Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Ezhuthum Kavithai
Nilavu Ezhuthum Kavithai
Nilavu Ezhuthum Kavithai
Ebook104 pages53 minutes

Nilavu Ezhuthum Kavithai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan. Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Nilavu Ezhuthum Kavithai

Reviews for Nilavu Ezhuthum Kavithai

Rating: 4 out of 5 stars
4/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Ezhuthum Kavithai - GA Prabha

    http://www.pustaka.co.in

    நிலவு எழுதும் கவிதை

    Nilavau Ezhuthum Kavithai

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    இருள் கூட ஒருவித

    ஒளியை நோக்கித்தான்

    அழைத்துச் செல்கிறது

    டிகாஷன் திக்காய் இறங்கியிருந்தது.

    ‘கம்’ என்ற நறுமணம் கிச்சன் முழுதும் பரவியது. ஜன்னல் தாண்டி காற்றில் பரவியது.

    கீதா கண்களை மூடி அந்த வாசனையை அனுபவித்தாள். கொதிக்க இருந்த டிகாஷனை டம்ளரில் ஊற்றி, துளி பால் ஊற்றியதும், காஃபி வாசனை பரவியது. சர்க்கரை போடாமல் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

    ஹால் பால் வெள்ளை ஒளியில் மின்னியது. பளிச் என்று சுத்தமான எளிமையான ஹால். சோபா இல்லாமல் இரண்டு நாற்காலிகள். சின்ன டீப்பாய். டி.வி. ஸ்டேண்ட். அதன் கீழ் டி.வி.டி. பிளேயர் அதை ஆன் செய்து விஷ்ணு சகஸ்ரநாமத்தை போட்டு விட்டாள்"

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்

    சசிவர்ணம் சதுர்புஜம்

    பிரஸன்ன வதனம் தியாயேத்

    ஸர்வ விக்னோப ஸாந்தயே!

    எம்.எஸ்ஸின் குரல் கணகணவென்று ஒலிக்க ஆரம்பித்தது. கீதா வாசல் கதவை திறந்தாள். பத்தடி அகல வராண்டா. சின்ன கைப்பிடி. பால்கனி தாண்டி தூரத்தில் கோடம்பாக்கம் மேம்பாலம் தெரிந்தது. அதனருகில் சேரை போட்டு அமர்ந்தாள்.

    கீழே தெருவும், எதிர்க்கடையில் வியாபாரமும் உயிர்ப்பித்துவிட்டது. சின்னக் கடைதான். ஆனால் ஸகலமும் விற்கும். இந்தக் கடை இருப்பதால், ஜனங்கள் எதற்கும் எங்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. நேற்றே இரண்டு நாளுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வைத்து விட்டாள் கீதா.

    காஃபி முடிந்ததும் குளித்து, குக்கர் வைத்தால், கீர்த்தி பள்ளிக்கு கிளம்புவதற்குள் சாதம் ரெடியாகி விடும். கீர்த்தி கிளம்பியதும், அவளும் ரெடியாகி ஸ்கூட்டியை எடுத்தால் அரைமணி நேரத்துக்குள் தன் ‘போஜனம்’ மெஸ்ஸுக்குப் போய் விடுவாள்.

    அந்த ரோடில் நிறைய மென் பொருள் நிறுவனங்கள் இருந்தது. எல்லாருக்கும் இங்கிருந்து சாப்பாடு. மூன்று மணிக்கு காஃபி, டிபன், நாலரைக்கு வீட்டுக்கு வந்தால், மிச்ச நேரம் அவளுடையது.

    அருகில் உள்ள கோவிலில் நெய் விளக்கு போட்டுவிட்டு அம்மன் சந்நிதியை சுற்றி விட்டு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தால் கீர்த்தி வந்திருப்பாள். டிபன் செய்து, நியூஸ் பார்த்து, நெட் முன் அமர்வாள். கீர்த்தி படிப்பாள். பத்து மணிக்கு படுத்தால் அஞ்சரைக்கு விழிப்பு வரும்.

    ஆனந்தமான, அமைதியான வாழ்வு, நம்பிக்கை ஒளியாய் கீர்த்தியின் வாழ்வு.

    குட்மார்னிங் - கீர்த்தி எழுந்து வந்து கழுத்தை கட்டிக் கொண்டாள். கன்னத்தில் முத்தமிட்டாள்.

    ச்சீ. கழுதை பல் தேய்க்காம முத்தம் தரே!

    உன் வயத்துல இருந்தப்போ பல்லா தேய்ச்சேன்?

    அப்போ உன்னை தெய்வம் பாத்துண்டது

    இப்போ நீ பாத்துக்கறே, ரெண்டு பேரும் ஒண்ணுதான்

    கீதா நெகிழ்ந்தாள். மகளை இழுத்து முத்தமிட்டாள். எழுந்து உள்ளே வந்தாள்.

    ஸ்ரீராம ராம ராமேதி

    ரமே ராமே மனோரமே

    சகஸ்ரநாமம் தத்துல்யம்

    ராம நாம வராணனே!

    எம்.எஸ். குரல் தொடர்ந்து ஒலித்தது. கூடப் பாடியபடி வேலையை முடித்தாள்.

    அம்மா பிராக்ரஸில் சைன் - கீர்த்தி

    எத்தனாவது ரேங்க்?

    கீர்த்தி தயங்கினாள். அடுப்பை அணைத்துவிட்டு மகள் புறம் திரும்பினாள்.

    ம்... சொல்லு

    ...ம்...ம்... கணக்கு, பயாலஜில ஃபெயில்

    என்னடி இது? - அதிர்ந்தாள் கீதா.

    ரொம்ப சாதாரணமா சொல்றே! டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் நீ?

    என்ன பண்ணச் சொல்றே! பிளஸ்டூ போர்ஷன் எவ்வளவு டஃப் தெரியுமா? நீ வந்து படிச்சிப் பாரு

    டியூஷன் போறியே!

    அவங்க சொல்லித் தர்றது எதுவுமே புரியலை

    கீதா யோசனையோடு நின்றாள். கீர்த்தி கெஞ்சினாள்.

    அம்மா... அம்மா பிளீஸ்மா

    மகள் கெஞ்சுவதை தாயால் சகிக்க முடியவில்லை.

    சரி. கொண்டா, இது காலாண்டு அரையாண்டுல ஆல் பாஸ் வாங்கணும்

    ஃபர்ஸ்ட் ரேங்கே வாங்கறேன்

    பிராமிஸ்?

    மதர் பிராமிஸ்

    அந்த பிராமிஸ்ல மகிழ்ந்து போனாள் கீதா.

    கையெழுத்து போட்டுத் தந்தாள்.

    என் தங்க அம்மா... கட்டி முத்தமிட முத்தமிட தும்மினாள் கீர்த்தி.

    சளி பிடிச்சிருக்கு. என்ன சாப்பிட்டே?

    நேத்து ஃபிரண்ட்ஸ் கூட ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்.

    சரி. டாக்டர்கிட்ட ஒரு ஊசி போட்டுண்டு ஸ்கூலுக்கு போ

    லேட் ஆயிடும்மா - கீர்த்தி மறுத்தாள்.

    நான் வரேன் வா - ஊசி போட்டுண்டு உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு நான் மெஸ்ஸுக்குப் போறேன்."

    சின்ன ஊசியா போடச் சொல்லும்மா -கீர்த்தி கெஞ்சினாள்.

    குண்டூசில போடச் சொல்றேன் வா - மகளை டாக்டரிம் அழைத்துப் போய் ஊசி போட்டாள். டெம்பரேச்சர் 102 டிகிரி இருந்தது. இன்னைக்கு ரெஸ்ட் எடு என்று மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1