Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Vaanam Pala Paravaigal
Oru Vaanam Pala Paravaigal
Oru Vaanam Pala Paravaigal
Ebook208 pages1 hour

Oru Vaanam Pala Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545337
Oru Vaanam Pala Paravaigal

Read more from Pattukottai Prabakar

Related to Oru Vaanam Pala Paravaigal

Related ebooks

Related categories

Reviews for Oru Vaanam Pala Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Vaanam Pala Paravaigal - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    ஒரு வானம் பல பறவைகள்

    Oru Vaanam Pala Paravaigal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    முன்னுரை

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்.

    இந்த நாவல் என் முதல் தொடர்கதை.

    திரு சாவி துவங்கி நடத்திய பல சிறப்பான பத்திரிக்கைகளில் ஒன்று ‘திசைகள்.’

    இளைஞர்களால் இளைஞர்களுக்காக துவங்கப்பட்ட இதழ் இது. எட்டு திசையிலிருந்தும் எட்டு இளைஞர்களை… ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டு, வித்தியாசமான விஷயங்களை வித்தியாசமாக வழங்கிய இதழ். இந்தப் பத்திரிக்கையின் துவக்க விழா, கமல்ஹாசன் தலைமையில் நிகழ்ந்தபோது… சென்னை வாணி மஹால் நிரம்பி வழிந்து, நாற்காலி இல்லாமல் நின்ற கூட்டம்… உட்கார்ந்த கூட்டத்தைவிட அதிகமாயிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். (நாற்பது வயது தாண்டிய பிறகு… இப்படியெல்லாம் எதையாவது அடிக்கடி நினைத்து பார்ப்பது சம்பிரதாயம்) காரணம்: அந்த ஆசிரியர் குழுவில் நானும் ஒருவன்.

    ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த மாலனுக்கு என்மேல் எப்படி அத்தனை நம்பிக்கையோ, சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த எனக்கு, தொடர்கதை வாய்ப்பு தந்து, கூடவே ‘இராணுவப் புரட்சியை மையமா வெச்சி எழுதுங்க!’ என்றும் சொல்லிவிட்டார்.

    தலையை ஆட்டிவிட்டு வந்து, இராணுவப் புரட்சி பற்றி தகவல்கள் திரட்டி (அப்போது இண்ட்டெர்நெட்டும் இல்லை, சி.டி. ரோமும் இல்லை!) எழுதிய நாவல் இது.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்.

    1

    வணக்கம்.

    வணக்கம்.

    இது என்ன பொழுது?

    காலைப் பொழுது

    நேரம் என்ன?

    எந்த நாட்டின் நேரம்?

    உன் கடிகாரத்தின் நேரம்

    பத்து - பத்து.

    நல்லது. நீ எங்கே இருக்கிறாய்?

    அந்தரத்தில். உலகத்தோடு டூ விட்டு விட்டு, ஹெலிகாப்டரில்.

    இப்போது எங்கே பறக்கிறாய்?

    ஆஸ்திரேலியா என்று ஒரு கண்டம். நாடு. அதற்கு மேலே.

    இன்னும் வடக்கே செல்.

    உத்தரவு...?

    இப்போது உனக்குக் கீழ் என்ன?

    கடல், இந்தியப் பெருங்கடல்.

    நிலப்பரப்பு தெரிகிறதா? நன்றாய் பார்.

    தெரிகிறது.

    நடுவிலே டாஸ்மேனியா சைசில் ஒரு நாடு தெரிகிறதா?

    தெரிகிறது. இந்த நாட்டின் பெயர்... வந்து... வந்து... மறந்து விட்டது.

    உடோபியா.

    உடோபியா? கேள்விப்பட்டதில்லை.

    இப்போது படு.

    அடுத்து என்ன செய்ய வேண்டும்?

    உடோபியாவில் இறங்க வேண்டும். அதன் தலைநகர் மட்மான் தெரிகிறதா? இறங்கு, இறக்கு.

    ஸ்கை ஸ்கிராப்பர்ஸ் நிறைய இருக்கிறது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

    இது 1981. வளராமல் என்ன? மட்மானில் உனக்குப் பிரியப்பட்ட கட்டிடத்தின் மாடியில் இறக்கு.

    அனுமதி?

    நான் சொல்கிறேன், இறக்கு.

    நீங்கள் என்ன உடோபியாவின் அதிபரா?

    அந்த அதிபர் டக்ளரையே படைத்தவன்.

    ஆண்டவனா?

    கேள்வி வேண்டாம். செய்கை வேண்டும். இறக்கு.

    அந்த மஞ்சள் வர்ணக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    எடு.

    இறக்கட்டுமா?

    ஏற்கனவே உத்தரவிட்டாயிற்று. பைனாக்குலர் கொண்டு கீழே பார்.

    அட! என்ன இது? எல்லாக் கார்களும், இதர வாகனங்களும்… சாலைகளில் அப்படியப்படியே நிற்கின்றன? வேலை நிறுத்தமா?

    இல்லை. மனிதர்களை கவனி.

    அட! அவர்களும் சிலைகளாய் நிற்கிறார்களே! அதோ அந்த சாலையோரத்தில் இளம் பெண் ஒருத்தி, சிரிக்கும் நிலையில் சிலை. அந்த மனிதன் தும்மும் நிலையில் சிலை. அந்த வயதானவர் சுருட்டு பிடிக்கும் நிலையில் சிலை. புகையைக் காணோம். அந்த சுருட்டும் சிலை. என்ன இதெல்லாம்!

    அவர்கள் யாருக்கும் உயிர் கிடையாது. இந்த நாட்டுக்கே இந்த நிமிடத்தில் உயிர் கிடையாது!

    புரியவே இல்லை

    புரியும். இப்போது நான் உயிர் தரப்போகிறேன்

    சுத்தமாய்ப் புரியவில்லை.

    உடோபியா நாடும், அதன் மக்களும் இப்போது இயங்கப் போகிறார்கள. இனி நீ இதை கவனித்துக்கொண்டே இரு! நான் புறப்படுகிறேன்.

    தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. நீங்கள் யார்?

    சொல்கிறேன் வாசகரே, சொல்கிறேன்! இதோ அவர்களை கவனி!

    சிட்டகிங்.

    சின்ன அழகான ஊர். மட்மானிலிருந்து பதினேழு கிலோ மீட்டர்.

    பசுமை அதிகம் பரவியிருக்கும் ஊர். பார்லியும் கோதுமையும் பிரதானமாய் விளைவிக்கப்படும் உடோபியாவின் கோதுமைக் களஞ்சியம.

    மக்கள், மாடுகள் வளர்த்தலில் செலுத்தும் அக்கறையை… தினச்செய்திகள் தரும் செய்தித்தாள்களைப் படிப்பதில் செலுத்துவதில்லை. பள்ளிப் படிப்பு முடித்ததும்… வருமானக் குறைவாளர் வயலுக்கும், பணக்காரப் பையன்கள் சூதாட்டக் கிளப்களுக்கும் சென்று கொண்டிருந்தனர்.

    சூரியனுக்கு ஒட்டு மொத்தமாக இந்த தேசத்தின் மீது வாஞ்சை, பிரியம் அதிகம். கொடுமைப்படுத்துவதில்லை.

    சின்ன தேசத்திற்கு தேவையான தொகையை விட, பன்மடங்கு அதிக மக்கள் தொகை.

    ‘டக்ளர்’ என்றால் அய்யோ என்று ஓடுவார்கள். உடோபியாவின் அதிபர் பசுமாடு என்றால், மக்கள் பாலோடு நிற்பார்கள். உச்சரிக்கும் போதே, உதடு நடுங்கும் ஒரே வார்த்தை டக்ளர்.

    டக்ளரைப் பற்றி வேறொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

    இப்போது...

    அந்த பால் பண்ணையைத் தாண்டி பெரிய மரம் அறுக்கும் ஆலை. அதைத்தாண்டி ஒரு பப்ளிக் பார்க். அதற்குள்ளே விதவித மரங்கள். மொத்தக் கலவையில் ஒரு போதையான வாசனை. அதிக அகலமில்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட, ஒரு நீரோடை பச்சை மஞ்சள் பூக்களை அதில் உதிர்த்துக்கொண்டு, கரையில் ஒரு மரம். தலைக்கு அடியில் பத்து விரல்களையும் செருகிக்கொண்டு, படுத்துக்கொண்டு அந்த மரத்தடியில் அவன்.

    அவனுடைய பாண்ட் ரிடையராகி விடுவேன் என்று எச்சரித்தது. அணிந்திருந்த பனியனில் அழுக்கு அதிகம். ஷேவிங் செட் எப்படி இருக்கும் என்கிற நினைவு அவனைவிட்டு அகன்று பல நாட்கள் ஆகியிருந்தது.

    அவன் கண்களில் பச்சை கலந்திருந்தது. சோகம் கலந்திருந்தது. வெறி கலந்திருந்தது. கூரான மூக்கு பட்டென்று வளைந்திருந்தது. உதடுகள் காய்ந்திருந்தன. மட்ட சிகரெட் உபயோகிப்பது தெரிந்தது.

    வெளுத்திருந்த வானம்.

    அவன் கண்கள் அதில் வெறித்திருந்தன.

    சின்ன தள்ளு வண்டியில் குல்லா வைத்துக் குழந்தையை ஆயா தள்ளிக்கொண்டு, மணலில் சிகப்புப் பந்தை பாதி புதைத்து, வெள்ளைப் பந்தால் தூரத்திலிருந்து அடித்து விளையாடுவதைப் பார்த்தான்.

    தூரத்தில் ஒரு குண்டு மரத்தின் பின்னால்… ஒரு கையில் சிகரெட்டுடன், மறுகையால் காதலியின் முதுகை பாலீஷ் செய்து கொண்டிருந்தவனிடம் சென்று... மன்னிப்பாயாக என்று தோளில் தட்டி, சிகரெட் வாங்கி, ஒரு நெருப்பை இரண்டு நெருப்பாக்கி… மறுபடி மன்னிப்பாயாக என்று சொல்லிவிட்டுத் திரும்ப தன் பழைய இடத்திற்கு வந்து படுத்துக்கொண்டான்.

    புகையை ஆழமாக இழுத்து, கண்ணைமூடி அனுபவித்தான்.

    ஜெகன், நீ இங்கே இருக்கிறாயா?

    திரும்பிப் பார்த்தான்.

    ஆஷா நின்று கொண்டிருந்தாள்.

    பாவாடை மிகக் குட்டையாக இருந்ததால், தொடையின் நிறத்தைச் சொல்லிற்று. தலையை பாப் செய்து, ஒரு ரிப்பன் பட்டை கட்டியிருந்தாள். புருவங்களை நீக்கிவிட்டு பென்சில் உதவியை நாடியிருந்தாள். கன்னங்களில் அதிக க்ரீம் வழித்திருந்தாள். கண்கள் சந்தோஷமாய் இருந்தன. உதடுகள் ஈரமாய் இருந்தன. கைகள் நீளம். விரல்களில் கவனம் செலுத்தியிருந்தாள். மார்புகள்...விபரங்கள் அவசியமா?

    என்ன, பதில் சொல்லவில்லை என்று ஜெகனை நெருங்கினாள்.

    அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

    அவன் அருகில் அமர்ந்தாள்.

    ஜெகன், நீ மூடில் இல்லையா?

    ஆமாம்.

    மறுபடி வெறுப்பா?

    ஆமாம்

    யார் மீது?

    உனக்குத் தெரியும்.

    மீண்டும் முயற்சித்துப் பாரேன்

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்

    தளர்ச்சி அடையாதே ஜெகன்

    உன் ஆறுதல் எனக்குத் தேவையில்லை

    என் மீதுமா உனக்கு வெறுப்பு?

    ஆமாம்

    நான் என்ன செய்தேன்?

    என்னை விரும்பினாய்

    விரும்புகிறாய் என்று சொல்! சரி, அது குற்றமா?

    ஆமாம், நீ என்னிடமிருந்து விலகி விடு. என்னைத் தொல்லை செய்யாதே. நான் சிந்திக்கவேண்டும்

    எதற்கான சிந்தனை?

    உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை

    ஜெகன், நான் உன் காதலி

    நேற்று வரை. இன்று நீ ஒரு பெண். எனக்கு உன்னைத் தெரியாது. இங்கிருந்து போய்விடு. என் கைகள் உன் கழுத்தை நெறிப்பதற்கு முன் போய்விடு

    கொஞ்ச நேரம் அமைதி.

    ஆஷா புற்களைப் பிய்த்துக் கொண்டிருந்தாள்.

    ஜெகன் சின்னக் கற்களை நீரில் எறிந்து கொண்டிருந்தான். ‘க்ளக், க்ளக்’ என்று அலைகள் உருவாகின.

    உண்மையாகச் சொல்கிறாயா ஜெகன்?

    உறுதியாகவும் சொல்கிறேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. என் ஆசைகளுக்குத் தீ வைத்து விட்டேன். உன் கனவுகளையும் நீ கசக்கி விடு. வேறு ஒரு முக்கிய திட்டத்திற்கு என்னைச் சிந்திக்க விடு.

    நான் செல்லட்டுமா.

    அப்போதே சொல்லிவிட்டேன்

    மறுபடி நாம்...

    சந்திக்கத் தேவையில்லை.

    ஜெகன்!

    ஜெகன், எனக்கு அழுகை வருகிறது...!

    உன் வீட்டு மெத்தையில் புரண்டு அழு. துக்கம் அதிகமானால் செத்துப் போ! எனக்குக் கவலையில்லை. இப்போது என் உடனடிக் குறிக்கோள் நீ இல்லை. வேறு முக்கிய வேலை இருக்கிறது. இந்த இடத்தைவிட்டு நீ செல்கிறாயா – நான் செல்லட்டுமா?

    நானே செல்கிறேன். கோபம் தணிந்ததும் என்னைத் தேடி நீ வருவாய். கண்டிப்பாய் வருவாய், நான் காத்திருப்பேன்!

    பாவாடை அசைய ஆஷா சென்றாள்.

    ஜெகன் தன் நண்பன் ராபர்ட்டுக்காகக் காத்திருந்தான். இரண்டு பெருமூச்சுகள் விட்டான். நேற்றிரவு தந்தை பேசியது நினைவுக்கு வந்தது.

    ஜெகன், கொஞ்சம் உட்கார். இப்படியே காலம் சென்று கொண்டிருந்தால் எப்படி? ஒரு வகையிலாவது நீ வாழ்வில் நிலையாக வேண்டாமா?

    வேண்டும். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

    வழி நான் சொல்கிறேன், கேட்பாயா?

    எனக்கென்று சில எண்ணங்கள் உண்டு. அவற்றை இடையூறு செய்யாமல், தங்கள் வழி இருந்தால் கேட்பேன்

    முதலில் பேச்சைக் குறை. உனக்காக என் நண்பன் ஒருவனிடம் சொல்லி, வேலை ஏற்பாடு செய்திருக்கிறேன். செய்கிறாயா?

    என்ன வேலை?

    வேலையென்று வந்துவிட்டால், சிறிது வளைந்துதான் போக வேண்டும்

    என்ன வேலை?

    அது ஒன்றும் அகௌரவமானதல்ல

    என்ன வேலை?

    ஹோட்டல் டிமார்க்கண்ட்டில்...

    சர்வர் வேலை! அதானே? அதற்கு என்னை நீங்கள் இவ்வளவு படிக்க வைக்கத் தேவையில்லை.

    இப்போது மனவியல் படித்துவிட்டு, நீ ஒன்றும் கிழித்து விடவில்லை!

    எனக்கு உணவு, உடை தந்து வாழ்வளிப்பதில் உங்களுக்கு சிரமம் இருப்பதாகச் சொன்னால்… நான் கப்களையும், ஸாஸர்களையும் கழுவக்கூடத் தயார்!

    அந்த நிலைக்கு உன் தந்தை வந்துவிடவில்லை.

    மறுபடி என் மனதைக் கொத்த வேண்டாம். ஏற்கனவே பிளந்திருக்கிறது

    ஜெகன் தன் நண்பன் ராபர்ட்டுக்காகக் காத்திருந்தான்.

    உதட்டில் சுட வந்த சிகரெட்டை நீக்கி எறிந்தான். மறுபடி படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தான். கவலையே இல்லாத வானம். கவலையே இல்லாத மேகம்.

    இன்னும் எத்தனை

    Enjoying the preview?
    Page 1 of 1