Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilamaiyil Kol
Ilamaiyil Kol
Ilamaiyil Kol
Ebook105 pages1 hour

Ilamaiyil Kol

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100600247
Ilamaiyil Kol

Read more from Devibala

Related to Ilamaiyil Kol

Related ebooks

Reviews for Ilamaiyil Kol

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilamaiyil Kol - Devibala

    http://www.pustaka.co.in

    இளமையில் கொல்…!

    Ilamaiyil Kol… !

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ந்த நீல நிற ரயில், குன்னூர் ஸ்டேஷனில் வந்து நின்ற போது அரிஸ்டோகிராட் சகிதம், மற்றொரு கையில் ஹோல்டாலுடன் இறங்கினான் ராம்.

    மிதமான குளிர் சட்டைக்குள் ஊடுருவி, பனியனைக் கடந்து மார்பின் ரோமத்தைத் தாலாட்டியது. உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தான். இரண்டு குழந்தை பொம்மைகளின் நிர்வாணத்துக்கு நடுவில் நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது. கைகாட்டி படக்கெனக் கீழ் நோக்கிச் சாய, மேல்புறத் தண்டவாளத்தில் கர்ப்பிணிப் பெண் போல முனகிக் கொண்டு ஒரு நீல நிற எஞ்சின் தெரிந்தது.

    சுறுசுறுப்பான சென்னை வாழ்க்கைபோல இல்லாமல், அங்கே ஒரு மிதமான போக்கு தெரிந்தது. அது கூட சுவாரசியமாக அவனுக்குத் தோன்றியது. குரங்குக் குல்லாயும், கோட்டுமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைகள் தெரிய, ஏறத்தாழ குன்னூர் ஸ்டேஷன் காலியாகி விட்டது.

    இவனை அழைத்துப் போக இன்னும் ஆள் வரவில்லை. ராமுக்கு நீலகிரியைப் பற்றி எதுவும் தெரியாது. இதுதான் அவன் முதன் முதலாக இங்கு வருவதற்கு ஏற்பட்ட சந்தர்ப்பம்.

    ஹவுஸ் சர்ஜன் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது போன வாரம்தான் அது வந்தது.

    நீலகிரியில் கூனூருக்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ரோஸ்வுட் எஸ்டேட்டில் அவனுக்கு வேலை. ஆனாலும் வேறு வழியில்லாமல் புறப்பட்டான். ஆள் வந்து கூனூரிலிருந்து அழைத்துப் போவதாகத் தந்தி வந்திருந்தது. காத்திருக்கிறான் இன்னும் காணவில்லை.

    சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

    நெஞ்சில் கமழ்ந்த அந்தப் புகை குளிருக்கு இதமாக இருந்தது. சூடான டீ ஒன்றை ஸ்டாலில் வாங்கிக் கொண்டு அதை உறிஞ்சியபடியே வாசலைப் பார்க்கத் தொடங்கினான்.

    ஜீப் ஒன்று தூரத்தில் வந்து நிற்பது தெரிந்தது.

    கட்டபொம்மன் மீசையோடு, கறுப்பாக ஒருவன், தலையில் முண்டாசும் கம்பளிக் கோட்டுமாக ஸ்டேஷனுக்குள் நுழைத்து சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டான்.

    பெட்டியோடு போய் அவனெதிரே நின்றான் ராம்.

    நீங்க… நீங்க தான் மெட்ராஸிலேயிருந்து வர்ற டாக்டருங்களா?

    ஆமா மாயாண்டி!

    அதிர்ந்தான் அவன். என்பேரு உங்களுக்கு எப்படி தெரியும்?

    சட்டென்று சுதாரித்துக் கொண்ட ராமுக்கு அது புரியவில்லை. ‘ஆமாம், எனக்கெப்படி இவன் பேர் தெரிஞ்சது? இவனைப் பார்த்தா பழகின முகமா இருக்கே!’

    ‘லெட்டர்ல எழுதியிருந்தாங்க. சமாளித்தான். அது சரி, இதுக்கு முன்னால எப்பவாச்சும் நீங்க மெட்ராஸ் வந்தது உண்டா மாயாண்டி?

    இல்லீங்க. நான் அறுவது வருஷமா இதே எஸ்டேட் தாங்க. நமக்கேதுங்க போக்கிடம்? சரி போலாங்களா?

    ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார்கள்.

    இடதுபக்கம் முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் ‘சர்’ என்று தேய, வலதுபுறமாக காட்டேரி ரோடில் வழுக்கிக் கொண்டு பறந்தது ஜீப்.

    இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த ராம் உற்சாகமாக இருந்தான். திருப்பங்களில் ஜீப் அனாயசமாக மேலே ஏறிய போது மெலிதாக விசிலடித்தான்.

    அங்கங்கே முடிச்சு முடிச்சாகப் பெண்கள் நின்று, முதுகில் குழந்தைபோலக் கூடையைச் சுமந்து, தேயிலை பறிப்பது பார்க்க ரம்யமாக இருந்தது.

    நான் கொஞ்ச நேரம் ஓட்டட்டுமா மாயாண்டி?

    உங்களுக்குத் தெரியுங்களா?

    சட்டென ராமுக்குப் பொறி தட்டியது. ‘இதென்ன பைத்தியக்காரத்தனம்? மெட்ராஸ்ல சைக்கிள் ஓட்டத் தெரியாத நான் ஜீப்பை ஓட்டட்டுமானு எப்படி இவன் கிட்ட கேட்டேன்’ ஆனாலும் ஓட்ட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

    ம். கொஞ்சம் தெரியும் மாயாண்டி.

    அது ஆபத்துங்க. உங்க ஊர் மாதிரி சுலபமா இங்கே ஓட்ட முடியாது.

    குடேன் பார்க்கலாம்.

    வேணாங்க. அப்புறம் ஏதாச்சும், ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா… வம்புங்க.

    இவன் பிடிவாதம் ஜெயிக்க, பயந்து கொண்டே நகர்ந்தான் மாயாண்டி.

    ஏறி உட்கார்ந்தபோது, புதிதாகப் பிறந்தது போல இருந்தது. ஸ்டியரிங்கைத் தொட்ட போது வயிறு கலங்கி, நெஞ்சுக்குள் ஏதோ ஒரு துக்கம் பொங்கியது. காரணம் புரியாமல் தவித்தான் ராம்.

    ஸ்டியரிங்கைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான் ராம்.

    அதிர்ந்து போனான் மாயாண்டி.

    தம்பி, நான் ஒண்ணு கேக்கலாங்களா?

    என்ன மாயாண்டி?

    இந்த எஸ்டேட்ல கொஞ்ச வருஷத்துக்கு முன்னால உங்க உறவுக்காரங்க யாராச்சும் இருந்ததுண்டா?

    எனக்கும் இந்த எஸ்டேட்டுக்கும் சம்பந்தமே கிடையாது மாயாண்டி. நாங்க பல வருஷங்களா மெட்ராஸ் தான். எங்கப்பா கூட இந்தப் பக்கம் வந்ததில்லை. எப்பவாச்சும் ஊட்டி வரைக்கும் வருவாரு. நேரா திரும்பிப் போயிடுவாரு.

    ஒவ்வொரு திருப்பத்திலும் அனாயாசமாக ஜீப்பை செலுத்திக் கொண்டு அவன் போன போது, தான் டாக்டர் ராம் என்பதே சுத்தமாக அவனுக்கு மறந்து போயிருந்தது. இரண்டாகச் சாலைகள் பிரிந்து, பிரிந்த சில நிமிடங்களில், மாயாண்டியைக் கேட்காமலேயே ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் ஜீப்பை அவன் செலுத்திய போது மாயாண்டி மிரண்டான்.

    பொடிப்

    Enjoying the preview?
    Page 1 of 1