Oru Appavum Irandu Pengalum
By Sivasankari
5/5
()
About this ebook
Read more from Sivasankari
Knit India Through Literature Volume 1 - The South Rating: 5 out of 5 stars5/5Bridges Rating: 4 out of 5 stars4/5Gods Wait To Punish Rating: 0 out of 5 stars0 ratingsThe Betrayal and Other Stories Rating: 0 out of 5 stars0 ratingsKnit India Through Literature Volume 4 - The North Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Appavum Irandu Pengalum
Reviews for Oru Appavum Irandu Pengalum
3 ratings2 reviews
- Rating: 5 out of 5 stars5/5best story of the author once again proved really thought provoking
- Rating: 5 out of 5 stars5/5Well done chandran .. good finishing .. a slap in deed to that cruel man
Book preview
Oru Appavum Irandu Pengalum - Sivasankari
http://www.pustaka.co.in
ஒரு அப்பாவும் இரண்டு பெண்களும்
Oru Appavum Irandu Pengalum
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
நாழியாகிவிட்டது... ரொம்ப நாழியாகிவிட்டது. மணி இப்போதே எட்டேகால்... இன்னும் சாதம் வடித்து, கீரை மசித்து, கையில் எடுத்துப்போக மோர்சாதம் பிசைந்து, அப்பா சாபபிட மணை எடுத்துப்போட்டு, தட்டு வைத்துவிட்டு, தலைவாரிக்கொள்ள ஓடவேண்டும்.
''கொஞ்சம் முன்னால வந்துடு, கமலா... கடை திறக்கறதுக்குள்ள முக்கியமான வேலை சிலதைக் கவனிக்கவேண்டியிருக்கு...'' என்று முதல்நாளே முதலாளி சொல்லியிருக்கிறாரே! காலாகாலத்தில் வேலைகளை முடித்துக்கொண்டு புறப்படுவோம் என்றால், அதென்ன வேலையோ அனுமார் வால் மாதிரி இழுபட்டுக்கொண்டே போகிறது.
இத்தனைக்கும் விடிகாலையில் ஐந்துக்கு எழுந்தவள், இன்னும் அப்பாடி என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அரை நிமிஷம்கூட உடுகாரவில்லை... என்னவோ சரியாக இருக்கிறது.
காபி ஆன கையோடு குளித்துவிட்டு மளமளவென்று சமையலைக் கவனிக்க உட்கார்ந்தால், ''அக்கா... கணக்குப் புரியல... சொல்லிக்குடு'' என்று ரேவதி வந்து விட்டாள்.
திண்ணையில் புகையிலையைக் குதப்பிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அப்பாவிடம் ரேவதி தன் சந்தேகத்தைக் கேட்டு, அவரும் அப்பாவாய் லட்சணமாய் பொறுப்புடன் சொல்லிக்கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும்!
அதுசரி... நடக்கப்போவதற்கு ஆசைப்பட்டாலும் பிரயோஜனம் உண்டு. ரேவதி அவரிடம் பேசவாவது, அவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதாவது! அதெல்லாம் இனி இந்த ஜன்மத்தில் ஏது?
தூங்கி எழுந்ததும், திண்ணைக்குக் காபி வரவேண்டும். அதைக் குடித்து, வெற்றிலை போட்டுக்கொண்டால், தெருவில் வருவோரையும் போவோரையும் பார்த்து, வம்புக்கிழுத்துப் பேசத்தானே அவருக்குப் பொழுது சரியாக இருக்கிறது!
கணக்குப் புஸ்தகத்தில் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே, குமுட்டியைப் பற்ற வைத்து உலையை வைத்தாள் கமலா. வாணலியில் எண்ணெய் விட்டு வத்தல் குழம்புக்குத் தாளித்தாள்.
கணக்கு புரிந்து ரேவதி அந்தப் பக்கம் போவதற்குள், நாலு தடவை அப்பா
கூப்பிட்டுவிட்டார்.
''டீ... என் மூக்குப்பொடி டப்பா எங்க?''
''டீ... வாய் கொப்பளிக்க ஜலம் கொண்டு வா!''
''டீ... என் துண்டை ஏன் இத்தன அழுக்கா துவைச்சுப் போட்டிருக்கே? சோப்புப் போட்டு கசக்கினா கொறைஞ்சுபோயிடுவியா? உன் துணிக்கெல்லாம் மட்டும்தான் சோப்பு ஒத்துக்குமா? அதென்ன இத்தனை திமிரு?''
'டீ... டீ... டீ...' தான்! அழகாய் வாய் நிறைய கமலா என்று என்றைக்குக் கூப்பிட்டிருக்கிறார், புதுசாய் இன்று அழைக்க?
ம்ஹூம்... ஒரு நாளும் இல்லை.
எதற்கும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பதில் பேசாமல், கூப்பிட்ட மறுகணமே ஓடிப்போய், கைக்கு எட்டும் தூரத்திலிருந்த பொடிடப்பியை கமலா எடுத்துக்கொடுத்தாள். வாய் கொப்பளிக்க ஜலம் கொண்டுவந்தாள். நீடுடின துண்டை வாங்கி துளி சோப்புப் போட்டு ஊறவைத்தாள்.
ஜெகதீசனைப் பார்த்தால், அறுபத்தெட்டு வயசு பூர்த்தியாகிவிட்டது என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஈர்க்குச்சி மாதிரி இறுகின தேகம். பறக்கா வெட்டித்தனத்துடன் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடும் அத்தனை சாப்பாடும், எங்குதான் போய் பதுங்கிக் கொள்ளுமோ! கிள்ள துளி சதையில்லாத மேனி... வழுக்கை விழுந்த மண்டை... சதா யாரை, எதற்காகக் குற்றம் சொல்லி தூஷிக்கலாமென்று அலையும் பார்வை. இகுப்பில் ஒரு நாலு முழம் வேஷ்டி, தோளில் கிடக்கும் துண்கு, குறுக்கே நெளியும் பூணூலைப் பிடித்து தோளை லாவகமாய் சொறியும் கைகள், ஊசியாய் வார்த்தைகளைக் கொட்டும் நாக்கு.
கமலாவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜெகதீசன் இப்படித்தான் இருக்கிறார். வேலை பார்த்த நாள்களில், நாலு முழம் வேஷ்டிக்கு மேல் ஒரு சடுடை உடம்பை அலங்கரிக்கும்... இப்போது அது இல்லை. மற்றபடி மனுஷரிடம் சொல்லும்படி மாற்றம்