Oru Kili Mayanguthu
4.5/5
()
About this ebook
Reviews for Oru Kili Mayanguthu
3 ratings0 reviews
Book preview
Oru Kili Mayanguthu - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
ஒரு கிளி மயங்குது
Oru Kili Mayanguthu
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
ஒரு கிளி மயங்குது
-----------------
1
ஸ்வப்னா கல்லூரிக்குள் நுழைந்தபோது வழக்கமாக தோழிகள் அனைவரும் சந்திக்கும் மரத்தடி காலியாக இருந்தது. இன்னும் யாரையும் காணவில்லை. ஒருக்கால் பயந்து விட்டார்களா? மரத்தடியிலிருந்த சிமெண்ட் மேடை யில் கையிலிருந்த புத்தகங்களை வைத்துவிட்டு அருகில் கர்ச்சீப்பை விரித்து அதன் மேல் தானும் உட்கார்ந்து மிடியை இழுத்து சரி பண்ணிக் கொண்டாள் சிறிது நேரம் சுற்றி சுற்றிப் பார்த்தாள். பிறகு காலில் போட்டிருந்த பாயிண்ட் ஷாவைத் தளர்த் தி கீழே உதறினாள். மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தாள். இன்னும் யாரையும் காணாதது எரிச்சலைக் கிளப்பியது. அணில் ஒன்று சற்றுத் தள்ளி குத்துக் காலிட்டு உட்கார்ந்து எதையோ கொரித்தபடி அவளை நிமிர்ந்து பார்க்க, ஹாய் செல்லம் குட்மார்னிங் என்று சிரிக்க அது பயந்து ஒடியது.
கல்லூரி மணி கூட அடிக்கப் போகிறது. சில மாணவர் கள் இவள் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டு ஏதேர
அட இவளும் எழுதிட்டாடி! எப்போ எழுதினடி? ராவோட ராவா எழுதினயா?
ம்
யாரும் பார்க்கலையா?
சுத்தி காலேஜ் புக்ஸ்ைபிரிச்சு வெச்சுக்கிட்டு எழுதினா யாருக்குடி சந்தேகம் வரும்? அது சரி பூர்ணியும் நித்யாவும் வரலையா?
அதோ வந்துட்டே இருக்காங்களே.
எங்கடி?
அதோ வராங்க பாரு!
தூரத்தில் அவள் காட்டிய திசையில் சிகப்பு நிற சூரிதாரில் பூர்ணியும், மஞ்சள் நிற மிடியில் நித்யாவும் வந்து கொண்டிருந்தனர். -
என்னடி சசி! முடிச்சாச்சா? ஏண்டி காவியமாஎழுதிட்ருக்க: சீக்கிரம் முடியா!"
விளையாட்டுக்கே இப்டி விழுந்து விழுந்து எழுத றாளே! நிஜமானா எப்டி எழுதுவாடி இவ யப்பா?
சசி கடிதத்தை எழுதி முடித்தாள். நித்யாவும் பூர்ணி யும், நெருங்கி வந்தனர். -
ஏண்டி நீங்களும் எழுதணுமா எழுதியாச்சா?
எழுதிட்டோமே" என்றனர் பூர்ணியும் நித்யாவும்.
ஓ.கே! இன்னிக்கு ஈவினிங்குள் அவங்கவங்க ஆளுக்கு எப்டியாவது சேத்துடுவோம். பத்து நாள் ஹாலிடேஸ்க்கு அப்புறம் பாரேன் அதது ரோமியோ கணக்கா வந்து வழியப்போறதை!
ஸ்வப்னா கண்சிமிட்டி சிரித்தாள்.
2
க்ரிச்
க்ரிச்
என்ற சப்தத்தோடு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்த ஜமுனா வாளி மேலே வந்ததும் கிணற்றுத் திட்டில் வாளியை வைத்துவிட்டு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டாள்.
ஏம்மா சந்துரு பாஸ் பண்ணிட்டா டில்லி மாமா நிச்சயம் வேலை வாங்கி குடுத்துருவாரில்ல?
ஏண்டி திடீர்னு சந்தேகம்? போனவாரம் கூட கடுதாசி வந்துச்சே, படிக்கலையா? வேலை ரெடி. இவன் பாஸ் பண்ணனும். சர்ட்டிபிகேட்டோட போகணும். வேலைல உக்காரணும். எடுத்த எடுப்புல ரெண் டாயிரம் கிடைக்குமாம்.
ஜமுனா மனசுக்குள் கணக்குப் போட்டாள். தங்கப் போவது மாமா வீட்டில். லோ தங்குமிடம் இலவசம். சாப்பாட்டுச் செலவுக்கென்று ஒரு ஐநூறோ அறுநூறோ கொடுத்து உபரி செலவாக ஒரு முன்னூறு ரூபாய் வைத்துக் கொண்டால் கூட மாசம் ஆயிரத்து இருநூறு ரூபாய் அனுப்பி விடுவான். ஆயிரத்து இருநூறு ரூபாய் அப்பா அம்மாவின் வயிற்றைக் கழுவ ஏதேஷ்டம். அதிலேயே அம்மா மிச்சம் பிடிப்பாள். ஆக அவளுடைய சம்பளத்தை எதிர்பார்க்க வேண்டிய நிர்பந்தமிருக்காது. சந்துருவுக்கு வேலை கிடைக்கும் வரையில் அவள்தான் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்தாக வேண்டும். அப்பாவின் பென்ஷன் வாடகைக்கும் பால் கார்டுகளுக்குமே காணாது என்ற நிலையில் வீட்டின் சம்பாதிக்கும் ஒரே நபர் அவள்தான். எனவேதான் தேடிவந்த மாப்பிள்ளையைக் கூட காத் திருக்கச் சொல்லி விட்டாள். பிரகாஷ் அவளோடு வேலை செய்பவன். -
சார் நான் வீடு கட்டப்போறேன். அதாவது இப்ப தான் மனை வாங்கியிருக்கேன். ஆபீஸ்ல வீடு கட்ட லோன் போட்ருக்கேன். ஒத்தை ரூம்ல சாப்ட்டு படுத்து, படிச்சு விளையாடி வளர்ந்தவன் நான், அதனாலதானோ என்னவோ சாகறதுக்குள்ள பெரிசா ஒரு வீடு கட்டி அதுல வசதியா வாழ்ந்துடனும்னு எனக்குள்ள வெறியே இருக்கு. அதனால வீட்டோட ப்ளானை பெரிசாவேபோட்டுட்டேன். லோன் பணத்தை விட டபுள் மடங்கு வேணும் அதை கட்டி முடிக்க. நான் உங்ககிட்ட வரதட்சணை கேட்ரு வேன்னு பயப்படவேண்டாம். எனக்கு தேவை என்னை மாதிரியே கை நிறைய சம்பாதிக்கற பொண்ணு. ஜமுனா சம்பாதிக்கறா. அவளைக் கட்டி குடுக்கணும்னா உங்களுக்கு எவ்ளோ செலவாகும்னு தெனக்கறிங்க.
அப்பா யோசித்தார். வசந்தி கல்யாணத்திற்கு நகை நட்டு பாத்திரம் பண்டம் புடவைகள் அடக்கம் சிம்பிளாய் பண்ணிகூட எழுபதுக்கு ஓடிவிட்டது. இப்போது இருக்கும் விலைவாசியில் அதே போல் பண்ணவேண்டும் என்றால் நிச்சயம் கூட பத்துதான் ஆகுமே தவிர குறையாது.
எல்லாமா சேர்த்து எண்பது ரூபா ஆகலாம்.
"அதுல பாதி அதாவது நாற்பதாயிரம் மட்டும் என் கைல கேஷா குடுத்துடுங்க போதும்.