Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthi Munai Vithai
Puthi Munai Vithai
Puthi Munai Vithai
Ebook86 pages43 minutes

Puthi Munai Vithai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

'புத்திமுனைக் குற்றம்' என்கிற இந்த நாவலை எழுதிமுடித்துவிட்டு வாசித்துப் பார்த்த போது, இந்தக்கதையை சுவாரசியமாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக இதே கதாபாத்திரங்களோடு 'புத்தி முனை வித்தை' என்ற தலைப்புடன் கூடிய நாவலை எழுதி முடித்தேன்.

இதே கதையை மூன்றாம் பாகமாக "புத்தி முனை திருப்பம்" என்கிற தலைப்பில் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் தெரிந்தாலும்... பிடிவாதமாக இந்தக் கதை முற்றுமே முற்றும்!

அனிதா அவனைச் சமாளித்தாளா இல்லை யுவராஜ் மாட்டிக் கொண்டானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை அவரவர் மனத் திரையில் காண்க...

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100900014
Puthi Munai Vithai

Read more from Pattukottai Prabakar

Related to Puthi Munai Vithai

Related ebooks

Related categories

Reviews for Puthi Munai Vithai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthi Munai Vithai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    புத்தி முனைக் வித்தை

    Puthi Munai Vithai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1 - இவனை…

    அத்தியாயம் 2 - எப்படி…

    அத்தியாயம் 3 - சமாளிக்கப்…

    அத்தியாயம் 4 - போகிறோம்…

    அத்தியாயம் 5 - என்று….

    அத்தியாயம் 6 - அனிதா…

    அத்தியாயம் 7 - தீவிரமாக…

    அத்தியாயம் 8 - யோசித்துக்…….

    அத்தியாயம் 9 - கொண்டிருந்தாள்…

    அத்தியாயம் 10 - முற்றும்! …

    1

    இவனை…

    ஜீ

    ப் ஓடிக் கொண்டிருந்தது.

    யுவராஜ் நொந்து போய் உட்கார்ந்திருந்தான்.

    டிரைவருக்கு அருகாமையில் இன்ஸ்பெக்டர் பசுபதி சிகரெட் பிடித்தபடி யோசனையில் இருந்தார். தொப்பியைக் கழற்றியிருந்ததால், பின்னந்தலையில் எண்ணெய் மினுமினுப்புடன் உரு வட்டச் சொட்டை தெரிந்தது.

    ‘பத்திரிக்கை ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் என் மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள்! என் ஓவியத்தின் மீதும், என் மீதும் எத்தனை லட்சம் வாசகர்கள் மரியாதை வைத்திருக்கிறார்கள்!

    அந்த மதிப்பும், மரியாதையும் இன்றைக்கு மாலைச் செய்தித்தாளில் ‘பிரபல ஓவியர் யுவராஜ் கைது!’ என்கிற செய்தியால் சிதறிவிடப் போகின்றன என்பதை நினைப்பதற்கே யுவராஜுக்கு அவமானமாக இருந்தது.

    இந்த அவமானத்தை தவிர்க்கத்தானே யதேச்சையாய் அமைந்த சில சந்தர்ப்பங்களை சாதகமாக்கி, கொலை நடந்த போது திருச்சியில் இருந்ததாக ஸ்தாபிக்க முயன்றேன்.!

    கடைசியில் அந்த அலாரம் டைம்பீஸ் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது! நேற்று பெட்டியோடு புறப்பட்ட போது, நினைவு வந்து அலாரம் நிறுத்தி விட்டுப் போயிருந்தால், இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை.

    இப்போது ஸ்டேஷனுக்குப் போனதும் பெல்ட்டைக் கழற்றிக் கொண்டு, சினிமாவில் காட்டுவார்களே அதுபோல இரண்டு கைகளையும் அந்தரத்திலிருந்து வரும் சங்கிலிகளுடன், பிணைத்து, விலாசித் தள்ளப்போகிறாரா?

    சொல்லு! நீதானே பாண்டியனை கொலை செஞ்சே? என்று கழுத்தை நெரிப்பது போலப் பிடித்துக் கேட்பாரா?

    எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? நான் இல்லவே இல்லை என்று சாதித்தாலும், இப்படி முரட்டுத்தனமான விசாரணைகளின் மூலம் உண்மையை என் வாயிலிருந்து வரவழைத்து விட மாட்டார்களா?

    வலியும், வேதனையும் உணர்ந்து தாங்க முடியாத கட்டத்தில் ஒப்புக் கொள்வதைவிட, பேசாமல் மரியாதையாக ஸ்டேஷனுக்குப் போனதுமே ஒப்புக் கொண்டு விட்டு, வாக்கு மூலம் கேட்டால் எழுதிக்கொடுத்து விடலாமா?

    இந்த அலாரம் சமாச்சாரம் ஒன்றை மட்டும் வைத்து என்னைக் குற்றவாளியாக்கிவிட முடியுமா? வேறு சாட்சிகள், தடயங்கள் வேண்டாமா? என்னிடம் ரயிலில் பயணம் செய்து வந்த டிக்கெட் இருக்கிறதே… அது ஒரு ஸ்ட்ராங்கான பாதுகாப்பில்லையா எனக்கு?

    ஒரு நல்ல லாயரை கலந்தாலோசித்து விட்டுப் பிறகு குற்றத்தை ஒப்புக் கொள்ளலாமா? குறைவான தண்டனை அடைய வேண்டுமெனில் அதற்குத் தகுந்தபடி வாக்குமூலம் எப்படித் தர வேண்டும் என்று ஒரு வக்கீலுக்கு நன்றாகத் தெரியும்.

    சட்டென்று யுவராஜுக்கு அவன் காதலி அனிதாவின் நினைவு வந்தது.

    அடச்சே! எப்படி மறந்தேன்? அனிதா ஒரு வக்கீல்தானே? பிரபல வக்கீல் ஞானசவுந்தரியிடம் ஜுனியராக இருப்பவள் தானே?

    அவளைக் கலந்தாலோசித்து விட்டு, பிறகு எந்த ஒரு முடிவுக்கும் வரலாமே.

    யுவராஜ் அவசரப்பட்டு இன்ஸ்பெக்டரிடம் எதையும் உளறிக் கொட்டுவதில்லை என்று தீர்;மானித்துக் கொண்டான்.

    போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்ததும்…

    உக்காருங்க யுவராஜ் என்றார் இன்ஸ்பெக்டர் பசுபதி.

    தன் மேஜையில் அவர் அமர்ந்ததும் ஒரு கான்ஸ்டபிள் ஃபேன் சுவிட்ச் போட்டான். மேஜை மேல் பழுப்புக் காகிதங்கள் துருத்தின ஃபைல்கள் இருந்தன. எப்போதோ குடித்துவிட்டு வைத்த டீ கிளாஸ் இருந்தது. கருப்பு டெலிபோன் அடியில் ஒரு அட்டை முழுக்க ஏதோதோ டெலிபோன் எண்கள்.

    சுவரில் கருப்பு பெயிண்ட் அடித்து, சார்ட் வரைந்து வருட வாரியாக குற்றங்களின் எண்ணி;கைகள் இருந்தன. சைடில் திரும்பின இந்தராகாந்தி படத்துக்கு எப்போதோ போட்ட ஜரிகை மாலையில் ஒட்டடை படிந்திருந்தது. கவிதா டைலர்ஸ் வழங்கிய தினக் காலண்டரில் இன்னும் நேற்றைய தேதி, ஜன்னல் இல்லாததால் இரண்டு ட்யுப் லைட்டுகள் எரிந்தன.

    மர ஸ்டாண்டில் பாய்கனட் பொருத்தின துப்பாக்கிகள் தயாராய் இருந்தன. ஒரு பக்கம் திறந்த கப்போர்டில் மூங்கில் செய்த ‘காவல்’ என்றெழுதிய கேடயங்களும், இரும்புத் தொப்பிகளும் அடுக்கப்பட்டிருந்தன. ஆணிகளில்

    Enjoying the preview?
    Page 1 of 1