Kopikaasthirigal
5/5
()
About this ebook
Reviews for Kopikaasthirigal
1 rating0 reviews
Book preview
Kopikaasthirigal - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
கோபிகாஸ்திரீகள்
Koopikaasthirigal
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
கோபிகாஸ்திரீகள்
1
வீடு முழுக்க வெள்ளையடித்திருந்தது. வாசலில் சீரியல் பல்புகளின் அலங்காரங்கள் கண்ணைப் பறித்தன. ஹால் சுத்தமாயிருந்தது. விட்டத்தில் சரவிளக்கைச் சுற்றிலும் விதவிதமான கலர் பேப்பர் அலங்காரங்கள். யசோதா வீடு முழுக்க சுற்றி வந்தாள். வீடு பெரிசாயிருந்தது. மூன்று படுக்கை அறைகள், பெரிய ஹால், டைனிங் ஹால், கிச்சன், ஸ்டோர் ரூம், பூஜை ரூம், சுற்றிலும் சின்ன தோட்டம் என்று ரம்யமாயிருந்தது. கீழே உள்ளது போலவே மாடியி லும் அறைகள்.
இந்த வீடு அவள் புருஷன் சம்பாத்தியத்திலோ, அவளுடைய முயற்சியிலோ கட்டப்பட்டதல்ல. பரிசாய் கிடைத்த வீடு இது. இந்த விலையுயர்ந்த பரிசுக்காக ஒவ்வொரு கணமும் மூச்சடக்கி பாடுபட்டது பூராவும் கோபி,
கோபி செய்திருக்கும் சாதனைக்குமுன் இந்த வீடு துரசிக்கு சமானம். நாட்டுக்கே அல்லவா பெருமை சேர்த் திருக்கிறான். ஒலிம்பிக் போட்டிகளுக்காக போகப் போவதாக அவன் கூறியபோது யசோதா சிரித்தாள். அவனவன் உயிரை விட்டுக்கொண்டு பாடுபட்டு வேர்வை சிந்தி பெறத்துடிக்கும் பதக்கங்கள். இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கோபியால் வெண்கலமாவது பெறமுடியுமா? அவ்வளவுக்கு அவள் மகன் திறமைசாலியா? அவளுக்கே அவள் பிள்ளைமேல் நம்பிக்கையில்லை. அப்போது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுவது அவ்வளவு சாமான்யமா என்ன என்றுதான் நினைத்தாள். ஆனால் கோபிக்கு நம்பிக்கையிருந்தது. நீரில் இறங்கி விட்டாலே அவனுக்கு தான் மனிதன் என்பதே மறந்து விடுகிறது. கைகால்களில் அப்படி ஒரு இயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. நீச்சல் போட்டி களில் நிகழ்த்திய சாதனைகள் ஒவ்வொன்றும் அற்புத மானது. உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்தியா மார் தட்டிக்கொண்டு மீசை முறுக்கியது. அடுத்தடுத்து இரண்டு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் அவன் பெற்றபோதுதான் இந்தியா அவனை அடையாளம் கண்டு கொண்டது. அதுவரை அக்கம்பக்கத்து மனிதர்களுக்கே யாரென்று தெரியாதிருந்த கோபி இன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படும் பெயருக்குரியவனானான்.
கோபிக்கு படிப்பு வரவில்லை. விளையாட்டிலேயே புத்தி சென்றதால் படிக்க பிடிக்கவில்லை. அவனுக்கு பள்ளிக்கு சென்றால், த பார்ரா இடி அம்ன் வரான்" என்று சக மாணவர்கள் கிண்டல் செய்தது வேறு பள்ளி செல்லும் ஆசையைக் குறைத்தது.
அதெப்படி கோபி தொட்டு வழிச்சு இட்டுக்கறாப்பல அப்டி ஒரு நிறம் உனக்கு மட்டும் என்று வனஜா- அவன் அத்தை பெண்- கிண்டல் செய்யும்போது அவன் மளக்கென்று முறிந்து போவான். அது மட்டுமா, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரி மாணவன்போல் மதமத வென்று அவன் தேகம் வளர்ந்திருந்தது. தலையில் சுருள் சுருளாய் முடியும், தூக்கின கன்ன எலும்புகளும், தடித்த உதடுகளும், கருப்பு நிறமும்தான் அவனுக்கு இடி அமீன் பட்டத்தை வாங்கித் தந்திருந்தன. இதன் காரணமாகவே கோபி வெளியில் செல்வதை குறைத்துக் கொண்டான்.
ஒரு வயதுக்குப் பிறகு கோபி தன்னைப் பற்றியே நிறைய யோசித்தான். அழகற்று பிறந்ததில் அவன் குற்றமென்ன இருக்கிறது. காரணமின்றி எந்த படைப்பும் இல்லை. அந்த வழியில் பார்த்தால் அவனிடமும் காரணம் இருக்க வேண்டும். எல்லா மனிதனிடமும்