Kaasu, Panam, Dhuttu, Money
By N.Chokkan
()
About this ebook
Reviews for Kaasu, Panam, Dhuttu, Money
0 ratings0 reviews
Book preview
Kaasu, Panam, Dhuttu, Money - N.Chokkan
http://www.pustaka.co.in
காசு, பணம், துட்டு, மணி
Kaasu, Panam, Dhuttu, Money
Author :
என். சொக்கன்
N.Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
முன்னுரை
குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறீர்கள், கடைக்குள் நுழைவதற்குமுன் அப்பா ஓர் ஏடிஎம்முக்குள் நுழைந்து அட்டையைச் செருகுகிறார். ஏதோ பொத்தான்களை அழுத்துகிறார். சரேலென்று காசு வருகிறது. அதை வைத்துச் செலவு செய்கிறார்.
ஆனால், அந்தக் காசு எங்கிருந்து வந்தது? ஏடிஎம் என்பது பணம் அச்சடிக்கும் இயந்திரமா? யார் எவ்வளவு கேட்டாலும் அது கொடுத்துவிடுமா?
ஏடிஎம் பணத்தை அச்சடிப்பதில்லை, அதற்குள்ளே வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து நமக்கு வேண்டியதைமட்டும் எடுத்துத் தருகிறது.
அதுவும் சும்மா தராது. நம்முடைய வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான் தரும். இல்லாவிட்டால் மறுத்துவிடும்.
அதென்ன வங்கிக் கணக்கு? அதில் பணம் எப்படி வந்தது? ஒருவேளை பணம் இல்லாவிட்டால் என்ன செய்வது? இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? எப்படி ஒவ்வொருவருக்கும் சென்று சேர்கிறது?
இந்த நூலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தேடலாம். வாருங்கள்!
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.
nchokkan@gmail.com
http://nchokkan.wordpress.com/
1
பணம் என்பது என்ன?
ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் பார்த்திருப்பீர்கள். அவை வெவ்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன.
உதாரணமாக, நூறு ரூபாய்க்கு ஒரு நோட்டு உள்ளது. இன்னொரு நோட்டு ஐநூறு ரூபாய்க்கு உள்ளது. ஒரு ரூபாய்க்கு நாணயமும் உள்ளது.
இவை வெறும் காகிதங்கள், உலோகத் துண்டுகள் அல்ல, இவற்றை எடுத்துச் சென்று எந்தக் கடையில் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த மதிப்புக்கு ஒரு பொருளை உங்களுக்குத் தருவார்கள்.
உதாரணமாக, நூறு ரூபாய் விலை உள்ள ஒரு பொருளை வாங்குவதற்கு நீங்கள் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைத் தரலாம், அல்லது, ஐம்பது ரூபாய் நோட்டுகள் இரண்டைத் தரலாம், அல்லது, ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று, பத்து ரூபாய் நோட்டுகள் ஐந்து என்று கலந்து தரலாம்.
இந்த நோட்டுக்கு இவ்வளவுதான் மதிப்பு என்று யார் தீர்மானிக்கிறார்கள்?
********************
உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கவனமாகப் பாருங்கள். அதில் என்னவெல்லாம் தெரிகிறது?
முதலில், காந்தித் தாத்தா சிரிக்கிறார். அவருக்குப் பக்கத்தில் அந்த