Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavum Malarum
Nilavum Malarum
Nilavum Malarum
Ebook98 pages55 minutes

Nilavum Malarum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580105700886
Nilavum Malarum

Read more from Vidhya Subramaniam

Related to Nilavum Malarum

Related ebooks

Reviews for Nilavum Malarum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavum Malarum - Vidhya Subramaniam

    http://www.pustaka.co.in

    நிலவும் மலரும்

    Nilavum Malarum

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    நிலவும் மலரும்

    1

    கடிகாரத்தையும் தன்னையும் மாறி மாறிப் பார்த்தபடி கேட்ட புருஷனைச் சங்கடத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள் அம்ச வேணி.

    வழக்கமா ஏழரைக்கெல்லாம் வந்துடுவா. இன்னிக் கென்னமோ இன்னும் காணல. நீங்க வேணா பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு நடை போய்ப் பாக்கறிங்களா?

    மணி ஒன்பதைத் தாண்டிடுச்சேடி. அவ ஆபீஸ்க்கு போன் பண்ணிப் பாக்க வேண்டியதுதானே.

    பண்ணினேன். எப்பவும் போலக் கிளம்பிட்டாங்களேன்னு சொல்லிட்டாங்க.

    தனஞ்செயன் முகம் சுருங்கச் செருப்புக்குள் காலை நுழைத்தார்.

    பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பார்த்தவர், அரை மணி கழித்து ஏமாற்றமும் கலவரமுமாய் வீட்டுக்கு வந்தார்.

    எனக்குப் பயம்மார்க்குங்க. ஆபீஸ்லயும் இல்ல, வீட்டுக்கும் வந்து சேரலன்னா, எம் பொண்ணுக்கு என்னாச்சுங்க? அம்சவேணி அழ ஆரம்பிக்க, அவர் முகத்திலும் பயம் படர்ந்தது. மனம் வேண்டாததை யெல்லாம் கற்பனை செய்து பயத்தை இன்னும் கூட்டியது.

    எங்கே போய்த் தேட? அல்லது யாரிடம் போய் என்னவென்று சொல்லி விசாரிக்க?

    ‘இன்னும் இரண்டு நாளில் நிச்சாயதார்தம். பெண்ணைக் காணவில்லை. பார்த்திர்க்ளா?’ என்று கேட்கத்தான் முடியுமா? கடவுளே! எங்கேதான் போனாள் இந்தப் பெண்!

    என்ன செய்வது, எங்கே போய் யாரை விசாரிப்பதெனப் புரியாமல் அவர் தவியாய்த் தவித்த நேரம் சின்னப்பெண் ஆனந்தி வாசற்பக்கமிருந்து வேகமாய் உள்ளே வந்தாள்."

    அப்பா! இங்க வாயேன்.

    ‘'என்னம்மா?"

    இங்க பாரேன். இது அக்காவோட செருப்புதானே?

    அவர் பார்த்தார்.

    அட... அவ செருப்புதான். இதைத்தான் காலேல போட்டுக்கிட்டுப் போனா அம்மா படபடப்பாகச் சொன்னாள்.

    அப்படின்னா அவ வந்துட்டாளா? வந்தவ எங்க போனா? வீட்டுக்குள்ள சரியா பாத்தயா?

    ஆளுக்கொரு பக்கம் உள்ளே ஒட, அப்பா மாடிப்பக்கம் போனார். மொட்டை மாடி மேல்நிநாளில் நிச்சயதார்த்தம். பெண்ணைக் காணவில்லை. பார்த்தீர்களா?' என்று கேட்கத்தான் முடியுமா? கடவுளே! எங்கேதான் போனாள் இந்தப் பெண்! - அப்பாலைத் தொட்டிக்கு மறுபுறம் சுருண்டு படுத்திருந்தாள் அபிராமி. பதறிப் போய் அவளருகில் ஓடினார்.

    என்னாச்சும்மா? அபிராமி... இங்க பார்... ஏண்டா இங்க வந்து படுத்திருக்க...?

    அவளை எழுப்பித் தன் மீது சாய்த்துக் கன்னத்தைத் தட்டியபடி கேட்டார். அரைக் கண் திறந்தவள், அவர் முகத்தைப் பார்த்ததும் பொங்கி வழிந்த கண்ணிரோடு அவர் மார்பில் முகம் புதைத்துக் குலுங்கினாள்.

    என்னம்மா ஆச்சு? சொன்னாத்தானே புரியும்

    ஏண்டி, என்னடி ஆச்சு? எப்பொ ஆபீஸ்லேர்ந்து வந்த? எதுக்கு இங்க வந்து படுத்துட்டு அழுவற? சொல்லித் தொலையேன்.

    நீ எதுக்கு இப்படிக் கத்தற? போய் அவளுக்குச் சாப்பிட ஏதா வது ரெடி பண்ணு. நான் அவளைக் கீழ கூட்டிட்டு வரேன்.

    அப்பா, அம்மாவைக் கீழே அனுப்பி விட்டு, மகளை ஆறுதலாகத் தட்டி எழுப்பிக் கீழே அழைத்து வந்தார்.

    வற்புறுத்தி ஹார்லிக்ஸைக் குடிக்க வைத்தார்.

    இப்போ சொல்லு, என்ன நடந்துச்சு?

    அபிராமி சிவந்து வீங்கியிருந்த விழிகளால் அப்பாவைத் துக்கத்துடன் பார்த்தாள்."

    என் கல்யாணம் நடக்காதுப்பா...

    என்னடி சொல்ற? அம்மா அலறினாள். அப்பா திகைப்புடன் அவளையே பார்த்தார்.

    ஏன்?

    அபிராமி தன் கைப்பை திறந்து கடிதம் ஒன்றை எடுத்து அப்பாவிடம் நீட்டினாள்.

    இப்படி ஒரு கடிதத்தை என்னிடமிருந்து நீ எதிர்பார்த் திருக்க மாட்டாம். வேறு வழியில்லை. இந்த அதிர்ச்சியை நீ தாங்கியே ஆக வேண்டும். நிச்சயிக்கப்படப் போகும் நமது திருமணத்தில் எனக்குத்துளியும் இஷ்டமில்லை. என் விருப்பம் மீறி இது முடிவு செய்யப்பட்டுள்ளது. எதையும் தடுக்க முடியாத கோழை நான். எனவே தப்பித்துச் செல்கிறேன். இக்கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நான் மும்பை விமானத்தில் ஏறியிருப்பேன். அங்கிருந்து அமெரிக்கா. நான் செய்வது மிகப் பெரிய தவறு என்று தெரியும். வேறு வழியில்லை. விருப்பமின்றி உன்னைத் திருமணம் செய்வது அதை விடப் பெரிய தவறு என்ப தான் இதனைச் செய்கிறேன். மன்னித்து விடு. மிக நல்ல கணவனை நீ அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    கடிதத்தை நழுவ விட்டு அப்பா சிலையாய் நிற்க, அம்மா வாய் பொத்தி அழுதாள். ஆனந்தியின் விழிகளில் கோபம்.

    என்ன ஆம்பளை அவன்...? இவனெல்லாம் படிச்சவனாம். ராஸ்கல்! சும்மா விடக் கூடாதுப்பா அவனை.

    அப்பா எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்தார். எவ்வளவு செலவு ஊர் முழுக்க அழைத்தாயிற்று. இந்தப் பையன் இப்படியா கழுத்தறுப்பான்? கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது? ஆண் தவறு செய்தாலும் பெண்ணைத் தண்டித்து ஒதுக்கும் உலகமல்லவா இது இனி தலை நிமிர்ந்து மாப்பிள்ளை பார்க்க முடியுமா? நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போன வரனைப் பற்றின விஷயம், கூழாங்கல் நீர்க் கசிவாகக் கசிந்து

    Enjoying the preview?
    Page 1 of 1