Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Nirathil Oru Vaanavil
Vellai Nirathil Oru Vaanavil
Vellai Nirathil Oru Vaanavil
Ebook176 pages1 hour

Vellai Nirathil Oru Vaanavil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400202
Vellai Nirathil Oru Vaanavil

Read more from Rajesh Kumar

Related to Vellai Nirathil Oru Vaanavil

Related ebooks

Reviews for Vellai Nirathil Oru Vaanavil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Nirathil Oru Vaanavil - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    வெள்ளை நிறத்தில் ஒரு வானவில்

    Vellai Nirathil Oru Vaanavil

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    கங்கிராட்ஸ் மிஸ்டர் கிருஷ்ணகுமார்

    அற்புதமான ஆர்க்யூமென்ட்

    ஆப்பனென்ட் லாயர் வேங்கடபதி கலகலத்துப் போயிட்டார்

    நிச்சயமா ஜட்ஜ்மெண்ட் உங்களுக்கு சாதகம் தான்…

    லாயர் சேம்பர் ரூமை விட்டு வெளியே வருவதற்குள் ஏகப்பட்ட கைகள் நீண்டு – கிருஷ்ணகுமாரின் கைதேடி குலுக்கின. உடம்பின் நாலா பக்கங்களிலும் பாராட்டு வார்த்தைகள் மொய்த்தன.அவனுடைய காது மடல்களில் பட்டுப்பட்டு நழுவின.

    தாங்க்யூ…. தாங்க்யூ….உதடுகள் எந்திரத்தனமாய் உச்சரிக்க – கும்பலை நீந்தி வராந்தாவுக்கு வந்தான் கிருஷ்ணகுமார். கறுப்புக் கோட்டுக்குள்ளே வியர்வை ஆறாய் ஊற்றியது. மனசுக்குள் சந்தோஷம்ஹைட்ரஜன் வாயு அடைந்த பலுனாய் மிகுந்தது.

    ஏறக்குறைய தோற்றுப் போகும் என்கிற நிலைமையில் இருந்த இந்த வழக்குக்கு இன்றைக்கு அவன் புரிந்த ஆர்க்யூமெண்டால் ஓரு யானை பலம் வந்திருந்தது. அதுவரை பாராமுகமாய் இருந்த வெற்றித் தேவதை-இந்த நிமிஷம் லேசாய் கடைக்கண் பார்வை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

    வராந்தாவில் உற்சாக நடை போட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் சட்டென்று நின்றான.; பார்வையைக் கீழே தாழத்தினான். அந்தப் பெண் நெடுஞ்சாண் கிடையாக கிருஷ்ணகுமாரின் கால்களில் விழுந்திருந்தாள். லேசாய் அதிர்ந்து ஓரடி பின் வாங்கினான் கிருஷ்ணகுமார். பதட்டக் குரலில் சொன்னான்.

    இந்தாம்மா எழுந்திரு….என்ன இதெல்லாம்….?

    அந்தப் பெண் கை கூப்பிக் கொண்டே எழுந்தாள் குரலில் தழுதழுப்பு தட்டச் சொன்னாள். அய்யா….எனக்கு நம்பிக்கை வந்துருச்சய்யா…. இனிமே நம்ம கேஸ் ஜெய்ச்சிடும்….என்னை ஏமாத்தி சொத்தைப் பறிச்சவங்க… நிச்சயமா நடுத்தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கப்போறாங்கைய்யா…."கிருஷ்ணகுமார் புன்னகைத்தான்.

    இதோ…. பார்… பொன்னம்மா….ஜட்ஜ் இன்னும் தீர்ப்பு சொல்லிடலை….இன்னும் பத்து நாள் கழிச்சு தான் தீர்ப்பு சொல்லப் போகிறார்…அந்த இளம் விதவை பொன்னம்மா பரவசித்தாள். தீர்ப்பு எனக்குத் தெரிஞ்சு போச்சய்யா…. நீங்க பேசின பாஷை எனக்குப் புரியலைன்னாலும்…. அதுல இருந்த ஈரம் ஜட்ஜோட மனசைத் தொட்டுடுச்சய்யா….சரி…. சுரி…..உணர்ச்சிவசப்படாமே….. வீட்டுக்குப் போ…. இருபத்தி மூனாந்தேதி தான் தீர்ப்பு…. அன்னிக்கு நேரா கோர்ட்டுக்கே வந்திடு… சரிங்கய்யா…."மருபடியும் அவனை கும்பிட்டு கண்களில் பனிக்கிற நீரோடு நகர்ந்து போனாள் பொன்னம்மா.

    கிருஷ்ணகுமார் தன் வலது கையில் மடித்து வைத்திருந்த கறுப்புக் கோட்டை இடது கைக்கு மாற்றிக் கொண்டே கோர்ட்டின்வாசற்படிகளில் இறங்க ஆரம்பித்தான்.

    ஆறடிஉயரத்திற்கு ஒரு அங்குலம் குறைவாய் இருந்த கிருஷ்ணகுமாருக்கு பச்சை நரம்புகள் பளிச்சென்று தெரியும் சிவப்பு நிறம். வயது மூன்று பத்துகளை முழுசாய் விழுங்கிருயிந்தான். அடர்த்தியான தலைமுடி போன மூன்று மாத காலமாய்க் கொட்ட ஆரம்பித்திருந்தது. அகல நெற்றிக்குக் கீழே அதி கூர்மையான கண்கள். கொஞ்சம் கருடத்தனமான மூக்கு. அதற்குக் கீழே மீசை வளர்க்கப் பிரியப் படாத மேலுதட்டுப் பாப்பு. சிகரெட்டை ஸ்பரிசிக்காத லேசாய் லிப்ஸ்டிக் பூசின மாதிரி உதடுகள். தினசரி ஷேவிங்கில் பச்சை நிறம் வாங்கியிருந்த மோவாய் பிரதேசம்.

    கோர்ட்டின் பின்புறம் வந்தான் கிருஷ்ணகுமார். டால்பின்களும், மாருதிகளும் நிறத்திக்கொன்றாய் முகங்களைத் திருப்பிக் கொண்டு நின்றிருக்க – அதற்கு மத்தியில் அம்பாசிடரோடு காத்திருக்கும் தன் மனைவி லதிகாவைத் தேடினான்.

    லைப்ரரிக்குப் போனவள் இந்நேரம் திரும்பி வந்திருக்க வேண்டுமே! யோசித்தபடியே பார்வையைச் சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தான் கிருஷ்ணகுமார்.

    "ஊஹ_ம்…. அவள் வரவில்லை.

    "இனிமேல் அவள் கையில் காரைத் தரக்கூடாது.

    குட் ஆப்டர்நுன் லாயர் ஸார்….தன் முதுகுப் பக்கமாய் ஒலித்த வார்த்தைகளைக் கேட்டு திரும்பினான் கிருஷ்ணகுமார். மலர்ந்தான்.

    லதிகா-அவனுடைய அழகான மனைவி. மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு உதட்டில் பொருத்திக் கொண்ட புன்னகையோடு நின்றிருந்தாள்.

    லைப்ரரிக்குப் போனா இவ்வளவு நேரமா….?ஏன் வந்து ரொம்ப நேரமாச்சா…?ஒரு மணி நேரமா காத்திட்டிருக்கேன்…. இந்த உடான்ஸ் தானே வேண்டாங்கிறது என் அருமையான வக்கீல் கணவரே….! நீங்க கோர்ட்டிலிருந்து இறங்கி வரவே வரவே…. உங்களுக்குத் தெரியாமே பின்னாடி வந்தேன்….நீங்க இந்த ஸ்பாட்டுக்கு வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு கரெக்டா சொல்லட்டுமா….? சொல்லு பார்க்கலாம்….சரியா சொல்லட்டுமா…?ம்…. சரியா…. ஒண்ணே முக்கால் நிமிஷமாச்சு…. லதிகா சொல்ல கிருஷ்ணகுமார் சிரித்தான்…. காரை எங்கே நிறுத்தியிருக்கே….?வாங்க…. எம் பின்னாடி….காரை இங்கே நிறுத்தலாம்ன்னு வந்தா கசகசன்னு ஒரே நெரிசல்… அதான் கோர்ட்டுக்கு எதிர் சைட் ரோட்ல ஜவான் பவனுக்கு பக்கத்துல நிறுத்தியிருக்கேன்…. நீ கூட சிலசமயம் புத்திசாலித்தனமான காரியங்களை பண்றே லதிகா…. கிருஷ்ணகுமார் சொல்ல- லதிகா சட்டென்று நின்று தன் பெரிய கண்களினால் முறைத்தாள். நான் உங்களுக்கு மனைவியான பின்னாடி தான் முதல் கேஸே உங்களுக்கு கிடைச்சுது…. ஸ்கூட்டர்ல போயிட்டிருந்த நீங்த அம்பாஸிடர் காரை வாங்கினீங்க.நான் சொல்லிக் குடுத்த பாயிண்ட்ஸை வைச்சுத்தான் ஒரு பெரிய கேஸ்ல ஜெயிச்சீங்க…. எனக்கு புத்திசாலித்தனம் இருக்குன்னு எப்பவோ ப்ரூப் ஆயிடுச்சு…. மன்னிக்கணும் தாயே….தெரியாமே சொல்லிட்டேன்….அப்படி வாங்க வழிக்கு…. பல் வரிசை ஒரு வெளிச்ச ஆரமாய்த் தெரிய லதிகா சிரித்து, கணவன் கிருஷ்ணகுமாரோடு நடந்தாள்.

    கோர்ட் காம்பௌண்ட் கேட்டைத் தொடுகையில் கௌரி சங்கர் ஹோட்டலில் ஒரு கட்சிக்காரனின் செலவில் இரண்டு பிளேட் தயிர் சேமியாவும் - காப்பியையும் வயிற்றுக்குக் காண்பித்து ஒரு பெரிய ஏப்பத்தோடு வந்து கொண்டிருந்த வக்கீல் நரசிம்மச்சாரி லதிகாவை மறித்தார்.ஒரு நிமிஷம் நில்லம்மா…. நின்றாள்.

    என்ன ஸார்….?நீ உம்புருஷனை வீட்டுக்குள் கூட்டிட்டு போனதும் உடனடியா ஒரு காரியம் பண்ணனும்…என்ன பண்ணனும் சொல்லுங்க ஸார்…. கை நிறைய மிளகாயும், உப்பும் எடுத்து, கிழக்குப் பார்த்து நிற்கவெச்சு சுத்திப் போடு…. இன்னிக்கு உம்புருஷனோட ஆர்க்யூமெண்ட் அற்புதம்…. ஜட்ஜே பிரமிச்சுப் போய் உட்கார்ந்துட்டார்…. எதிர் வக்கீல் நாலு நாளைக்கு கோர்ட் பக்கமே வர மாட்டார்….ஈஸிட்….? ஆமாம்மா…. ஏம்பா…. கிருஷ்ணகுமார்… விஷயத்தை நீ இன்னுமும் லதிகாகிட்டே சொல்லலையா….இனிமேத்தான் ஸார் சொல்லணும்சொல்லு… சொல்லு… நரசிம்மாச்சாரி மறுபடியும் பீறிட்டு வந்த ஏப்பத்தோடு நகர்ந்து போக – லதிகா கிருஷ்ணகுமாரைப் பார்த்தாள்.

    இன்னிக்கு யார் கேஸ்…? அந்த விடோ பொன்னம்மா கேஸ்…?நல்ல ஆர்க்யூ பண்ணீங்களா…?பிச்சு உதறிட்டேன்…கேஸ் ஜெயிச்சிடும்….?கண்டிப்பா… ஜட்ஜ்மெண்ட் என்னிக்கு…? வர்ற இருபத்தி மூணாம்தேதி…. பொன்னம்மாவோட கேஸ் விபரம் என்ன… சொத்து தகராறு தானே…?ஆமா… அண்ணன் ஒரு ஆக்ஸிடெண்டல இறந்ததும்…. அண்ணிக்கு சொத்து தராமே ஏய்க்கப் பார்த்தாங்க மூணு தம்பிங்க….சட்டம் சும்மா விடுமா…. நார் நாரா கிழிச்சிட்டேன்….காரை நெருங்கினார்கள்.

    ட்ரைவ் நீங்க பண்றீங்களா…. நான் பண்ணட்டுமா…? நானே பண்றேன் கிருஷ்ணகுமார் காரின் கதவைத் திறந்து கொண்டு ட்ரைவிங் சீட்டை ஆக்ரமிக்க-காரைச் சுற்றி வந்து அவனருகே உட்கார்ந்தாள் லதிகா. தோள்பட்டை மென்மையும் வெம்மையுமாய் அவன்மேல் இழைத்தது.

    காரை கிளப்பினான் கிருஷ்ணகுமார். ஆர்.எஸ்.புரம். ராபர்டன் சாலை. ஒரு பெரிய மாமரம் நான்கைந்து தென்னை மரங்கள் சூழ நின்றிருந்த அந்த பங்களாவுக்குள் அம்பாசிடர் நுழைந்து போர்டிகோவில் மௌனமாகியது. காரின் இரண்டு பக்கக் கதவுகளைத் திறந்து கொண்டு கீழே கால் பாவினார்கள் கிருஷ்ணகுமாரும் லதிகாவும்.

    உள்ளேயிருந்து வேலைக்காரி கற்பகம் ஓடோடி வந்தாள். லதிகாவின் கையிலிருந்த புத்தகங்களையும் பர்சேஸ் செய்து வந்த பிளாஸ்டிக் கூடையையும் வாங்கிக் கொண்டான். மெலிதான குரலில் அம்மா என்றாள். என்ன கற்பகம்?ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆள் அய்யாவை பார்க்கணுமன்ணு சொல்லிட்டு வந்தார். அய்யா வீட்ல இல்லேன்னு சொல்லியும் கேட்காமே ரெண்டுமணி நேரமா ஆபீஸ் ரூம்ல விடாப்பிடியா உட்கார்ந்துட்டிருக்கார்…யார் அது…?பேர் என்னான்னு கேட்டியா?கேட்டேன்மா…. கல்யாண ராமன்னு சொன்னார்… கற்பகம் சொல்லச் சொல்லவே கிருஷ்ணகுமார் தன் ஆபிஸ் அறைக்குள் போனாள்.

    சோபாவில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞன் எழுந்து நின்றான். சராசரி உயரம். மாநிறம். மைனஸ_க்காகவோ….ப்ளஸ்ஸ_க்காகவோ கண்ணாடி போட்டிருந்தான். வெள்ளைஸ்லாக். கருநீலபேண்ட். சிட்டிஸன் வாட்ச்.

    வணக்கம் லாயர் ஸார்…யார் நீங்க…எம்பேர்கல்யாணராமன்…. கணேஷ் நகர்ல இருக்கேன்….என்ன விசயம் சொல்லுங்க….ஒரு கேஸ் சம்பந்தமா உங்ககிட்ட டிஸ்கஸ்பண்ணனும்….என்னோட கன்சல்டிங் அவர்ஸ் சாய்ந்தர நேர்ந்தான்…. மத்தியான நேரத்துல நான் பார்ட்டீயைப் பார்க்கிறதில்லை…. வந்துட்டீங்க…. கேஸ் என்னான்னு சொல்லுங்க… சொல்லிக் கொண்டே அந்தக் கல்யாண ராமனுக்கு எதிரேயிருந்த நாற்காலியில் நிரம்பினான்கிருஷ்ணகுமார். லதிகா அவனருகே வந்து நின்றாள். அந்த இளைஞன் லதிகாவை ஏறிட்டுப் பார்த்து விட்டு கிருஷ்ணகுமாரிடம் சொன்னான். நான் உங்ககிட்ட தனியாப் பேசணும்…. கிருஷ்ணகுமார் புன்னகைத்தான். "ஷி ஈஸ் மை ஓய்ப்… அவளுக்கு நான் டீல் பண்ற ஒவ்வொரு கேஸைப் பத்தியும் தெரியும்…. ஸோ…

    Enjoying the preview?
    Page 1 of 1