Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Casterbridge Nagara Mayor
Casterbridge Nagara Mayor
Casterbridge Nagara Mayor
Ebook310 pages2 hours

Casterbridge Nagara Mayor

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580103700503
Casterbridge Nagara Mayor

Read more from Sivan

Related to Casterbridge Nagara Mayor

Related ebooks

Reviews for Casterbridge Nagara Mayor

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Casterbridge Nagara Mayor - Sivan

    http://www.pustaka.co.in

    காஸ்ட்டர்பிரிட்ஜ் நகர மேயர்

    Casterbridge Nagara Mayor

    Author:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    ஓர் அறிமுகம்

    மகத்தான புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தாமஸ் ஹார்டி (1840-1928). நாவல் என்ற இலக்கியப் பிரிவுக்கு யவனர்களின்-கிரேக்கர்களின் சோக நாடகத்தின் பொன்னாடையைப் போர்த்திய அபூர்வமான கதாசிரியர்களில் முதன்மையானவரும் கூட!

    1840- ஆம் வருடம் டோர்ஸெட்ஷயர் பகுதியில் உள்ள டோர்செஸ்டர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஹார்டி. வெசக்ஸ் பகுதியில் எத்தனையோ தலைமுறைகளாக மாற்றமின்றி கிராம விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வந்த மக்களைத்தான் ஹார்டி தனது பெரும்பான்மையான நாவல்களில் சித்திரித்துள்ளார். அவர் ஒரு கட்டடக் கலை வல்லுநரும் கூட. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் வலுப்பெற்று வந்த பொருள் முதல் வாதத்தின் வளர்ச்சியில் ஆறுதல் கண்டடைய முடியாமல், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும் விட்டுவிட்ட இரண்டு மனம் கொண்டவராக இருந்தார் ஹார்டி. கடந்த காலத்தின் எளிமையும், கவர்ச்சிகரமான உணர்வுகளும் அவரைப் பெருமளவு கவர்ந்திருந்தன. வால்ட்டர் ஸ்காட்டின் பாணிபோல் ஹார்டியின் கற்பனையும் குடும்பப் பின்னணியில், குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தின் உள்ளொளியை வெளிப்படுத்தும் விதத்தில் நாவல் என்ற கதை வடிவத்தை ஒரே நேரத்தில் வலிமை வாய்ந்ததாகவும் மென்மை வாய்ந்ததுமாக மாற்றியது.

    1871-ஆம் ஆண்டில்தான் ஹார்டியின் முதல் படைப்பான ‘டெஸ்பரேட் ரெமெடீஸ்’ வெளியானது. தொடர்ந்து அண்டர் தி கிரீன் உட் ட்ரீ (1872), தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ் (1878), தி டிரம்ப்பட் மேஜர் (1880), தி மேயர் ஆஃப் காஸ்ட்டர்பிரிட்ஜ் (1886), தி உட்லாண்டஸ் (1887), டெஸ் ஆஃப் தி டர்பர் வில்ஸ் (1891), ஜூட் தி ஆப்ஸ்க்யூர் (1896) போன்ற நாவல்களும் ‘தி டயானாஸ்ட்டஸ்’ (1904-08) என்ற கவிதை நாடகம் மற்றும் ஏராளமான கவிதைகளும், சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. பத்திரிகை நிருபர்களின் நிரந்தரமான தொல்லை காரணமாக அவர் நாவல் எழுதுவதை ஒரு கட்டத்துட

    ன் நிறுத்திக் கொண்டார். எனவே, அவரது வாழ்க்கையின் கடைசி முப்பது ஆண்டுகளையும் கவிதைக்காக மட்டுமே ஒதுக்கி வைத்தார். இருபதாம் நூற்றாண்டின் வருடங்கள் அவரை முக்கியமான ஒரு கவிஞராக மாற்றவும் செய்தன. தற்போது ஒரு நாவலாசிரியராக அவர் எந்த அளவுக்குப் போற்றப்படுகிறாரோ, அதே அளவுக்கு ஒரு பெருங்கவிஞராகவும் கௌரவிக்கப்படுகிறார். இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிஞர்கள் வரிசையில் தாமஸ் ஹார்டியும் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார்.

    ஹார்டியின் துயரம் நிறைந்த வாழ்க்கை, வெளிப்படையானது. இயற்கை மனிதனிடம் தனிப்பட்ட மரியாதை காட்டுவது இல்லை என்பது மட்டுமல்ல; ஒரு விதமான எதிர்ப்பு உணர்வையும் வெளிப்படுத்துக்கிறது என்று நம்பியவர் அவர். காஸ்ட்டர்பிரிட்ஜ் நகர மேயர் என்ற இந்த நாவலிலும் இந்தத் துயரக் கோட்பாடு அடிப்படையான ஒன்றாகப் பரிணமிக்கிறது. எதிர்பாராததும் நடைமுறைக்கு ஒவ்வாததுமான யதார்த்தத்தின் பிடியிலிருந்து எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் சுதந்திரமானது அல்ல; மட்டுமின்றி துயரப்படுவதற்காகவே பிறந்தவன்தான் மனிதன் என்கிற ஹார்டியின் கருத்தை இந்த நாவல் வலியுறுத்துகிறது. வேதனை அனுபவிக்கும் ஒரு மனிதன் இரக்கத்துக்கு உரியவன் என்பதை இதில் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். அதுவே ஹார்டியின் எழுத்து வன்மையும் கூட. சாபம் பீடித்த மனித வாழ்வை அவர் மேலும் மேலும் சபித்துக் கைகழுவி விடுவதில்லை. கருணையும் அன்பும் மனிதத் துயரங்களுக்கு பளபளப்பான வானவில்லின் அழகைச் சூட்டுகிறது. துயரத்தின், இரக்கத்தின், அன்பின் ஆழங்களுக்கு மனிதர்களை இழுத்துச் செல்வதுதான் ஒரு கலைஞனின் கடமை என்பதை அவரது கவிதைகளும் நாடகங்களும் நாவல்களும் நமக்கு வலியுறுத்துகின்றன.

    சென்னை-600 078

    தொலைபேசி: 24837681

    தோழமையுடன்

    சிவன்

    காஸ்ட்டர்பிரிட்ஜ் நகர மேயர்

    தாமஸ் ஹார்டி

    தமிழில்: சிவன்

    1

    பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்து முப்பது வருடங்கள் கடந்திருந்தன. கோடை காலத்தின் கடைசிக் கட்டமான ஒரு நாளின் மாலை நேரத்தில், ஓர் இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் வடக்கு வெசெக்ஸ் பகுதியில் உள்ள வேய்டன் பிரயர் என்ற கிராமத்தை நோக்கிச் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அந்த இளம் பெண்ணின் கையில் சின்னஞ்சிறு பெண்குழந்தை ஒன்று இருந்தது. வெகு நேரமாக அவர்கள் நடந்து வந்ததால், அவர்களது உடைகளிலும் ஷுக்களிலும் ஏராளமான தூசு படிந்து இருந்தது.

    அந்த இளைஞன் பழகுவதற்கு இனிமையானவன். ஆரோக்கியமானவனும் கூட. முரட்டுத்தனமான ஆடைகள் அணிந்திருந்தான். அவன் முதுகில் கூடை ஒன்று பெல்ட்டால் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூடைக்குள் வைத்திருந்த கத்தியின் கைப்பிடி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவன் நல்ல உழைப்பாளி என்பது அவனைப் பார்க்கும் எவருக்கும் சட்டென்று விளங்கும். அவனது உறுதியான ஒவ்வொரு கால் பதிப்பிலும் எவரையும் பொருட்படுத்தாத ஓர் அலட்சியத் தன்மை தெரிந்தது.

    அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இருவரும் வெகுதொலைவில் இருந்து ஒன்றாக நடந்து வந்தும் பரஸ்பரம் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. அவள் கையிலிருந்த குழந்தை மட்டும்தான் அந்தப் பயணத்தில் அவளுடைய ஒரே துணையாக இருந்தது. அவன் எதுவும் பேசாமல் நடப்பது அவளைக் கொஞ்சம் கூட ஆச்சரியப் படுத்தவில்லை. அது அவனது இயல்பு என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். நடுநடுவே அவள் அந்தக் குழந்தையின் காதில் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் அந்தக் குழந்தையும் சிரித்தபடி எதையாவது முனகும்.

    இதைத் தவிர, அவர்கள் நடந்து வந்த பாதையில் பறவைகள் மட்டுமே குரலெடுத்துப் பாடின. வேறு எந்த விதமான சத்தமும் கேட்கவில்லை. ஆனால், அவர்கள் கிராமத்தை நெருங்க நெருங்கப் பல்வேறு விதமான சத்தங்கள் கேட்கத் தொடங்கின. வேய்டன் பிரயர் என்று அழைக்கப்படும் அந்தக் கிராமத்தின் வீடுகள் ஒவ்வொன்றாகத் தென்படத் தொடங்கின. மண்ணிலிருந்து முள்ளங்கியை வெட்டியெடுக்கும் ஒருவர் மண்வெட்டியுடன் அந்த வழியாக வந்தார். நமது கதாநாயகனான இளைஞன் அவரிடம் கேட்டான்: இங்கு ஏதாவது வேலை நடந்து கொண்டிருக்கிறதா? மண்வெட்டியுடன் வந்தவர், அந்தக் கேள்வியின் அர்த்தம் விளங்கவில்லை என்பது போல் அவனைப் பார்த்தார். எனவே, இளைஞன் விளக்கமாகவே கேட்டான்: வைக்கோல் பிரிபோடும் வேலை ஏதாவது இங்கு நடக்கிறதா?

    மண்வெட்டிக்காரர் இல்லை என்பது போல் தலையாட்டினார். பிறகு, இந்தச் சந்தர்ப்பத்தில் விவரம் தெரிந்தவர்கள் யாராவது இப்படியொரு வேலை தேடி வேய்டனுக்கு வருவார்களா? என்றும் கேட்டார்.

    வைக்கோல் பிரிபோடும் நமது இளைஞன், நிலைமை சிக்கலாகி விட்டதே என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டான். பிறகு கிராமத்தை ஊன்றிப் பார்த்தபடி கேட்டான். அங்கு என்ன விசேஷம்? ஏதேதோ சத்தங்கள் கேட்கிறதே!

    இன்று சந்தைதினம். பெரும்பாலான வியாபாரங்கள் முடிந்து விட்டன. வியாபாரிகள் வசூலான பணத்துடன் ஊரை விட்டுக் கிளம்பும் பரபரப்பில் இருக்கிறார்கள். சந்தைப்பேட்டைக்கு அருகில்தான் நான் இன்று முழுவதும் வேலை செய்திருக்கிறேன். சின்னப் பிள்ளைகளையும் மூளையற்றவர்களையும் ஏமாற்றுவதற்கான அமைப்புதான் அந்தச் சந்தை என்பது! என்று சொல்லிவிட்டு மண்வெட்டிக்காரர் அவர்பாட்டுக்கு நடக்கத் தொடங்கினார்.

    நமது இளைஞனும் அவன் மனைவியும் சந்தைப் பேட்டையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். மண்வெட்டிக்காரர் சொன்னது போலவே அந்த இடத்தின் வியாபாரம் பெரும்பாலும் முடிந்து விட்டிருந்தது. இருந்தாலும் சந்தையில் கூட்டம் குறையாமல் இருந்தது. ஆனால், அவர்கள் எவரும் சந்தையில் பொருள்களை வாங்க வந்தவர்களல்ல. வெறுமனே ஊர்க்கதை பேசி உற்சாகமாகப் பொழுது போக்குவதற்காகச் சந்தைத் திடலுக்கு வந்தவர்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக விளையாட்டுப் பொருள்களை விற்பவர்கள், ஜால வித்தைக்காரர்கள், அரைகுறை மருத்துவர்கள், கைரேகை பார்ப்பவர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே அங்கிருந்தது.

    நம் இளைஞனுக்கும் அவன் மனைவிக்கும் மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. சோர்வை அகற்றுவதற்காக அவர்கள் எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகிலேயே இரண்டு குடிசை வீடுகள் தென்பட்டன. ஒரு குடிசையின் வாசல் கதவில், ‘வீட்டில் தயாரிக்கப்பட்ட நல்ல பீரும், ஆப்பிள் பழச்சாறில் வடித்தெடுத்த மதுவும் இங்கு கிடைக்கும்’ என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு குடிசையின் வாசலில், ‘அருமையான கோதுமை சூப் இங்கு கிடைக்கும்’ என்று எழுதப்பட்டிருந்தது. நமது இளைஞன் இந்த இரண்டு போர்டுகளையும் வாசித்த பிறகு முதல் குடிசையை நோக்கி நடக்க முற்பட்டான்.

    அப்போது அவன் மனைவி, அது வேண்டாம். அடுத்த இடத்துக்குப் போகலாம். எனக்கு கோதுமை சூப் மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் அதுதான் நல்லது. கோதுமை சூப் குடித்தால் களைப்பும் நீங்கும்! என்றாள்.

    நான் இதுவரை கோதுமை சூப் குடித்தது இல்லை என்று இளைஞன் பதிலளித்தான். இருப்பினும் அவளது கருத்துக்கு மதிப்பு அளித்து அவன், அவளை கோதுமை சூப் விற்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றான்.

    அந்தக் குடிசைக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்புறம் நடைபாதையை ஒட்டி இரு புறங்களிலும் அகலம் குறைந்த பெஞ்ச்சும், அதையொட்டி அதே போன்ற மேஜை மாதிரியான பலகை அமைப்பும் போடப்பட்டிருந்தன. ஒரு மூலையில் அடுப்பு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பின் மீது ஒரு பெரிய பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. நீளமான கரண்டி ஒன்றின் உதவியுடன் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சூப்பைக் கிளறிக் கொண்டிருந்தாள் சுமார் ஐம்பது வயதான உடல் பருத்த பெண்மணி ஒருத்தி. அவள் கரண்டியால் சூப்பைக் கிளறும் சத்தம் அங்கிருந்த எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டது. கோதுமை மாவு, பால், திராட்சை உட்பட மேலும் சில பொருள்களைக் கலந்து கொதிக்க வைத்த சுவை மிகுந்த சூப் அது. மேற்குறிப்பிட்ட பொருள்கள் எல்லாம், நாலைந்து பாத்திரங்களில், அடுப்புக்கு மேல் உள்ள பாத்திரத்துக்குச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. பாத்திரத்தில் சூப்பின் அளவு குறையத் தொடங்கும்போது, பருமனான அந்தப் பெண்மணி மேற்குறிப்பிட்ட பொருள்களை அளவுப்படி எடுத்துப் பாத்திரத்தில் போட்டுத் தேவையான தண்ணீர் ஊற்றி மறுபடியும் கொதிக்க வைப்பாள்.

    இளைஞனும் அவன் மனைவியும் தலா ஒரு கோப்பை சூப் கேட்டார்கள். பருமனான அந்தப் பெண்மணி பெரிய கரண்டியில் சூப்பை எடுத்துக் கோப்பைகளில் ஊற்றிக் கொடுத்தாள். அவன் மனைவி சொன்னதுபோல் கோதுமை சூப் களைப்பைப் போக்க மிகவும் சிறந்தது. ஆனால், அதைக் குடித்துப் பழக்கமில்லாதவர்களுக்கு அது எந்த அளவுக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

    அந்தக் குடிசைக்குள் வெறும் கோதுமை சூப் மட்டுமல்லாமல், வேறு சில பொருள்களும் இருப்பதை நமது இளைஞன் சட்டென்று புரிந்து கொண்டான். அந்தப் பருமனான பெண்மணியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த இளைஞனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவன் பருமனான பெண்மணியை நோக்கிக் கண்ணைச் சிமிட்டி, கோப்பையை அவள் பக்கமாக நீட்டினான். அவள் உடனே பாட்டில் ஒன்றைத் திறந்து அதிலிருந்த இரண்டு அவுன்ஸ் ரம்மை அந்தக் கோப்பையில் ஊற்றினாள்.

    இளைஞனுக்கு இப்போது அந்த சூப் மிகவும் சுவை உள்ளதாகத் தோன்றியது. மட்டுமின்றி, அவன் தன் மனைவியின் சூப்பிலும் ரம் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினான். அவள் முதலில் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையானாலும் கடைசியில் ஒப்புக் கொண்டாள்.

    அவன் மறுபடியும் மறுபடியும் குடித்தான். அவனுக்கு போதை ஏறத் தொடங்கியது. அவள் இரண்டு அல்லது மூன்று தடவை அவனிடம் சொன்னாள்: மைக்கேல், இன்று இரவு நாம் எங்கே தூங்குவது? இப்போதே விசாரித்து இடம் கண்டுபிடிக்காவிட்டால், பிறக இடம் கிடைக்காமல் நாம் திண்டாட வேண்டியிருக்கும்!

    ஆனால், அவன் அதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

    அவள் கையிலிருந்த குழந்தை உறங்கிவிட்டது.

    அப்போது அங்கிருந்த மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம், மோசமான மனைவிகள் காரணமாக அழிந்துபோன கணவர்கள் பற்றித்தான். குறிப்பாக இளம் பருவத்திலேயே ஏதாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்ட இளைஞர்களைப் பற்றி.

    நம் இளைஞன் உடனே உரத்த குரலில் இப்படிக் கூறினான்: நானும் அப்படி வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்ட ஒருவன்தான். என்னுடைய பதினெட்டாவது வயதில் நான் கல்யாணம் செய்தேன். அதன் பலன் இதுதான்... தெரிகிறதா? அவன் தன் மனைவி மற்றும் குழந்தைக்கு நேராக விரலைச் சுட்டிக் காட்டினான்.

    இதற்கு முன்பும் அவன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுவதை அவள் பல முறை கேட்டிருக்கிறாள். எனவே, அவள் அவன் சொல்வதைக் காதிலேயே வாங்காத மாதிரி, உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையிடம் ரகசியமாக எதையோ சொல்லிக் கொஞ்சினாள்.

    அப்போது ஏலம் விடுபவர் வெளியே உரத்த குரலில் கூவுவது கேட்டது: இதோ இதுதான் கடைசிக் குதிரை. முதல் தரமான பெண் குதிரை; விலை நாற்பது ஷில்லிங்குகள் மட்டுமே!

    குடிசைக்குள் இருந்த நம் இளைஞன் தன் பேச்சைத் தொடர்ந்தான்: அந்தக் குதிரைக்காரன் குதிரையை ஏலம் விடுவது மாதிரி, ஒரு கணவன் தனக்கு மனைவி தேவையில்லை என்று நினைத்தால்... மனைவியை ஏன் ஏலம் போட்டு விற்கக் கூடாது? அப்படிச் செய்தால், அவளைத் தேவைப்படும் யாராவது வாங்கிக் கொள்வார்கள். அப்படி யாராவது வாங்கத் தயாராக இருந்தால், நான் என் மனைவியை இந்த நிமிடமே விற்கத் தயாராக இருக்கிறேன்!

    வாங்குவதற்கு யாராவது இருப்பார்கள்! என்று யாரோ ஒருவர், அவள் உடம்பைப் பார்த்தபடி பேசினார்.

    மேன்மையாக உடையணிந்திருந்த ஒருவர் புகை பிடித்தபடி சொன்னார்: நான் மிகவும் நல்ல மனிதர்களுக்கு நடுவே வளர்ந்தவன். அதனால் மரியாதைக்குரியவர்களைப் பார்க்கும் போதே என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்! இந்தச் சந்தைக்கு வந்திருக்கிற எந்த ஒரு பெண்ணை விடவும் மதிப்பு வாய்ந்தவள் இவள். இவளைப் பக்குவமாகப் பழக்கினால் எப்படிப்பட்டவளாக இருப்பாள் தெரியுமா!

    தன் மனைவியை அவர் புகழ்ந்ததைக் கேட்டபோது அந்த இளைஞனுக்குத் தனது கருத்து ஒருவேளை சரியில்லையோ என்ற சந்தேகம் தோன்றியது. இருப்பினும் அவளால் தனக்கு எந்த விதமான பிரயோஜனமும் இல்லை என்ற பழைய முடிவுக்கே அவன் விரைவில் திரும்பி வந்தான். பிறகு உரத்த குரலில் கூவினான்: உங்களுக்கு இதோ இந்த அபூர்வப் படைப்பைச் சொந்தமாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. யார் இவளை வாங்கிக் கொள்கிறீர்கள்? சூஸன் எழுந்து நில்... உன்னை எல்லோரும் ஒரு தடவை நன்றாகப் பார்க்கட்டும்.

    சூஸன் எழுந்து நின்றாள். அவள் கணவன் கேட்டான்: யார் இவளை ஏலம் கேட்கப் போகிறீர்கள்?

    நான் கேட்கிறேன். கரகரப்பான குரல் கொண்ட ஒருவர் சொன்னார். உடனே ஏலம் தொடங்கியது.

    சூஸன் எதுவும் புரியாதவளைப் போல், மனோதிடத்தை இழக்காமல் தரையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

    ஒருவர் ஐந்து கினி*க்கு அவளை வாங்கிக் கொள்ளத் தயாரானார்.

    எல்லோரும் ஏலம் கேட்டவரை நோக்கித் திரும்பினர். குடிசை வாசலில் நின்றிருந்த அந்த மனிதர் ஒரு கப்பல் ஊழியர். அவர் அங்கு வந்து சேர்ந்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான் ஆகியிருக்கும்.

    சூஸனின் கணவன் அந்த மாலுமியின் பக்கமாகத் திரும்பிக் கேட்டான்: உங்களுக்கு இவள் தேவையா?

    தேவை!

    தேவையென்று சொன்னால் மட்டும் போதுமா? அதற்குரிய பணம் எங்கே?

    அந்த மாலுமி சற்று நேரம் தயங்கி நின்றார். பிறகு சூஸனை ஒரு தடவை ஊன்றிப் பார்த்தார். பின்பு முன்னோக்கி நடந்து வந்து தனது பாக்கெட்டிலிருந்து ஐந்து ஒரு பவுண்ட் நோட்டுகளை வெளியே எடுத்து டெஸ்க்கின் மீது வைத்தார். பிறகு ஒவ்வொரு ஷில்லிங்காக எண்ணி ஐந்து ஷில்லிங்கை எடுத்து பவுண்டு நோட்டுகளுக்கு மேலாக வைத்தார்.

    அவர் பணத்தை எண்ணி வைத்த போதுதான், விளையாட்டு விபரீதமாகிவிட்டது என்பது மற்றவர்களுக்கு விளங்கியது. மற்ற எல்லோருமே இந்த நாடகத்தின் முக்கியமானவர்களான அந்த மூன்று பேரின் முகங்களையும்

    Enjoying the preview?
    Page 1 of 1