Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anjali Ennai Kaadhali
Anjali Ennai Kaadhali
Anjali Ennai Kaadhali
Ebook130 pages1 hour

Anjali Ennai Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100800143
Anjali Ennai Kaadhali

Read more from Vimala Ramani

Related to Anjali Ennai Kaadhali

Related ebooks

Reviews for Anjali Ennai Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anjali Ennai Kaadhali - Vimala Ramani

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அஞ்சலி, என்னைக் காதலி

    Anjali, Ennai Kaadhali

    Author :

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    டாக்டர்கள் கைவிரித்துவிட்டார்கள். தலைக்கு மேல் மானிட்டர் ஓடிக்கொண்டிருந்தது. அதன் ‘பீப்பீப்’ சப்தம் ஒரே சீராக ஒலித்தது. எப்போது வேண்டுமானாலும் அந்தச் சப்தம் திடீரென்று நிற்கலாம். சின்னத்திரையில் ‘கோடு’ ஏறுவதும் இறங்குவதும்…

    உடலைச் சுற்றி பிளாஸ்டிக் குழாய்கள்… மூச்சுக்கு வாய்க்கு என்று இயற்கை இயந்திரங்கள் இயங்க செயற்கை இயந்திரங்கள் உடல் வலிமை குன்றக் குன்ற எத்தனை செயற்கைச் சாதனங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சாதனங்கள் ஒரு தற்காலத் துணை! நிரந்தரத் துணை…?

    அது ஒரு ஐ.சி.யூனிட்… நோயாளிகளைத் தவிர பாக்கி பேர்கள் உள்ளே அனுமதிக்கப்டமாட்டார்கள். தேவைப்பட்டால் கண்ணாடி கதவு திறந்து வெளியே காத்திருக்கும் உறவினர்களில் ஒருவர் உதவிக்காக அழைக்கப்படலாம். மருந்து வாங்கிவர… இல்லை டியூப் வழி ஆகாரம் தர…

    அந்தக் கண்ணாடி கதவு திறக்கும் போதெல்லாம் நெஞ்சு ‘பக்பக்’கென்று அடித்துக்கொள்ளும். நர்சு சொல்லப்போகிற செய்தி நல்லதா? கெட்டதா?

    அஞ்சலி வெளியே கனவுகளுடன் காத்திருந்தாள்.

    பலித்த கனவுகளைவிட பலிக்காத கனவுகள் பட்டியல் இவள் இதயத்தில்…

    அவர்கள் மெரீனா கடற்கரையில் அமர்ந்திருந்தனர். அவர்கள்…? அஞ்சலியும் அவள் காதலன் சித்தார்த்தும்.

    அஞ்சலி…

    உம்…

    நீ ரொம்ப அழகு… தெரியுமா?

    தெரியாது… நான் கண்ணாடி பார்க்கிறதில்லை!

    கண்ணாடி பாக்கமாட்டியா? பொய் சொல்லாதே…

    பொய்யில்லை நிஜம்… நான் என்னை அதிக நேரம் பார்த்துக் கொள்வது உங்கள் கண்களில்தான்!

    உம்… நான் கண்ணை மூடிவிட்டா?

    அபத்தமா பேசாதீங்க… கண்ணை மூடிவிட்டா இதயத்துக்குள்ளே போயிடுவேன்!

    நல்லவேளை… கண்ணீரா வெளியே வந்துடுவேன்னு சொல்லலை…

    சொல்லமாட்டேன்… ஏன்னா நீங்க ஆண்! அழமாட்டீங்கன்னு தெரியும்!

    வாவ்

    என்னாச்சு?

    என்மேல் நீ வைச்சிருக்கிற நம்பிக்கையில நெகிழ்ந்து போயிட்டேன்.

    காதல்ல நம்பிக்கைதான் அஸ்திவாரம்…

    ஆக… நீ என்னைக் காதலிக்கறே?

    சித்து! நாம காதலிக்காமலா இப்படி கடற்கரையிலே ஒண்ணா அமர்ந்திருக்கோம்?

    அதில்லைம்மா… கடற்கரையில் கடலை வாங்கிச் சாப்பிடச் கூட சிலபேர் காதலிப்பார்கள்!

    அதுக்குப் பேர் காதலா? கஷ்டம்… அது கடன்…!

    சரி அதைவிடு… இந்தச் சனி ஞாயிறு இல்லை! ஏதோ ஒருநாள். காலையிலே போயிட்டு இரவுக்குள்ளே திரும்பிடணும்…"

    ஏன்?

    விடுதி வார்டன் ரொம்ப கண்டிப்பு. இரவு வெளியே போய் தங்க அனுமதிக்க மாட்டாங்க…

    பேசாம என்னை உன்னோட பாதுகாவலர்னு சொல்லி என்னோட அத்தாட்சி கொடுதத்திருக்கலாம் இல்லை?

    கொடுத்திருக்கலாம். ஆனால் நாம காதலிக்க ஆரம்பிச்சது சமீபத்திலேதானே? அத்தாட்சி அட்டை அதுக்கு முன்னாலயே கொடுத்துட்டேனே?

    பின்னே எப்படி இப்போ வெளியே வர்றே?

    என் விடுதி தோழிங்களோட நாங்க எல்லாம் சினிமா பார்க்கப் போறோம்னு சொல்லிட்டு வந்தோம்…

    சினிமா பாக்கலியா?

    இல்லை… அவங்களை அனுப்பிட்டு நான் உங்களைப் பாக்க வந்தேன்… அவங்க வரதுக்குள்ளே நான் திரும்பணும்…

    உம்… அவங்களும் சினிமாதான் போயிருக்காங்களா? இல்லை…

    அது எனக்குத் தெரியாது… ஆனா ‘மொகப்பதேன்’ படத்துக்குப் போறதா சொல்லி நாலைஞ்சு டிக்கெட் காட்டினாங்க…

    ‘மொகப்பதேன்…’ காதல்கள்… இல்லை?

    உம்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… இதுதான் படத்தோட செய்தி.

    இல்லை… மாறி வர்ற சமுதாயத்தைப் புரிஞ்சுக்கணும்… மாற்றங்களை ஏத்துக்கணும்… இதுதான் செய்தி…

    நீங்க படம் பார்த்துட்டீங்களா?

    படம் வெளிவந்த முதல்நாள் முதல் காட்சிக்கு ஐயா ஆஜர்!

    உம்… படக்கதையைக் கேட்டேன். கல்லூரியில் படிப்போட காதலையும் ஒரு பாடம் மாதிரி வற்புறுத்தி இருக்காங்களேன்னு ஒரு சந்தேகம்…

    காதலிக்கிறது தப்பா?

    இல்லை… ஆனா படிக்கிறது கடமை!

    இப்போ நீ ரெண்டையும்தானே பண்ணிட்டு இருக்கே?

    ஆனா… கூடிய சீக்கிரம் இதை நிறுத்திடுவேன்…

    ஏய்… என்ன சொல்றே?

    அதாவது… காதலிக்கிறதை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிப்பேன்.

    யாரை?

    சித்து! வேற யாரை? உங்களைத்தான்… காதலிச்சுத் தொலைச்சுட்டேனே?

    தொலைச்சுட்டா நான் காணாமப் போயிடுவேன்… பத்திரமா உன் இதயத்துலே பூட்டி வைச்சுக்கோ…

    சித்தார்த் அவள் கைகளைப் பற்றினான்.

    அஞ்சலி சிரித்தாள்.

    ‘டக் டக்’ என்ற ‘ஷுக் கால்களின் ஓசை. காலை சுற்று. வெள்ளைச்சீருடை அணிந்த மருத்துவர்களின் பவனி. அவர்களுடன் இளம் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், நர்சு…

    வழி முழுவதும் கிடைத்த வணக்கங்களை அந்தத் தலைமை டாக்டர் தன் வெள்ளைக் கோட்டின் பெரிய பாக்கெட்டில் வாங்கிப் போட்டபடி நடந்து கொண்டிருந்தார்.

    வழக்கமான பரிச்சயமான புன்னகை.’

    ஹலோ அஞ்சலி… எப்படி இருக்கே?

    வணக்கம் டாக்டர்… நான் நல்லா இருக்கேன்.

    குட்…

    டாக்டர் அந்த ஐ.சி.யூவில் நுழைந்தார்.

    2

    ராஜன் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

    சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்… இப்போ மார்கெட் சரியில்லை. பங்கு விலை எல்லாம் இறங்கி இருக்கு. ரியல் எஸ்டேட்டும் சரியில்லை… எனக்கு ஒரு மாதம் தவணை கொடுங்க… எல்லாத்தையும் சரிபண்ணிடறேன்.

    ராஜன் செல்போனை ‘ஆப்’ செய்துவிட்டு நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.

    மறுபடியும் மறுபடியும் கடன்காரன்தான் கூப்பிடப்போகிறான்! கடவுளா கூப்பிடப்போகிறார்? புதையலைக்

    Enjoying the preview?
    Page 1 of 1