Vinnai Thedum Venpura!
4/5
()
About this ebook
Reviews for Vinnai Thedum Venpura!
11 ratings0 reviews
Book preview
Vinnai Thedum Venpura! - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
விண்ணைத் தேடும் வெண்புறா!
Vinnai Thedum Venpura!
Author:
அருணா நந்தினி
Arunaa Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
ராதாவிற்கு அது தன் ஆபீஸ்தானா... இல்லை இடம் மாறி வந்து விட்டோமா என்ற வியப்பு ஏற்பட்டது.
அதற்குக் காரணமும் இருந்தது...
என்றைக்கும் சோம்பல் முறித்துத் தொடங்கும் ஆபீஸ் வேலைகள் அன்றைக்கு "பூஸ்ட் குடித்து விட்டதுபோல சுறுசுறுவென்று நடந்து கொண்டிருந்தன... எப்போதும் இல்லாத அதிசயமாய் அனைவரும் ஆஜர்... அவரவர் இடங்களில்... அதுவும் மும்முரமாய் தங்கள் வேலைகளில் ஆழ்ந்துபோய்!
கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். ஒருவேளை தான்தான் லேட்டாக வந்திருக்கிறோமோ? இல்லையே! முள் சரியாக பத்தில் நிற்கிறதே...
பஸ்ஸைப் பிடித்து ஓடி வந்த படபடப்பு இன்னும் அடங்கவில்லை... வெய்யிலில்... அதுவும் பஸ் நெரிசலில் வந்ததால் வியர்வை முத்துக்கள் நெற்றியிலும், மேல் உதட் டிலும், கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தாள் ராதிகா.
அடுத்து அமர்ந்திருக்கும் அனுராதாவிடம் கேட்டாள்.
இன்றைக்கு என்னடீ விசேஷம்... எல்லோரும் கப்சிப் என்று மெளனமாய் இருக்கிறார்கள்... அதுவும் வேலையில் மும்முரமாய்...
மெல்லிய குரலில் விசாரித்தாள்.
உஷ்... ஏதும் பேசாமல் வேலையைப் பாரு... புது எம்.டி. மாற்றலாகி வருகிறாராம். ரொம்பக் கண்டிப்பாம்! நேற்று நீ ஏன் வரவில்லை? அதைச் சொல்லு முதலில்...
அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது அனு. ஆபீஸுக்குப் புறப்பட்டு விட்டேன். அம்மா தலை சுத்துதுன்னு உட்கார்ந்து விட்டார்கள்... டாக்டரிடம் அழைத்துப்போய் காட்டிவிட்டு வர்றப்போ மணி இரண்டு... ஃபோன் பண்ணக்கூட முடியவில்லை...
இப்போ எப்படி இருக்கிறாங்க உங்க அம்மா..?
பரவாயில்லை. அது சரி. நேற்றுதான் புது எம்.டி. வருகிறார்னு தெரிந்ததா?
ஆமாம். முதல்ல வதந்தியாக்கும் என்று அசட்டை பண்ணினோம்... அப்புறம் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து ஃபேக்ஸ் வந்தது. நேற்றிலிருந்து கெடுபிடி ஆரம்பம்...
தன் வேலையைத் துவங்கினாள்... ஆக எம்.டி. வந்தா யிற்று.
இதோ வருகிறார் வருகிறார் என்று ஒரு மாதமாய் இழுபறியாய் இருந்தது, இன்று நிச்சயமானது.
அது சரி... ராதிகா. இன்றைக்காவது ஒரு நல்ல கலரில் புடவை கட்டிக் கொண்டு வரக்கூடாதா?
இன்னிக்கு என்ன ஸ்பெஷல்..?
எம்.டி. வருகிறார்...
எனக்கு ஜோசியம் தெரியுமா?
தெரிந்திருந்தால்... பளிச்
சின்னு வந்திருப்பாயாக்கும்..."
மாட்டேன்...
உன்னைத் திருத்தவே முடியாது.டி...
"நான் எனக்காகத்தான் உடுத்துவது... வேறு யாருக்காக வும் கிடையாது! இளம் புன்னகையுடன் அதே சமயம் சற்று அழுத்தமாயும் சொன்னாள் ராதிகா.
அதே ‘ரெடிமேட்’ பதில்... ஷ்... கார் வந்து நிற்கிற மாதிரி தெரியுது. நம் மதிப்பிற்குரிய நாயகன் வந்துவிட்டார். ஏன் ராது... அவர் அழகாய் இருப்பார்னு நினைக்கிறீயா? வாலிப ராக இருந்தால் பரவாயில்லை... வேலையை இன்ட்ரஸ்டா
செய்யலாம். உ.ம்... கிழவனாய் இருந்து தொலைச்சிட்டா போர்தான்..."
அவளுக்கு மட்டும் கேட்கும்படியாய் சிரித்தாள் ராதிகா.
பொறுமையாக இரு அனு... கொஞ்ச நேரத்தில் தெரியப் போகிறது...
அப்படியே வயசானவராய் இருந்தார்னு வச்சுக்கோ... அத்தனையும் ‘வேஸ்ட்’...
முகத்தைச் சுளித்துச் சொன்னாள் அனு.
புருவங்களை ஏற்றி அவளைப் பார்த்தாள் ராதிகா...
இங்கு செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கும் எம்.டி.யோட வயசுக்கும் என்ன சம்பந்தம்?
அடி... மக்கு. ஆபீஸ் ஏற்பாடுகளைச் சொல்லலை... எங்களோட ஒப்பனையைத்தான் சொல்கிறேன். எங்க கற்பனையில் அழகான வாலிபனாய்ப் பார்த்து அவரைக் கவரணும்னு வந்திருக்கோம். சுற்றிப் பாரேன். நேத்து எல்லோரும் ப்யூட்டி பார்லருக்குப் படையெடுத்திருப்பது நிச்சயம்...
என்றவள் தணிந்த குரலில் என்னையும் சேர்த்துத்தான்டீ...
என்றாள்.
சிரித்தாள் ராதிகா.
சிரிக்காதே... வரும் எம்.டி. இளம் வயசா அழகா இருக் கணும்னு வேண்டிக்கோ..."
நான் ஏன் வேண்டிக்கணும்...
அதுதானே... நீயேன் வேண்டணும்...? உனக்குத்தான் எதுவுமே வேண்டாமே...
சட்டென்று ராதிகாவின் முகத்தில் வாட்டம். துடைத்து விட்டதுபோல சிரிப்பு மறைந்தது. கண்களில் சோகம் தெரிந்தது...
ச்சூ... என் கதை முடிந்து விட்ட கதை... விடு அனு...
என்றாள் அவள்.
அனுவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. "சாரி ராது... ஏதோ தமாஷாய் பேச எண்ணி, அப்படிப் பேசி விட்டேன்... ஆனாலும் ஒண்ணு