Kaadhal Thoranangal Katti
()
About this ebook
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Read more from Vimala Ramani
Kannalaney Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsJatayu Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNee Varuvaiyana Ninaithirunthean Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsKallichedi Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsUravukku Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsAattru Manal Pathaiyil Rating: 0 out of 5 stars0 ratingsKannukkul Unnai Vaithen Kannamma...! Rating: 0 out of 5 stars0 ratingsMaathru Roobena Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsHello Mister Kaadhala! Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Asthamanam Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsUn Parvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnubavam Pazhamai Rating: 0 out of 5 stars0 ratingsDeluxe Kanavugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Thoranangal Katti
Related ebooks
Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Oru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Anantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsVanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Nee Pogum Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal Thoranangal Katti
0 ratings0 reviews
Book preview
Kaadhal Thoranangal Katti - Vimala Ramani
http://www.pustaka.co.in
காதல் தோரணங்கள் கட்டி
Kaadhal Thoranangal Katti
Author :
விமலா ரமணி
Vimala Ramani
For more books
https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
திருவே நினைக்காதல் கொண்டேன்
அன்றையப் பொழுது விடிந்தபோது சத்தியநாதனுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தினம் தினம் விடிகிற காலைபொழுதுதான். இன்று என்னமோ இந்தப்பொழுது அவனுள் பல புதிய செய்திகளைக் காதோடு பேசியபடி விடிந்தது.
காதோடு, கருத்தோடு, எண்ணத்தோடு புதிய வண்ணத்தோடு விடிந்த இந்தப் புலரும் பொழுதில்… திடீரென்று நினைவுக்கு வந்தது.
‘அம்மா காந்திமதி காதுத் தோட்டில் எண்ணெய் இறங்கிவிட்டது. அதைப் பிரித்துக்காட்ட வேண்டும் என்றாளே!’
‘தோடுடைய செவியோன்’ – என்பது போல் இவன் எண்ணங்களில் ‘தோடு’ வந்ததில் இவனுக்கு பிரச்சினை நினைவுக்கு வந்தது.
‘அம்மா…’ இன்று நான் ‘இன்டர்வ்யூவுக்குப் போக போகிறேன். அனேகமாய் இந்த வேலை நிச்சயம். ஏனெனில் அந்தக் கம்பெனிக்குத் தெரிந்த ஒரு முக்கியமான நபருக்குச் சொல்லி இருக்கிறேன். அதோடு பணமும்… என்ன இம்சை இது? இந்தத் ‘தோடு’ விடாது போலிருக்கிறதே?’
இந்த ‘இன்டர்வியூ’ என்பது இவன் முந்தி மாதிரிப்போன ‘இன்டர்வியூ’க்கள் போல அல்ல! இந்த ‘இன்டர்வ்யூ’ – என்பது ஒரு கண்துடைப்பு! இவனைப் பொறுத்தவரை வேலைக்கான ‘ஆர்டர்’ தயாராய்க் காத்திருக்கும்!
வேராக இருந்து மண்ணுக்குள் இருந்த இவனை மலரச் செய்தவள் இவள் தாய் காந்திமதி.
அவள் உடம்பில் காந்தி, உழைத்து உழைத்து ஒளி தேய்ந்துவிட்டது. இப்போது பெயரில் மட்டுமே காந்தி ஒட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த வேலை கிடைத்தவுடன் ஒரு நல்ல வீடாகப் பார்த்து குடி போக வேண்டும். ஒரு சந்தில் பத்துக்குப் பத்து அறையில் பத்துக் குடித்தனங்களுடன் இவனும் ஒருவனாக…
இல்லை… இவன் ஒரு சிறிய தனி வீட்டில் கூடிய சீக்கிரம் இடம் பெயர்ந்து நுழைவான்.
அதன்பின் ஒவ்வொன்றாக இவன் வாழ்வில் நுழையும்… பணம், வசதி என்று அதிர்ஷ்ட தேவதை இவனை அள்ளி முத்தமிடுவாள்! லட்சுமி இவன் வீட்டு வாசல் கதவு தட்டுவாள். ‘திர’ – என்றாள் லட்சுமி… அலைமகள் அன்புடன் வருவாள்.
திருவே உன்னைக் காதலிக்கிறேன். வா… என் வீடு தேடி வந்து… யாரோ வாசல் கதவு தட்டினார்கள்.
ஓ! இவன் நினைவுகள் திருமகளை அழைத்து வந்துவிட்டதா? ‘எண்ணங்களே ஏணிப்படிகள்’ என்று தெரியாமலா சொன்னார்கள்? இவன் உயர்ந்து உயர்ந்து ஏணியில் ஏறி… ஏறி… மேலே போய்…
இவன் வாசலை அடைவதற்குள் அம்மா கதவு திறந்துவிட்டாள். யாருடனோ பேசினாள். அம்மா வந்தாள்.
சத்யா… வந்து…
உம்… சொல்… வந்தது யார்…?
இவன் கனவுகளில் மிதந்தபடி கேள்வி கேட்டான்.
வீட்டுக்காரர் வாடகை பாக்கிக்காக வந்திருக்கிறார் சத்யா. போன மாசமே இந்த மாசம் சேர்த்துத் தரதா சொன்னேன்.
இவன் ஏணிப்படியிலிருந்து ‘சட்’டென்று இறங்கி முதல்படிக்கு வந்தான்! இவன் வாழ்வில் ஏணிப்படி என்றால் பாம்பின் தலையா? ஏணிப்படி? ஏணிப்படி என்றால் ஏற வேண்டுமோ? ஏறுவதற்கும் இறங்குவதற்கும்தான் படிகளோ? இவன் முகம் துடைத்தான்.
வந்து… வந்து அம்மா வீட்டுக்காரர்கிட்டே சொல்லு… கண்டிப்பா எனக்கு இந்த வேலை… கிடைச்சுடும். கட்டாயம் அடுத்த மாசம் வாடகைப் பணத்தை முழுசா தந்துடுவேன்… ஏன் கூட்டிக்கூட தருவேன்…
அம்மா இவனை ஒருமுறை உற்றுப்பார்த்தாள். பின் வாசலுக்குப் போனாள்.
திரும்பி வந்த அம்மாவைப் பார்த்தான் இவன். ‘ஆமாம்… அம்மா காதில் இருந்த தோடு என்னாயிற்று? எண்ணெய் எடுக்க வேண்டும் என்றாளே! தோட்டையே எடுத்துவிட்டாளா?’
அம்மா… உன்னோட காதுத்தோடு?
அம்மா சிரித்தாள். அம்மா எப்போது சிரித்தாலும், எப்படிச் சிரித்தாலும் அழகாகவே இருப்பாள்! இவனுக்குக் கிடைத்திருப்பது அம்மாவின் அழகு மட்டும்தான்! வரமாய்… தவமாய்… அவளுடைய அந்தச் சிகப்பு முகம்… என்னதான் மங்கிப் போனாலும் அந்த நிறம் அப்படியே ஒளிர்ந்தது. பஞ்சுபடிந்த பழம் சித்திரமாய்…
உனக்கு இன்டர்வியூ போகணும் இல்லே? சீக்கிரம் வா… இட்லி, சட்னி செஞ்சு வைச்சிருக்கேன்…
அது சரி… காதுத்தோடு…?
அதுதான் எண்ணெய் எடுக்கக் கொடுத்திருக்கேன்…
யார்கிட்டே?
அம்மா சிரித்தாள்.
வீட்டுக்காரர்கிட்டேதான்!
அம்மா!
ஆமாம்… சத்யா… அவுரு தங்க நகைப்பட்டறை கூட வைச்சிருக்கார்… தெரியுமா? அதான்…
இது தங்கம் பித்தளையான கதை! இவன் அங்கம் எரிந்த கதை!
‘அம்மாவின் கடைசி நகை தோடு… அதுவும் போய்விட்டதா? போன மாசம் ஒரு வளையலை விற்றுத்தான் வேலைக்கான பணத்தை ‘லஞ்சமாக’க் கொடுத்தாள். இன்று வாடகை பாக்கிக்காக அம்மாவின் தோடா?’ இப்படி இவனின் எத்தனை கடன்கள் பாக்கி?
‘இல்லை… என் எண்ணங்கள் என்னை உயர்த்தும். என் உழைப்பு என்னை மேன்மைப்படுத்தும். என் நம்பிக்கை எனக்கு உரமாகும்.
ஆனால் அதற்குள் தாயின் வாழ்க்கை சருகாகிவிடக் கூடாது!’ இவன் பேசாமல் அம்மா தந்த இட்லியை விழுங்கினான். ஏனோ நெஞ்சு அடைத்தது. காபியை குடித்தான்.
அம்மா… காபிக்கு சர்க்கரை போட மறந்துட்டியா?
‘சட்’டென்று கேட்டவன், உடனே தன் தவறை உணர்ந்து நாவைக் கடித்துக்கொண்டான்.
இவன் தாயிடம் அட்சய பாத்திரமா இருக்கிறது? இல்லை ‘ஜீபூம்பா பூதம்’ இருக்கிறதா? தீர்ந்துபோன சர்க்கரை பாட்டிலில் சர்க்கரை எப்படி வரும்?
பரவாயில்லை… சர்க்கரை குறைவா இருந்தா நல்லதுதான். ‘டயப்படீஸ்’ வராது.
இவன் எழுந்தான். தன் இயலாமைக்கு என்ன என்ன பூச்சுக்கள்! குறைகளை நிரப்ப என்ன என்ன புதுக்காரணங்கள்!
சர்க்கரை என்றால் ‘டயப்படீஸை’க் காரணமாக்கலாம்.
பட்டினி கிடந்தால், ‘டயட்டிங்’ என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பஸ்ஸுக்கு சில்லறை இல்லை என்றால் ‘பிச்சை’ என்று சொல்ல முடியுமா?
இவன் இருப்பதில் நல்லதாக ஒரு ஷர்ட் எடுத்து… அம்மா நேற்றே வெந்நீர் சொம்பில் இஸ்திரி போட்டு வைத்திருந்ததாள். அதை அணிந்து கொண்டான். நெற்றியில் திருநீறை அணிந்து கொண்டான். ஆபீஸ் இரண்டு கிலோமீட்டர் தூரம்தான். இப்போதே கிளம்பினால் பொடி நடையாக…
அம்மா இவன் முன் ஒரு சிறிய ‘பௌச்சை’ நீட்டினாள்.
இந்தா சத்யா… இதுலே சாமி உண்டியல் பணம் வைச்சிருக்கேன்… சில்லறையா இருக்கு. உனக்கு பஸ்ஸுக்கு… மத்தியானம் லஞ்சுக்கு. முதல்லே வேலையிலே சேரு… நாளையிலே இருந்து டிபன் பாக்ஸிலே உனக்கு ‘லஞ்ச்’ செய்து கொடுத்துடறேன்… என்ன?
இவன் இந்த ‘பௌச்சை’ வாய் பேசாமல் வாங்கிக்கொண்டான். தன் தாயை வணங்கினான்.
நல்லா இருப்பா… வேலையிலே கவனமா இரு. நேர்மையா இரு. எஜமானுக்கு உண்மை உள்ளவனா இரு. உன் கம்பெனிக்கு உண்மையாக பாடுபடு.
அம்மா ஆசிகளுடன், அன்புடன் அறிவுரைகளையும் கூறினாள். இவன் தன் கண்ணீர் மறைக்க முகம் திருப்பி இரண்டு முறை தைக்கப்பட்டு ‘ரீ ஸோல்’ போடப்பட்ட அந்தப் புதிய உருவம் பெற்ற செருப்பை மாட்டிக்கொண்டு படி இறங்கினான்.
இனி இவனுக்கு இறங்கு முகம் இல்லை. ஏறுமுகம்தான்! இவன் அலுவலகத்தை அடைந்தபோது இன்னமும் அலுவலகம் திறக்கப்படவில்லை. இவனைப் போலவே சிலர்… வெளியே காத்திருந்தனர்… ஷட்டரின் பூட்டு திறக்கப்பட வேண்டுமே!
அப்போது… ஒரு பெண் மொப்பட்டில் வந்து இறங்கினாள்.
இதற்குள் ஷட்டர் திறந்துவிட, அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
இவன் அங்கிருந்த ஒருவரிடம் கேட்டான்.
எம்.டி. எப்போ வருவார்?
அவர்… ஊரிலே இல்லையே…
நான்… நான் புது அப்பாயிண்மென்ட்… இன்னிக்கு வரச்சொல்லி இருந்தாங்க. என்பேர் சத்தியநாதன்…
அந்த ஆள் இதுவரை மேலும் கீழும் பார்த்தார்.
நான் இங்கே மானேஜர்… எல்லா இன்சார்ஜும் நான்தான்… உங்களுக்கு என்ன வேலைன்னு சொன்னாங்க…? எம்.டி. எங்கிட்டே எதுவும் சொல்லலை…
அசிஸ்டெண்ட் மானேஜர்ன்னு.
ஐ ஸி… இந்த வேலைக்கு வேற ஆளைப் போட்டாச்சே! அதோ… அந்தப் பெண்தான். அவங்களும் இன்னிலே இருந்ததுதான் ட்யூட்டி ஜாயின் பண்றாங்க! அவங்களைத்தான் அப்பாயிண்ட் பண்ணி இருக்கோம்.
சத்தியநாதன்… பிரமித்துப்போனான். மறுகணம்… ஆவேசத்துடன் அந்தப் பெண்ணின் சீட்டின் முன்வந்து நின்றான்.
2
தீயினிலே வளர் சோதியே.
சத்தியநாதன் பார்க்கில் அமர்ந்திருந்தான். மாலை மணி ஐந்தாகப் போகிறது. இனி கிளம்ப வேண்டியதுதான். கடந்த சில தினங்களாக நடந்து கொண்டிருக்கிற பதிவு நிகழ்ச்சி இது!
அன்றைய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான் சத்யா. தனக்கு வேலை இல்லை என்று சொன்னவுடன், தன் வேலையைப் பிடுங்கிக்கொண்ட அந்தப் பெண்மீது எரிச்சல் வந்தது. ஆத்திரமும், கோபமுமாக அவன் அவள் டேபிளின் எதிரில் போய் நின்றான்.
அவள் நிமிர்ந்தாள். அழகான முகம். அமைதியான கண்கள். இவன் ரசிக்கும் மனநிலையில் இல்லை.
யெஸ்… வாட் கேன் ஐ டூ பார் யூ?
– என்று மிக வினயமாக, அன்புடன் தன்னைத் தேடி வந்த வாடிக்கையாளர் என்று நினைத்து அவள் கேள்வி கேட்டாள்.
கோபமா இருக்கீங்க, எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஸார்… இன்னிக்குத்தான் ட்யூட்டி ஜாய்ன் பண்றேன். எங்க கம்பெனி ப்ராடக்டை பத்தி ஏதாவது குழப்பமா? எங்கிட்டே சொல்லுங்க… ஐ வில் அட்டண்ட்!
‘புஸ்’ஸென்று பாம்பு போல் சீறிய மனோ வேகம் ‘சட்’டென்று அடங்கியது.
பாவம் இந்தப் பெண்… எய்தவன் யாரோ இருக்க இவளை நொந்து என்ன பயன்? இவனிடம் பணம் வாங்கிக்கொண்டு இவனை ஏமாற்றியவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இந்தப் பெண்ணிடம் கேட்டு என்ன பயன்?
இது அவசர வாழ்க்கை. பேரம் பேசும் உலகம்.
இந்த ஓட்டப்பந்தய வாழ்வில் வேகமாக ஓடுகிறவன் முதலில் வருகிறான். அவனுக்குப் பரிசு கிடைக்கிறது.
அதிக பேரம் கொடுத்தவன் ஏலம் எடுக்கிறான்! இவன் என்றுமே பின்தங்கியவன்.
இவன் அதிர்ஷ்டத்தில் பின்தங்கியவன்.
இவன் பிறந்த நேரம்… அரசனாவதற்கு ஒரு நொடிப்பொழுதுக்கு முன்னால் பிறந்துவிட்டான்! அந்த நொடியில் இவன் நொடித்துப் போனான். வெற்றி மாலை ஏந்த வேண்டிய கரத்தில் இதழ்கள் உதிர்ந்த நார்மாலை! ஆனாலும் கையில் ஒரு மாலை!
கழுத்துக்கு தூக்குமாலையா?
இவன் இந்த வேலையைப் பற்றி கனவுகண்டுதானே இங்கே வந்தான்?
இந்தப்பெண்ணும் எத்தனையோ கனவுகளுடன் தன் முதல் நாளையப் பணியை ஆரம்பிக்கிறாள்! இவனைத் தன் கம்பெனி வாடிக்கையாளர் என்று நினைத்து வரவேற்கிறாள். இவள் கனவுகளை உடைக்கவேண்டாம். இவளாவது நிம்மதியாக இருக்கட்டும்.
இவன் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். அவளின் இனிமையான ‘ஸார் ஸார்’ என்ற குரல் இவன்கூட சில நொடிகள் வந்தன.
இனி…?
இப்போது வீட்டுக்குப் போக