Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aval Oru Aacharyakuri
Aval Oru Aacharyakuri
Aval Oru Aacharyakuri
Ebook90 pages37 minutes

Aval Oru Aacharyakuri

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400098
Aval Oru Aacharyakuri

Read more from Rajesh Kumar

Related to Aval Oru Aacharyakuri

Related ebooks

Reviews for Aval Oru Aacharyakuri

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aval Oru Aacharyakuri - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    அவள் ஒரு ஆச்சிரியக்குறி

    Aval Oru Achiriyakkuri

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    ஓட்டல் கெவன்ஸ் கேட்.

    விதானங்களில் சலனம் இல்லாமல் தொங்குகிற ‘லஸ்தர்’ விளக்குகள் ஓட்டலின் எல்லா திசைகளிலும் பதிக்கப்பட்டிருந்த சலவைக் கற்களில் முகம் பார்த்துக் கொண்டு இருந்தன. கார் நிற்கும் இடத்தில் லட்சங்களை விழுங்கிய கார்கள் தெரிய… நமக்கு அந்த நிமிடம்… ஓட்டல் காம்பவுண்டு கேட்டுக்குள் நுழைகிற ஊதா நிற கார்தான் முக்கியம். டாக்சி என்று கண்ணாடியின் மேல் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்தது.

    டாக்சி நேரடியாக போர்டிகோ படிகளோரம் அடங்கி நிற்கபிரீப்கேஸ்களோடு இரண்டு பேர் இறங்கினார்கள்.

    இளைஞர்கள்,‘யார்ட்வே’ பேண்ட் சட்டைக்குள் எதிரே இருந்த ‘ப்ளு ஸிவ்’ டெலிவிஷன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது.

    பரந்த மேசைக்கும் ‘கீ போர்டு’க்கும் இடையில் நின்று கழுத்து ‘டை’யை இறுக்கிக் கொண்டிருந்தசுத்தமான வரவேற்பு இளைஞன் இருவரும் நெருங்கினார்கள். அவன் செயற்கையாய் புன்னகைத்து…

    எஸ்… பிளீஸ்… என்றான்.

    இருவரில் ஒருவன் கன்னத்தை இடதுகை ஆட்காட்டி விரலால் நிரடிக்கொண்டே சொன்னான்: எங்களுக்கு இரண்டு அறை வேண்டும்.

    ஏ.சி.யா?

    ஆமா.

    அவன் லெட்ஜரை இழுத்துக் கொண்டு, பெயர்களை பதிவு செய்ய ஆரம்பித்த விநாடி ஒருவன் கேட்டான்:

    பார் அட்டாச்ட்தானே?

    ஆமாம்.

    சைனீஸ் ரெஸ்டாரெண்டட் இருக்கா?

    இருக்கு.

    பெண்கள் கிடைப்பார்களா?

    வரவேற்பு இளைஞன் நிமிர்ந்தான்.

    ஜன்னலுக்கு வெளியே வானம் நீக்ரோ நிறத்துக்கு போயிருக்கசாவித்திரி சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். அது 7.35 என்றது.

    அவள் பதட்டம் அதிகரித்தது. சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து சாவதானமாய் மாலை தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்த கணவன் ராமநாதனைக் கூப்பிட்டாள்.

    என்னங்க?

    அவர் பத்திரிகையை தாழ்த்தினார்.

    என்ன சாவித்திரி?

    மணி ஏழரைக்கு மேலாச்சு… இன்னும் வனிதாவைக் காணோமே?

    வந்துருவா… வந்துருவா…

    சாவித்திரி அவரை கோபமாய் பார்த்தாள். ஒரு நாற்காலியும், பத்திரிகையும் கிடைச்சுட்டா… உங்களுக்கு வேற எதுவுமே வேண்டாம். வயசுக்கு வந்த பொண்ணை இன்னும் காணோம்ன்னு நான் வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேன். நீங்க என்னான்னா… வந்துடுவா வந்துடுவாள்னு சாவகாசமா சொல்லிட்டு இருக்கீங்களே?

    உனக்கு தொட்டதக்கெல்லாம் பதட்டம்.

    காலையில கல்லூரிக்கு போன பெண் இன்னும் வீடு திரும்பலைன்னா பதட்டப்படாமே இருக்க முடியுமா?

    பதட்டப்பட்டா… உடனே வனிதா வந்துடுவாளா? அவ வர்ற நேரத்துக்குத்தானே வந்து சேருவா. இன்னிக்கு ‘ஸ்பெஷல்’ வகுப்பு இருக்கு, வர தாமதமாகும்னு சொல்லிட்டுத்தான் போனா.

    ஏழரை மணி வரைக்குமா ‘ஸ்பெஷல் வகுப்பு?

    "கல்லூரி அஞ்சு மணிக்கு முடியும். அஞ்சரையில் இருந்து ஆறரை மணி வரைக்கும் ‘ஸ்பெஷல்’ வகுப்புன்னு சொன்னா.

    ஆறரைக்கு வகுப்பு முடிஞ்சா இந்நேரம் வந்து சேர்ந்திருக்கணுமே?

    சரியா கணக்குப் போடாதே! பஸ் பிடிச்சு வரவேண்டாமா? அப்படியே பஸ்ல வந்தாலும் வழியில் ஏதாவது போக்குவரத்து நெரிசல் அது… இதுன்னு அரைமணி நேரம் முன்னே பின்னே ஆகிறதுதான்.

    இந்த வெத்துப்பேச்சை பேசிட்டிருக்காதீங்க… போய் பஸ் நிறுத்தத்தில் நின்னு அவ வந்தா கூட்டிட்டு வாங்க… போங்க.

    ராமநாதன், பத்திரிகையை டீபாயின் மேல் வைத்து விட்டுஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தார்.

    சாவித்திரி

    Enjoying the preview?
    Page 1 of 1