Kollath Theriyavillai
By Devibala
4/5
()
About this ebook
Reviews for Kollath Theriyavillai
2 ratings1 review
- Rating: 4 out of 5 stars4/5Excellent could not stop reading waiting for some more novels
Book preview
Kollath Theriyavillai - Devibala
http://www.pustaka.co.in
கொல்லத் தெரியவில்லை
Kolla Theriyavillai
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
ம
ருதமலை பஸ்ஸிலிருந்து ஜனங்கள் பொடி பொடியாக உதிர்ந்தார்கள். ஏறக் காத்திருக்கும் அடுத்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் சட்டையின் மேல் பித்தான் நொறுங்கி மூச்சு வாங்கியது சத்தியமூர்த்திக்கு.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் முடிச்சு முடிச்சாக ஜனங்கள்.
மேலே மோதிய ஆட்களை விலக்க முடியாமல் ஸ்தூல சரீரத்தோடு பஸ்ஸுக்குள் தவித்த மரகதத்தைப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
அளவா திங்கணும், ஒடம்பு இப்படி ஊதினா இதான் கஷ்டம்!
ஒரு வழியாக இறங்கிப் பக்கத்தில் வந்து நின்றாள்.
"என்னங்க, பசிக்குது!’
மணிக்கட்டை பார்த்தார் சத்தியமூர்த்தி, குவார்டஸ் டிஜிட்டல் 1:05:27 என்றது.
பதறிப் போனார்.
அதுக்கெல்லாம் நேரமில்லை. கோவை எக்ஸ்பிரஸுக்கு இன்னும் முழுசா ஒருமணி நேரம் கூட இல்லை. இங்கிருந்து போய் க்ளோக் ரூம் சாமானை எடுத்துட்டு மேல பிளாட்பார்ம் போய்… எழவே அடிச்சிக்கிட்டேன் அங்கியே, சீக்கிரம் பொறப்படுடீ… சீக்கிரம் பொறப்படுனு. தரிசனம் முடிச்சு ரெஸ்ட் என்ன வேண்டிக் கிடக்குது?
இந்த ரயில் போனாப் போகட்டுங்க. நிதானமா நீலகிரி எக்ஸ்பிரஸ்ல போயிக்கலாம்!
உதை படுவ! அடுத்த வார்த்தை பேசினா பல்லு மேல போடுவேன். ரிசர்வேஷன் உங்கப்பன் தருவானாடீ நீலகிரி எக்ஸ்பிரஸ்ல? கோவைக்கே நான் பட்ட பாடு நாய்ப்பாடு… ஜல்தியா வா!
டாக்ஸியைப் பிடிப்பதற்குள் அடுத்த ஐந்து நிமிடம் ஓட…
மரகதம் தன் தொண்னூறு கிலோ உடம்பை அதற்குள் திணித்து…
டாக்ஸி புறப்பட…
சீக்கிரம் போப்பா, ரயிலைப் புடிக்கணும்!
கோவைதானே! அரை அவருக்கு மேல இருக்குதே!
க்ளோக் ரூம்ல போய் சாமானை வேற எடுக்கணும், அதுக்கு எவ்ளோ நேரமாகுமா?
"டாக்ஸி பதினைந்து நிமிடங்களில் கோவை ரயில் நிலையத்தின் முன் போய் நிற்க…
இறங்கிப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார் சத்தியமூர்த்தி.
என்னங்க!
என்னடீ, சொல்லித் தொலை!
வயித்து வலி தாங்கமுடியலை. இங்க எங்காச்சும்.
சனியனே கருமாந்திரப் பீடை!
அர்ச்சனை செய்து கொண்டே, யாரிடமோ விசாரித்து டாய்லெட்டைக் காட்டி விட்டு,தோ பாரு, நான் போய் க்ளோக் ரூம்ல இருக்கற சாமான்களை எடுத்துட்டு வந்திர்றன். நீ இதே எடத்துல நில்லு, நேரமாச்சு, சீக்கிரம் வா!
க்ளொக் ரூமை நெருங்கியபோது சின்னதா ஒரு வரிசை இருந்தது.
அய்யோ 1:35
தன் முறை வந்ததும் தயாராக வைத்திருந்த ரசீதைக் கொடுத்துவிட்டு உள் பக்கமாகப் போய் தன் பெட்டியை வாங்கிக் கொண்டார்.
வீலர் பொருத்தப்பட்ட அந்த இடுப்புயர வி.ஐ.பி. பெட்டி நகர முடியாமல் நகர்ந்தது. அதை உருட்டிக் கொண்டு வந்து மெயின் ஹாலில் வைத்து விட்டு நிமிர்ந்த போது தான் தன் தவறு புரிந்தது.
‘மரகதத்தை இங்க நிக்கச்சொல்லியிருக்கணும்! நான் சொன்ன இடத்தை விட்டு ஒரு அங்குலம் நகர மாட்டா. இதையும் எடுத்துட்டா போக முடியும்? ரயிலுக்குப் பத்து நிமிடம் கூட இல்லையே!’
பக்கத்தில் திரும்பிப் பார்த்தபோது தன்னைப் போலவே பெரிய பெட்டியை வைத்துக் கொண்டு திருதிருவென ஒருவன் விழித்துக் கொண்டிருந்தான்.
எக்ஸ்க்யூஸ் மீ, ஒரு நிமிஷம் என் பெட்டியைப் பார்த்துக்க முடியுமா?
அவன் மெல்லச் சிரித்து,நோ ப்ராப்ளம்!
என்றான்.
சத்தியமூர்த்திக்கு அகலமாகக் கால்களைப் பதித்து டாய்லெட்டை நெருங்கினார். அப்போதுதான் மரகதம் வெளியே வந்து கொண்டிருந்தான்.
அவள் மூச்சிரைக்கப் பின்னால் ஓடிவர, அவனிடமிருந்து பெட்டியை வாங்கி, அவசர தேங்க்ஸை உதிர்த்து விட்டு அதைச் சரசரவென இழுத்துக் கொண்டு ஏறத்தாழ ஓடத் தொடங்கினார்.
படிக்கட்டுகளில் மரகதம் மூச்சிரைக்க, முட்டியை பிடித்துக் கொண்டு ஏற…
பயணிகள் கவனத்திற்கு! சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில்…
அத்தனை படிக்கட்டுகளையும் கடந்த சத்தியமூர்த்தி, எந்தக் கோச் என்பது சட்டென நினைவுக்கு வராமல் போக,சரி வெஸ்டிப்யூல் இருக்கே. போயிரலாம்! சீக்கிரம் வா மரகதம்!
கதவை மொய்த்திருந்த கூட்டத்தை