Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mookkanaangayiru
Mookkanaangayiru
Mookkanaangayiru
Ebook124 pages58 minutes

Mookkanaangayiru

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101800295
Mookkanaangayiru

Read more from Sivasankari

Related to Mookkanaangayiru

Related ebooks

Reviews for Mookkanaangayiru

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    the lady charector and the men domination if women wants she can even conquor the world
    the way author discribed the sadu mirandal kadu kolladu proverb !??? what more to say

Book preview

Mookkanaangayiru - Sivasankari

http://www.pustaka.co.in

மூக்கணாங்கயிறு

Mookkanaangayiru

Author:

சிவசங்கரி

Sivasankari

For more books

http://www.pustaka.co.in/home/author/sivasankari

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

மூக்கணாங்கயிறு

1

'சளக்... சளப்... சளக்... சளப்...' என்று ஆயா வாசல் தெளிக்கும் ஓசையில் சந்திரா விழித்துக்கொண்டாள்.

இரவு நீண்ட நேரம் அவதிப்பட்டுக்கொண்டிருந்துவிட்டு, விடியும் தறுவாயில் தூங்க முயற்சித்ததன் காரணமாய், கண்ணோரங்கள் எரிந்தன.

புரண்டு எழுந்து உட்கார்ந்தவளுக்குத் தலை வலிக்கிற மாதிரி இருந்தது.

முதல் நாள் இரவு சப்தமில்லாமல் தனக்குத்தானே விசும்பியபோது ததும்பிய கண்ணீர் கோடாக வழிந்து காய்ந்திருந்ததில், கன்னம் சொரசொரத்தது.

சந்திராவுக்கு ரொம்ப அசதியாய் இருந்தது. ச்சே - என்று மனசு கசப்பாய்க் கசந்தது. அடங்கியிருந்த கண்ணீர் மீண்டும் துளிர்க்கட்டுமா என்று கேட்டது.

எழுந்து நின்று, அவிழ்ந்துபோயிருந்த புடவையை சரிபண்ணி உடுத்திக்கொள் கையில், பக்கத்துக் கடுடிலில் ஹாவென்று கை கால்களைப் பரத்திக்கொண்டு உறங்கும் புருஷன் மேல் பார்வை விழுந்து, நிலைத்தது.

விடிகாலை வெளிச்சத்தில் அந்த வெற்று மார்பும், மொசமொசத்த ரோமமும் நிழலாய்த் தெரிந்தன.

கவலையில்லாத முகம்... தான் நினைப்பதை எப்போதும் அடையமுடியும் என்ற திமிர் பிடித்த முகம்.

கலைந்திருந்த முடியும், சற்றே பிரிந்திருந்த உதடுகளும், சன்னமாய் எழும்பின குறட்டையும்...

ஒருகாலத்தில், இவர் என் கணுவர், இந்த சுந்தர புருஷர் எனக்கு மட்டுமே சொந்தமானவர் என்று உள்ளுக்குள் பூவாய்ப் பூத்து சிலிர்த்ததை இப்போது நினைக்கையில், அந்தக் கசப்பிலும் சிரிக்கத் தோன்றியது.

அழகர்தான்...

ஐம்பது வயசிலும், உயரமும் பருமனுமாய், சிவப்புத் தோலும், வாயில் சிரிப்புமாய்... பார்ப்பவர்களைச் சுண்டியிழுத்துத் தன்வயப்படுத்தும் மனிதர்தான்.

ஆனால்... இது போதுமா?

அழகு மட்டும் ஒருவருக்குப் போதுமா?

குணம்?

அடக்கம்?

பிறர் செளகரிய, அசெளகரியங்களை நினைத்துப்பார்க்கும் மனம்? எங்கே!

எப்போதும், தான்... தன் சுகம்... தன் நிம்மதி... என்ற குறிக்கோள் ஒன்றுடனேயே வாழ்பவருக்கு, குணமாவது, மனமாவது!

என்ன மனுஷர், என்ன புருஷன், என்ன வாழ்க்கை!

ஐம்பது வயசிலும் உடம்பு சுகத்துக்கு இப்படியா பறவாய்ப் பறப்பது!

நேற்றுதான் தாலி கட்டின மாதிரி, ராத்திரி ஆகிவிட்டால் உடம்பு, உடம்பு என்று இப்படியா தவியாய்த் தவிப்பது!

வேணாங்க... காய்ச்சல் வர்ற மாதிரி இருக்குங்க...

இன்னிக்கு உட்டுடுங்க... வெயில்ல உக்கார்ந்து வடகம் போட்டதுல, தலைவலி பிளக்குதுங்க...

தீட்டு வர்ற மாதிரி இடுப்பு ரொம்பக் குடையுதுங்க... வேணாங்க...

எந்தக் கெஞ்சலுக்குத்தான் பலன் இருந்திருக்கிறது!

ஒன்றுக்கும் இல்லை என்பதோடு, இன்றுவரை இந்த இருபத்தி ஐந்து வருஷங்களில் ஒருதரம், ஒரே ஒருதரம்கூட இவள் முகத்தைப் பார்த்து நடந்து கொண்டவரில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்!

சரிதான் வாடி...

ஆனாலும் ஒரு பொம்பளைக்கு இத்தனை திமிர் கூடாது... புருஷன் கூப்பிட்டா வரணும், தெரியுமா?

ஒரு ஆம்பிளையோட அருமை உனக்குப் புரியல, சந்திரா! தொத்தலா, நோஞ்சான் ஒருத்தன் புருஷனா வந்திருக்கணும்... அப்ப தெரியும் வேதனை!

வேண்டாம்...

ஆம்பிளையின் அருமை இப்படித்தான் தெரியவேண்டுமென்றால், அந்த அருமையே வேண்டாம்.

பார்வையில் ஒரு கனிவு, பேச்சில் ஒரு கரிசனம், நடத்தையில் ஓர் இதம்...?

ம்ஹூம், ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அப்புறம், புருஷன் என்ன, அருமை என்ன!

நினைத்தபோது இழுக்கவேண்டியது, முரட்டுத்தனத்துடன் பெண்டாளவேண்டியது... அப்புறம், முகத்தை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் தள்ளிவிட்டு, அப்பாடி என்று தான் பாட்டுக்கு இருக்கவேண்டியது...

இதுதான் தாம்பத்தியமா?

இது மட்டும்தானா?

என்னாயிற்று இன்று எனக்கு? இருபத்தி ஐந்து வருஷங்களாய் அனுபவித்துப் பழகி, பழசாய்ப்போன சமாச்சாரத்துக்காக, இன்று நான் ஏன் இத்தனை குமைந்து போகிறேன்?

சந்திரா பார்வையைத் திருப்பிக் கொண்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள். பல் தேய்த்து வாய் கொப்பளித்து, பச்சைத் தண்ணீரால் முகத்தை அலம்பின போது, அந்த நீரின் ஸ்பரிசம் எரிந்த கண்களுக்கு சுகத்தைத் தர, நாலைந்து கை ஜலத்தை பச்பச்சென்று முகத்தில் அறைந்துகொண்டாள்.

பேஸினுக்கு மேல் இருந்த கண்ணாடியில் முகத்தின் பிம்பம் தெரிய, வழிந்த நீரைத் துடைக்காமல் அப்படியே உற்று நோக்கினாள்.

கதுப்பாய் கன்னங்கள், குமிழாய் வாய், அழுது சிவந்திருந்தாலும் அழகை இழக்காத பெரிய கண்கள், கருத்த அடர்த்தியான கேசம். மெலிதான் கழுத்து, திட்டமான தோள்கள். ரொம்பப் பெரிசும் இல்லாமல், சிறிசும் இல்லாமல் மார்பகங்கள்...

அதற்கும் கீழே கண்ணாடியில் புலப்படாததால் அவள் தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டாள்.

பருமனில்லாத இடை, வாளிப்பான துடைகள்.

மொத்தத்தில், மூன்று குழந்தைகளைப் பெற்றுவிட்ட நாற்பத்தியிரண்டு வயசுப் பெண்மணி என்று யாரும் சட்டென்று சொல்ல முடியாத உருவம்.

என்ன உடம்பு உனக்கு, சந்திரா!

சாட்டை சாட்டையா கையும் காலும் உடம்பும்... அம்மாடீ! என்ன உடம்புடியம்மா இது!

கல்யாணமான புதிதில் ஒவ்வொரு கூடலிலும் புருஷன் இப்படி வாய்விட்டு அரற்றும் போதெல்லாம், சந்திரா பூரித்துப்போனது உண்மைதான்.

ஆனால், அப்புறம்?

தன் உடம்பு மட்டும்தான் அவர் கண்களில் தெரிகிறது, அதற்குள்ளிருக்கும் மனசு, அதன் உணர்வுகள்பற்றி லவலேசமும் கவலைப்படுவதில்லை - என்ற உண்மை புரிந்து போனதும், அந்தப் பூரிப்பும் சிலிர்ப்பும் ஓட்டமாய் ஓடித்தானே போயின!

சந்திரா அலுப்புடன் முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

சப்தமில்லாமல் படுக்கையறையை விட்டு, வெளியில் வந்து மாடிப்படிகளில் இறங்கினாள்.

ஆயா உள்ளே வருவதற்காகப் பின்கட்டுக் கதவைத் திறந்துவிட்டு, சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

காஸ் அடுப்பை ஏற்றி, பாத்திரத்தில் வெந்நீர் வைத்தாள்.

ஃபில்டரில் பொடி போட்டு, லேசாக அமுக்கி, கொதித்த வெந்நீரை ஊற்றினாள்.

ஆயா கொண்டு வந்த பால் பொட்டலங்களை வாங்கி, பிரித்து, பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள்.

குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து காய்கறித்தட்டை வெளியிலெடுத்து, சமையலுக்குத் தோதாய் என்ன காய் இருக்கிறது என்று பார்த்தாள்.

அவரைக்காயைப் பொறியலுக்கும், முருங்கைக்காயை

Enjoying the preview?
Page 1 of 1