Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalai Marana Velai
Naalai Marana Velai
Naalai Marana Velai
Ebook120 pages59 minutes

Naalai Marana Velai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
LanguageUnknown
Release dateMay 16, 2016
ISBN6580100600361
Naalai Marana Velai

Reviews for Naalai Marana Velai

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalai Marana Velai - Devibala

    http://www.pustaka.co.in

    நாளை மரண வேளை

    Naalai Marana Velai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    ட்டு நாற்பது தொலைக்காட்சி செய்தியில் முகம் காட்டி சிரித்தாள் ஃபாத்திமா.

    வணக்கம்! தலைப்புச் செய்திகள்.

    தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ‘கண்கள் மூன்று’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கிய ஆத்மா என்ற திருவாரூர் ஆத்மநாதன் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெறுகிறார்.

    இதே படத்தில் கதாநாயகியாக நடித்த சொரூபா சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

    சிறந்த இசையமைப்பாளராக மந்திரமூர்த்தியும், ஒளிப்பதிவாளராக தேவதாஸும் இதே படத்தில் பணியாற்றியதற்காக தேசிய விருதுகள் பெறுகின்றனர். நாலு விருதுகளைப் பெறும் ‘கண்கள் மூன்று’ தயாரிப்பாளரை குடியரசுத் தலைவர் வாழ்த்தினார்.

    லெபனானில்...

    காரணம் உனக்குத் தேவையில்லை. சார்ஜ் என்ன?

    ‘அது ஆளைப் பொறுத்தது!"

    ‘டைரக்டர் ஆத்மாவைக் கொல்லணும்!"

    இன்னிக்கு தேசிய விருது கிடைச்சிருக்கே! அவரையா?

    அதனால தான் கொல்லணும்!

    பிரம்மா சற்று அதிர்ந்து தான் போயிருந்தான்.

    முடியுமா, முடியாதா?

    முடியாதது இந்த பிரம்மாவோட டிக்ஷனரில இல்ல. ஆனா ரேட் கூடுதலா ஆகும்!

    பிளாங்க் செக்ல கையெழுத்து போட்டுத் தாறேன். வேண்டியதை நிரப்பிக்கோ!

    ஏன்னு தெரிஞ்...

    அப்பவே சொல்லிட்டேன் அவசியமில்லைனு!...

    சரி எப்பக் கொல்லணும்?

    அவன் டெல்லில போய் ஜனாபதி கையால தேசிய விருது வாங்கக் கூடாது. அதுக்குள்ளே எமலோகத்துல விருது வாங்க ஏற்பாடு செய்யணும்!

    ஒ..கே. அவனோட ஷெட்யூல், அசைவுகள், அப்பாயிண்ட்மெண்ட் இதையெல்லாம் முதல்ல தெரிஞ்சுகணும் அதுக்குப் பின்னால, தேதியும் நேரமும் சரியா திட்டமிடணும். கொஞ்சம் அவகாசம் வேணும் மேகா.

    டேக் யுவர் ஒன் டைம்!

    நான் நாளைக்கு சாயங்காலமே தகவல்களோட வர்றேன்! பிரம்மா நகர்ந்தான்.

    பிரம்மாவை அனுப்பிவிட்டு கதவைச் சாத்திக் கொண்ட மேகா, ஒரு புயல் போல நடந்து, தன் படுக்கையறைக்குள் நுழைந்தான்.

    அலமாரியைத் திறந்து. லாக்கரிலிருந்து ஒரு குட்டி ஆல்பத்தை எடுத்தான். அதிலிருந்த புகைப்படங்களைப் பார்க்கப் பார்க்க கண்கள் சிவந்து கொண்டே வந்தன.

    ‘நோ...’

    ஆல்பத்தை விசிறி எறிந்தான்.

    அது தரையில் சிதறி, அப்படியே பிரிந்து விழ, அதில் ஒரு புகைப்படத்தில் அழகான அந்தப்பெண் சிரித்துக் கொண்டிருந்தாள்.

    அதைத் கையிலெடுத்து தன் விரல்களால் வருடிய மேகா மடிந்து உட்கார்ந்து குலுங்கி அழத் தொடங்கினான்.

    2

    டை

    ரக்டர் ஆத்மாவின் வீட்டு வாசலில் ரசிகர் வெள்ளம்.

    மாலைகளோடு முண்டியத்துக் கொண்டிருந்த கூட்டத்துக்கு நடுவில் பி.ஆர்.ஒ. கசங்கிக் கொண்டிருந்தான். ‘இருங்க...இருங்க... எல்லாருக்கும் பொறுமை அவசியம். ராத்திரி ஒரு மணிக்குத்தான் அண்ணன் தூங்கப் போனார். இன்னும் முழிக்கலை. தயவு செஞ்சு காத்திருக்கணும்!"

    விவரம் புரியாத கூட்டம், பி.ஆர் ஒவை கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்தது.

    இதை விட ஒரு நடிகை வீட்டு நாயாக இருந்திருக்கலாம் என்று தோன்றிய எண்ணத்தை அவசரமாக அழித்தான்.

    மாடியேறி, குளிரூட்டப்பட்ட ஆத்மாவின் அறையை அணுகி, மாஜிக் வழியாக உள்ளே பார்த்தான்.

    ஆத்மா உறங்கிக் கொண்டிருந்தார்.

    இன்டர்காமை எடுத்து தொடர்ந்து அலற விட்டான்.

    பலன் கிடைத்தது.

    யாரு தனபாலா? அறிவில்லை ஒனக்கு! தூக்க கலக்கத்துடன் ‘சள் ளென்று விழுந்தார் ஆத்மா.

    "நிஜமாகவே அறிவில்லாதவங்க உங்க விசிறிகள் தான். சுத்து சுத்தனு சுத்தறாங்க இந்த வீட்டை (வசனம் நல்லாருக்கா? அடுத்த படத்துல சான்ஸ் தரக்கூடாதா?)

    இன்னும் அரை மணி நேரத்துல வர்றேன். இருக்கச் சொல்லு! போர்வையை விலக்கி சந்தன நிற ஸாட்டின் ஹவுஸ் கோட்டுடன் எழுந்தார். முயன்றிருந்தால் இன்றைய கதாநாயகர்களை சரித்திருக்க முடியும். அந்த அளவு வசீகரத்தை தன்னிடம் வைத்திருந்தார் ஆத்மா.

    முகம் கழுவி,

    பெட் காபி சாப்பிட்டு ஒரளவு தன்னைத் தயார்படுத்திக் கொண்டதும்.

    டெலிபோன் மூலம் பாராட்டு மழை அடிக்கத் தொடங்க’

    ரசிகர்களின் மாலைகளை ஏற்றுக்கொண்டு அவர்களை அனுப்புவதற்குள் நாலைந்து பத்திரிக்கை நிரூபர்கள் காமிராவும் கையுமாக பிரசன்னமானார்கள்.

    மணி ஒன்பது

    அண்ணே வாகினில ஒன்பதரைக்கு ஷெட்யூல் சத்யராஜ் கால்ஷீட் கஷ்டம்!

    சார் ஒரு மினி பேட்டி!

    ஸாரி ப்ளீஸ் நாளைக்கு ஈவினிங் போன்ல டேட்பிக்ஸ் பண்ணிட்டு அப்புறமா வாங்க, எல்லாருக்கும் நன்றி.

    குளிக்கப் போனார்.

    ஷவரின் கீழே நின்ற நேரம் அன்றைய படப்பிடிப்பு எடுக்கப்படவேண்டிய காட்சிகள் என்னவென்று தீர்மானித்து கொண்டார்.

    புறப்படும் நேரம் சூப் வந்தது.

    அதை விழுங்கி வைத்தார்.

    ப்ரீமியர் பத்மினி அவரை ஏற்றுக்கொள்ள,

    பிரதான சாலையில் ஜனித்தார்.

    ஆத்மாவின் திரைப்பட விஜயம் சமீபத்தில் தான்,

    பூனா திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சி பெற்று, கடைசி வருடத்தில் இருக்கும் போது, கல்லூரிக்கு விஜயம் செய்த இயக்குநர் கே. பாலசந்தரின் கண்களில் பட்டார்.

    தனியாக அழைத்து,

    நடிக்கறியா? அடுத்த படத்துல ஹீரோவா அறிமுகப் படுத்தறேன்!

    வேண்டாம் சார்!

    ‘உங்களுக்கு அஸோஸிடேடா சேர்த்துங்க சார் ஒரு நல்ல டைரக்டரா வரணும்னு ஆசைப்படறேன், பாதையை மாத்திக்க விரும்பலை!"

    ஒ.கே.நாளைக்கு ‘கவிதாலயா’ ஆபீசுக்கு வந்து என்னைப்பாரு!

    பார்த்தார்.

    சேர்த்துக் கொண்டார் கே.பி.

    மனதில் உறுதி வேண்டும்.’

    Enjoying the preview?
    Page 1 of 1