் முன்னுக்கு வந்தவர்களது பேட்டிகள் வரும். அது எனக்கு மிகப் பிடிக்கும்.

    ஒருவர் தெருத் தெருவாய் ஊறுகாய் விற்று கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இன்னொருவர் திருப்பதி உண்டியலைத் திருடி லட்சாதிபதி ஆனவராம்.

    ஓடும் ரயிலில் உண்டியலில் கைவைத்தவராம். எவ்வளவோ ஆயிரங்கள் அகப்பட்டதாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1