Subhavin Sirukathaigal - Part 3
By Subha
()
About this ebook
Read more from Subha
Enathu Raja Sabaiyiley.. Rating: 0 out of 5 stars0 ratingsAdimai Rajyam Rating: 3 out of 5 stars3/5Devathai Vettai Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Subhavin Sirukathaigal - Part 3
Related ebooks
Kaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Pennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Koondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsAppusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnniya Mannil Sivantha Mann Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsManathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Thottam Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Nettruvarai Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Kanavum Kalyanamum Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Nilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Irave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5
Reviews for Subhavin Sirukathaigal - Part 3
0 ratings0 reviews
Book preview
Subhavin Sirukathaigal - Part 3 - Subha
http://www.pustaka.co.in
சுபாவின் சிறுகதைகள் - பாகம் 3
Subhavin Sirukadhaigal – Part 3
Author:
சுபா
Subha
For more books
http://www.pustaka.co.in/home/author/subha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இந்த நிலவுக்குக் களங்கமில்லை
2. வானவில்லுக்கு வர்ணங்கள் வேறு
3. பல்லாங்குழி
4. அலைகள் ஓய்வதில்லை
5. பலவீனம்
6. கருணை
7. எனக்கொரு நீதி
8. வெலகுங்க வெலகுங்க
9. விடியல்
10. நிழல் நர்த்தனம்
இந்த நிலவுக்குக் களங்கமில்லை
காயத்திரி அந்தக் கணத்தின் சிறு பின்னத்துக்குள் இறந்துபோனாள். ஓங்கிச் சாத்திய கதவிடுக்குக் கரப்பு போல் சப்பையாகிப் போய்த் தரையோடு நசுக்கித் தேய்க்கப்பட்டிருந்தாள். தேய்த்த ராட்சஸ சக்கரங்கள் கிரீச்சிட்டு நாலடி தள்ளி நிற்க, பாறைகள் ஏற்றிய அந்த நசுங்கிய லாரியிலிருந்து டிரைவர் வெளிப்பாய்ந்து கணத்தில் புள்ளியாகிப்போனான்.
அவளிடமிருந்து சற்றுத் தள்ளி அந்த மோட்டார் சைக்கிள் சக்கரம் குறுக்கில் கிண்ணமாய் வளைந்திருக்க, தலை தொங்கிக் கிடந்தது. பின்சக்கரம் இன்னும் உத்வேகத்துடன் சுற்றிக்கொண்டிருக்க, இன்ஜின் மட்டும் பிடிவாதமாய்ப் 'பட’ 'பட்’ 'பட’ 'பட்’ என்று வெடித்துக்கொண்டிருந்தது.
நடைபாதை மரத்தோரம் எறியப்பட்டுப் புல்வெளியில் புரண்டு கிடந்தான் பிரஸன்னா.
வேகமாய்க் கடந்த கார் ஒன்று தரையைத் தேய்த்து நின்று ரிவர்ஸில் விரைந்து வந்து நின்றது. கதவைத் திறந்துகொண்டு இரண்டு இளைஞர்கள் அவசரமாய் இறங்கினார்கள். அந்த அசாதாரண விபத்தின் அதிர்வுகள் இன்னும் அந்த அமானுஷ்ய பூமியில் எதிரொலிப்பதாய்ப் பிரமை ஏற்பட்டது. அவர்களை உடனடியாய்த் தாக்கியது காயத்திரியின் மிச்சம். குமட்டிற்று. கையில் புகைந்த சிகரெட்டைக் காலடியில் போட்டு ஒருவன் நசுக்க முயல, மற்றொருவன் கார்க் கதவில் சாய்ந்தான். கண்ணில் திடீரென இருள் புக முயன்றதும் சுதாரித்துக்கொண்டான். பயத்தில் வயிறு இன்னும் உள்ளே இழுத்துக்கொண்டது.
மை காட்
என்று அலறினான் நீலச்சட்டைக்காரன். மற்றவன் நெற்றியில் கை வைத்துக்கொண்டு 'ஐயையோ’, 'ஐயையோ’ என்று அவலமாய்க் குரல் எழுப்பினான்.
நாலே எட்டில் பிரஸன்னாவை நெருங்கித் திருப்பினார்கள். நெற்றியின் வலப்பக்கம் சிறு கற்கள் கீறியிருந்தன. வலது முழங்கையில் தோல் வழண்டு மண் அப்பியிருந்தது. அவ்வளவுதான். மூக்கில் கை வைத்தால் சீராய் மூச்சு தெரிந்தது. 'ஸார்...’ என்று தோளிலும் முகத்திலும் இரண்டு முறை தட்டியதில் சட்டென்று கண் திறந்து, உடனே நடந்ததைக் கிரகித்துப் பதறி எழுந்தான்.
காயத்ரி?
என்று தேடினான். கண்களை அலையவிட அந்த வெள்ளைப் புடவை கண்ணில்பட்டது. அவர்களிடமிருந்து திமிறி மிரண்டு சாலைக்கு ஓடிப் பிரமித்து நின்றான். வெள்ளைப் புடவை பிய்த்து இழுக்கப்பட்டுச் சிவப்பில் தோய்ந்து திட்டாய்த் தரையோடு பிசிராய் ஒட்டியிருந்தது. காயத்திரியை அடையாளம் காட்ட அவ்வளவுதான் பாக்கி..
ஸாரி, உங்க மனைவி இறந்துட்டாங்க. ப்ளடி பாஸ்டர்டஸ் இந்த லாரி டிரைவர்ஸை நிக்க வெச்சு சுடணும்.
'உங்க மனைவி!’
கேட்ட பிரஸன்னாவுக்குப் பயம், கலக்கம், குழப்பம், துக்கம், வேதனை என்று குத்தீட்டிகள் இதயத்தில் செருகின.
காயத்திரி. . . . காயத்திரி. . . . .
'உங்க மனைவி இறந்துட்டாங்க.’
பிரஸன்னா மோட்டார் சைக்கிளில் தடுக்கி விழுந்து எழுந்து அந்த வெள்ளைப் புடவையை மெல்லத் தொட்டான். சரிகை சொரசொரத்தது. சிதையாமல் தப்பிவிட்ட பாதங்களை மெல்ல வருடினான்.
அழுகை புரண்டு தொண்டைக்குள் சிக்கிற்று.
இல்லை, இது காயத்திரியில்லை. காயத்திரி இப்படிக் காற்றோடு மறைய முடியுமா?
இரண்டு நிமிடங்களுக்கு முன் அவன் தோளில் மோவாயைப் பதித்து, வலக் காது மடலை உதட்டால் உரசியவளின் ஸ்பரிசம் இன்னும் துடிப்பாய் உணர்வுகளில் சிலிர்த்துக்கொண்டிருக்கிறபோது காயத்திரி அவனைவிட்டுக் கர்ப்பூரமாய்க் கரைந்து போவது சாத்தியமா?
அந்த ஸ்பரிசத்தில் லயித்து அரைக்கணம் பாதையிலிருந்து பார்வையை விலக்கியதால்தானே அந்த அசுர லாரியின் ஆவேசக் கோணல் பாய்ச்சலைக் கவனிக்க முடியாமல் போயிற்று.
கண்கள் கனன்றன அந்த லாரியைக் கண்டு.
போலீஸுக்கு ஃபோன் பண்ணிடறோம். இந்த எடத்தில டெலிஃபோன் எதுவும் இல்ல.. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போகணும். உங்க வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கணுமா?
வேண்டாமென்று தலையை அசைத்தான்.
உங்க மனைவி இறந்து போய்ட்டதை வீட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா ஸார்?
பிரஸன்னா இன்னும் மௌனமாய் இருக்க, கணபதி, நீ இங்கயே இவருக்குத் தொணையா இரு. யாராவது வந்தா. ஏதாவது ஸோடா, கீடா கொண்டுவரச் சொல்லு. நான் வண்டி எடுத்துக்கிட்டுப் போய் ஃபோன் பண்ணிட்டு வரேன்.
கிளம்பினான். நின்றான். திரும்பினான்.
உங்க ஒய்ஃப் பத்தி யாருக்குமே தகவல் கொடுக்க வேணாமா?
போடா. அப்புறம் பாத்துக்கலாம்
என்றான் இன்னொருவன்.
மனைவி. . . .மனைவி. . . .
சடாரென்று இன்னோர் உண்மை புரிந்தது பிரஸன்னாவுக்கு. இதை காயத்திரி வீட்டுக்குத் தெரிவித்தாக வேண்டும். என்னவென்று? எப்படி? தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக்கொள்வது? காயத்திரியின் காதலன் என்றா...? அவளோடு சந்தோஷமாக இருப்பதற்காக அவர்கள் கண்களுக்கெல்லாம் எட்டாத இடத்துக்கு அவளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு போகிற வழியில் விபத்தாகி அவள் இறந்துவிட்டாள் என்றா?
காதல் என்கிற ஒற்றைச் சொல்லைக் கேட்டால்...
கொன்னுடுவார் எங்க அப்பா
என்றாள் காயத்திரி.
உன்னையா, என்னையா?
நம்ம ரெண்டு பேரையுந்தான்,
அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம் நாம?
தெரியலே...?
ம்ஹும்.
நீங்க இப்படித் தொட்டு என் கையைக் கோத்துக்கிட்டிருக்கிறது உங்க தப்பு. அத அப்ஜக்ட் பண்ணி உங்க கன்னத்தில அறையாதது என் தப்பு.
அறைஞ்சிடேன்.
அறைஞ்சா விட்டுடுவீங்களா?
'அறைஞ்ச கையை அப்படியே பொத்தி மூஞ்சியைத் திருப்பி ஒரு 'கிஸ்’ கொடுப்பேன்."
சீசீ,
ஏய் இன்னொரு தடவை 'சீ
சொல்லேன்.."
ஏன்?
"நீ ‘சீ’