Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Konda Nenjam
Kaadhal Konda Nenjam
Kaadhal Konda Nenjam
Ebook233 pages1 hour

Kaadhal Konda Nenjam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101500315
Kaadhal Konda Nenjam

Read more from Jyothirllata Girija

Related to Kaadhal Konda Nenjam

Related ebooks

Reviews for Kaadhal Konda Nenjam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    What a lovely story never knew this author could write such a story what a lively characters Sendhil an Kedhari no words to explain all the happenings in the flow of the story are like real hats off

Book preview

Kaadhal Konda Nenjam - Jyothirllata Girija

http://www.pustaka.co.in

காதல் கொண்ட நெஞ்சம்

Kaadhal Konda Nenjam

Author :

ஜோதிர்லதா கிரிஜா

Jyothirllata Girija

For more books

http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

1

கேதாரி நேத்தி போயிட்டு வந்தியே அந்த வேலையாவது உனக்குக் கிடைக்குமாடா?

கேதாரி தலை உயர்த்திக் கவலையும் அச்சமும் அப்பிக்கிடந்த அம்மாவின் முகத்தை ஏறிட்டான்.

கிடைக்கும்னு அவ்வளவு நிச்சயமா எப்படிம்மா சொல்ல முடியும்? போன தடைவ கூடத்தான் நம்பிக்கையோட போயிட்டு வந்தேன். என்ன ஆச்சு?

அந்தத் திருப்பதிராஜன் இந்த வேலை நிச்சயம் உனக்குத்தான்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கிறதாச் சொன்னியேடா?

அவருடைய ப்ராமிஸை நினைச்சா நம்பிக்கையாத்தாம்மா இருக்குது. ஆனா ஒண்ணும் கைக்குக்கிடைச்சு அவனது உறுதிப்பட்ற வரைக்கும் நிச்சயமாச் சொல்றதுக்கில்லை தானே?

தலைவாரிக் கொண்டிருந்த மகனுக்குப் பின்னால் நின்றிருந்த அம்மா கிருஷ்ணவேணி கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தை அப்போதுதான் நன்றாய்க் கவனித்துத் திடுக்கிட்டாள். ‘வயசுப் பையனின் கண்களுக்குக் கீழே இதென்ன கறுப்பு வளையம்? சரியாத்தூங்கிறதில்லையா இவன்?... எப்படித் தூக்கம் வரும்? திருமணத்துக்குக் காத்து நிற்கும் - அவனைக் காட்டிலும் மூன்று வயது மூத்த அக்கா செண்பகம்- படிக்காதவள்- பன்னிரெண்டாவது வகுப்பில் நிறையமதிப்பெண்களுடன் தேறிவிட்டுத் தன்னைப் போன்றே வேலை தேடிக்கொண்டிருக்கும்-தட்டெழுத்து-சுருக்கெழுத்துக் கற்றுக் கொண்டிருக்கும். அந்தக் குடும்பத்திலேயே மிக அழகான தங்கை திவ்யா முறையே பத்தாவது எட்டாவது வகுப்பபுக்களில் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு தம்பிகள் இவர்களுக்காகக் கவலைப்பட்டு உருகிக்கொண்டிருக்கும் அம்மா… குடும்பத்தை ஆதரவற்ற நிலையில் விட்டு விட்டு திடீரென்று மாரடைப்பில் செத்துப்போய் விட்ட அப்பா… இவர்களையெல்லாம் அவனால் தனது நினைப்பிலிருந்து எவ்வாறு உதற முடியும்? குடும்பத்துக்கு மூத்த மகனாய்ப் பிறப்பதுபோன்ற பாவமும் தண்டனையும் பிறிதொன்றில்லை… ஆண்டவனே! இவனுக்கும் திவ்யாவுக்கும் சீக்கிரம் ஒரு வேலை கிடைத்து விட்டால் இந்தக் குடும்பம் கடைத்தேறி விடும்-ஓரளவுக்காவது அதற்கு அருள் செய்யடா அப்பனே…"

கண்ணாடியில் தெரிந்த அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் கேதாரி திடுக்கிட்டான். எப்படி இருந்த அம்மா ஐம்பது பைசா அளவில் நெற்றியில் சிவந்தகுங்குமப்பொட்டும்-அது எப்படித்தான் அவ்வளவு துல்லியமான வட்டத்துடன் அமையுமோ- இலேசான மஞ்சள் மினுமினுக்கும் பளபளத்த முகமுமாய் அப்பா உயிருடன் இருந்த காலத்தில் வளைய வந்து கொண்டிருந்த அம்மாததான் அவள் என்பதை நம்புவதற்கே அவனுக்குக் கடினமாக இருந்தது. கணவன் செத்துப் போனதும் இந்த இந்தியப் பெண்கள் தான் எப்படி மாறிப் போய் விடுகிறார்கள்? முகத்தில் களையே அழிந்து போய் விடுகிறது. கண்களில் ஓர் ஏக்கமும் கவலையும் வருங்காலம் பற்றிய அச்சமும் கலந்த கலவையான ஓர் உணர்ச்சி எங்கிருந்தோ வந்து உட்கார்ந்து கொண்டு விடுகிறது. ஒரே ஆண்டுக்குள் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளுக்குரிய மூப்பும் உடம்பிலும் உள்ளத்திலும் வந்து ஓட்டிக்கொண்டு விடுகிறது.

கண்ணாடியை வைத்து விட்டுத் திரும்பிய அவன் கையில் கிருஷ்ணவேணி காப்பித் தம்ளரைக் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட அவன் நின்றபடி அதைப்பருகத் தொடங்கினான்.

உட்காந்து சாப்பிடப்பா. நின்னுக்கிட்டுக் குடிச்சா உடம்புல ஒட்டாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. என்றவாறு கிருஷ்ணவேணி அப்பால நகர்ந்து தன் அலுவல்களைக் கவனிக்கப் போனாள்.

…அவன் அப்பாவின் நண்பர் திருப்பதிராஜனின் வாயிலாகத் தான் முந்தயநாள் அந்த நேர்முகத் தேர்வுக்கு அவன் போய் வந்திருந்தான். ‘கதவுத் இன்டியன் ஸ்டீல் ப்ராடக்ட்ஸ்’ என்ற பெரிய கம்பெனியின் முதலாளிக்குச் சுருக்கெழுத்தாளனாகும் வாய்ப்பு அதன் திருப்பதிராஜன் சொல்லி இருந்தார். அதற்கு முன்னாலும் சில இடங்களுக்கு அவர்தாம் அவனை இட்டுச் சென்றோ பரிந்துரை செய்தோ உதவி புரிய முயன்றார். தோற்றும் போன்றே தனக்கு வேலைகிடைத்து விடும் என்ற நம்பிக்கையை அவனால் தயக்கமின்றிக் கொள்ள முடியவில்லை. குருட்டுப் போக்கில் சீட்டு எடுத்து விட்டு முடிவுக்குக் காத்திருப்பவனுக்குரிய இரண்டுங்கெட்டான் மனநிலையில் தான் அவனால் இருக்க முடிந்தது. கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் இல்லை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் கிடைக்க வேண்டும் என்ற ஆசையும் கவலையும் அளவு கடந்து இருந்தன.

அப்பா வைத்துச் சென்றிருந்த பணமெல்லாம் இந்த ஓராண்டுக்குள் கரைந்து போய் விட்டன. பெரிய குடும்பத்தினரான அவரால் சேமித்து வைக்க முடிந்த தொகை மிகச் சிறியது தான். அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மா அடிக்கடி சீக்கில் விழுந்து கொண்டிருந்ததால் அவளது மருந்துக்கும் மயக்த்துக்கும் நிறையச் செலவாகி விட்டது. அம்மா நன்றாக இருந்தால் தானே ஒரு குடும்பம் ஒழுங்காக இயங்க முடியும் என்று எண்ணிய கேதாரி நிறையங் செலவு செய்து அவளுக்கு மருத்துவம்பார்த்தாள். அம்மா தடுத்தும் கேட்கவில்லை. அப்பாவும்செத்துப் போய் விட்ட நிலையில் அம்மாவவாவது வாழ்ந்தாக வேண்டும் என்று அவன் நினைத்ததே அப்பாவின் பணத்தை அவன் தாராளமாய்ச் செலவு செய்தற்குக் காரணம்.

அம்மாவின் கழுத்துச்சகங்கில் கம்மல்கள் மூக்குத்தி ஆகியவை அடகுக் கடையில் சென்ற மாதம் வைக்கப்பட்டிருந்தன. ஒரு நல்ல வேளைகிடைத்தாலும் கூட அவற்றை மீட்பது என்பது முடியுமா என்பது தெரியவில்லை. தனக்கும் திவ்யாவுக்கும் ஒரு சேர வேலை கிடைத்தால் ஒரு வேளை வாயையும் வயிற்றையும் கட்டிக்கொஞ்சம் கொஞ்சார்ய்ச் சேமித்து அதன் மூலம் அம்மாவின் நகைகளைத் திருப்புதல் சாத்தியமாகலாம்…

வாசற்கதவு ஓசைப்பட்டது. கேதாரி சிந்தனை கலைந்து கண்களை வாசலை நோக்கிச் செலுத்தினான். திவ்யாதான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். செருப்புக்களை உதறிக் கொண்டிருந்த அவள் முகத்தில்எதையோ நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருப்பதற்கான சிறு புன்னகை தெரிந்தது. கேதாரிக்கு வியப்பு ஏற்பட்டது. ‘இத்தப் பெண்களே பெரும் புதிரப்பா. வீடு இருக்கிற இருப்பில் முகத்தில் புன்னகை எங்கிருந்து வருகிறது?’

அவன் அகன்ற கண்களால் அவளையே கவனித்துக் கொண்டிருத்தான். வழிநடையைக் கடந்ததும் அவள் வாயிலிருந்து மெல்லிய மூணுமூணுப்பாய் ஒரு சினிமாப் பாட்டு வேறு புறப்பட்டதைப் பார்த்ததும் அவனது வியப்பு அதன் எல்லையைத் தொட்டது.

என்ன திவ்யா? ஒரே குஷியில இருக்காப்போல? என்று புன்சிரிப்புடன் வினவினான்.

அவள் உடனே திடுக்கிட்டது வெளிப்படையாய் அவனுக்குத் தெரிந்தது. மனத்தின் மகிழ்ச்சி அவ்வாறு வெளிப்படையாய்த் தன் முகத்தில் தெரிந்து விட்டதையும் அதைக் கோரி புரிந்து கொண்டு விட்டதையும் அவள் விரும்பவில்லை என்பதைக் கணப்பொழுதுக்குள் இருள் படிந்தாற்போல் மாறிப்போன அவளது முகத்தோற்றத்திலிருந்து கேதாரி ஊகித்துக் கொண்டான். அவனுள் வியப்புக் கிளர்ந்தது.

திவ்யாவின் மனமகிழ்ச்சிக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

என்ன திவ்யா பதிலையே காணோம்?

ஒண்ணுமில்லையேண்ணா? எப்பவும் போலத்தானே இருக்கேன்? குறிப்பிடும்படியா எதுவுமே இல்லே…

அவள் சொன்ன பதிலில் தனக்கு நம்பிக்கை இல்லாத பார்வையைக் கேதாரி அவள் மீது நெடுமையாய்ப் பதித்து விட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான்…

முந்திய நாளின் நேர்முகத் தேர்வின் முடிவு நாளைக்குத் தெரிந்து விடும். இருந்தாலும் அதற்குப் பரிந்துரை செய்து அந்தக் கம்பெனி முதலாளியிடம் தம் வேறொரு நண்பரின் வாயிலாகத் தன்னை அனுப்பி வைத்திருந்த அப்பாவின் நண்பரை எதற்கும் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அதுதான் மரியாதை என்று எண்ணினான். அந்த மாயாதையைக் காட்டுவதால் தனக்கு ஆதாயமும் உண்டு தன்னைப் பற்றி அவருக்கு மற்றுமொரு தடைவ ஞாபகப் படுத்தினாற்போலவும் இருக்குமே. கேதாரி புதிதாய்த் தன்னுள் கிளம்பிய உற்சாகத்துடன் சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்.

அவன் அம்மாவிடம் சொல்லிக்கொள்வதற்கு அடுக்களைக்கு புகுந்த போது காப்பி குடித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் இந்தாண்ணா நீயும் ஒரு வாய் சாப்பிடேன் என்றவாறு கால் தம்ளர் அளவில் தனது காப்பியை அவனிடம் நீட்டினாள் திவ்யா அவன் வாங்கிக் குடித்தான்.

பிறகு அம்மா திருப்பதிராஜன் மாமவைப் போய்ப் பார்த்து நேத்து எனக்கு இண்டர்வ்யூ நடந்ததைப் பத்திச் சொல்லிட்டு அப்படியே வேலைக்கு மறுபடியும் தன்னோட சிநேகிதர் கிட்ட ஞாபகப் படுத்தச் சொல்லிட்டு வர்றேம்மா… என்றவாறு தம்ளரைத் தொட்டி முற்றத்தில் போட்டான்.

போய்ட்டு வாடாப்பா. இதோட எத்தினி இண்டர்வ்யூ ஆயிடிச்சு? இதுவாவது கிடைக்குதா பார்க்கலாம். நானே சொல்லணும்னு நினைச்சேன் அவரைப் போய் மறுபடியும் பாருன்னு. நீ ஒரேகளைப்பாத் தெரிஞ்சே. அதான் பேசாம இருந்துட்டேன். போய்க் கேட்டுட்டு வா…

ஆல் த பெஸ்ட் அண்ணா.

தேங்க்ஸ்! … அம்மா…ஒரு விஷயம்…

என்னடா?

திவ்யா இன்னிக்கு என்னவோ குஷியும் கும்மாளமுமா இருக்கா. ஏதோ விஷயம் இருக்கு. என்னன்னு கேளு. நான் கேட்டேன். ஒண்ணுமில்லைன்னுட்டா… என்ற கேதாரி தங்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுக் கிளம்பினான்.

என்னடி திவ்யா? உங்கண்ணன்காரன் என்னமோ சொல்றானே? என்று அம்மா வினவியதையும் அவனுக்கு வேற வேலை இல்லே. குஷியும் இல்லே கும்மாளமும் இல்லே என்று திவ்யா பதில் கூறியதையும் காதில் வாங்கியபடியே அவன் படி இறங்கிப் போனான்

பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்ற நேரத்தில் திவ்யா பொய் சொல்லியதாகத் தனக்கு நிச்சயமாய்த் தோன்றியதைப் பற்றிஅ வன் யோசித்துக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண் தனக்குத்தானே சிரித்துக் கொண்டாளாயின் அதற்கு ஒரே ஒருபொருள்தான் இருக்க முடியும் என்று அவனுக்கு நினைக்கத்தோன்றியது. அவளை விட மூன்று வயது மூத்தவனாயிற்றே. ஒரு புதிய கவலை தனக்குள் புகுந்தாற்போல் அவனுக்குத் தோன்றியது. அவளைக் காட்டிலும் வயதில் பெரிய அக்காள் ஒருத்தி திருமணத்துக்கு நிற்கையில் தங்கை காதல் என்னும் சிக்கலில் மாட்டிக்கொள்வதை அவனால் சகிக்க முடியவில்லை. பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. திவ்யா தட்டெழுத்து சுருக்கெழுத்துப் பயிற்சிப் பள்ளியிலோ அல்லது வேறு இடத்தில் சந்திக்க வாய்த்ததாலோ எவனோ ஒருவனைக் காதலிக்க முற்பட்டு விட்டாள் என்று சர்வ நிச்சயமாய்த் தோன்றிவிட்ட நிலையில் அவளைக் கண்காணிக்கவேண்டுமென்று ஒரு பொறுப்பான அண்ணன் என்ற அளவில் அவன் உடனே முடிவு செய்தான்.

அவன் யாரோ எவனோ நல்லவனோ பொல்லாதவனோ அழகும் இளமையும் நிறைந்த திவ்யாவைச் குறையாடிவிட்டுப் போய்விடக்கூடிய பொறுக்கியாக இருந்துவிட்டால் என்ன செய்வது? திவ்யாலை முட்டாள் பெண் என்றோ ஏமாந்துபோய் விடக்கூடியவள் என்றோ சொல்லமுடியாதுதான். இருந்தாலும் காதல் என்று வரும் போது எல்லாப் பெண்களும் முட்டாள்கள்ததானே காதலனை நம்பி ஏமாறுவது என்பது அவர்களின் ரத்தத்தோடு பிறக்கும் குணமில்லையோ.

சிறிது தொலைவில் இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக விரைந்து வந்துகொண்டிருக்க கிட்டப்பார்வை கொண்ட கேதாரி கண்களைச் சுருக்கிக் கொண்டு கவனித்து 25-ஆம் இலக்கமிட்ட பேருந்தில் ஏறிக்கொண்டான். கண் மருத்துவரிடம் போய்க் கண்ணாடி போட வேண்டும். கொஞ்ச நாட்களாகக் கண்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன. கண்ணாடி போட வேண்டும் என்று அவனுக்கே தோன்றியது. பணத்துக்கு எங்கே போவது? வேலை கிடைத்த பிறகுதான்…வேலை கிடைத்த பிறகு வேலை கிடைத்த பிறகு என்று எத்தனை காரியங்களுக்குப் பட்டியல் போடுவது? ஏல்லாவற்றையும் தன் சம்பளத்தால் சாதிக்கொண்டு விட முடியுமா?

டிக்கெட் வாங்கிக்கொண்டு சன்னலருகே உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கிய கேதாரி தங்கையைப் பற்றிய கவலையால் நெற்றியில் அதிகப்படியாய் ஒரு கோடு வாங்கிக்கொண்டான்…

…உடுத்துகொள்ள நல்ல உடைகள் இல்லை. எப்போதோ தைத்த உடைகள் ஓரங்கள் கிழிந்து சில இடங்களில் நார் நாராகத் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த உடைகளை அணிந்துகொண்டுதான் அவனும் நேர்முகத் தேர்வுகளுக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.

கையில் ஒரு கொடியாராம் கூடக் கட்டிக்கொள்ளாத தன்னைப் பார்த்தது "அய்யோ பாவம் இந்தப் பையன் ஏழைகளுக்குத்தான் முதலில் வேலை கொடுக்க வேண்டும். என்று மனமிரங்கித் தனக்கு வேலையைக் கொடுத்து விடுவார்கள் என்று அவன் தொடக்க காலத்தில் நினைத்து நம்பிக்கை கொண்டது உண்டு.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பல நேர்முகத் தேர்வுகளில் ஆஜரானதற்குப் பிறகு ஏழைமையின் அடிப்படையில்- அல்லது தகுதியின் அடிப்படையில்-யாருக்குமே வேலை கிடைப்பதில்லை என்ற கசப்பான உண்மையை அவன் புரிந்து கொண்டான். சிபாரிசு லஞ்சம் ஆகிய இரண்டின் அடிப்படையில்தான் இந்தக் காலத்தில் இளைஞர்கள் வேலைகளைப் பெற்றார்கள் என்பது தெரிந்தபிறகு அவனும் சிபாரிசு பிடிக்க அலையலானான். அப்பாவின் ஒரு சில அவ்வளவாகச் செல்வாக்கு இல்லாத நண்பர்களைத்தான் அவன் சிபாரிசுக்காக அடிக்கடி நாடிப் போய்க்கொண்டிருந்தான்.

கடைசியில் அவன் அப்பாவின் நண்பர் இந்த வேலை அவனுக்குக் கட்டாயம் கிடைத்து விடும் என்று சத்தியம் செய்யாத குறையாகத் தெரிவித்து விட்டார். காத்துக் கொண்டிருந்த கடமைகளைப் பற்றி நினைத்துப் பார்த்த போதே வேலை

Enjoying the preview?
Page 1 of 1