Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nenjathil Nee
Nenjathil Nee
Nenjathil Nee
Ebook107 pages56 minutes

Nenjathil Nee

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.[1][2] Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
LanguageUnknown
Release dateMay 12, 2016
ISBN6580100400475
Nenjathil Nee

Reviews for Nenjathil Nee

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nenjathil Nee - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நெஞ்சத்தில் நீ

    Nenjathil Nee

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அடர்த்தியான இருட்டு கொட்டியிருந்த அந்தக் கிராமத்தின் எல்லையோரம் - திடீரென்று சிவப்பாய் ஒரு வெளிச்சப் புள்ளி தெரிய – அதைத் தொடர்ந்து வரிசையாய் ஏழெட்டு வெளிச்சப் புள்ளிகள் உற்பத்தியாகி மெதுவாய் - கிராமத்தின் மையத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. காற்றில் பேச்சுக் குரல்கள் கிசுகிசுப்பாய் அலைந்தன.

    மூஞ்சிகளைப் போர்வையாலே இழுத்து மூடிக்குங்க... ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுக்கக் கூடாது...

    இன்னொரு குரல் கீழே தழைந்தது.

    ராசண்ணே... இப்ப மணி எவ்வளவு இருக்கும்?

    சரியா ரெண்டு மணி பத்து நிமிடம்.

    இந்நேரத்துக்கு நம்ம கிராமத்துல எவன் முழிச்சிட்டிருக்கப் போறான்?

    குரல் மெல்லச் சிரித்தது.

    அப்படிச் சொல்லாதே… எவனாவது இராத்திரி கருவாட்டுக் குழம்பையும் சோத்தையும் மூக்குபிடிக்க பிடிச்சுட்டு வயித்தை வலிக்குதுன்னுஇந்நேரம்தான் கையில் சொம்பை எடுத்துட்டு வெளியே வருவான்.

    அண்ணே...

    என்னடா?

    வெளியே வர்றவன் யாராக இருந்தாலும் சரி... வீச்சரிவாளை வீசி ஆளைக் கொன்னுடலாமில்லையா?

    தாராளமா.. நம்ம கண்ணுக்கு யார் எதிர்ப்பட்டாலும் சரி.. அது ஆணோ பெண்ணோ.. வீச்சரிவாளை வீசித்துண்டாட வேண்டியதுதான்.. தாட்சண்ணியமே கிடையாது...

    நாம தீ வைச்சுக் கொளுத்தப்போற அந்த வீட்டுல மொத்தம் எத்தினி பேருண்ணே இருக்காங்க? கடைசி ஆளாய் வந்து கொண்டிருந்தவன் கேட்டான்.

    மூணு குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் பதினொரு பேரு.. அந்தப் பதினொரு பேரில் யாருமே தப்பிக்கக்கூடாது... தப்பிச்சா நாம மாட்டிக்குவோம்...

    கையிலிருந்த தீப்பந்தங்கள் மண்ணெண்ணெய் வாசனையோடு ‘சடசட’ வென்று எரிய – அந்த ஏழட்டுப் பேர் கிராமத்தின் மண் சாலை ஓரமாய் வேகமாய் நடந்தார்கள்.

    ம்... வேகமாக போங்க...

    நெருப்புப் பந்தங்கள் கிளப்பிய புகையிலும், வெளிச்சத்திலும் - பிள்ளையார் கோயில் ஆலமரத்தில் அடைந்திருந்த பறவைவர்க்கங்கள் சட்டென்று கண்விழ்த்து, கீச்சிட்டுப் பறக்க ஆரம்பித்தன. அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் வேகவேகமாய் நடந்தார்கள். பார்வைகளைச் சுழற்றினார்கள். அதே விநாடி –

    லொள்...– ஆள் அரவமற்ற அந்த கிராமத்தின் புழுதி வீதிகளில் உயர்த்திப் பிடித்த தீப்பந்தங்களோடு – வியர்வை மினுமினுக்கும் முகங்களோடு நடந்துகொண்டிருந்தவர்கள் எதிரே வேகமாய் ஓடிவந்து, மூச்சிரைக்க நின்ற அந்த நாயைப் பார்த்ததும் ‘தப்’பென்று நின்றார்கள்.

    லொள்.. லொள்...– நாய் பலமாய் குரைத்தது. ஒருத்தன் கேட்டான் - ராசண்ணே... இது யார் வீட்டு நாய்?

    இந்த நொண்டி இராணுவக்காரன் வளர்க்கிற நாய்ன்னு நினைக்கிறேன்...

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது – அந்த நாய் காதுகளை உயர்த்திக் கொண்டு – கோரைப் பற்கள் தெரிய,உர்ர்ர்ர்ர் என்றபடி அவர்களை நோக்கி முன்னேறியது. உடலை வளைத்துப் பம்மியது.

    ச்சூ... முன்னால் இருந்தவன் தீப்பந்தத்தைக் காட்டி விரட்ட –

    அந்த நாய் பயப்படாமல் முன்னேறியது. கூடவே ‘லொள்... லொள்’ என்று தொண்டை நரம்புகள் தெறித்து விழும்படி சத்தம். பாய்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கியது.

    அண்ணே! நாயோட ஆவேசத்தைப் பார்த்தா பயமா இருக்கு.. உடம்பை கவ்வினா.. அரைக் கிலோ சதையை எடுத்துடும் போலிருக்கு.. அது பக்கத்துல வர்றதுக்கு முந்தி நான் வீச்சரிவாளை வீசட்டுமா?

    வீசு... என்றான், கும்பலில் இருந்த ஒருவன்.

    தன் இடுப்பின் தோலுறையில் பளபளப்பாய் தூங்கிக் கொண்டிருந்த அந்த வீச்சரிவாளை எடுத்து – நாயின் தலையை நோக்கி – காற்றில் ‘ச்க்க்குயிக்க்க்க்க்’ என்று வீசினான். எல்லோருக்கும் முன்பாய் நின்றிருந்தவன், விநாடிக்கும் குறைவான நேரம்தான்.

    ச்ச்ச்ர்க்க்க்க்...

    நாய் சத்தம் எழுப்பாமல் துள்ளி விழுந்து – புழுதி மண்ணில் கால்களை உதைத்துக் கொண்டு துடிக்க ஆரம்பித்தது. நாயின் கழுத்தோடு தெறித்து விழுந்திருந்த வீச்சரிவாளை இரத்தமாய் எடுத்துக்கொண்டு – கும்பல் முன்னேறியது.

    நாய் தலையில்லா உடம்போடும் ஏராளமான இரத்தத்தோடும் அடங்கிக் கொண்டிருந்தது.

    இன்னிக்கு நம்ம முதல் பலி.. இராணுவக்காரனோட நாய்...

    பாவம்..

    கிராமம் சுவர்க்கோழியின் பின்னனியோடு தூங்கிக் கொண்டிருக்க – அந்தக் கும்பல் நான்கு தெருக்களைத் தாண்டி – வயல்காட்டுக்கு மத்தியில் இருந்த அந்த வீட்டைச் சூழ்ந்தது. அறுவடையை முடித்துக்கொண்ட வயல் சுற்றிலும் பொட்டலாய் தெரிந்தது. இருட்டில் தென்னை மரங்கள் சோம்பலாய் அசைந்தன.

    ஏலே வேலு... யாரோ கிசுகிசுத்தார்கள்.

    என்ன்ணணே?

    சீமெண்ணெய் யார் வைச்சிருக்காங்க?

    மாரியப்பனும், மணியும்.

    வீட்டைச் சுத்தியும் ஊத்தச் சொல்லு.. யாராது ஒருத்தன் கூரை மேலே ஏறி ஊத்தட்டும்.... தீ வைச்சா குபீர்ன்னு நாலா பக்கமும் பத்திக்கணும்.. ஏலே ராசு...

    சொல்லுண்ணே!

    வீட்டை முன்னாடியும் பின்னாடியம் பூட்டிடு.

    சரிண்ணே.

    ஆட்கள் நெருப்புப் பந்தத்தோடு இருட்டில் பரவினார்கள். இரண்டு பேர் மண்ணெண்ணெய் டின்களை சாய்த்துப் பிடித்துக் கொண்டு – வீட்டின்

    Enjoying the preview?
    Page 1 of 1