Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

David Copperfield
David Copperfield
David Copperfield
Ebook340 pages4 hours

David Copperfield

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books are published.
LanguageUnknown
Release dateJun 18, 2016
ISBN6580103700496
David Copperfield

Reviews for David Copperfield

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    David Copperfield - Sivan

    http://www.pustaka.co.in

    டேவிட் காப்பர்ஃபீல்டு

    David Copperfield

    Author:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    ஓர் அறிமுகம்

    காலத்தை வென்று நிலைத்திருக்கும் ஆங்கில எழுத்தாளர்களில், தான் வாழ்ந்த காலத்திலேயே அதிகமான புகழுக்கும், பெருமைக்கும் உரியவராகத் திகழ்ந்த ஒருவர் சார்லஸ் டிக்கன்ஸ், வாசக- வாசகியரிடம் ஆவலை ஏற்படுத்தி, அதைப் படிப்படியாக வளர்த்து, வாசகர்களிடம் முழுமையான நிறைவை ஏற்படுத்தும் விஷயத்தில் இவரது அளவுக்கு வெற்றி பெற்ற எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    வுரலாற்று அறிவு வால்டர் ஸ்காட்டுக்கு அதிகமாக இருக்கலாம். நடுத்தர வர்க்கக் குடும்பம் மற்றும் உறவுகள், பெண்ணியச் சிந்தனை போன்றவை ஜேன் ஆஸ்ட்டினிடம் அதிகமாக இருக்கலாம். ஆழ்ந்த மனோவியல் நுட்பத்தை ஜார்ஜ் எலியட்டும். மேரிடித்தும் கெட்டிக்காரத்தனமாக வெளிப்படுத்தலாம். கிராமிய அழகையும், விதியின் குரூரத்தையும், மனித உணர்வு மோதல்களையும் தாமஸ் ஹார்டி அழுத்தமாக வெளிப்படுத்தலாம். ஆனால், தனது காலத்தின் லண்டன் நகரில் வசித்த ஏழை வசித்த ஏழை மக்களின் வாழ்க்கையைத் துயரச் சுவையுடன், அதே நேரம் அழகியலுடன் படைப்பதில் டிக்கன்ஸின் அளவுக்கு வெற்றி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

    ஆங்கில மொழி பேசும் மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்த எழுத்தாளர்களில் டிக்கன்ஸுக்குத் தனியிடம் உண்டு. எனவே, ஆங்கில எழுத்தாளர்கள் மத்தியில் மிக முக்கியமான ஒருவராக சார்லஸ் டிக்கன்ஸ கருதப்படுகிறார்.

    முற்றிலும் கவர்ச்சியற்றதும், வறுமை நிறைந்ததுமான ஒரு சூழலில் பிறந்த டிக்கன்ஸ், சிறு வயதில் கூலி வேலைகள் செய்ய நேர்ந்தது. இதனால் அசிங்கமான சூழ்நிலையில் மனிதனுக்கு அத்தியாவசியமான உணவோ, உடையோ போதுமான அளவுக்குக் கிடைக்காமல், உயிர் வாழ்வதற்காகக் கடுமையாக உழைக்க நேர்ந்த ஏராளமான மனிதர்களின் கதையை அவர் வாழ்க்கையிலிருந்து நேரடியாகவே வாசிக்க முடிந்தது.

    இங்கிலாந்தின் ஹாம்ஷயர் மாகாணத்தில், போர்ட்ஸ்மித் நகரில் 1812-ஆம் வருடம் டிக்கன்ஸ் பிறந்தார். 1870-ஆம் காலமானார். கப்பல் படையில் ஒரு குமாஸ்தவாகப் பணி புரிந்த ஜான் ஹஃபிம் டிக்கன்ஸும் மொத்தம் எட்டுக் குழந்தைகள். அவரின் இரண்டாவது மகன் சார்லஸ் டிக்கன்ஸ். அப்பாவின் மிகவும் குறைவான வருமானமே அந்தக் குடும்பத்தின் பொருளாதார பலம். எனவே, தன் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கக் கூட அந்த அப்பாவினால் முடிந்ததில்லை.

    தொழிற்சாலைகளில் மிகவும் குறைவான கூலிக்குக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்கிற தடைச் சட்டம் போடாத காலம் அது. எனவே, டிக்கன்ஸ், பண்டக சாலை ஒன்றில் கூலி வேலை செய்தார். ஆந்த வேலையில் டிக்கன்ஸால் நீண்ட நாட்கள் தொடர முடியவில்லை. எனவே, டிக்கன்ஸை அப்பா வேறொரு முதலாளியிடம் வேலைக்கு அனுப்பி வைத்தார். அது பெயிண்ட் தயாரிக்கும் ஒரு நிறுவனம். நரக மயமான அந்த வேலையையும் தொடர முடியாமல் டிக்கன்ஸ் அங்கிருந்தும் தப்பித்து ஓடினார். பின்னர் டிக்கன்ஸுக்குக் கிடைத்த வேலை வழக்கறிஞர் ஒருவரிடம், ஆபீஸ் பையனாக. அந்த வேலை அவருக்குப் பிடித்துப் போனது.

    அந்த இடத்தின் வேலை, அவரைப் புத்தகங்களுடன் நெருக்கம் கொள்ள வைத்தது. புத்தகங்கள் என்பவை அறிவுச் சுரங்கம் என்பது டிக்கன்ஸுக்குப் புரிந்தது அப்போதுதான். இரவில் நெடுநேரம் பெரிய பெரிய புத்தகங்களது தாள்களைப் புரட்டிப் பார்க்கும் வழக்கறிஞரின் நடவடிக்கைகளை கவனிப்பது டிக்கன்ஸுக்குச் சுவாரஸ்யம் அளித்தது.

    லண்டனின் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள நூலகத்துக்கு அந்த வழக்கறிஞர் அடிக்கடி செல்வார். அப்போது அவருடன் டிக்கன்ஸும் பெரும்பாலும் செல்வதுண்டு. புத்தகங்களுடனான தன் எஜமானனின் ஈடுபாடு, டிக்கன்ஸை வியப்பு அடைய வைத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு நடுவே உயர்ந்த இடம் பிடித்த டிக்கன்ஸின் எழுத்து ஆர்வத்துக்கு விதை தூவியது, இந்தச் சூழ்நிலைதான் எனலாம்.

    பத்தொன்பதாம் வயதில் சார்லஸ் டிக்கன்ஸ் ஷார்ட் ஹாண்ட் எனப்படும் சுருக்கெழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். இது அவரது வாழ்க்கைப் பாதை திசை மாறுவதற்கு ஒரு காரணமானது. பத்திரிகை உலகத்துடன் தொடர்பு கொள்ள அது அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பலனாக ‘மார்னிங் கிராணிக்கிள்’ என்ற பத்திரிகையில் அவருக்கு ரிப்போர்ட்டராக ஒரு வேலை கிடைத்தது. படிப்படியாக உயர்ந்து நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் குறித்து ரிப்போர்ட் செய்யும் நிலையை அடைந்தார். மட்டுமின்றி, வெவ்வேறு பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் வாய்ப்புகள் பெற்றார். எனவே, அதற்காகப் பல இடங்களுக்கும் பயணம் செய்தார். பல்வேறு வகையான மனிதர்களை சந்தித்துப் பேட்டி எடுத்தார்.

    வாழ்க்கையின் பல முகங்களையும், பல கட்டங்களையும் அதனால் அவருக்கு அறிமுகப்பட நேர்ந்தது. அவர்களுடன் நெருங்கிப் பழகவும் நேர்ந்தது. இவையெல்லாம் டிக்கன்ஸின் சித்தாந்தத்தை புரட்டிப் போட்டது. சமூகத்தின் மகிழ்ச்சியற்ற தன்மை குறித்துப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினார். சமூகம் குறித்தும் யோசிக்கத் தொடங்கினார். அவருக்கென்று வாசகர் வட்டம் உருவானது. 1836-இல் ‘பாஸின் சித்திரிப்புகள்’ என்ற புத்தகம் வெளியானது. 1836-37-இல் நகைச்சுவைத் தொடராக வெளியான ‘பிக்விக் கிளப்பின் மரண அறிக்கை’ டிக்கன்ஸ் என்ற எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதுடன் மிகுந்த புகழை அளிக்கவும் செய்தது.

    தொடர்ந்து அவரது நாவல்கள் வெளியாகத் தொடங்கின. 1838-இல் ஆலிவர் ட்விஸ்ட், 1839-இல் நிக்கலஸ் நிக்கல்பி, 1841-இல் புராதனப் பொருள் அங்காடி, 1843-இல் மாடின் சஸில்விட், 1848-இல் டாம்பியும் மகனும், 1850-இல் டேவிட் காப்பர்ஃபீல்டு, 1853-இல் ப்ளீக் ஹவுஸ், 1854-இல் துயர காலம், 1857-இல் விட்டில் டாரிட், 1859-இல் இரு நகரங்களின் கதை, 1860-61-இல் மகத்தான எதிர்ப்பார்ப்பு 1865-இல் எங்களின் பொது நண்பன், 1870-இல் முழுமை பெறாத எட்வின் டியூடின் ரகசியம் போன்ற புகழ்பெற்ற படைப்புகள் வெளியாயின. 1842-இல் அமெரிக்கன் குறிப்புகள் என்ற பயணக் கட்டுரை வெளியானது.

    1836-இல் காதரைன் ஹொகார்த்தி என்ற பெண்ணை, டிக்கன்ஸ் திருமணம் புரிந்தார். இந்தத் தம்பதிக்குப் பத்துக் குழந்தைகள் பிறந்தனர். 1858-இல் இந்தத் தம்பதி பிரிந்தனர். எல்லன் டெர்னர் என்ற நடிகையுடன் சார்லஸ் டிக்கன்ஸுக்கு ஏற்பட்ட தொடர்பே, இந்த விவகாரத்துக்குக் காரணம் எனப்படுகிறது.

    நூவலாசிரியர் என்ற முறையில் டிக்கன்ஸ் பன்முகங்கள் கொண்டவர். முதல் விஷயம் அவரின் உள்ளுணர்வு, கவனத்துக்கு உரியது. வாழ்க்கையில் துன்பத்துக்கு ஆளானவர்கள் மீது அவருக்கு இருந்த இரக்கமும், அந்தக் கஷ்டங்களை மறக்க முடியாத விதத்தில் வெளிப்படுத்திய முறையும் அற்புதமான பாணியிலானது. அநாதை இல்லங்களில் மனித வாழ்க்கை எவ்வளவு துயரகரமானது என்பதை உணர ஆலிவர் மற்றும் டிக்கின் கதையை நினைவு கூர்ந்தாலே போதும்!

    அவரது கதைக்களன்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கதைப் போக்கை ஒட்டி- அதன் விறுவிறுப்புக்காக கதாபாத்திரங்களது வர்ணனைகளைக்கூட ஒதுக்கித் தள்ளுபவர் டிக்கன்ஸ் என்றொரு குற்றச்சாட்டை விமர்சகர்கள் குறிப்பிடுவது உண்டு. அதே நேரம் பாத்திரப் படைப்பில், விசித்திரமும் விகாரமும் நிறைந்த கதை மாந்தர்களை மிகுந்த கவனத்துடன் கையாண்டவர்.

    கதாபாத்திரத்தின் ஏதாவது ஓர் இயல்பை எடுத்துக் காட்டி, அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாதபடி அமைத்து விடுவதும் டிக்கன்ஸின் தனிச்சிறப்பு எனலாம். இதனால் கதாபாத்திரங்கள் வெறும் ‘மாதிரி’களாகி, விடுகிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதே போல் கனவு மற்றும் யதார்த்தத்தை மீறிய சம்பவங்களும் இவரது கதைகளில் இடம் பிடித்து விடுகின்றன என்பதையும் மறுக்க முடியாது. இவையெல்லாம், அந்தக் கால ஆங்கில வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் மேற்கொண்ட உத்திகளாவும் இருக்கலாம்.

    சார்லஸ் டிக்கன்ஸ், குழந்தைகளுக்காகவென்று தனியாக எதையும் எழுதவில்லை. எனினும் உலக இலக்கியத்தில் ஜொலிக்கும் ஏராளமான குழந்தைக் கதாபாத்திரங்களை அவர் தமது நாவல்களின் ஊடாகப் படைத்திருக்கிறார்! அப்படிப்பட்ட நாவல்களில் ஒன்று டேவிட் காப்பர்ஃபீல்டு. இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் என்றென்றும் குழந்தைகளின் மனங்களில் இடம் பிடிக்கக்கூடியவைதான்!

    டீக்கன்ஸின் இலக்கியப் பாணியில் சிறப்பித்துக் கூறப்படும் எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நாவல், இந்த டேவிட் காப்பர்ஃபீல்டு. சுவாரஸ்யம் நிறைந்ததும்கூட.

    பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது, துவண்டு விழுந்து இறந்து போனார் சார்லஸ் டிக்கன்ஸ். அவரது கடைசி வார்த்தைகள், கண்ணைப் பறிக்கும் இந்தப் பளபளப்பிலிருந்து நான் என்றென்றைக்குமாகப் பிரிந்து செல்கிறேன்! என்பதுதான். ஆங்கிலேயர்களின் மரியாதைக்கு உரிய இறுதி ஓய்வெடுக்கும் பகுதியான ‘வெஸ்ட் மினிஸ்டர் ஆபே’ என்ற பகுதியில்தான் டிக்கன்ஸின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தோழமையுடன்

    சிவன்

    டேவிட் காப்பர்ஃபீல்டு

    1

    என் பெயர் டேவிட் காப்பர்ஃபீல்டு. ஒரு வெள்ளிக் கிழமையன்று நள்ளிரவில் நான் பிறந்தேன். தேவாலயத்தில் பன்னிரண்டு மணி அடித்தபோது, நான் பிறந்து அழத் தொடங்கினேனாம்.

    ஏதிர்காலத்தைத் தீர்க்கதரிசனமாகக் கூற முடிந்த ஞானிகளைப் போன்ற வயதான பெண்மணிகள், எங்களது வீட்டுக்கு அருகில் இருந்தனர். நான் பிறந்த நேரத்தின் சில சூசகங்களை அடிப்படையாக வைத்து அவர்கள் கூறியது, நான் துரதிர்ஷ்டசாலியான ஒருவனாக விளங்குவேன் என்பதுதான். ஜின்னுகள் மற்றும் கெட்ட ஆவிகளுடன் நான் உழல வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். ஆனால், இது என்னுடையது மட்டுமான சிறப்புத் தன்மை அல்ல் பூமியில் அந்த நேரத்தில் பிறந்த எல்லோரது நிலைமையும் இதுதானாம்!

    நான் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே என் அப்பா இறந்துவிட்டார். ஆவரை அடக்கம் செய்தது, பிளண்டர் ஸ்டோனில் உள்ள எங்களது கிராம தேவாலயத்தின் கல்லறையில்தான். வீட்டுக்குள் உட்கார்ந்திருந்தால் திறந்து கிடக்கும் ஜன்னல் வழியாகப் பார்க்கக்கூடிய தொலைவில் இருந்தது அந்தக் கல்லறைப் பகுதி. எனக்கு விவரம் தெரியத் தொடங்கிய போதிலிருந்து தினந்தோறும் அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு அந்தக் கல்லறைக்குச் செல்வாள். வெள்ளை நிறம் உள்ள அவரது, கல்லறையைப் பார்த்து நான் வருத்தத்துடன் தேம்பி அழுவேன் என்பதுதான் எனது நினைவு. அப்பா இறந்தால் ஏற்பட்ட துயரத்தைவிட, இரவு நேரத்தில் எவரது துணையுமின்றித் தனிமையில் அப்பா அதற்குள் வசிக்கிறாரே என்ற கவலைதான் என்னை அழ வைத்தது!

    என் அம்மாவின் பெயர் கிளாரா. அப்பாவின் பெயர் காப்பர் ஃபீல்டு. எங்களது குல வழக்கப்படி, திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெயரையும் சேர்த்துதான் மனைவியை அழைப்பார்கள். அப்படி என் அம்மாவின் பெயர் ‘கிளாரா காப்பர் ஃபீல்டு’ ஆனது.

    நானும் அம்மாவும் மட்டுமுள்ள சிறிய குடும்பத்துக்குத் துணையாகவும், வேலைக்காரியாகவும் மற்றொரு பெண்மணி இருந்தாள். அன்பு நிறைந்தவள். அம்மாவுக்கும் என்ககுமாகத் தனது வாழ்க்கையே அர்ப்பணித்தவள். நம்பிக்கைக்கு உரியவள். கடலோரக் கிராமமான யார்மௌத்தில் இருந்தது கிளாரா பெகோட்டின் வீடு. அவளது வீட்டார் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தனர்.

    எங்கள் குடும்பத்தின் பெயர் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யோக்கியதை வாய்ந்த மற்றொருவர் என் அப்பாவின் அத்தை. அவர் பெயர் மிஸ் பெஸ்டி டிரோட்வுட். கெட்டிக்காரத்தனமும் தைரியமும் வாய்ந்தவர். ஆப்பா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம் அவர். ஆனால், கடுமையான முன்கோபமும், பிடிவாதமும் கொண்டவர் அவர் என்பதை பெகோட்டி மூலம் நான் அறிந்தேன்.

    அப்பாவை நல்லபடியாக கவனித்துக் கொண்டவர் அந்த அத்தைதான். அப்பாவுக்குத் தேவையானதை எல்லாம் ஆர்வமுடன் செய்வாராம். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாவுடன் அவர் சண்டை போட்டார். அது, அப்பாவின் திருமணப் பேச்சு நடைபெற்ற வேளை.

    அப்பா, தன் மனைவியாக என் அம்மாவைத் தீர்மானித்தார். ஆனால், அவர் அத்தையோ, அந்த உறவை விரும்பவில்லை. அப்படி அவர் விரும்பாமல் போனதற்கு அவருக்கே உரிய சில நியாயங்கள் இருந்தன. அதில் மிக முக்கியமானது, அம்மாவின் சிறு வயது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே பெரிய அளவில் வயது வித்தியாசம் இருந்தது. அப்பாவின் வயதில் பாதிகூட ஆகவில்லையாம் அம்மாவுக்கு. மனைவி என்பதைவிட, மகள் என்று கருதும் வயதும் தோற்றமும், மேலும் சில காரணங்களும் இருந்தன. ‘கெட்டிக்காரத்தனம் போதாது. வீட்டை கவனித்துக் கொள்ளத் தெரியாது. சஞ்சல மனம் கொண்டவள். அழகிதான். ஆனால், காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டுள்ள மெழுகு பொம்மை மாதிரியானவள்.’

    இந்தக் காரணங்களால் அந்தத் திருமணம் வேண்டாம் என்று அத்தை, அப்பாவிடம் கூறினார். அப்பா, அதைப் பொருட்படுத்தவில்லை. ‘கிளாராவை மட்டுமே திருமணம் புரிவேன்!’ என்று உறுதியாகக் கூறி விட்டார்.

    அப்படியானால், நீ உனது விருப்பப்படி நடந்து கொள்! என்று சொல்லி கல்யாணத்துக்கு முன்னாலேயே அத்தை, தன் மருமகனை ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. கடற்கரையை ஒட்டியுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர் அதில் வசிக்கிறார்.

    எனவே, என் அம்மா, அப்பாவின் அத்தையைப் பார்த்தது கூட இல்லை!

    அந்த வெள்ளிக் கிழமையன்று ஏறத்தாழ மாலை நேரத்தில், நான் பிறப்பதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னால் வெளியே காற்று கடுமையாக வீசியது. எனவே, கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உட்புறம் தாழிட்ட பிறகு குளிர் காய்வதற்காகக் கணப்பு அடுப்பின் அருகே அமர்ந்திருந்தாள் அப்பாவியான என் அம்மா. துயரம் அம்மாவை வாட்டியது. சொந்தக் குழந்தையை ஒரு தடைவ பார்க்க்ககூட விடாமல் விதி கவர்ந்து சென்று விட்ட கணவனை நினைத்தும், தனது அநாதரவான நிலையை நினைத்தும் அம்மா கவலைப்பட்டாள். கர்ப்பிணியான நிலையும், உடல்நிலக் குறைவும் அம்மாவை மிகுந்த சோர்வுக்கு உள்ளாக்கி இருந்தன.

    அப்போது பெண்மணி ஒருவர் வீட்டை நோக்கி நடந்து வருவதை அம்மா கவனித்தாள். அவர் கையில் பை ஒன்று இருந்தது. தலையில் அடுக்கடுக்கான சுருக்கங்கள் கொண்ட சுருக்குத் தொப்பி அணிந்திருந்தார். வீட்டை நெருங்கிய முன்பின் அறிமுகமில்லாத அந்தப் பெண்மணி, வராந்தாவை அடைந்து, ஜன்னலின் கண்ணாடிப் பரப்பில் மூக்கைப் பதித்தபடி உட்புறமாக உற்றுப் பார்த்தார்.

    அந்தப் பெண்மணியின் நடையுடை பாவனைகளும், நடவடிக்கைகளும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ‘பழக்கமானவர்களாகவோ, வரவேண்டியவர்களாகவோ இருந்தால் நேராக வாசல் வழியாக வருவார்களே!’ என்று அம்மா நினைத்தாள். அப்படியும் கதவைத் திறக்க அம்மா எழுந்து போயிருப்பாள். ஆனால், கடுமையான களைப்புடன் அவர் அடிவயிறு வலித்தது.

    ஆனால், வந்திருப்பவர் அம்மாவை அப்படியே விட்டு வைப்பவராகத் தெரியவில்லை. கைப்பையுடன் வாசல் பக்கமாக நகர்ந்தவர், கதவை வலுவாகத் தட்டத் தொடங்கினார். எழுந்து கதவைத் திறப்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு வழி இல்லை. அம்மா எழுந்து சென்று தாழ்ப்பாளைத் திறந்தாள்.

    கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த அவர் கேட்டார்.

    மிசஸ் காப்பர்ஃபீல்டுதானே?

    ஆமாம் மேடம்… கிளாரா காப்பர்ஃபீல்டு.

    நான் யாரென்று தெரிகிறதா?

    மன்னிக்க வேண்டும்… தெரியவில்லை!

    தெரியவில்லை என்பது தனக்கு விளங்கியது என்ற அவர் தொடர்ந்தார். தெரிந்திருந்தால், உடனே எழுந்து வந்து கதவைத் திறந்து என்னை வரவேற்றிருப்பாய் அப்படித்தானே?

    அம்மா திருதிருவென்று விழித்தாளே தவிர, பதில் எதுவும் பேசவில்லை.

    எனவே, வந்தவர் சுயமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    என் பெயர் மிஸ் பெஸ்டி. பெஸ்டி டிரோட்வுட். உன் கணவரின் அத்தை!

    வந்தவர் யார் என்று விளங்கியதும் அம்மா வாய்விட்டு அழுதாள். பிறகு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அத்தையை சோபாவுக்கு அழைத்துச் சென்றாள்.

    அம்மா சோர்வில் வெளிறி இருந்தது கண்டு மிஸ் பெஸ்டி கருணையுடன் விசாரித்தார்.

    நீ சரியாகச் சாப்பிடுவதில்லையா?

    சாப்பாட்டுக்கு எதுவும் குறை இல்லை. பெகோட்டி எல்லாவற்றையும் முறையாகவும், ருசியாகவும் சமைக்கிறாள்.

    இருந்தும் நீ மிகவும் இளைத்துப் போயிருக்கிறாயே கிளாரா… ஏன் அப்படி?

    அம்மா பதில் எதுவும் சொல்லாமல் அழத் தொடங்கினாள். அழும் அம்மாவையே சற்று நேரம் ஊன்றிப் பார்த்த அவர், அம்மாவுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வார்த்தைகளை வெளியிட்டார்.

    ஓர் அம்மாவாகப் போகும் நீ. இப்போதும் சின்னப் பெண்ணாகவே இருக்கிறாய்!

    இதைக் கேட்டு அம்மா பயந்தாள். ‘தன்னைத் திருமணம் செய்து கொள்வதில் இருந்து, அப்பாவை அவர் தடுத்த காரணமே இது தானே?’ என்று நினைவு கூர்ந்தாள். ஆனால், அது தேவையற்ற பயமாக இருந்தது. தன் மருமகனைப் பற்றிய பழைய அபிப்பிராயமல்ல இப்போது அவருக்கு. இதை நிரூபிக்கும் விதமாக அவரைப் பற்றி நல்ல விதமாகவே பேசத் தொடங்கினார். ஆனால், அது வெகுநேரம் நிடிக்கவில்லை. அதன்பின் அம்மாவை வருத்தப்பட வைக்கும் தேவையற்ற கேள்விகள் சிலவற்றை அவர் கேட்கத் தொடங்கினார்.

    திருமணம் செய்வதற்கு முன்னால், கிளாரா ஓர் அநாதைதான்… இல்லையா?

    ஆமாம் அத்தை!

    எப்படி வாழ்ந்தாய்?

    மேன்மையான ஒரு குடும்பத்தாருடன்.

    அவர்களில் ஒருத்தி என்ற முறையிலா?

    இல்லை.

    பிறகு?

    வீட்டு வேலை செய்தேன்.

    அதுதான் என்ன வேலை?

    குழந்தைகளை கவனித்துக் கொண்டேன்.

    சமையல் வேலை செய்யவில்லையா?

    இல்லை.

    ஏன் அப்படி?

    எனக்கு சமையல் தெரியாது.

    வீட்டைப் பராமரிக்கவும் தெரியாது… அப்படித்தானே?

    உண்மைதான் அத்தை!

    என் மருமகன் காப்பர்ஃபீல்டு உனக்கு அறிமுகமானது அங்குதான் இல்லையா?

    ஆமாம்! என்று அம்மா அழுதவாறே பதிலளித்தாள்.

    அழும் அம்மாவுக்கு ஆறுதல் அளிப்பது போல் அவர் பேசினார்.

    கிளாரா, உன்னை வேதனைப்படுத்துவதற்காக நான் இவ்வளவையும் கேட்கவில்லை என் மன ஆறுதலுக்காகத்தான். உள்ளதை உள்ளபடி மனந்திறந்து கூறினால், நான் உன்னை நேசிப்பேன். பொய் சொன்னால் வெறுக்கவும் செய்வேன். அதுதான் எனது இயல்பு. பொய் சொல்பவர்களையும், மோசமான வயதானவர்களையும், ஆண்களையும் நான் வெறுக்கிறேன். அதனால்தான் நீ பெண்ணை விரும்ப வேண்டும் என்பதிலும், மகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலும் இந்த மிஸ் பெஸ்டி கண்டிப்பாக இருக்கிறாள். நான் இன்னும் சில விஷயங்களை உன்னிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கேட்கட்டுமா?

    அம்மா பதிலளிக்கவில்லை.

    கேட்டால்… உண்மை சொல்வாயா?

    தான் அநாதையான போதிலும் ஒருபோதும் பொய் பேசியது இல்லை என்று அம்மா, அத்தையிடம் கூறினாள்.

    அப்படியென்றால் இந்தக் கேள்விகளுக்கும் நீ சரியான பதில் சொல்!

    நீங்கள் இருவரும் அன்பாகக் குடும்பம் நடத்தினீர்களா?

    நிச்சயமாக அப்படித்தான்.

    சண்டை போட்டிருக்கிறீர்களா?

    இல்லை.

    ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன் மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்யுமாறு என் மருமகன், உன்னை வற்புறுத்தியிருக்கிறானா?

    குரூரமானதும் உள்ளர்த்தம் நிறைந்ததுமான இந்தக் கேள்வியைக் கேட்டு அம்மா இடைவிடாமல் அழுது அழுது சோர்வு அடைந்தாள்.

    ‘இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது!’ என்று அத்தைக்கு தோன்றியது. எனவே, மேற்கொண்டு கேள்விகள் கேட்டு என் அம்மாவை அவர் தொல்லைப்படுத்தவில்லை. அழுது சோர்ந்த அம்மாவிடம் அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூறினார். கண்டபடி கலைந்து கிடந்த அம்மாவின் அழகான சுருள் முடியை, ஒரு குழந்தைக்குச் செய்வதைப் போல் வாரினார். கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர்க் கால்வாய்களைத் தனது, துவாலையால் துடைத்தார்.

    பிறகு சமையற்கட்டைப் பற்றி விசாரித்தார்.

    உதவிக்கு யாரும் இல்லையா?

    இருக்கிறார்கள் அத்தை.

    அப்படியானால், ஆள் எங்கே?

    அத்தையின் விசாரிப்பைக் கேட்டதும் அதுவரை கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றிருந்த பெகோட்டி முன்புறம் வந்தாள்.

    நீதான் இவளுக்க சமையல்காரியா? அத்தை கடுமையான தொனியில் கேட்டார்.

    ஆமாம் மேடம்.

    நீ இவ்வளவு நேரமும் அங்கு என்ன செய்தாய்?

    சமையல் செய்து கொண்டிருந்தேன் மேடம்.

    உன் பேர் என்ன?

    பெகோட்டி.

    இவளுக்குக் கொஞ்சம் தேநீர் போட்டுத் தரக் கூடாதா நீ?

    உடனே சமையற்கட்டை நோக்கி ஓடிய பெகோட்டி, அடுத்த சில நிமிடங்களில் கொதிக்கும் தேநீருடன் திரும்பி வந்தாள். இருவருக்கும் தேநீர் வழங்கினாள்.

    தேநீரைச் சுவைத்துக் கொண்டே, அமைதியான சூழ்நிலையில் அத்தை மறுபடியும் அம்மாவிடம் குசலம் விசாரிக்கத் தொடங்கினார். பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய கேள்விகள்.

    பெண் குழந்தையாக இருக்கும். இல்லையா கிளாரா?

    அம்மா பதில் சொல்லவில்லை. வெட்கமடைந்தவள் போல் முகம் தாழ்த்தினாள்.

    அம்மாவிடமிருந்து எப்படியும் பதிலை வரவழைப்பது என்று முடிவு செய்த அத்தை, பேச்சைத் தொடர்ந்தார்.

    என்ன, பெண்ணே, பேசாமல் இருக்கிறாய்? குழந்தை பெண்தானே?

    எனக்குத் தெரியாது அத்தை. கடவுள் என்ன நினைக்கிறாரோ… அது நடக்கும்!

    இருந்தாலும் நீ, உனது ஆசையைச் சொல்லக் கூடாதா என்ன?

    ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை! அம்மா, களங்கமற்றவளாக பதில் அளித்தாள்.

    ஆதைக் கேட்ட அத்தை எரிச்சலுடன் பேசத் தொடங்கினார். "கண்டபடி அதையும் இதையும் பேசக் கூடாது. உனது ஆசை பலிக்காது! என் மனம் அப்படித்தான் சொல்கிறது. உன் வயிற்றில் உள்ளது பெண் குழந்தை.

    Enjoying the preview?
    Page 1 of 1