Naamirukkum Naadu
()
About this ebook
Read more from Jyothirllata Girija
The Story of Jesus Christ retold in Rhymes Rating: 0 out of 5 stars0 ratingsRamayana in Rhymes Rating: 0 out of 5 stars0 ratingsCaught In The Crossfire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naamirukkum Naadu
Reviews for Naamirukkum Naadu
0 ratings0 reviews
Book preview
Naamirukkum Naadu - Jyothirllata Girija
http://www.pustaka.co.in
நாமிருக்கும் நாடு
Naamirukkum Naadu
Author :
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For more books
http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பயங்கரக் கூச்சல்
2. என்ன நேர்ந்ததோ?
3. உறுமல் கேட்டது!
4. இருளில் வந்த பெண்மணி
5. அதிர்ச்சி
6. எதிர்பாராத சந்திப்பு
7. கைதி பரசுராமன்
8. பின்தொடர்ந்த உருவம்
9. மர்ம ஒலை
10. சுதந்திர இயக்கம்
11. விடுதலை
12. புரியாத மர்மம்
13. மூன்று விரல்கள்
14. தாடியும் மீசையும்
15. அசடு வழிந்தது
16. இரகசியத் தபால்
17. இரசமான் சேதி
18. அபாயம் நெருங்குகிறது
19. கனவா, நினைவா?
1. பயங்கரக் கூச்சல்
டிக் டிக்
என்று மிக மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்த கடிகாரத்தின் ஒசை ஒன்றுதான் அந்த அறையில் அப்போது கேட்டுக்கொண்டிருந்தது. மற்றபடி அங்கே நல்ல அமைதிதான்! அந்த அறையின் வடகிழக்கு மூலையில் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஒர் அழகிய வெள்ளிக் கட்டில் காணப் பட்டது. அதில் விரிக்கப்பட்டிருந்த பட்டு மெத் தையில் சுமார் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். இடக் கையை மடித்துத் தலையணை மாதிரி வைத்துக் கொண்டு, அதன்மேல் தன் தலையைப் பதித்த வண்ணம் அவள் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தலைமாட்டில் ஒரு தலையணை உபயோகமின்றிக் கிடந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய கடிகாரம் ‘டாண் டாண்’ என்று ஏழு தடவை அடித்துவிட்டு ஒய்ந்தது. படுத்திருந்த இளவரசி வளர்மதி பாதித் துரக்கம் கலைந்தவளாய் மறு பக்கம் திரும்பிப் படுத்தாள். கண்களை அரைகுறையாய்த் திறந்து கடிகாரத்தைப் பார்த்தாள். 'பூ! ஏழு தானா! இன்னும் ஒரு மணி நேரம் கழித்து எழலாம்!’
திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவளாய் வளர்மதி தான் படுத்துக்கொண்டிருந்த கட்டிலின் தலைமாட்டில் பொருத்தப்பட்டிருந்த கூப்பிடு மணியின் விசையை அழுத்தினாள். அறை வாசலில் தயாராய் நின்றுகொண்டிருந்த ஏவலாள் ஏழுமலை, இதோ வந்துவிட்டேன், அம்மா!
என்று தன் கட்டைத் தொண்டையில் பதில் கொடுத்துக் கொண்டே பதவிசாகத் தன் எசமானியம்மாளின் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து நின்றான். வளர்மதி ஆவ்' என்று நீளமாகக் கொட்டாவி விட்டுக் கொண்டே
காபி' என்று சொல்லும் பாவனையாக, கை விரல்கள் நான்கினை மடக்கிக்கொண்டு கட்டை விரலை மட்டும் உதட்டருகே வைத்துச் சைகை காட்டினாள். ஒவல் வேணுமா, காபியா. இல்லாது போனால் டீயா?
என்று கேட்டான் ஏழுமலை பவ்யமாக வளர்மதியின் முகம் கடுமை யாக மாறிற்று.
ஒரு நாளைப் போல இதென்ன கேள்வி? காபிதான்! பால் விடாமல் தனி டிகாக்ஷனில் நிறையச் சர்க்கரை போட்டுக் கொண்டுவா.
என்று வளர்மதி ‘வள்’ளென எரிந்து விழுந்தாள். ஏழுமலை மேலே ஏதும் பேசாமல் அங்கிருந்து ஒட்டம் பிடித்தான். சீ! இந்த அம்மாளே இப்படித்தான்! ஒரு நாள் பால் விட்டுக் காபி ஒரு நாள் பால் விடாத காபி ஒரு நாள் டீ! ஒரு நாள் ஒவல்! ஒரு நாளைக்கு ஒரு தினுசு சாப்பிடுகிறது. என்ன வேணும்? என்று கேட்டால் 'லொள் என்று குரைக்கிறது!
இரண்டே நிமிடங்களில் ஏழுமலை கண்ணாடிக் கோப்பையில் வழிய வழியக் கருநிறக் கஷயாத்துடன் வளர்மதிக்கு முன்னால் ஆஜரானான். இளவரசி அதைக் கையில் வாங்கிக் கொண்டு உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினாள். குடித்துவிட்டுத் தம்ளரை ஏழுமலை யிடம் கொடுத்தாள். ஏழுமலை சென்றதும் மறுபடியும் பொத்தென்று மெத்தையில் சாய்ந்து கண்ணை மூடினாள். தம்ளரை வைத்து விட்டுத் திரும்பிவந்த ஏழுமலை, சீ! பல்லைக்கூடத் தேய்க் காமல் எப்படித்தான் காபி குடிக்க முடிகிறதோ!' என்று மனத்துக்குள் நினைத்தபடி அருவருப்போடு முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
மணி எட்டு அடித்தது. வளர்மதி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். சோம்பல் முறித்து உடம்பைச் சுறுசுறுப்பாக்கிக்கொண்டே அவள் கட்டிலிலிருந்து குதிப்பதற்கும் அவள் தந்தை உள்ளே வருவதற்கும் சரியாயிருந்தது.
என்ன வளர்மதி! களைப்பெல்லாம் போய் விட்டதா? கால் வலி தேவலையா?
என்று பரிவுடன் விசாரித்த தந்தையை நோக்கி, ஒய்யாரமாக இளநகை புரிந்தாள் வளர்மதி, தேவலை, டாடி!
என்று பதில் சொன்னாள், ‘ஆவ்' என்று பெரிய கொட்டாவி விட்டபடி துரக்கங்கூட இன்னும் கலையவில்லை போலிருக்கிறதே! மணி எட்டுத்தானே ஆகிறது! இன்னும் கொஞ்சநேரம் கழித்து எழுவதுதானே!
என்று அரசர் சொன்னதைக் கேட்டதும் ஏழுமலை யின் உதடுகள், நாசமாய்ப்போச்சு! இன்னும் துங்குகிறதாமே!’ என்று முனகின.
இல்லை டாடி தூங்கினது போதும் நான் பல் தேய்க்கப் போகிறேன்!
பாவம் கவர்னருக்கு முன்னால் நேற்று டான்சு ஆடிய அலுப்பு இன்னும்இரண்டு நாள்களாவது இருக்கும் உனக்கு
இங்கிலீஷ் ஸ்டைலில் நீ ஆடின. ஆட்டத்தைக் கண்டு கவர்னர் எப்படிச் சொக்கிப் போனார் தெரியுமா?’ என்று அரசர் புகழ்ந்ததைக் கேட்டு வளர்மதி அகமகிழ்ந்து போனாள். ஏழுமலை அரசருக்குத் தெரியாமல், கர்மம்! கர்மம்' என்று தலையில் போட்டுக் கொண்டான். கண்ணியம் மிகுந்த இந்திய நாட்டு நடனங்களைப் பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு, அந்த மேல்நாட்டு நடனம்"கண்றாவியாகத் தோன்றியதுதான் அதற்குக் காரணம்.
கஜேந்திர மன்னருடைய மகள் இங்கிலாந்து - நாட்டு நடனங்களை நன்றாக ஆடுகிறாள் என்று கவர்னர் நான்கு பேரிடம் புகழ்ந்து சொன்னால் எனக்குத்தானே பெருமை
என்று மன்னர் கஜேந்திரன் எண்ணினார்.
அன்றிரவு. சுமார் எட்டு மணி இருக்கும். வளர்மதி தன்னறையில் படுத்துக்கொண்டிருந்தாள். வழக்கத்துக்கு மாறாக அன்று எதனாலோ அவளுக்குப் படுத்தும் தூக்கம் வரவில்லை. படுக் கையில் குப்புறப் படுத்துக் கொண்டே, அருகிலிருந்த சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்கும் எண்ணத்துடன் திரைத்துணியை விலக்கிய வளர்மதி 'வீல் என்று பயங்கரமாகக் கூச்சல் இட்டாள்!
2. என்ன நேர்ந்ததோ?
நந்தகோபால் தன் எதிரில் உட்கார்ந்து உண வருந்திக் கொண்டிருந்த பரசுராமனைக் கண் கொட்டாமல் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். "அடேயப்பா