Nee... Thithikkindra Thena...?
3/5
()
About this ebook
Reviews for Nee... Thithikkindra Thena...?
2 ratings0 reviews
Book preview
Nee... Thithikkindra Thena...? - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
நீ... தித்திக்கின்ற தேனா...?
Nee… Thithikkindra Thena…?
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
நீ... தித்திக்கின்ற தேனா...?
- லட்சுமி பிரபா
1
பகலும் இரவும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுது! இருளும் ஒரு அழகுதான். அதனை சூரியன் மாலையிட்டு வரவேற்கிறான் என்ப தால்... அந்தப் பொழுதை மாலை என்கிறார்கள் போலும்
தோட்டத்தில் நின்றபடி ரசனையுடன் வானத்தை அன்னாந்து பார்த்து மாதங்கி, பின்பக்கத்து கதவை சாத்திக் கொண்டு மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள்.
பூஜையறையில் வெள்ளி காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து வணங்கி விட்டு... லலிதாசகஸ்ரநாமத்தை முணு முணுத்தபடியே கூடத்திற்கு வந்தாள்.
மனதில் மகிழ்ச்சி அலை மோதிக் கொண்டிருந்த தால்... அவளது இதழ்க்கடையில் ஒரு குட்டி முறுவல் பூத் திருந்தது.
மயிற்தோகை போன்ற நீண்ட அடர்ந்த கூந்தல்... தந்தத்தைக் கடைந்தாற் போன்ற நிறம்... அகன்ற கண்கள் பிறை நெற்றி... கூர் மூக்கு, சங்கு கழுத்து, சிறுஇடை, நிகு நிகுவென்று உயரம்... மொத்தத்தில் கை தேர்ந்த சிற்பி ஒரு வன், பார்த்துப் பார்த்து செதுக்கிய சிலை போல... தெய் வீக அழகுடன் மிளிர்ந்தாள் மாதங்கி.
ஒப்பனை சிறிதும் இல்லாமலேயே ஒப்பற்ற பேரழகி யாக வலம் வருபவள் மனதிற்குள் சந்தோஷம் குடி கொண்டிருந்ததால்... இன்றைக்கு அவளது பேரழகு பன் மடங்காகிப் பொலிவுடன் திகழ்ந்தது.
பிரிட்ஜிலிருந்து அகன்ற சம்படத்தை வெளியில் எடுத் தாள். அடுக்களைக்குச் சென்று கோஸ் அடுப்பைப் பற்ற வைத்து வாணலியை ஏற்றினாள். சம்படத்திலிருந்த வெண்ணெயை வழித்துப் போட்டு காய்ச்சத் தொடங்கினாள்.
ஒரு கைப்பிடி முருங்கை இலைகளையும், ஒரு சிட்டிகை வெந்த யப் பொடியையும் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையையும் உருவிப் போட்டுகாய்ச்சியதும். கமகமவென்று பசு நெய்யின் வாசம் வீட்டை நிறைத்தது.
"என்னம்மா மாதங்கி? நெய் காய்ச்சிட்டு இருக்கிறாயா? நடை யில் காலணிகளைக் கழற்றி விட்டு நிதானமாய் உள்ளே வந்தார்.அப்பா தயாள மூர்த்தி.
அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்தாள் மாதங்கி, நெரு முனைக்கு வரும் போதே... கமகமன்னு வாசனை மூக்கைத் துளைக் குதே? உன்கை மணமே தனிதான்மாதங்கி முருங்கை இலையும் கறி வேப்பிலையும் போட்டுத் தாளிச்சிருக்கியா? இப்பவே எனக்கு நாக் குல ஜலம் ஊறுது. தெரியுமா?
மாதங்கி, அப்பாவின்மீது பரிதாபப்பார்வையை வீசினாள்.
இன்னிக்குசாதத்துல வெங்காயசாம்பாரைஊத்திரெண்டு ஸ்பூன் நெய்யை விட்டுப்பிசைஞ்சு, உருளைக்கிழங்கு வறுவலைப் போட்டுக் கிட்டு...காரசாரமான எலுமிச்சங்காய் ஊறுகாயைத் தொட்டுக்கிட்டு. ஒரு பிடிபிடிக்கலாம்னு இருக்கேன்...
மாதங்கியின்முகம் அனிச்சமலராய் வாடிப்போனது.அகன்ற விழி களில் குபுக்கென்று கண்ணிர் எட்டிப் பார்த்தது.
அப்பாவுக்கு பஞ்சு மார்க்கெட்டில் வியாபாரம். ஒடியாடி கை நிறைய சம்பாதித்தவர் தான்.
மனைவி குமுதம் அவரது மனதை அறிந்து நடந்து கொள்ளும் மாத ரசி. ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல். கோவில் குளத்தைச் சுற்றி வந்து, பரிகாரங்கள், விரதங்களைக் கடைப்பிடித்து தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தைதான்மாதங்கி!
வெள்ளிக்கிழமையன்று அவள் பிறந்தபோது... "குமுதம்! நமக்கு மகாலட்சுமியே வந்து பிறந்திருக்கா... நம்ம வம்சத்துல இப்படியொரு பேரழகை நாம கண்டிருக்கோமா சொல்லு?
ஆனந்தத்தில் பூரித்துப் போய் விட்டார் தயாள மூர்த்தி. கணவனுக் கும் மனைவிக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை தான் பேரழகோடு பிறந்த பெண் குழந்தைக்கு.. அப்படியொரு குறை இருக்கும் என்பதை அவர் கள்கனவிலும் கருதவில்லை.அந்தக்குறைவெளிப்படையாய் தெரிய ஆரம்பித்ததும். குமுத்த்தால் அதைத்தாங்கிக்கொள்ள இயலவில்லை.
‘ஒரே குழந்தை. அதுவும் பெண் குழந்தை அவளுக்கு இப்படி யொரு குறையா? கடவுளே! நாங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைத் ததில்லையே? எங்களுக்கு ஏன் இப்படியொரு சோதனை?"
அதிர்ச்சியில் தாளாமல் உள்ளுரகு முறிக்கு முறி அழுதவள்.காய்ச் சலில் விழுந்து விட்டாள். திரும்பவும் எழுந்து கொள்ளவே இல்லை. கவலையே அவளது உயிரை உருவிப் போட்டு விட்டது. குழந்தை மாதங்கிக்கு மூன்றரை வயதாகும் போது. குமுதம் இந்த உலகத்தை உதறி விட்டு மறைந்துபோனாள்.
அன்பு மனைவி இறந்து போன பின்பு… தயாள மூர்த்திக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு விட்டது. அவருக்கு இருந்த ஒரே பிடிப்பு மாதங்கி தான்... மாதங்கி மட்டும் இல்லையென்றால்... மனிதர் வட நாட்டுக்குச் சென்று கங்கையில் முழுகி உயிரை விட்டிருப்பார். மனைவி மறைந்துபோனதுக்கம் ஒரு பக்கம்... குழந்தை மாதங்கியைப் பற்றிய பயம் ஒரு பக்கம் அவரை ஆட்டிப்படைத்தது நிஜம்!
அவ்வப்போது அவருக்கு தைரியமூட்டி ஆறுதல் சொல்லி ஆதர வாய் இருந்தவள். அவரது தங்கை பெரிய நாயகி தான்.
"எதுக்கு அண்ணாகவலைப்படறே? மாதங்கி ஒரு மகாலட்சுமி. ஒரு முறை பார்த்தா.. மறுபடியும் திரும்பிப் பார்த்து பார்த்தவங்க பிர மிச்சுப் போகும் படியா... கண்ணைக் கூச வைக்கிற பேரழகோட ஜொலிக்கிறாளே? இப்பேர்ப்பட்ட அழகுப் பெட்டகம் கிடைக்கிறதுக்கு... நாம்ப கொடுத்துவச்சிருக்க வேண்டாமா.அண்ணா? மாதங்கி புத்திசாலிப் பொண்ணு. அவ முன்னாடி நீ இப்படி வருத்தப்பட்டா... அவ மனக் என்ன பாடுபடும்? எனக்கு இது ஒரு குறையாவே பட லைண்ணா... எதுக்கு வருத்தப்படறே?
இதைக் காரணம் காட்டி... மாதங்கியை யாரும் கல்யாணம் பண்னிட்டுப் போகமாட்டங்கன்னு... நீ நெனக்கிறியீா? அப்படியொரு பயம் இருந்தா... அதை இப்பவே மூட்டை கட்டி வச்சுடு... என்ன அண்ணா அப்படி பார்க்கிறே? நான் ஒருத்தி உயிரோட இருக்கிறவரைக்கும்... அண்டை அசலாரை இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க விட்டுருவேனா? எங்க அண்ணன் பொண்ணு மாதங்கி... என் மகன் ஆதித்யாவுக்காக பிறந்தவள் தெரியுமா? என் வீட்டுல அவதான் விளக்கேற்றி வைக்கப் போறா... இது சத்தியம் அண்ணா! நான் உன்தங்கை... நானும் உன்னை மாதிரி தான். வாக்கு கொடுத்தா.. கொடுத்தது தான்.என்னிக்கும் மாற மாட்டேன்னு... உனக்குத்தான் நல்லாத் தெரியுமே அண்ணா!
இப்படியே கவலைப் பட்டுட்டு இருந்தா... உடம்பு என்னத்துக்கு