Neethaney Ennai Ninaithathu
5/5
()
About this ebook
Reviews for Neethaney Ennai Ninaithathu
1 rating0 reviews
Book preview
Neethaney Ennai Ninaithathu - Lakshmi Prabha
http://www.pustaka.co.in
நீதானே என்னை நினைத்தது
Neethaney Ennai Ninaithathu
Author:
லட்சுமி பிரபா
Lakshmi Praba
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
ஜன்னலருகே நின்று தூரத்தில் எங்கோ பார்வையைப் பதித்திருந்தாள் ரோஜா.
எங்கு திரும்பினாலும் தெரிந்த பசுமையான அழகில் அவளது மனம் லயிக்கவில்லை.
கவலையும், ஏமாற்றமும் போட்டி போட்டுக் கொண்டு அவளை ஆட்டிப்படைத்ததில்... அவளது முகம் ஏகத்திற்கும் வாடிக் கிடந்தது.
ரோஜா... அவளுக்கேற்ற பெயர்தான்!
தந்தத்தைக் கடைந்தாற்போன்று பளிச்சென்ற நிறம். மானின் மருண்ட விழிகள்... மயிற்தோகை போன்று அடர்ந்த நீண்ட கருங்கூந்தல்.
ரோஜாவின் மென்மையைப் பிரதிபலித்த தேகம்... கை தேர்ந்த சிற்பி ஒருவன், சிரத்தையுடன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி வடித்த சிலையைப் போன்று அதீத களையுடன் கவிதை பாடலாம் போலிருந்தாள்.
"ரோஜா! வந்த வேலை முடியலை... அப்ப நாம்ப அவளது தீவிர சிந்தனையை கலைத்தது.
மதி! என்னோட சேர்ந்து இந்த தேவாரம் எஸ்டேட் பகுதி வரைக்கும் வந்துட்டே... என்னால வீண் அலைச்சல் உனக்கு
சேச்சே. ஏன் அப்படி சொல்றே? நானா விருப்பப்பட்டு தானே உன்கூட வந்தேன்? உனக்கு ஏமாற்றமா போச்சேன்னு நெனைச்சாத்தான்..... எனக்கு வருத்தமா இருக்கு ரோஜா...
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான்.... தேனியிலிருந்த மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினியராக வேலைக்குச் சேர்ந்தாள் ரோஜா.
அதே நிறுவனத்தில் அவளைப்போலவே புதிதாக வேலைக்கு வந்து அமர்ந்தவள் தான் வான்மதி.
ஒரே கேபினில் பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து பணி செய்ததால்.... விரைவில் நட்பு வட்டத்திற்குள் வந்து, நகமும் சதையுமாய் நல்ல சிநேகிதிகளாய் வலம் வரத் தொடங்கினர்.
ரோஜா தனது அப்பா பரந்தாமனைப் பார்ப்பதற்காக எஸ்டேட்டுக்குச் செல்லப் போகிறாள் என்ற விஷயம் தெரிந்ததுமே.... வான்மதிக்கு இருப்பு கொள்ளவில்லை.
வீட்டில் நச்சரித்து அனுமதி பெற்றுக் கொண்டு, தன் அம்மாவுடன் ஆட்டோவில் ஏறி. ரோஜாவின் வீட்டிற்கு திடுதிப்பென்று வந்துவிட்டிருந்தாள்.
"அம்மாடி ரோஜா! வேலைக்குச் சேர்ந்த நாள்லே இருந்து, வீடு திரும்பினதும் சதா உன்னைப் பத்தியே தான். எங்க மதி பேசிட்டிருக்கா.... லீவு நாட்கள்ல கூட உன்னைப் பிரிய மனசில்லை. உங்கப்பாவைப் பார்க்க எஸ்டேட்டிற்குப் போறியாமே? இவளையும் அழைச்சுட்டுப் போ....
போயிட்டு வந்ததும்.... ஃபோன் பண்ணுங்க... நான் வந்து மதியை அழைச்சுட்டுப் போறேன்.... ரோஜா! நீ தங்கமான பொண்ணும்மா...
உன் கூட சேர்ந்ததிலிருந்து மதிகிட்ட நிறைய மாற்றம் தெரியுது. அடக்க ஒடுக்கமா பணிவா பதவிசா நடந்துக்கிறா.... பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க... அப்ப நான் வரட்டுமா?’ ரோஜாவின் கையைப் பிடித்து பரிவுடன் அழுத்திவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் வான்மதியின் தாயார் பார்வதி.
ரோஜா கெட்டிக்காரி! அடுத்தவங்க மனசைப் புரிஞ்சுகிட்டு. அதுக்குத் தகுந்தபடி நடந்துக்கிடற பக்குவம் இருக்கு..... அதனால் தானோ என்னவோ? யார் மனசுலேயும் சட்டுன்னு அவ ஒட்டிக்கிறா....
என்று அப்பா பரந்தாமன் அடிக்கடி அவளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்.
‘துரை எஸ்டேட்'டில் பல வருடங்களாக மேனேஜராகப் பணியாற்றி வந்தார் பரந்தாமன்.
வார விடுமுறையின் போது மட்டும்தான். ‘வீரபாண்டி’யில் உள்ள தமது குடும்பத்தைப் பார்க்க வருவார். அந்தக் காலத்து வீடு, அண்டியிருக்க நிழலைத் தந்தாலும். அவரது வருமானம் வரவுக்கும் செலவுக்கும் சரியாகத் தானிருந்தது.
"அப்பா! நான்தான் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டேனே? நல்ல சம்பளம் தானேப்பா? போதும் அப்பா! ஏகத்துக்கும் மெலிஞ்சு போயிட்டீங்கப்பா.... ஆஸ்துமா வியாதி வேற வந்துடுச்சு.
குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு ஒரு அனாதை மாதிரி.எஸ்டேட் குளிருல நீங்க கஷ்டப்படறதை என்னால தாங்கிக்க முடியலை. குடும்பத்தை நான்
பார்த்துக்கிறேன் அப்பா! அந்த வேலையை உதறிட்டு எங்களோட வந்து இருங்கப்பா..." என்று ரோஜா தனக்கு வேலை கிடைத்த நாளிலிருந்து கெஞ்சி மன்றாடிக் கொண்டு தான் இருந்தாள்.
பரந்தாமன் அசைந்து கொடுக்கவே இல்லை.
‘எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்’ என்ற நம்பிகையில் ரோஜாவும் சளைக்காமல் அவரிடம் கெஞ்சத்தான் செய்தாள்.
ஆனால்..... கடந்த மூன்று வாரங்களாக பரந்தாமன் ஏதேதோ சாக்குபோக்குகளைச் சொல்லி வார விடுமுறைக்கு வீட்டுப் பக்கம் தலைகாட்டாமல் இருந்ததும்.... மனம் தாங்க முடியாமல் அவரை நேரில் பார்த்து வரக் கிளம்பி வந்துவிட்டாள் ரோஜா.
நேரில் வந்தும் பிரயோஜனம் இல்லை. நேரம் பறந்தது தான் மிச்சம்!
தாமதமாக இரவு சூழ்ந்த பிறகு வந்து சேர்ந்தார்.
இளம்பெண்கள் இருட்டில் பிரயாணப்படுவது நல்லதல்ல என்று கூறி அவுட் ஹவுஸிலேயே தங்க வைத்து விட்டிருந்தார் பரந்தாமன்.
"உன்னோட வருங்காலம் பிரகாசமா இருக்கணும்னு தான். உன்னைப் படிக்க வச்சேன். உன்னை ‘சுமை தாங்கி'யாக்கி உன் சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறதிலே.... எனக்கும் சரி உங்கம்மா சரோஜினிக்கும் சரி..... உடன்பாடு இல்லைம்மா....
புரிஞ்சுக்க ரோஜா ! இனிமே இந்தப் பேச்சை நீ எடுக்க மாட்டேன்னு நம்பறேன்டா" என்று திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பரந்தாமன்.
2
சாலையின் இருமருங்கும் ஏலச்செடிகள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தன.
திடீர் திடீரென்று வானம் இலேசாய் பன்னீர் தெளித்தது.
ரோஜா! உனக்குத் துணையா வான்மதி இவ்ளோ தூரம் வந்திருக்கா. அவளுக்கு எஸ்டேட்டைக் கொஞ்சம் சுத்திக் காண்பிச்சுட்டு.... நிதானமா மதியத்துக்கு மேல கிளம்பலாமே? இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே?
அப்பா பரந்தாமனின் பேச்சை அவள் என்றுமே மீறியதில்லை.
சரிப்பா... உங்க இஷ்டப்படியே செய்றேன்
என்று தோழியை வெளியில் அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு, இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து கன்னங்களில் ஒத்தடம் கொடுத்தபடி. ஆர்வமாய் இயற்கையை ரசித்தவளை ஏறிட்டாள் வான்மதி.
சாலையோரமிருந்த பல மரங்களில் கொடிகள் படர்ந்து மரத்தின் பாதியை மறைத்துக் கொண்டிருந்தன.
ரோஜா ! இது என்ன செடி?
இது செடி இல்ல.... மிளகுக் கொடிங்க... கொத்துக் கொத்தாய் காய்ச்சிருக்கு பாரு.... அதான் பச்சை மிளகுங்க....
வாவ்! இன்னிக்குத் தான் முதல் முதலா இதையெல்லாம் நான் பார்க்கிறேன்....
"திராட்சை தோட்டம், தேயிலைத் தோட்டம், சலசலன்னு சப்தமிட்டுக்கிட்டே ஜதி போட்டுக்கிட்டு ஒடி வர்ற ஓடை..... இதையெல்லாம் பார்த்தா நீ இன்னும் அசந்துடுவே....
அங்கெல்லாம் போனா ரொம்ப நேரமாயிடும் தவிர.... எனக்கும் மனசே சரியில்லை மதி..."
"உங்கப்பா.... ‘இந்த எஸ்டேட் வேலையை விட முடியாது’ன்னு வைராக்கியமா இருக்காரு... அதை நெனச்சுத்தானே இவ்ளோ கவலைப்படறே?
ரிட்டையர்ட் ஆகற வயசு வந்தா.... அவங்களே வேலையை விட்டு அனுப்பிடுவாங்கல்ல? அப்புறம் என்ன?"
"அதுக்கு இன்னும் நாலஞ்சு வருஷங்கள் இருக்கே? அதுவரைக்கும் அவர் உடம்பு தாக்குப் பிடிக்குமா?ன்னு கவலையா இருக்கு. இப்பவே மூச்சிரைப்பு அதிகமா இருக்கே? அவரு வீட்டுல நிம்மதியா ஒய்வெடுத்து உடம்பை நல்லபடியா கவனிச்சுக்க மாட்டாரா?ன்னு மனசு அடிச்சுக்குது.
‘பொம்பளைப் பிள்ளைக்கு எதுக்கு படிப்பு? பத்தாம் வகுப்போட படிப்பை நிப்பாட்டி விட்டோட முடக்க வேண்டியது தானே? அடுத்தவன் வீட்டுக்கு போகப் போறவளுக்கு என்னத்துக்கு படிப்பு வேண்டிக் கிடக்காம்?’னு சொந்தபந்தங்கள் எல்லாரும் தடுத்ததை காதிலேயே போட்டுக்காம.... என்னை நல்லா படிக்க வைச்சாரு அப்பா.....
பொண்ணுங்கன்னா..... குடும்பத்தைத் தாங்க மாட்டாங்களா? எனக்கு என் குடும்பத்தைத் தாங்கணும். தங்கச்சிங்க வனிதா, அனிதாவை நல்லா படிக்க வைககனும்.
அவங்களை சீரும் சிறப்புமா கரையேத்தணும். தம்பி சூரியாவையும் நல்லா படிக்க வைச்சு நல்ல உத்தியோகத்துல உட்கார வச்சுப் பார்க்கணும்னு எனக்கு ஆசை! ஏன்?.... அது என் லட்சியம்னே சொல்லலாம்....."
உன் லட்சியம் நிறைவேற என் வாழ்த்துகள். ஆனா அது நிறைவேறும்னு உறுதியா சொல்ல முடியாதே? அதுக்கு நிறைய தடங்கல் வரலாம் இல்லையா?
"என்ன தடங்கல் வரும்னு சொல்றே? ரோஜாவின் அழகு முகம் அனிச்ச மலராய் வாடிப் போனது.
"வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்தாங்கன்னா? ஒரு வேளை நீயே காதல் வயப்படலாம். என்ன திகைச்சுப் போய் பார்க்கிறே? காதல் புனிதமானது மட்டுமில்ல புதிரானதும் கூட....!
காதல் எப்போ வரும்? எப்படி வரும்? எதுக்காக வரும்?னு
யாராலேயும் சொல்ல முடியாதே?
"இப்போதைக்கு கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம். எனக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதை முடிக்கிற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இல்லை'ன்னு பிடிவாதமா சொல்லிடுவேன்.
காதல் கத்திரிக்காய்னு