Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakthi Raajyam
Sakthi Raajyam
Sakthi Raajyam
Ebook214 pages2 hours

Sakthi Raajyam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai. He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu. Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
LanguageUnknown
Release dateMay 2, 2016
ISBN6580100700016
Sakthi Raajyam

Related categories

Reviews for Sakthi Raajyam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    great, a must read for people who want to understand shakti

    1 person found this helpful

Book preview

Sakthi Raajyam - Indira Soundarrajan

http://www.pustaka.co.in

சக்தி இராஜ்யம்

Sakthi Raajyam

Author:

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarrajan

For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

1

‘ஒன்றாயரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்

நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்எந்தன்

நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்ற ஆவிப்பொருளறிவார்

அன்றாலிலையில் துயின்றபெம்மானும் என் ஐயனுமே!’

அபிராமி பட்டர்

ந்தப் பூவுலகின் பெரிய கேள்வி எது? என்கிற கேள்வியே இந்த உலகின் எந்த பாகத்திற்கும் சென்று எவரிடத்திலே கேட்டாலும் சரி.. அதற்கு அவர்கள் கூறும் பதில்அநேகமாகக் கடவுள் இருக்கிறாரா.. இல்லையா? என்பதாகத்தான் இருக்கும்.

இங்கே ஒன்று இரண்டாயிருப்பதே இயற்கையாகவும் உள்ளது. உதாரணமாக, நாம் இருக்கிறோம்ஒரே உருவில் பார்ப்பதற்கு தென்பட்டாலும் உடல், உள்ளம் என்று இருவிதமாக உள்ளோம். ஊடலைப் பார்த்து அறியலாம். உள்ளத்தை அவர்கள் பேசக் கேட்டே அறிய முடியும். இந்த காலம்கூட பகல்இரவு என்று இருகூறாக பிரிந்தே இயங்குகிறது உயிரினங்கள் கூட ஆண், பெண் என்று இரண்டாக இருப்பதாலேயே இனப்பெருக்கம் ஏற்பட முடிகிறது.

இப்படி ஒன்றாயிருப்பது இரண்டாகவும் அமைந்திருப்பது விந்தையா.. இல்லை, அதுதான் அதன் இயல்பா என்கிற கேள்வி எல்லாமும் இங்கே எழுகிறது. இயல்போ விந்தையோ.. இரண்டாக இருந்தாலே விளங்கிக் கொள்ள முடிகிறது என்பதே நிதர்சனமான ஒரு உண்மையாக உள்ளது.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்கிற உலகின் மிகப்பெரிய கேள்விக்கான விடையும் ‘இருக்கிறது’ என்றும் ‘இல்லை’ என்றும் இருவிதமாகவே உள்ளது.

‘நம்புகின்றவர்களுக்கு அது இருக்கிறது. நம்பமுடியாதவர்களுக்கு அது இல்லை’ என்று அந்தக் கேள்விக்கு சிலர் பொழிப்புரையும் பகர்கின்றனர். அந்த பொழிப்புரையே ஒரு புதிய கிளைக் கேள்விக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. ‘இருப்பதைத்தானே ஒருவர் நம்ப முடியும். இல்லாத ஒன்றை எப்படி நம்ப முடியும்?’

இதற்கான பதில்களோ பலவிதமாக உள்ளன. இருப்பது என்றல் என்ன? நம் பார்வைக்கு தெரிகின்ற ஒன்றா? தெரிந்தால் மட்டுமே அதை ஏற்பேன்; தெரியாததை ஏற்க இயலாது என்று ஒரு பதில்.

‘நமது உடம்புக்குள்ளேயே அநேக உள்ளுறுப்புகள் உள்ளன. அவற்றை நேராக நாம் காண முடியாத காரணத்தாலே அவை இல்லை என்றாகிவிடுமா?’ என்று ஒரு பதில்.

இதை தொடர்ந்து, ‘இல்லையில்லை... உள்ளுறுப்புகளை நாம் காணமுடியாவிட்டாலும் அதன் இயக்கத்தை உணர முடிகிறோம்தானே! எனவே, உணர்வதை வைத்து அது இருப்பதை நம்புவதுதான் சரியான அணுகுமுறை’ என்று அதற்கு ஒரு பதில்.

கூட்டிக் கழித்தால், புலப்படுவதை வைத்து மட்டுமல்ல.. உணரப்படுவதையும் வைத்து தாராளமாக நம்பலாம் என்று ஒரு பதில் நமக்கு கிடைக்கிறது.

பார்த்தீர்களா? கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்கிற ஒரு கேள்வி இப்படி பல கிளை கேள்விகளில் நம்மை மூழ்கடிக்கிறது. இன்னமும்கூட கேள்விகள் இருக்கிறன. கேள்விகள்.. கேள்விகள்.. பஞ்சமே இல்லாத கேள்விகள்!

இந்த உலகம் எத்தனையோ அறிஞர்களையும், ஞானிகளையும் பார்த்துவிட்டது. அவர்களும் இந்த கேள்விக்கு தாங்கள் அறிந்த விடையை தாங்கள் அறிந்த விதத்தில் கூறித்தான் சென்றிருக்கின்றனர். இதில் பகவான் ரமணரின் கருத்து மட்டும் சற்று எளிமையாக சட்டென்று புரியும் விதத்தில் உள்ளது.

‘ஒரு நாற்காலி உள்ளது என்றால் அதை செய்த ஒரு தச்சன் இருக்கவேண்டும்தானே?’ என்று கேட்டார்.. அப்படியே உலகுக்கு வருபவர், ‘இந்த பூமியும் இருகிறது என்றால் இதைப் படைத்த ஒரு சிருஷ்டிகர்த்தாவும் இருந்துதானே தீர வேண்டும்’ என்று முடிக்கிறார். அந்தசிருஷ்டிகர்த்தா யார்... அவரை எவ்விதம் அறிந்து... இது அடுத்த கேள்வி.

அவர்தான் கடவுள்!

அவரை உருவமற்ற மகாசக்தியாக ஒரு மதம் பார்க்கிறது. அவர் அனுப்பிய தூதர் என்று ஒருவரைக் காட்டுகிறது இன்னொரு மதம். ‘வெளியே எதுவுமில்லை.. எல்லாம் மனோ விகாரங்கள்அதை அடக்கு . ஒன்றுமில்லாமலாக்கு – நீயே கடவுள்’ என்று கூறுகிறது வேறொரு மதம். சனாதனமான, மிகப்பெரிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்து சமயமோ, ஒரு கடவுளர் கூட்டத்தையே கண்முன் நிறுத்துகிறது.

‘ஒரு கடவுளை நம்புவதே மாபெரும் குழப்பமாக உள்ள நிலையில், இப்படி ஒரு சமுதாயக் குடும்பம் போல ஒரு கூட்டத்தையே காட்டினால் எப்படி?’ என நடுநிலையாளர்களும் ஒரு கேள்வியில் விழுகிறார்கள்.

இவர்கள் பாரபட்சமில்லாமல் உள்ளத்தூய்மை, உடற்தூய்மை மற்றும் புத்தியொளியோடு நமது சமயம் காட்டும் கடவுள்களை அறியப் புகுந்தாலோ ஆரம்பமாகிவிடுகிறது அற்புத மாற்றம். இந்த சக்தி ராஜ்ஜியமும் அப்படி ஒரு அற்புத மாற்றத்தை, வாசிப்பவர்களுக்கு அளிக்கத்தான் போகிறது.

நாம் இப்பொழுது சக்தி ராஜ்ஜியத்துக்குள் புகுவோம். அதன் சர்வாம்சங்களிலும் பறந்து திரிவோம். அந்த ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் தலைவியான பராசக்தியையும் புரிவோம்.

அவள்தான் நான் சிந்தித்து எழுதுவும் அதை வந்தித்து நீங்கள் வாசிக்கவும் காரணம்! அவளாலேயே இந்த அண்டமானது ஆகாய வெளியில் பந்து போல மிதக்கிறது. மிதப்பதோடு சுழலவும் செய்கிறது. ஒரு கணக்கோடு மையத்தில் இருந்து விலகி சற்றே சாய்ந்து சுழல்கிறது. இதன் காரணமாக ஒரு விசை உருவாகி காற்று வீசுகிறது. மழை பொழிகிறது. இரவு பகல் உருவாகிறது. காலை, மதியம், மாலை என்று அதிலும் பிரிவுகள் தோன்றுகின்றன.

நமது சமுதாயத்தை பின்பற்றுவோர்க்கு அவள் பராசக்தி. மற்றையோர்க்கு அவள் ஆதிசக்தி. இந்த பராசக்தி சமயத்தையே ‘சாக்தம்’ என்கிறது நமது சமுதாயம்.

ஆதிசிவன் பற்றி சொல்வது சைவம். அனந்த நாராயணன் பற்றி சொல்வது வைணவம். கணபதியை புரியவைப்பது காணாபத்யம். முருகன் வழி எது என்பது கௌமாரம். மேற்கண்ட வழிகளை விடுத்து, கண்ணுக்கு புலனாகும் சூரியனைக் கடவுளாய்க் கருதி விரித்துரைப்பது சௌரம்!

இந்த ஆறு பாதைகளே நமது ஆறாவது அறிவுக்கு அறுதியானவை; உறுதியானவையும்கூட.

ஒரு துளியாய் இருந்து நாம் தாய் தந்தை இருவர் கலப்பால் கருப்பைக்குள் பஞ்சபூதக் கலவை என்னும் ஐந்து அம்சங்களால் உயிர்ப் பிண்டமாகி, ஒரு நாள் கர்ப்பவெளி கடந்து இந்த பிரபஞ்ச வெளியில் விழுந்து, மானுட உயிர் என்கிற, பின் மெல்லக் கண் விழித்து, பார்த்தும் கேட்டும் அறிய முடிந்த ஆறாம் அறிவால் மற்ற உயிரினங்கள் சகலத்தினின்றும் மாறுபட்டு, மனம் உடைத்த மனிதர்களாகி, அதுவே மருவி மனிதர்களாகியுள்ளோம்.

மனம் என்று ஒன்று வந்தாலே காலம் என்று ஒன்று வரமுடியும். மனமில்லாத விலங்குகள் மற்றும் செடி, கொடிகளுக்கு தான் யார் என்னும் கேள்வி இல்லை. நேற்று, இன்று, நாளை என்னும் கால கதி இல்லை. அவை எல்லாம் உணர்வால் மட்டுமே இயங்குபவை. அந்த இயக்க கதிக்கு பின்னாலும் பராசக்தியே உள்ளாள். அவற்றுக்கு நடுவே அவற்றை மாத்திரமல்ல.. நம்மை நாமே அறியவும்தான் ஆறாவது அறிவு துணை செய்கிறது. இதுவே ஏழாம் நிலையில் சப்தமாக.. அதாவது நாம் பேசும் பேச்சாக விளங்கி அனைத்தையும் எட்டி அறியப் பார்க்கிறது. அப்படி எட்டுவதே எட்டு. எட்டி விட்டாலோ ஒன்பதாகிய இறை நிலை நமக்கு வாய்த்து விடுகிறது.

துளியில் தொடங்கிய நமது ஒன்பதாம் நிலையே இறை நிலை இதை எய்துவதற்கே ஆறு மார்க்கங்கள்!

அதில்கூட இன்றளவில் மூன்றே பெருவழியாக உள்ளது. அதனுள் காணாபத்யமும் கௌமாரமும் சௌரமும் கிளை வழிகளாக சென்றடங்கி விட்டன. அந்த மூன்றிலும்கூட சைவமும் வைணவமுமே பல்லோர் செல்லும் வழியாக உள்ளது. இந்த இரண்டும் ஒடுங்கும் ஓரிடமாக சக்தி உறையும் பாராசக்தியின் சாக்தம் உள்ளது.

கல்லூரி ஒன்றுதான். அதனுள் பாடபிரிவுகள் பல! அவரவர் திண்மைக்கேற்ப வாசிக்கலாம். முடிவில் அனைவரும் கற்றவர்கள் என்கிற பொதுவான பட்டத்தையே அடைகிறோம்.

அப்படித்தான் இங்கேயும்.. சக்தி ராஜ்ஜியமும் ஒரு கல்லூரியாக திகழ்கிறது. இதனுள் மற்றவை பாடப்பிரிவுகளாக உள்ளன. எந்த பாடத்தின் வழியாகவும் சக்தி தரும் முக்தி என்னும் பட்டத்தை நாம் பெறலாம். அப்படி அந்த ராஜ்ஜிய நாயகியை முற்றாக விளக்கிக் கொள்ளவும் முயற்சிக்கலாம்.

ஆதிசக்தியின் அம்சங்கள்கூட பங்சபூதங்கள் போல ஐந்தாகவே உள்ளன. முதல் அம்சம் துர்கா, அடுத்து லகூஷ்மி, அதற்கும் அடுத்து சரஸ்வதி, நான்காவதில் சாவித்திரிதேவி அவள். ஐந்தாவதில் ராதா!

ஒன்றான மின்சாரம்தான் ஓட்ட கதியில் விளக்கிடம் எரிசக்தி ஆகிறது. எந்திரத்திடம் இயங்குசக்தி பெட்டிக்குள் குளிர்சக்தி என்று விதவிதமாக பிரிந்து செயலாற்றுவதைப் போன்றே அந்த ஆதி சக்தியும் இந்த ஐவகை ரூபம் கொண்டு வெளிப்படுகிறாள்.

இதில், துர்கை என்றால் வெற்றியும் வீரமும் தருபவள் என்பது உள்ளடக்கம்.

லகூஷ்மி என்றால் அழகு, செல்வம்! சரஸ்வதியோ அமைதி, ஞானம், தருபவள். சாவித்திரி மந்திர தந்திர யந்திரங்களை தந்து நாம் கடைத்தேற உதவுபவள். ராதாவோ ‘பக்தி மட்டுமே போதும். நாம் அந்த இறையை தேடத் தேவையே இல்லை. இறையே நம்மைத் தேடி வரும்’ என்று காட்டுபவள்.

இவர்களில் துர்கையை நாம் முதலில் புரிய முற்படுவோம்.

துர்மகன் எனும் அசுரனை அழித்த காரணத்தால் காரணப் பெயராகவே அந்த ஆதிபராசக்தி தன் முதல் அவதாரமாக துர்கை ஆனாள். இந்த துர்காவதாரம் மிகமிக உக்கிரமானது. பரவசமூட்டுவது. சிலிர்ப்பில் நம்மை சிக்கவைத்து, அதனாலேயே நம்முள் கிடக்கும் அசுர குணங்களை எல்லாம் அழித்தொழிக்க வல்லது. புதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்கண்டாய புராணத்தில் துர்கா சப்தசகி எனும் 700 மந்திரங்கள் 700 பிரயோகங்களோடு மாதா துர்காவை நாம் விளக்கிக்கொள்ள துணைபுரிகின்றன.

வரமுகி என்ற ஒரு பெரிய மகரிஷி. மூச்சடக்கியும் பேச்சடக்கியும் பன்னெடுங்காலம் தவம் செய்தவர். அதனால், அளப்பரிய வரங்களையும் பெற்றவர்.

உலகிலேயே பெரியது, ஒருவன் தன் மனதை அடக்கி ஆளும் செயலே ஆகும். வரமுனி அதில் உச்சத்தில் இருந்தார். மனதை அடக்கியாண்ட அந்த மாமேதைக்குள்ளும் ஒரு சமயம் கர்வம் நுழையப் பார்த்தது.

எத்தனை தான் அழுக்குப் போக குளித்து தூய்மையாக இருக்க முற்பட்டாலும், வியர்ப்பதை தடுக்க முடியுமா? அப்படித்தான் வரமுகிக்குள்ளும் தானே ஒரு மகாமுனி.. தமக்கு மிஞ்சிய ஒரு முனிவர் இந்த உலகில் இல்லை எனடகிற ஒரு எண்ணம் கர்வமாக துளிர்விடத் தொடங்கியது.

2

‘ஸ்ரீ துர்கா த்ரி ஜகன்மாதா ஸ்ரீமத்கைலாஸ வாஸிநீ

ஹிமாசல குஹாகாந்த மாணிக்க மணிமண்டபா’

பொருள் : ‘துர்க்கமன் எனும் கொடிய அசுரனை அழித்ததால் துர்கையானாய்! மூவுலகிற்கும் தாயாக விளங்குவதால் த்ரிஜகன் மாதாவாகிறாய்! கைலாச மலையில் ஈஸ்வரனுடன் கலந்து வசிப்பவள் என்பதால் கைலாச வாஹினியாகிறாள். இமயத்துக்குள் மாணிக்கக் கற்களாலான மணிமண்டபத்தில் எழுந்தருளுவதாலே மாணிக்கவல்லியாகவும் திகழ்கிறாய்!’

பெ

ரும் தபஸ்வியான வரமுனிக்குள்ளும் கர்வம் நுழைந்ததுதான் பெரும் கொடுமை. பணிவுக்கு எல்லா விதத்திலும் நேர் எதிரான கர்வம். இது வந்து விட்டாலோ ஒருவருக்கு தலை தெரியாது.

வரமுனிக்கும் தலைகால் தெரியவில்லை. உலகத்தையே என்னவோ அவர்தான் படைத்தது போல் பார்க்கத் தொடங்கிவிட்டார். ஓடும் நதி முதல் உதிக்கும் சூர்ய சந்திரர்கள் வரை எல்லாமே அவருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது போல அவரிடம் ஒரு பிரமை.

இங்கே, ‘மனதை அடக்கியாளும் ஒரு தபஸ்விக்கு கூடவா கர்வம் ஏற்படும்?’ என்கிற ஒரு கேள்வி எல்லோக்குள்ளும் எழும்! ஏனென்றால், கர்வம் என்கிற உணர்வே ஒரு மாயைதான். நம்மை நாமே பெரிதாகக் கருதத் தொடங்கிவிட்டதன் எதிரொலி அது. எப்பொழுது அப்படி கர்வப்படத் தொடங்குகிறோமோ, அப்போதே நம் வளர்ச்சியும் நின்று போய்விடும்.

இதை இப்படி மாற்றியும் கூறலாம்.. ஒவ்வொருவருக்கும் இவ்வளவுதான் என்று ஒரு அளவும், கணக்கும் இருக்கிறது. அந்த அளவு வந்தவுடன் அது மேலும் அதிகரிக்காமல் இருக்க, அதுவே கர்வமாய் மாரி செயல்பட தொடங்கும். இதனால் வளர்ச்சி நின்று போவது மாத்திரமல்ல.. அதுவரையிலான வளர்ச்சிக்கும் அடுத்தடுத்த ஒரு போக்கு வேண்டுமே! அவையும் நிகழ ஆரம்பிக்கும்.

Enjoying the preview?
Page 1 of 1