Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaadagai Kanavu
Vaadagai Kanavu
Vaadagai Kanavu
Ebook228 pages2 hours

Vaadagai Kanavu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100600313
Vaadagai Kanavu

Read more from Devibala

Related to Vaadagai Kanavu

Related ebooks

Reviews for Vaadagai Kanavu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaadagai Kanavu - Devibala

    http://www.pustaka.co.in

    வாடகைக் கனவு

    Vadagai Kanavu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    "எ

    னக்கு சுத்தமாப் புடிக்கலை."

    என்ன புடிக்கலை உனக்கு?

    நம்ம குடும்பத்துல பொம்மனாட்டி உத்யோகத்துக்குப் போற பழக்கமே இல்லை.

    நீ எந்த யுகத்துல இருக்கே? பொம்மனாட்டி உத்யோகம் பார்க்கலாமா கூடாதாங்கற பேச்செல்லாம் முடிஞ்சு போய் பதினஞ்சு வருஷம் ஆச்சு!

    சரி போகட்டும். ஒரு ஸ்கூல் டீச்சர், இல்லைனா, பேங்க்ல ஒக்காந்து பாக்கற உத்யோகம்னா சரி. இது என்னா உத்யோகம்? மெடிக்கல் ரெப்ரடிசன்டேட்டிவ் உத்யோகமா? அதுவும் பொம்மனாட்டியா?

    ஏன், போனா என்ன?

    சாயங்காலம் ஆறு மணிக்குத் தொடங்கி ராத்திரி பத்தரை வரைக்கும் டாக்டர்களைப் போய்ப் பார்க்கணும். ஊர் ஊரா டூர் போற வேலை வேற. பொம்மனாட்டிக்கு சரிப்படுமா?

    சரிப்படாதா?

    போதுமே! வெளியூர்ல போனா ஓட்டல்ல தங்கிட்டு… தனியா பத்து ஆம்பளைங்க கூடப் பழகிட்டு… சுத்தமாப் புடிக்கலை எனக்கு!

    உனக்கு புடிச்சு இப்ப என்ன வேணும்? உன் பிள்ளைக்குப் பிடிச்சிருக்கு. அந்தப் பொண்ணோட அழகு, புத்திக் கூர்மை, சாதுர்யம் எல்லாம் பார்த்து அவதான் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னிருக்கானே! த பாரு! கல்யாணமும் முடிஞ்சாச்சு. இனிமே புலம்பிட்டுத் திரியாதே! போய் வேலையைப் பாரு. ரெண்டு பேரும் ஊருக்குப் புறப்படறாங்க. சிரிச்ச முகத்தோட அனுப்பி வை.

    வெளியே போய்விட்டு அப்போதுதான் திரும்பினார்கள், புதிதாக கல்யாணம் ஆகியிருந்த ஷ்யாமும் அனிதாவும்.

    ஊருக்கு அவர்கள் புறப்படத் தோதாக பொருட்கள் எல்லாம் பேக் செய்யப்பட்டிருந்தன.

    அப்பா அருகில் வந்தார்.

    ஷ்யாம்!

    என்னப்பா?

    பெங்களுரும் அதைச் சுற்றியுள்ள ஏரியாக்களும்தான் அனிதா வேலை பாக்கற இடங்கள். நீ மெட்ராஸ்ல இருந்தா எப்படி? யாராவது ஒருத்தர் மாற்றிக்கக் கூடாதா?

    எனக்கு பெங்களுர் தர மாட்டாங்கப்பா!

    மாமா… நான் மெட்ராஸ் முயற்சி பண்றேன். ஆறு மாசத்துல நிச்சயமா கிடைக்கும்.

    சரிம்மா! எனக்கு ஒண்ணுமில்லை. உங்கத்தை பயப்படறா!

    என்ன பயம்?

    நீ ஒரு பெண்ணா இருந்து மாசத்துல இருவத்தஞ்சு நாள் டூர் அடிக்கறதை அவளால் ஜீரணிக்க முடியலை!

    அனிதா கலகலவெனச் சிரித்தாள்.

    என்ன பயம்? யார் என்னை என்ன செய்ய முடியும்? இந்த வேலைல நான் சேரும் போது எங்க வீட்டிலும் கடுமையான எதிர்ப்புதான். நல்ல சம்பளம், கொஞ்சம் சேலஞ்சிங்கான வாழ்க்கை. எனக்குப் புடிச்சிருக்கு.

    சரி, ரயிலுக்கு நேரமாச்சு. சாப்டுட்டு புறப்படுங்க ரெண்டு பேரும்!

    அப்பா ஸ்டேஷன் வரை வந்தார்.

    ஜாக்ரதையா இரும்மா. உன் கழுத்துல தொங்கற தாலி இனிமே உன்னைப் பாதுகாக்கும்!

    இத்தனை நாள்ல என்ன மாமா பயம்?

    ரயில் புறப்பட்டுவிட, அப்பா சின்னதாகிக் கொண்டே வந்தார்.

    அது ஒரு கூபே கம்பார்ட்மெண்ட்.

    ஷ்யாம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    அனிதா!

    என்னய்யா?

    அவள் அதுமாதிரி ‘அய்யா’ போட்டு அழைப்பது ஷ்யாமுக்கு ரொம்பப் பிடிக்கும்.

    யார் என்ன சொன்னாலும், எப்படிப் பேசினாலும் ஆத்திரப்படாம உன்னால சமாளிக்க முடியுதே! எப்படி?

    கோபம் அழகைக் கெடுக்கும். ஆயுளைக் குறைக்கும்!-சொல்லிவிட்டு, சோழியைக் குலுக்கிப் போட்டதைப் போல சிரித்தாள்.

    அந்தச் சிரிப்புதான் ஆரம்பம் முதலே அவனிடம் அவள்பால் ஒரு வசீசரத்தை உண்டாக்கியது.

    அவன் தனியார் நிறுவனம் ஒன்றின் சென்னைக் கிளையில் உயர் அதிகாரி.

    அப்பா அம்மா பொள்ளாச்சி பக்கத்தில் ஒரு கிராமம். சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டுதானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன் ஷ்யாம்.

    ஒரு கான்ஃபரன்ஸில் கலந்து கொள்ள ஆறு மாதங்கள் முன்பு பெங்களுர் வந்திருந்தான். நல்ல ஒரு ஓட்டலில் நிர்வாகம் இவனைப் போன்ற அதிகாரிகளுக்கு அறைகளைப் பதிவு செய்திருக்க, அங்குதான் அனிதாவை முதன் முதலில் சந்தித்தான்.

    அதுவும் எப்படி?

    அவள் தங்கியிருந்த அறை எண் ஆறு.

    இவனுடையது ஒன்பது. அந்தப் பித்தளை எழுத்தின் ஆணி சற்று ஆட்டம் கண்டதால், கதவை இழுத்துச் சாத்தும் போது அவளது ஆறு ஒன்பதாகிவிட ஷ்யாம் அதற்குள் நுழைந்து விட்டான்.

    கட்டிலில் அனிதா.

    தூக்கி வாரிப் போட்டது.

    மேடம், நீங்க யாரு? எதுக்காக என் அறைல வந்து படுத்திருக்கீங்க?

    அனிதா முதலில் ஏற இறங்க அவனைப் பார்த்து விட்டு, தனது ட்ரேட்மார்க் சிரிப்பைப் பளிச்சென சிந்த, ஷ்யாம் மிரண்டே போனான்.

    பெங்களுர் ‘பலான’ சங்கதிகளுக்கு விசேஷமான ஊர் என்று அவன் கேள்விப்பட்டதுண்டு. தன்னை வளைக்க வந்த ‘அயிட்டம்’தான் அவள் எனத் தீர்மானித்தே விட்டான்.

    அருகில் நெருங்கினான்.

    எழுந்திரு!

    ………

    என் ரூமுக்குள்ள வந்து, என் கட்டில்ல ஒய்யாரமா சாஞ்சிட்டு, சிரிக்கவா செய்யறே? நான் ‘அந்த’மாதிரி ஆம்பளை இல்லை, புரியுதா? இடத்தை காலி பண்ணு!

    அனிதா எழுந்தாள்.

    சிரிப்பு மாறாமல் அவனை நெருங்கினாள்.

    ஷ்யாம் நடுங்கி விட்டான்.

    அவள் தன்னை இறுக்கிப் பிடித்து ரேப் செய்ய முயல்வதைப் போல ஒரு பயம் வந்து விட்டது.

    ‘இவள் பெண். இந்த இடத்தில் நின்று இவள் என்ன பேசினாலும் எடுபடும். அய்யோ, நான் எப்படித் தப்பிப்பது?’ வியர்த்து விட்டது.

    மீண்டும் சிரித்தாள் அனிதா.

    சார்,என்னோட வாங்க!

    எங்கே? எ…எதுக்கு?

    வாங்களேன்!-அறை வாசலை நெருங்கி, கதவின் எண்ணைத் திருப்பி வைத்தாள்.

    அய்யோ ஆறு!

    அய்யோ ஆறு இல்லை. வெறும் ஆறுதான். உங்க ரூம் அங்கே இருக்கு. போங்க! குட் நைட்!

    ஷ்யாமுக்கு அவமானமாகப் போய் விட்டது.

    தன் அறைக்கு வந்து ட்ரஸ் மாற்றி கட்டிலில் சரிந்தான்.

    ‘ச்சே!அவசரப் புத்தி எனக்கு!’

    ‘எப்படி என்னை விட்டு வைத்தாள் அவள்? என் கேள்விகள் அவளைக் காயப் படுத்தவில்லையா? அந்தச் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் எனக்கு நிஜத்தைப் புரிய வைத்த பெண்!’

    ‘அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!’

    கட்டிலை விட்டு எழுந்தான்.

    ‘ச்சே! இந்த நேரத்திலா?’

    ‘வேண்டாம்! விடியட்டும், பார்த்துக் கொள்ளலாம்!’

    ‘அவள் அந்த அறையில் தனியாகவோ இருக்கிறாள்? இருக்காது! ஆண் துணை நிச்சயமாக இருக்கும்!’

    ‘வெளியே போயிருப்பார்கள்!’

    உறங்கிப் போனான். காலையில் வழக்கம் போல சீக்கிரமே எழுந்து விட்டான். ஆங்கிலத் தினசரி படிக்கலாம் என்று தோன்ற, அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

    வெளியே வந்த பிறகுதான் பேப்பர் வாங்கப் போக ‘நீட்’டாக டிரெஸ் பண்ணியிருக்கிறோம் என்பதை வெட்கத்துடன் உணர்ந்தான்.

    அவளும் தன் அறையைப் பூட்டிக் கொண்டிருந்தாள்.

    குட்மார்னிங் மேடம்!

    வெரி குட்மார்னிங்!

    பளிச்சென சிவப்பு நிற சல்வார் கமீஸ் அணிந்து அப்போது மலர்ந்த புஷ்பம் போலிருந்தாள்.

    ஸாரி!

    எதுக்கு?

    நம்பர் பண்ணின தப்புல, தப்பு தப்பா உங்களைப் பேசிட்டேன். வருத்தப்படறேன் அதுக்காக!

    இட்ஸ் ஓ.கே! இதெல்லாம் எதிர்பாராத விபத்துக்கள். நான் பெரிசா எடுத்துக்கலை. வரட்டுமா?

    வேகமாக நடந்து லிஃப்டில் நுழைந்து இறங்கினாள் அவள்.

    ‘கூட யாருமே இல்லையா?

    குடைந்தது ஷ்யாமுக்கு.

    ‘என்ன செய்கிறாள்? எதற்காக இத்தனை சீக்கிரம் வெளியே புறப்படுகிறாள்?

    ‘தேவையா உனக்கு? நீ இத்தனை கவலைப் படுவானேன்? யார் அவள் உனக்கு?’

    பத்து மணிக்கு தன் கான்ஃபரன்ஸில் கலந்து கொண்டான். அறைக்கு திரும்ப இரவு எட்டரை ஆகிவிட்டது. அவள் அறை பூட்டியிருந்தது.

    ‘இன்னும் வரவில்லையா?’

    ‘இல்லை, காலி செய்து கொண்டு போய் விட்டாளா?’

    சாப்பாடும் கான்ஃபரன்ஸ் முடிந்ததும் ஆகிவிட்டதால், ஒரு சிகரெட் பிடித்து விட்டு வந்து படுத்துக் கொள்ளலாம் என்று தோன்ற, லிஃப்டில் கீழே இறங்கினான்.

    அதை முடித்து விட்டு, வண்ண மயமான பெங்களுரைக் கொஞ்சம் ரசித்து விட்டு, உள் நோக்கித் திரும்ப, அவள் வந்து கொண்டிருந்தாள் நிதானமாக.

    நேரம் ஒன்பது!

    "ஹலோ சார்! - இவனைப் பார்த்துச் சிரித்து விட்டு லிஃப்டுக்குள் நுழைந்தாள். ஷ்யாமும் சிகரெட்டை வீசிவிட்டு ஓடி வந்து அதற்குள் நுழைந்தான்.

    இத்தனை லேட்டா வர்றீங்க?

    தொழில் அப்படி!

    ‘திக்’கென்றது ஷ்யாமுக்கு.

    தொழிலா?

    ம்! விளக்கு வச்சப்புறம்தானே நாங்க ‘கடை’விரிக்கறம்!- சொல்லி விட்டு உதட்டை மடித்து அவனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினாள். ஷ்யாமுக்கு தொண்டையில் பூரான் நெளிந்தது.

    என்னங்க சொல்றீங்க?

    நாலு பேரைப் பார்த்தாத்தானே எங்க பொழப்பு நடக்கும்!

    ம்ஹும்! இவள் நிச்சயமாக அயிட்டம்தான். அதனால்தான் ஓட்டலில் தனியாக வந்து தங்குகிறாள். ‘விளக்கு வச்சப்புறம் கடை விரிக்கறம்.’

    லிஃப்ட் நின்றது. கதவு திறக்க, அவள் வெளிப் பட்டாள்.

    ஷ்யாம் கொஞ்சம் கலவரத்துடன் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான்.

    ‘அழகான பொண்ணோட பின்னணியில் இப்படியொரு ஆபாசமா?’

    ‘நாளை முதல் அவள் இருக்கும் திசைப் பக்கம் கூட திரும்பக் கூடாது!’

    ‘நாளை மறுநாள் கான்ஃபரன்ஸ் முடிந்து விட்டால், பிழைத்தேன்!’

    ‘ஆள்பிடிக்கும் ரகம்!’

    ‘எனக்குக் கூட வலை வீசுவாள். ஏமாந்தால் அறைக் கதவைத் தட்டி அலறடிக்கும் ரகம்தான்.’

    கதவு தட்டப்பட்டது.

    ஷ்யாமுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

    ‘அவள்தானா?’

    ‘ஆம்! என்னைக் கண் வைத்து விட்டாள். தாயே! பரதேவதே! நான் கொயந்தப் பையன். என்னைக் கெடுத்துராதே!’

    நடுங்கிக் கொண்டே கதவைத் திறந்தான்.

    மூச்சே நின்று விட்டது.

    அவள்தான்! நைட்டியில் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

    முதுகில் விரித்துப் போட்ட கூந்தல்.

    எ… என்ன வேணும்?

    நீங்கதான்!

    சுவாதீனமாக உள்ளே நுழைந்தாள்.

    ஷ்யாமுக்கு மயக்கமே வந்து விட்டது. கஷ்டப்பட்டு சுதாரித்துக் கொண்டான்.

    த பாருங்க? எதுவானாலும் விடிஞ்சு பேசிக்கலாம். நீங்க உங்க ரூமுக்குப் போங்க!

    ஏன் சார் உங்க குரல் இப்படி நடுங்குது? உடம்பெல்லாம் ஒரே வேர்வை. என்னாச்சு?

    த பாரும்மா! நான் ‘அந்த’மாதிரி ஆசாமி இல்லை. ஏதோ படிச்சேன். உத்யோகத்துக்கு வந்துட்டேன். மற்றபடி நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை வேற மாதிரி எடை போடாதே! நீ புறப்படறியா?

    கலகலவெனச் சிரித்தாள்.

    இதுக்கும் சிரிப்பா?

    உங்களை நான் புரிஞ்சுகிட்டேன். அதனாலதான் கதவைத் தட்டி உங்க சந்தேகத்தைப் போக்க வந்தேன். நான் ஒரு மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ். விளக்கு வச்சப்புறம் ‘கடை’ விரிக்கற சங்கதி, டாக்டர்களைப் பார்க்கறதுதான்.

    அதை கொஞ்சம் ஒழுங்கா சொல்லக் கூடாதா?

    அவள் சிரித்தாள் மீண்டும்.

    தனியாவா ஓட்டல்ல தங்கறீங்க? ஒரு இளம் பெண்ணால பின் மாலைப் பொழுதுல செயல் படறது சாத்தியமா? பயம் வராது?

    என்ன பயம்? நான் தெளிவா இருக்கேன். தப்பான கண்ணோட எவனாவது நெருங்கினா கண் இருக்காது அவனுக்கு. ஒரு பெண் மனசு வச்சிட்டா அவளைப் பாதுகாத்துக்க அவளே போதும். ஒரு துணை தேவையில்லை.

    ஷ்யாம் ஆச்சரிய விழிகளை அவள்மேல் நாட்ட,

    குட் நைட்! இனிமே நீங்க தூங்கலாம். இப்படி ஒரு ‘தயிர்வடை’யை நான் பார்த்ததே இல்லை!

    எ… என்ன சொன்னீங்க இப்ப?

    திரும்பிப் பார்த்தாள்.

    அந்த ‘கலீர்’ சிரிப்பு ஒரு முறை சிதறித் தெறிந்தது. அந்த அறை முழுக்க, தன் வாசனையை அங்கே விட்டுவிட்டு சட்டெனக் காணாமல் போனாள்.

    ஷ்யாம் ஒரு லயிப்புடன் நின்று கொண்டிருந்தான்.

    2

    ஷ்

    யாமுக்கு ஒரு நாள் முன்னதாகவே மீட்டிங் முடிந்து விட்டது. அறைக்குத் திரும்பி விட்டான். இரவு மெயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து விட்டார்கள். இன்னும் இரண்டு மணி நேரங்கள்தான்.

    அவள் அறையில் பூட்டு.

    ‘டாக்டர்களைச் சந்தித்து விட்டு பத்து மணிவாக்கில்தான் திரும்புவாள். அதற்குள் நான் ரயிலில் இருப்பேன்.’

    ‘சொல்லிக் கொள்ளக் கூட அவகாசமில்லை!’

    ‘ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும்? யாரவள் அமுக்காக அமுக்கி விட்டது.

    அந்தப் படபடக்கும் பட்டாம்பூச்சிக் கண்களில் என்னவோ ஒரு மந்திர சக்தி இருக்கிறது.

    கொஞ்சமும் அதிராமல், ஆத்திரப் படாமல் ‘நறுக்’கெனப் பேசும் அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1