Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Nilavey...
Kaadhal Nilavey...
Kaadhal Nilavey...
Ebook103 pages54 minutes

Kaadhal Nilavey...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580105701124
Kaadhal Nilavey...

Read more from Vidhya Subramaniam

Related to Kaadhal Nilavey...

Related ebooks

Reviews for Kaadhal Nilavey...

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Nilavey... - Vidhya Subramaniam

    http://www.pustaka.co.in

    காதல் நிலவே...

    Kaadhal Nilavey…

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    காதல் நிலவே...

    1

    கல்யாண சத்திரம் கலகலப்பாயிருந்தது. பூவும், மஞ்சளும், அட்சதையும் இறைபட்டது. கும்பல் கும்பலாய் பெரியவர்களும், டீன் ஏஜ்களும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளின் சிரிப்பும் கும்மாளமும் கூச்சலும், சாஸ்திரிகளின் மந்திரமும், மேள சத்தமும்ாய், இத்தனையிலும் அமைதியாய் தீபச்சுடர் போல் வளைய வந்து கொண்டிருந்தாள் அகல்யா.

    எளிமையாய், கண்ணுக்கு குளுமையாய் அதிக ஆர்ப் பாட்டமில்லாத பட்டுப் புடவையில் கழுத்தில் ஒற்றைச் சங்கிலியும், வலது கையில் ஒரு ஜோடி வளையல்களும், இடது கையில் ரிஸ்ட்வாட்சும், உதட்டில் நெளிந்த புன் முறுவலுமாய் வளைய வந்தவளை அனைவருமே ஒரு கணம் உற்றுப் பார்க்கத் தவறவில்லை.

    அகல்யா! இந்த கிஃப்ட் பார்சலை எல்லாம் மாடில அந்த ரூம்ல வெச்சுட்டு வந்துடேன் கல்யாணப் பெண்ணின் தாய், அகல்யாவிடம் சொல்ல பார்சல்களுடன் மாடிக்குச் சென்ற அகல்யாவின் மீது தடாலென்று மோதினான் அவசர மாய் கீழே இறங்கிக் கொண்டிருந்த அவன்.

    ஒ...சாரி! என்றவன் கீழே விழுந்த ஒன்றிரண்டு பார்சல்களை எடுத்து அவளிட ம் நீட்டி வீட்டு, "நா வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா என்றான் புன் சிரிப்போடு.

    பரவால்ல! என்றபடி அகன்றாள் அவள். மெல்ல ஏறிச் செல்லும் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். கூடை கூடையாய் பூ சுமத்திக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் சாட்டையாய் நீண்டு தொங்கின. கூந்தலில் கொஞ்சமாய் அவள் வைத்திருந்த மல்லிகைப்பூவின் எளிமை கண்ணைப் பறிக்க ஒரு கணம் பிரம்மித்தான்.

    என்னடா கண்ணா ஒரங்கட்டலாமுன்னு பாக்கறியா? வேஸ்ட்டு! கனாக் காணாத தோ அங்க வாசல்ல வோ. அந்த மாதிரி நெறைய பொண்டுங்க இருக்கு. நல்லா சைட் அடிக்கலாம். ரெண்டு நாள் பொழுது ஜோரா போகும்.

    அவன் திரும்பினான். வாசுவின் கண்களில் விஷமம் இருந்தது.

    டேய் வாசு! யார்ரா இவ?

    "யாரு கண்டா! நானும் நேத்து முதல் பாக்கறேன். கோவில் சிலையாட்டமா அது பாட்டுக்கு போறது வரது, ஒருத்தரை பார்க்கனுமே. ஒரு தரமானம் அசந்து மறந்து பாக்கமாட்டாளான்னு பாத்து சலிச்சுட்டேன். எத்தையும் சட்டை பண்ணலியே!

    ச்சேச்சே! பாத்தா அப்படி தெரியலை. முகத்துல ஒரு சாந்தம் இருக்குப்பா.

    சரிதான் வியாதி வந்தாச்சா? ம்! ட்ரை பண்ணிப் பாரு. ஆல் தி பெஸ்ட். எனக்கு வாசல்ல நிறைய வேலை யிருக்குப்பா. பொண்ணுங்க கூட்டம் என்னைக் காணாம தவிக்கும் என்றபடி அவசரமாய் சென்றான் வாசு.

    அரவிந்தனும் அன்று முழுக்க அவளையே விழுங்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை யறியாமல் அவன் மனசுக்குள் எழுந்த பெருமூச்சுகளுக்கு எண்ணிக்கையே இல்லாது போயிற்று. ஆனால் அவளோ எதையும் யாரையும் சட்டை பண்ணவில்லை. அமைதியாய் தான் உண்டு த்ன் வேலை புண்டு என்று வளைய வந்து கொண்டிருந்தாள்.

    டேய் கண்ணா வாடா இங்க என்றான் வாசு.

    என்னடா

    பாவம் போனாப் போகட்டும்னு எல்லாம் விசாரிச் சுண்டு வந்துட்டேன்.

    என்னது?

    அதாண்டா கண்ணா அந்த ஏஞ்சல் பத்திதான். பேரு அகல்யா, பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு தூரத்து உறவு. அப்பா, அம்மா சின்ன வயசுலேயே பரலோகம் போக, இவங்க வீட்டுல அடைக்கலம்! இந்த கல்யாணம் முடிஞ்ச கையோட அவளுக்கும் பண்ணிடுவாங்களாம். நல்ல எடமா பார்த்துக்கிட்டே இருக்காங்கலாம். தட்ஸ் ஆல் ஒரு அப்ளிகேஷன்போட வேண்டியது உன் சாமர்த்தியம்.

    அரவிந்தன் யோசித்தான். அண்ணன் அபிஷேக்கே இன்னும் பிரம்மச்சாரியாய் சிங்கப்பூரில் என்ஜினியராய் வளைய வந்து கொண்டிருக்கும் போது எனக்கு பண்ணிவை என்று எப்படி கேட்பது? அந்த அளவுக்கு அவனுக்கு தைரியம் வரவில்லை.

    அவளோடு பேசும் சந்தர்ப்பம் ஏதாவது வருமா என்று அவன் மனது ஏங்கியது. அந்த சந்தர்ப்பம் நலுங்கின் போதுதான் கிடைத்தது.

    யாராவது நலுங்குப் பாட்டு பாடுங்களேன். யாரோ சொல்ல... ஏய் அகல்யா நீதான் பாடேன் என்று ஒரு பெண் அவளைப் பார்த்து கத்தினாள்.

    நானா ஐயோ வேண்டாம்பா. மாப்பிள்ளை எழுந்து ஒடிடுவார் என்றாள் அகல்யா மெல்லிய குரலில்.

    அதெல்லாம் முடியாது நீதான் பாடணும் என்று வற்புறுத்தினார்கள். அதன் பிறகு அவள் தலை குனிந்த படி தொண்டையைச் சரி செய்து கொண்டு.

    மா ஜானகி செட்ட பட்டக

    மஹாராஜ வைதிவி

    என்று

    Enjoying the preview?
    Page 1 of 1