Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pottuvetcha Vatta Nilaa
Pottuvetcha Vatta Nilaa
Pottuvetcha Vatta Nilaa
Ebook119 pages58 minutes

Pottuvetcha Vatta Nilaa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100600919
Pottuvetcha Vatta Nilaa

Read more from Devibala

Related to Pottuvetcha Vatta Nilaa

Related ebooks

Reviews for Pottuvetcha Vatta Nilaa

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pottuvetcha Vatta Nilaa - Devibala

    http://www.pustaka.co.in

    பொட்டு வைச்ச வட்ட நிலா

    Pottu vetcha Vatta Nilaa

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ரவு பத்து மணி!

    ஆண்டாள் கவலையுடன் கடிகாரத்தை ஏறிட்டாள். கதவைத் திறந்தாள். வாசலுக்கு வந்தாள்.

    வெளியே இருட்டு அப்பிக் கிடந்தது. அன்றைக்குப் பார்த்துத் தெரு விளக்குக்கூட எரியவில்லை. நாயின் ஊளைச் சத்தம் பயங்கரமாக செவியைத் தாக்கியது.

    இன்னும் சந்திரன் வரவில்லை.

    காலையில் வெளியே போகும்போதே சற்று சோர்வாக இருந்ததால் அவன் முகமெல்லாம் வாடிக் கிடந்தது.

    என்ன வேலையிருந்தாலும் இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவான். அப்படி முடியாமல் போனால் தொலைபேசியில் காரணத்தைச் சொல்லிவிடுவான். ஒரு நாள் கூட வெளியில் அவன் தங்கியதில்லை.

    கவலையுடன் ஆண்டாள் உள்ளே வந்தாள்.

    சந்திரனின் அப்பா, அம்மா உறங்கிக் கொண்டிருந் தார்கள். ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு முடித்து ஏழரைக்கு உறங்கப் போய்விடுவார்கள். யாரைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்கள்.

    எழுப்பலாமா?

    யாரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரைப் பற்றி விசாரிப்பத?’

    நேரம் பத்தரை!

    ஆண்டாளுக்கு மூச்சை அடைத்தது.

    ‘"ஏன் என்னாயிற்று அவருக்கு? ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும்.'

    'ஒரு வாரமாக அவர் சரியாக இல்லை. அவரிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. சரியாகச் சாப்பிடுவ தில்லை.’

    நேற்று முன் தினம் கேட்டேவிட்டாள் ஆண்டாள்.

    ‘ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?’

    'இ...இல்லையே ஆண்டாள்! நான் நல்லாத்தானே இருக்கேன்!'

    'இல்லை...அப்படி இருக்கிறதாத் தெரியலை. முகமெல் லாம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு.’ அவன் நெற்றி, கழுத்து என்று கைவைத்துப் பார்த்தாள்.

    அவன் சிரித்தான்.

    ‘தொழில்ல ஏதாவது கஷ்டமா? நஷ்டம் உண்டாகி யிருக்கா? எனக்கு சொல்லக்கூடாதா?’

    'இல்லைம்மா! உங்கிட்ட எதை நான் மறைச்சிருக்கேன் ஆண்டாள்? வேலை அதிகம். அதனாலதான் சோர்வு!'

    அதற்குமேல் அவள் கேட்கவில்லை.

    சந்திரனின் கைவசம் நாலு லாரி இருந்தது. சரக்கு லாரிகள். அப்பா கவனித்து வந்த தொழில். அவரால் முடியாமல் போக, சந்திரனே நாலைந்து ஆண்டுகளாக கவனித்து வருகிறான். சந்திரன் பட்டதாரிதான். மற்ற வேலைகளை விட லாரியில் அதிக வருமானம் இருந்ததால் இதில் நிலைத்துவிட்டான்.

    சொந்த வீடு, சகல வசதிகள் என்று எல்லாமே இருந்தன. பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளை. ஒரு அக்கா, ஒரு தங்கை மட்டும். இருவரும் திருமணமானவர்கள்.

    ஆண்டாளை சந்திரன் மணந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தைகள் இல்லை.

    நேரம் பதினொன்று அடித்தது.

    ஆண்டாளால் நிற்கக்கூட முடியவில்லை.

    ‘இனி அத்தை, மாமாவை எழுப்ப வேண்டியதுதான். அவருக்கு ஏதோ ஆபத்து!’

    அவர்கள் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.

    அந்தநேரம் வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

    'வந்துவிட்டாரா?’ பதட்டத்துடன் வாசலை நோக்கி நடந்தாள் ஆண்டாள்.

    இரண்டு இளைஞர்கள் இறங்கினார்கள் ஆட்டோவை விட்டு.

    'சந்திரன் வீடு இதுதானா?’

    ‘ஆமாம். அவருக்கு என்ன?’

    'நீங்க அவருக்கு என்ன வேணும்?’

    'நான் அவரோட மனைவி. என்னாச்சு அவருக்கு?’

    ‘மன்னிக்கணும். உங்க கணவரை மருத்துவமனையில சேர்த்திருக்கோம்.'

    'ஏன்?’ அலறினாள் ஆண்டாள்.

    'எட்டு மணிக்கு இரத்தம் இரத்தமா வாந்தி எடுத்தார் சந்திரன். அப்படியே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துட்டுப் போய் வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சிட்டு உங்களைத் தேடி வர தாமத மாயிடுச்சு!"

    உள்ளே ஓடினாள் ஆண்டாள்.

    ‘அ0த்தே...அத்தே!’ குலுக்கினாள்.

    மாமியார் மிரண்டு விழித்தாள்.

    இவள் விவரம் சொன்னதும் மாமாவும் அவசரமாக எழுந்துவிட

    மூவரும் பதறியபடி வாசலுக்கு வந்தார்கள்.

    இளைஞர்களில் ஒருவன் வேறொரு ஆட்டோ கொண்டுவந்துவிட்டான் அதற்குள்.

    ஆண்டாள் அழத் தொடங்கிவிட்டாள்.

    ‘எப்படி இருக்கார் அவர்?’

    ‘என் பிள்ளை உயிருக்கு ஆபத்து ஒண்னுமில்லையே!" அம்மா அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டாள்.

    மருத்துவமனையை வண்டி அடைய, , ற ங் கி ஓடினார்கள் மூவரும்.

    'இதோ இது டாக்டரின் அறை!'

    உள்ளே நுழைந்தாள் ஆண்டாள் புயல் போல.

    'டாக்டர் என்னாச்சு அவகுக்கு?’

    'நீங்க யாரம்மா?’

    'சந்திரன் மனைவி!'

    ‘ஆங்...உட்காருங்க! நீங்க ரெண்டுபேரும் அவரைப் பெற்றவங்களா?’

    ‘ஆமாம்!’

    ‘எப்படி இத்தனை நாள் கவனிக்காம இருந்தீங்க?’

    'எதை டாக்டர்?’

    'சந்திரனுக்கு இரத்தப் புற்றுநோய். அதுவும் முற்றிய நிலை!’

    'டாக்டர்!’ அலறிவிட்டாள் ஆண்டாள்.

    ‘அதனாலதான் வாந்தி எடுத்திருக்கார் இரத்தம் இரத்தமா.’

    'இப்ப அவர்...'

    ‘இருங்க! நானே கூட்டிட்டுப் போறேன். மயக்க ஊசி போட்டு வேச்சிருக்கோம். கடந்த சில நாட்களா அவருக்கு ஏதாவது நோய் அறிகுறி தெரிஞ்சிருக்கா?’

    ‘நோய்னு எதுவும் இல்லை. ரெண்டுவாரமா முகமெல் லாம் சோர்வா இருந்தார். சரியா சாப்பிடலை...துரங்கற தில்லை. நான் இதை விசாரிச்சேன். தொழில் சுமைனு ஒதுக்கிட்டார்!’

    'காரணம் அது இல்லை.மா. அவர் இரத்தத்துல புற்று நோய்க் கிருமிகள் கலந்தாச்சு. அது அசுர வேகத்துல வளர்ந்து இப்ப அவரை விழுங்கிட்டு இருக்கு!’

    'ரெண்டு வாரத்துல... எ...எப்படி டாக்டர்?’

    'மருத்துவத்துல பல செய்திகள் இப்பல்லாம் எங்களுக்கே பிடிபடறதில்லை. வேகமாக இரத்தத்துல புற்றுநோய் பரவ முடியும். சந்திரனுக்குப் பரவியிருக்கு.

    'டாக்டர்!’

    'உங்ககிட்ட நான் பொய் சொல்ல விரும்பலை. உங்களை எதுக்கு நான் ஏமாற்றணும்? சந்திரனை மரணம் வேகமா நெருங்குது. எந்த நேரமும்

    Enjoying the preview?
    Page 1 of 1