Anthapurathil Oru Poo
5/5
()
About this ebook
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Anthapurathil Oru Poo
Related ebooks
Kannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Nee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Vayathu 17 Rating: 3 out of 5 stars3/5Thoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Sirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSodukkinal Sorgam Rating: 5 out of 5 stars5/5Lakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsOru Mazhai Naalil Rating: 5 out of 5 stars5/5Kanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Jarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvenum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paarkirargal Rating: 5 out of 5 stars5/5Kaadhalikku Kalyanam Rating: 5 out of 5 stars5/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Kuthiraigal! Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsPathaiyellam Pookkalittu... Rating: 5 out of 5 stars5/5Oru Eastman Nira Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Droham Rating: 5 out of 5 stars5/5Bharath Bharath Paranthu Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Kadaisi Punnagai Rating: 5 out of 5 stars5/5Kannadi Vinadigal Rating: 0 out of 5 stars0 ratingsIdathu Purame Kolga Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsVinaiya Oru Vidukathai Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Puthir Thottam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Anthapurathil Oru Poo
2 ratings0 reviews
Book preview
Anthapurathil Oru Poo - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
அந்தப்புரத்தில் ஒரு பூ
Andhapurathil Oru Poo
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
1
இ
ரவு பெய்த மழையின் காரணமாக சோம்பலாக விடிந்து கொண்டிருந்தது. காற்று சில்லென்று சீண்டிய போதெல்லாம் மரங்கள் சிலர்த்துச் சிணுங்கி அடைக்கமாயிருந்த நீர்முத்துக்களை உதிர்த்தன. ஈரம் காயாத தார்ச் சாலைகளில் அங்கங்கே பழுப்புத் தண்ணீர் தேங்கி நின்றது. கொட்டாவி மென்று கூடுகளிலிருந்து புறப்பட்டன பறவைகள்.
கடற்கரையின் மணல்வெளிகள் காலடித் தடங்கள் இல்லாமல் உலரக் காத்திருந்தன. சுதந்திர தினக்கொண்டாட்டம் முடித்த மகாத்மாகாந்தி சிலையின் கழுத்தில் மழையில் மலர்கள் உதிர்ந்து போயிருக்க, வெறும் நார்களும், நூல்களும் மட்டுமே கிடந்தன.
உடல் இளைப்பதற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் அதிகாலையிலேயே கார்களிலும், ஸ்கூட்டர்களிலும் வந்து வெள்ளை உடைகளுடன் வேக வேகமாக நடப்பவர்களின் கூட்டம் சற்றுக் கம்மியாக இருந்தது.
சிவராமன் சைக்கிளில் வந்து இறங்கினார். நிறுத்தி பூட்டி சாவிக் கொத்தை தன் ஜிப்பாவின் பையில் போட்டுக் கொண்டதும், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடற்கரைச் சாலையின் நடைபாதையில் அண்ணா சமாதி நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினார்.
சிவராமனுக்கு வயது அறுபத்தி இரண்டு. தலையில் சிரமப்பட்டு கறுப்பு முடியைத் தேடவேண்டும். ஆனால், முகத்தில் இன்னும் சுருக்கம் விழவில்லை. கண்களுக்குக் கீழே இன்னும் சதைப் பைகள் தொங்கவில்லை. உப்பின கன்னங்களில் இரண்டு நாள் சவர பாக்கியுடன் வெள்ளை ரோம முட்டைகள், காலர் இல்லாத ஜிப்பாவின் கைகளை முழங்கை வரை மடித்து விட்டிருந்தார். பட்டையாகக் கரை போட்ட எட்டுமுழ வேட்டியை பெரும்பாலும் மடித்துக் கட்டிக்கொள்வதுதான் பிடிக்கும்.
கிட்டத்தட்டட பதினைந்து ஆண்டுகாக அதிகாலையில் கடற்கரைச் சாலையில் நடந்து வருவதால் அவரை நிறையப்போர் அறிந்து வைத்திருந்தார்கள். சிலர் காலை வணக்கம் சொல்லிக் கடந்தார்கள். சிலர் கையை மட்டும் உயர்த்தி புன்னகைத்தார்கள்.
கட்டிடங்கள் கட்டித்தருகிற ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற சிவராமன் அவரது உறவினர்கள் அத்தனை பேராலும் விரும்பப்படுகிற ஒரு சுவாரசியமான மனிதர். நிறைய படிப்பவர். நிறைய பேசுபவர். எந்த ஒரு விவகாரம் குறித்தும் தீர்மானமாக சில கருத்துக்கள் கொண்டவர். சரியோ, தவறோ தனக்கு நியாயமென்று படுவதை எங்கும், எவர் முன்னிலையிலும் சொல்லத் தயங்காதவர்.
அவரின் உறவினர்களும் சரி, நண்பர்களும் சரி சிக்கலான காரியமென்றால், முடித்து வைக்க அவரைத்தான் அணுகுவார்கள்.
மாமா, பையனை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனால், வரதட்சணையா பெரிய தொகை எதிர்பார்ப்பாங்க மாதிரி தெரியுது. நீங்கள் வந்து சபையிலே உக்கார்ந்து எடுத்துப் பேசி சம்பந்தத்தை நழுவவிட்டுடாம எப்படியும் முடிச்சுக் கொடுக்கணும் மாமா..
இவர் சென்று பேசி சம்பந்தத்தை முடித்து விருந்து சாப்பிட்டு தாம்பூலம் போட்டுத்தான் திரும்பினார்.
சிவராமா, ஒரு அரசாங்க ஆபீசுலேர்ந்து பதினேழாயிரம் ரூபாய் பணம் வரணும். சம்பந்தப்பட்டஅதிகாரி இழுத்தடிக்கிறான். பணம் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கேன். ஆனால், பிடிகொடுத்துப் பேசமாட்டேங்கறான். கொஞ்சம் என்னோட வாயேன்.
இவர் நண்பரோடு சென்று வாதம் செய்து ஒரு பைசா அன்பளிப்பு கொடுக்காமல் அதே நாள் காசோலை வாங்கி நண்பர் கையில் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.
சித்தப்பா, என் பொண்ணுக்கு நீங்கள் தான் எப்படியாவது அந்தப் பள்ளிக்கூடத்தில் சீட் வாங்கித் தரணும். எக்கச்சக்கமா கட்டிட நிதி, அது இதுன்னு கேட்டு பய முறுத்தி விரட்டிட்டாங்க.
இவர் சென்று உயர் கல்வி அதிகாரிக்கும், அரசாங்கத்துக்கும் ஆதாரத்துடன் புகார் செய்யவா? என்றுஅதட்டிக் கேட்டு, இறுதியில் எந்த நிதிக்கும் பணம் தராமல் பள்ளியில் இடம் வாங்கி வந்தார்.
இப்படி எப்போதும் அடுத்தவரின் காரியங்களில் சுறு சுறுப்பாக இயங்கும் சிராமனுக்கு சில ஆண்டுகளாக மற்றொரு உத்தியோகமும் சேர்ந்திருக்கிறது.
அது தனது மருமகள் பிரேமாவுக்குத் துணையாக அவள் செல்லும் கவியரங்கங்களும், இலக்கியக் கூட்டங்களுக்கும் சென்று வருவது.
அவரது ஒரே மகன் அருண்குமாரின் மனைவி பிரேமா ஒரு கவிதாயினி. தமிழில் ஆர்வமுள்ளவர்களுக்கும், பத்திரிகைகள் படிப்பவர்களுக்கும் பிரேமாவைத் தெரியாமல் இருக்க முடியாது.
கல்லூரி நாட்களில் விளையாட்டாக எழுதத் தொடங்கிய கவிதைகளை தோழிகள் பாராட்டியதால், திருமணத்திற்குக் காத்திருந்த காலகட்டத்தில் தனது சிந்தனைகளை கவிதையகாளக்குவதில் ஆர்வம் காட்டினாள் பிரேமா.
ஒரு பிரபல பத்திரிகை கவிதைப் போட்டி நடத்திய போது, ஒரு உந்துதல் காரணாக தன் கவிதைகளில் சிலவற்றை அனுப்பி வைக்க, இவள் கவிதை முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பிரேமாவின் கவிதையோடு அவளின் புகைப்படமும், சிறிய பேட்டியும் வெளியிட்டிருந்தார்கள். அந்தக் கவிதைக்கு அவளுக்கு நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினாள். எல்லாமே பிரசுரமாகி அவளை புகழேணியில் ஏற்றிவிட்டன. இலக்கியக் கூட்டங்களும், கவியரங்கங்களுக்கும் அழைத்தார்கள். அவள் எழுதிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட பதிப்பாளர்கள் போட்டி போட்டார்கள்.
அருண்குமார் அவளை முதன் முதலாக சந்தித்தது ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தான்.
அருண்குமார் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியர். கம்யூட்டர்கள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவி. மாதம் பதினான்காயிரம் சம்பளம். மந்தைவெளியில் தனியான சொந்த வீடு. கார், தொலைபேசி என்று நகரத்தின் சவுகரியச் சாதனங்கள் எல்லாம் உண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த விழாவில் பிரேமாவின் கவிதை நூலை ஒரு கவிஞர் வெளியிட, அதைப் பெற்றுக்கொள்ளும் முக்கிய நபராக அருண்குமாரை அழைத்திருந்தார்கள்.
அருண்குமார் பிரோவின் கவிதைகளைப் படித்திருந்தாலும், அவளை அதுவரை சந்தித்ததில்லை. எனவே அவளின் அழகைப் பார்த்து பிரமித்துவிட்டான்.
மேடையில் வாழ்த்திப் பேசியபோது, ‘கவிதைப் பெண் பிரேமாவின் கவிதைகள் யாவும் அழகாக இருக்கும் என்பதை அறிவேன். ஆனால், அவரே ஒரு அழகான கவிரத என்பதை இன்றுதான் அறிந்தேன்’ன்றதும் அரங்கம் முழுக்க கரவொலி எழுந்தது. மேடையில் அமர்ந்திருந்த பிரேமாவின் முகத்தில் ஒரு வித பெருமையும், தர்ம சங்கடமும் கலந்து பரவின.
மறுநாள் அருணுக்கு போன் செய்து பேசிய அவன் நண்பன் ஒருவன். ‘என்னப்பா இது? கவிதையைப் பாராட்டச் சொன்ன, கவிதை எழுதினவங்களை பாராட்டிட்டியே, ஒரு மேடையில, ஆயிரக்கணக்கானவங்க முன்னிலையில ஒரு கல்யாணமாகாத பெண்ணாட அழகைப் பாராட்டிப் பேசறது அவங்களை சங்கடப் படுத்தும்னு உனக்குத் தோணலையா?" என்றான்.
நண்பன் கேட்டதும், தான் தப்பு செய்துவிட்டடோமோ என்ற குற்ற உணர்வு மேலிட, பிரேமாவின் தொலைபேசி எண் விசாரித்து நேரடியாகத் தொடர்பபு கொண்டான் அருண்.
நேத்து நான் பேசினப்போ உங்களை தர்மசங்கடப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. என் மனசில பட்டதை சட்டுன்னு சொல்லிட்டேன். எதுவும் தப்பா எடுத்துக்கலையோ?
என்றான்.
சிவராமன், நடை முடிச்சிட்டிங்களா?" என்று கேட்டபடி செய்தித்தாளுடன் வந்து அவர் அருகில் அமர்ந்தார் சுந்தரமூர்த்தி. ஏதோ சொல்லவந்து தயங்கினார் அவர்.
என்ன தயங்கறீங்க? சொல்லுங்க.
ஓண்ணு சொன்னா தப்பா எடுத்துக்கக்கூடாது சிவராமன் பொதுவாழ்க்கையில உள்ளவங்க மத்தவங்களுக்கு வழிகாட்டியா, ஒரு சுத்தமான வாழ்க்கை வாழணும். அப்படி இல்லைன்னா மரியாதை போயிடும். நீங்கள் வயசுல பெரியவர். உங்களுக்கு தெரிஞ்சும் கண்டிக்காம இருக்கிறது அதைவிடப் பெரிய தப்பு சார்.
நீங்கள் என்ன சொல்றீங்கன்னு எனக்கு எதுவும் புரியலையே.
உங்க மருகளைப் பத்திதான் சொல்றேன்.
என்ன அவளுக்கு?
இந்தப் புத்தகத்திலே என்ன போட்டிருக்கான்னு படிச்சுப் பாருங்க, புரியும்
என்று செய்தித்தாளுடன் கூடிய இலவச இணைப்புப் புத்தகத்தில் ஒரு பக்கம் மடக்கி அவரிடம் காட்டினார் சுந்தரமூர்த்தி. அதில்...
‘கவிதாயினி பிரேமாவுக்கு மது அருந்தினால் தான் கவிதை எழுத வருமாம். அதுவும் வெளிநாட்டு மதுதான் அருந்துவாராம். அவருக்குப் பிடித்த மது வகைகளை வரவழைத்து அன்பளிப்பாகத் தருவாராம் இளம்பதிப்பாளர் நாகராஜன். அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கமான உறவு போலும்!’ என்று துணுக்குச் செய்தி அச்சாகியிருந்தது.
2
த
ன் மருமகள் பிரேமாவைப் பற்றி தரக்குறைவாக வெளியாகியிருந்த விசமத்தனமான துணுக்குச் செய்தியைப் படித்ததும் தாங்க முடியாத கோபத்தில் முகம் சிவந்தார் சிவராமன்.
என்ன, படிச்சிட்டு வாயடைச்சிப் போய் உக்காந்துட்டிங்க? பலநாள் அந்தரங்கத்தில் இருக்கிற எந்த சமாச்சாரமும் ஒருநாள் அம்பலத்துக்கு வந்துடும்
என்று கிண்டலாகச் சிரித்த சுந்தரமூர்த்தியை முறைத்தார் சிவராமன்.
சுந்தரமூர்த்தி, இது அப்பட்டமான பொய்! அதைப் புரிஞ்சுக்காம நீங்கள் பாட்டுக்கு எதாச்சும் பேசாதீங்க!
.
நான் உங்களுக்கு தெரிஞ்சவன். அதுக்காக நீங்கள் சொல்றதை மதிச்சி வாயை மூடிக்கலாம். படிக்கிறவன் ஒவ்வொருத்தன் வாயையும்போய் மூடுவாங்களா, ஒரு குடும்பத்தில் இருக்கற பொம்மனாட்டி குடிச்சிட்டு கூத்தடிச்சிருக்கா. அதைக் கண்டிக்காமல் பேப்பர்ல எழுதற அளவுக்கு விட்டுட்டு என்னைப் பேசாதேன்னு சத்தம் போட்டா ஆச்சா?
யோவ்...!
என்று ஆத்திரமாக சுந்தரமூர்த்தியின் சட்டையைப் பிடித்த சிவராமன். என் மருமகளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பாப் பேசினே, அடுத்த வார்த்தை பேசறதுக்கு நாக்கு இருக்காது
என்றார் கத்தலாக..
சற்றுத் தள்ளி வேகமாக நடந்து கொண்டிருந்தவர்களில் சிலர் திரும்பிப் பார்த்தார்கள்
சுந்தரமூர்த்தி விலுக்கென்று சிவராமனின் பிடியிலிருந்து தன்னைக் பிடுங்கிக்கொண்டு, என் சட்டையை ஏன்யா பிடிக்கிறே? நானா எழுதினேன்? இல்லை, நானா அச்சடிச்சேன்? செய்தி பொய்யா, இருந்தா பத்திரிக்கைக்காரனைப் போய் கேளு. ஆனால், பொய்யா இருந்தா இப்படி பட்டவர்த்தனமா பேர்களைப் போட்டு எழுதுவானா?
என்றார்.
வாயை மூடுய்யா!
என்று சிவராமன் பதட்டமாக அந்தப் புத்தகத்தைப் புரட்டி பத்திரிகையின் விலாசம் பார்த்தார். அண்ணா சாலையில்தான் இருந்தது அந்தப் பத்திரிகையின் அலுவலகம்.
உங்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்
என்று அந்தப் புத்தகத்தைமடக்கி எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து, தனது சைக்கிளை எடுத்து வேகமாக மிதிக்கத் தொடங்கினார்.
படபடப்பாக வந்தது. வியர்த்தது. என்ன ஒரு அயோக்கியத்தனம் இது! ஒரு குடும்பப் பெண்ணின் மேல் கொஞ்சம்கூட நாகரிகமில்லாமல் சேற்றை வாரிக் கொட்டியிருக்கிறார்களே.. அதிலும் பிரபலமான பெண். சமுதாயத்தின் நன்மையை நோக்கமாகக் கொண்டு தனது கற்பனையை சிந்தனையை வார்த்தை வார்த்தையாய்ச் செதுக்கி ஒவ்வொரு கவிதையையும் ஒரு அழியாத சிற்பபமா வடித்துக் கொண்டிருக்கும், பொறுப்பபுமிக்க படைப்பாளியின் மேல்...
இது மகா அயோக்கியத்தனம்! எத்தனை பேர் மனதில் ஒரே நேரத்தில் பிரேமா பற்றி நச்சு எண்ணத்தை விதைத்து விட்டார்கள்!
எந்த ஒரு பொய்யையும் அலங்காரமாக அச்சில் கொடுத்தால் உண்மை என்று நம்பகிற மக்கள்தானே இந்தச் சமுதாயத்தில் அதிகமிருக்கிறார்கள்.
பல ஆண்டு பழகினசுந்தரமூர்த்தியே பத்திரிகையில் படித்ததும் உண்மை என்று நம்பி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறானே அறிமுகம் இல்லாத எத்தனையோ இலட்சம் பேர் இதை உண்மை என்றுதானே நம்புவார்கள்?
யார் இந்த தரங்கெட்ட செயலைச் செய்தது? ஏன் செய்தார்கள்? ஊர், உலகம் தவறான கற்பனைகளை மனதில் வைத்துக்கொள்வது ஒருபுறமிருக்க, பிரேமாவுக்குத் தெரியவந்தால் அவள் மனம் என்ன பாடுபடும், நொந்து போய்விடாது? நொறுங்கிப் போய்விடாது?
ஆயிரம் ஆத்திரக் கேள்விகளுடன் ‘தனிச்செய்தி’ நாளிதழின் அலுவலகக் கட்டிடத்தின் வாசலில் சைக்கிளை நிறுத்தி இறங்கினார் சிவராமன்.
இரும்பக்