Vimala Raminiyin Short Stories
()
About this ebook
Reviews for Vimala Raminiyin Short Stories
0 ratings0 reviews
Book preview
Vimala Raminiyin Short Stories - Vimala Ramani
http://www.pustaka.co.in
விமலா ரமணியின் சிறுகதைகள்
Vimala Ramani’s Short Stories
Author:
விமலா ரமணி
Vimala Ramani
For more books
http://www.pustaka.co.in/home/author/vimala-ramani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. அதிதி தேவோ பவ
2. வசந்த மண்டபம்
3. தாயாகி வந்ததொரு தனிக் கருணை
4. மாதவனின் காதலி
5. அம்புலி காட்டி அமுதினை ஊட்டும் அன்னை
6. கண்ணாடிப் பார்வைகள்
7. ஜல கண்டம்
8. வேஷங்கள்
9. ஒரு சாதகப் பறவையின் சந்தியா ராகம்
1
அதிதி தேவோ பவ
சட சடவென்று மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. ஏதோ நினைவில் இருந்த பவானி சட்டென்று சுய உணர்வு பெற்றாள்.
வெளியில் கொடியில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன.
சட்டென்று வெளியே போய் அவசரம் அவசரமாகத் துணிகளை அள்ளிக் கொண்டு வந்து கூடத்தில் பரப்பிவைத்தாள்.
பெட்டிகளின் மீது… பரணில்… சமையல் மேடையில்… வீடு முழுவதும் ஈரத் துணிகளின் வாசனை. இவள் மனத்துள்ளும் பழைய வாசனை. ராணி மாதிரி வாழ்ந்த பவானி இவள். பிறப்பில் ஏழையாக இருந்த இவளை ஒரு பணக்கார மத்திம வயதுக்காரருக்கு இவள் தந்தை மணமுடித்துத் தந்தார்.
தாயும் இறந்து இவள் படிப்பும் தடைப்பட்டபின் கையாலாகாத தந்தையிடம் இதைவிட எதிர்பார்க்க முடியாது.
கிடைத்த வாழ்வைச் சந்தோஷமாக ஏற்றாள் பவானி. பெண் உரிமை பற்றிப் பேசத் தெரியாத காலகட்டம் அது.
ஏற்கனவே அவள் கணவர் மகாதேவனுக்கு முதல் மனைவியின் மூலம் ஒரு மகன் கேசவன் இருந்தான்
பவானிக்கும் கேசவனுக்கும் அநேகமாகச் சம வயதுதான் இருக்கும். ஆனாலும் கேசவனைத் தன் மகனாகப் பாவித்தாள் பவானி.
அவன் ஒட்டாமல் எட்டவே நின்றான்.
இவளுக்கும் ஒரு மகன் பிறந்த பிறகு அவன் விரோதம் அதிகமானது. சொத்துக்குப் பங்காளி பிறந்துவிட்டான் என்ற கோபமோ?
கேசவனுக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்வித்தாள். சுமாரான இடம்தான். அதனால் அவனுக்குக் கோபம்.
கேசவனின் ஜாதகத்தில் களத்திர தோஷம் பலமாக இருந்ததால், ஒரு இடமும் சரியாக அமையவில்லை.
ராஜி நல்ல பெண். குடும்பத்திற்குக் குத்துவிளக்கு ஏற்ற ஒரு மருமகளை அழைத்து வந்ததில் பவானிக்கு மகிழ்ச்சி.
திருமணம் நடந்து முடிந்தது. அப்போது கேசவன் படித்துக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததும் முதலிரவுக்கு நாள் பார்த்தாள் பவானி.
வீட்டை அலங்கரித்தாள். முதலிரவு அறையை இவளே அலங்கரித்தாள்.
ராஜியின் பிறந்த வீட்டில் அத்தனை வசதி போதாது என்பதால் எல்லாவற்றையும் தானே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தாள்.
விருந்தினர்களை அழைத்தாள். மணவறைக் கோலம் போட்டாள்.
அழுது கொண்டிருந்த தன் பிள்ளையைக்கூடக் கவனிக்காமல், இவள் அலைந்து கொண்டிருந்தாள்.
மருமகளுக்கு மருதோன்றி பூசினாள். கூடத்தில் பெரிதாகக் கோலமிட்டு மணமக்களை அமரச் செய்து, வெள்ளித் தட்டில் பால் அன்னமிட்டு, ராஜியின் கைகளில் பால் டம்ளரைக் கொடுத்து மணவறைக்கு அனுப்பிக் கதவு சாத்தினாள்.
மருமகள் புகுந்தவீட்டில் அடி எடுத்து வைத்துவிட்டாள். இனிக் கவலை இல்லை. ஆனால் அந்த அடி இவள் மனத்துள் விழுந்த அடி என்பது பிறகுதான் தெரிந்தது.
மறுநாள் காலை கதவு தட்டி ஆரத்தி எடுக்கப் போன பவானி அதிர்ந்தாள். கதவு திறந்திருந்தது. ராஜியைக் காணவில்லை. அவளை மட்டுமா? கேசவனையும் காணவில்லை.
ஆரத்தித் தட்டுக் கீழே விழுந்து ஆரத்தி சிதறி போட்டிருந்த கோலத்தை ரங்கோலிக் கோலமாக மாற்றிக் காட்டியது.
உறவினர் சிலர் சிரிக்க, சிலர் பரிதாபப்பட மகாதேவன் தளர்ந்து போனார். அவருக்குத் திடீரென்று நெஞ்சுவலி வர…
தன் பீரோவிலிருந்து காணாமல் போன நகைகள், ரொக்கப் பணம் இவற்றைப் பற்றி பவானி சொல்லவே இல்லை
அது மட்டுமில்லை. இரவு பால் சாதம் சாப்பிட்ட வெள்ளித் தட்டுக்களைக் கூடக்