Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhana Thendral
Santhana Thendral
Santhana Thendral
Ebook208 pages2 hours

Santhana Thendral

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Got “Izanthamilaringnar” award from Bharathiyar Manavar Tamil Mandram at 2001. Participating in Children’s Science Congress Conference in 2003. Submit Project in National Children’s Science Congress in 2003 under the title “ FOOD SYSTEMS – Towards Nutrition for all". Got 1st prize in Zone Level Drawing Competition by Temple Jaycees in 2005. District Level 2nd Prize in Tamil Poem Writing in 2006. Medical Transcription Training Academy’s EXCELLENCE AWARD Shield in 2007. District Level Prize in Tamil Short Story Writing in 40th National Library week Function.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110501332
Santhana Thendral

Read more from Shrijo

Related to Santhana Thendral

Related ebooks

Reviews for Santhana Thendral

Rating: 4.352941176470588 out of 5 stars
4.5/5

17 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhana Thendral - Shrijo

    http://www.pustaka.co.in

    சந்தனத் தென்றல்!

    Santhana Thendral!

    Author :

    ஸ்ரீஜோ

    Shrijo

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shrijo

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சந்தனத் தென்றல்!

    – ஸ்ரீஜோ

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் – 1

    காலைத் தென்றல் பாடி வரும்

    ராகம் புது ராகம்!

    பறக்கவே தோன்றும்

    சிறகுகள் வேண்டும்!

    என்று அந்த ஊரின் வெளியே உள்ள ஒரு டீக்கடையில் FM ல் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

    அதன் முன்னே போடப்பட்ட பெஞ்சில் இருவர் அமர்ந்து டீ குடித்துக்கொண்டு இருந்தனர்.

    என்ன அண்ணே, இன்னிக்கு ஊரே வெறிச்சோடிப் போயி இருக்கு?

    அதுவா மாரி, நம்ம சுப்பையா மகளுக்கு நாளனிக்கு கல்யாணமுள்ள. அதேன் எல்லாரும் அங்கன ஏதாவது சோலியப் பார்க்கப் போயிருப்பாக

    அங்கேயே டீத்தண்ணி வைச்சுடுவாக, கால பலகாரம் கூட 4 நாளைக்கு அங்கதேன்

    நான் மறந்தே போயிட்டேன்னே. இல்லாட்டி பால கம்மியா வாங்கியிருப்பேன்.

    விடு மாரி, மாப்பிள்ளை வெளியூர் தான. உறவுக்காரக யாராதும் வந்து போக இருப்பாக. எல்லாம் வித்துப்புடும்.

    இந்த பேச்சு ஓடிக்கொண்டு இருக்கையிலேயே, அந்த ஊருக்கு வரும் பஸ் வந்து நின்றது. தேனூர் இறங்குங்க, தேனூர் இறங்குங்க என்று நடத்துனர் குரல் கொடுத்தார்.

    அதில் இருந்து 3 இளம்பெண்கள் இறங்கினர்.

    ஏய் பிரியா, இந்த ஊர் இவ்ளோ தூரம் இருக்கும்னு நான் நினைக்கல

    அடி பாவி. பாரு மதி. நேத்து முழுக்க நாம சொன்னப்ப தெரில. இப்பக் கண்டு பிடிச்சுட்டா

    விடு ராதி. இவளப் பத்திதான் தெரியுமே

    சரி சரி மொதல்ல அந்த பாரதி வீட்டுக்கு வழி கேளுங்க

    அதென்ன கேளுங்க. நீ போய் கேளு

    ரெண்டு பேரும் இங்க இருந்து போற வரைக்கும் நான் சொல்றததான் கேட்கணும். ஓகே? இப்படி சண்டை போட்டிங்க நான் போற வரைக்கும் பேச மாட்டேன்.

    மதி சொன்னா சரி தான், இல்லடி ராதி?

    ராதி அவளை ஒரு லுக் விட, பிரியா வாயை மூடிக்கொண்டாள்.

    டீக்கடையில் இருந்தவர்களை அணுகி மதி வழி கேட்க ஆரம்பித்தாள்.

    அண்ணா

    என்னம்மா?

    இங்க சுப்பையாங்கறவங்க வீட்டுக்கு எப்படிப் போகணும்?

    நீங்க யாரு?

    நாங்க அவர் பொண்ணு பாரதி ப்ரிண்ட்ஸ். சென்னைல இருந்து அவக் கல்யாணத்துக்காக வரோம்

    அப்படியா, இந்த ஒத்த அடி பாதைல போனா கொஞ்ச தூரத்துல ஒரு கோவில் வரும், அதுக்கு பக்கத்துல இருக்கறப் பாதை வழியா உள்ள போகணும், போற வழில தோப்புல, இல்ல வயல்ல யாராவது வேலை செய்வாங்க. அவங்க கிட்ட கேளுங்க. சொல்வாங்க

    சரிங்கண்ணா தேங்க்ஸ் என்றவள் இருவரையும் அழைக்க, ஆளுக்கு ஒரு டிராவல் பாகை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர்.

    மூவரும் ஒரு வழியாக கோவிலை அடைந்தனர். அங்கிருந்து செல்லும் போது,

    இந்த பாரதி இவ்ளோ தூரம் நடக்க வைச்சுட்டாளே. அவளுக்கு இருக்கு!

    ஏய் பிரி இப்படியே போய் ஏதாவது ஏடாகூடமா வாய அங்கையும் விடாத

    ட்ரை பண்றேன் ராதி

    இப்படி நடக்க நல்லா இருக்கு

    மதி, நீ ஏன் சொல்ல மாட்ட. ஒரு கடை இருக்கா? ஒரு ஆள் தெரியறாங்களா? நீ ஒரு இயற்கை விரும்பி, உனக்குப் பிடிக்கலாம். பட் எனக்கு பிடிக்கல

    ராதி, சிட்டி லைப் தான் பெஸ்ட், பட் இது தான் அழகு

    ரெண்டு பேரும் சும்மா வாங்க. வழி கேட்க ஆள் ரெடி பண்ணனும்

    ரெடி பண்ணனுமா?

    ஆமா மதி. அப்புறம் எப்படி வீடு கண்டு பிடிக்கறது?

    இவ ஒருத்தி. ஆள கண்டு பிடிக்கணும் அப்படிங்கறத ரெடி பண்ணனும் அப்டிங்கரா, நீ அத வேற சீரியஸாக் கேட்கற!

    மூவரும் வழியில் யாரேனும் தென்படுகின்றனரா என்றுப் பார்த்துக்கொண்டே நடந்தனர்.

    அங்கு ஒரு கார் எதிரில் வர, பிரியா கை காட்டி நிறுத்தினாள். டிரைவர் வெளியே எட்டி பார்த்து, என்னம்மா?

    இங்க சுப்பையாங்கறவங்க வீட்டுக்கு எப்படிப் போகணும்?என்றாள் பிரியா.

    கொஞ்ச தூரம் போனா வெள்ளாமை வரும், அதுக்கு எதிரில் ஒரு பாதை பிரியும், அது போய் முடியற இடம் தான் அவங்க வீடு

    தேங்க்ஸ் அண்ணா என்றவள் மற்றவர்களிடம் விரைய,

    அந்த கார் நகர்ந்தது. அதில் இருந்த இரண்டு விழிகள் ஹே வழி கண்டுபிடிச்சுட்டேன் என்று ஓடிய பிரியாவையும், இவளே மண்ணை தோண்டிக் கண்டு பிடிச்சாலாம் ராதியையும் சத்தமா சொல்லாத, செய்யறேன்னு போயிடப் போறா என்ற மதியையும் ஆராய்ச்சியோடும், அதிர்ச்சியோடும்  பார்த்துக் கொண்டே காருடன் நகர்ந்தது.

    மூவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டே அடித்து பிடித்து விளையாடிக் கொண்டே வெள்ளாமையை அடைந்தனர். அதன் எதிரே இருந்த பாதையில் மற்ற இருவரும் நடக்க மதி வயல்கள் அருகில் நின்று செல்பி எடுக்க ஆரம்பித்து இருந்தாள். அவளைக் காணாது அவளைப் பார்த்த பிரியா அவளை பயமுறுத்த ஏய் பாம்பு பாம்பு என மதியை பார்த்து கத்தினாள்.

    அவள் கூற்றில் பதறியவள் பதட்டத்தில் வேகமாக வயலில் இருந்து பாதையில் ஏற, பிரியாவின் குரல் கேட்டு வெள்ளாமையில் இருந்து ஓடி வந்த ஒரு நெடியவனும் பிரியாவைப் பார்த்து ஓடிவர, இடையில் வந்த மதி மீது மோத இருவரும் கீழே விழுந்தனர்.

    விழுந்த மதி மெதுவாக எழுந்து உட்கார, வந்தவனோ வேகமாக எழுந்து பாம்பை தேடினான்.

    அதை கவனிக்காது வந்த பிரியா, ஹே சாரி மதி. ரியலி சாரி. உன்ன பயமுறுத்த தான் பொய் சொன்னேன் என்று கவலையாக சொன்னாள்.

    அதைக்கேட்ட மதி, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? பயந்து இந்த பக்கம் விழுந்தேன், அதே வயல்ல விழுந்து வைச்சு இருந்தா?

    ஏண்டி கீழே விழுந்தாலும் பரவாயில்லை, அந்த பக்கம் விழ கூடாதா அது ஏன்?

    எஸ், ஒரு செகண்ட்ல விழுந்து எழுந்து போய்டுவோம், இந்த செடிலாம் நசுங்கிடும், தென் இதுல இருந்து வர கிரைன்ஸ் வரமா போய்டும், இதனால இத பயிர் பண்றவங்களுக்கு நஷ்டம்

    உங்கிட்ட கேட்டதுக்கு என்ன நானே அடிச்சுக்கணும்

    ஏங்க பட்டணத்து புள்ளைங்க அப்படிங்கறது சரியாத்தான் இருக்கு, கொஞ்ச நேரத்துல இப்படி கலாட்டா பண்றீங்க. இங்க இருக்கற வரைக்கும் ஒழுங்கா இருங்க. இல்ல அவ்ளோதான் என்று அந்த நெடியவன் கத்தி விட்டுச் சென்றான்.

    இருவரும் பிரியாவை திட்டிக்கொண்டே வர ஒரு வழியாக மூவரும் பாரதியின் வீட்டை அடைந்தனர்.

    அத்தியாயம் – 2

    அங்கு குழுமி இருந்த மக்கள் அனைவரும் அவர்களைப் பார்த்த பார்வையில் யார் இவர்கள் என்ற கேள்வி தெரிந்தது.

    பாரதியின் அம்மா அவர்களைப் பார்த்ததும், ஏல பிள்ளைங்களா? வந்துட்டீயலா? என்று ஓடி வந்தார்.

    வாங்க பிள்ளைங்களா. என்று பாரதியின் தந்தையும் வந்து சேர்ந்தார்.

    வரோம் மா, வரோம் பா என்று மூவரும் கோரசாகச் சொன்னார்கள்.

    என்னம்மா ராதி போன தடவ பார்த்தப்ப இருந்தத விட இளைச்சுட்ட என்றார் பாரதியின் அம்மா.

    என்னம்மா பண்றது. வர வர ஹாஸ்டல் சாப்பாடே சரி இல்ல

    சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ எங்க பாரதி மாறி!

    கடவுளே. ஏன்மா அண்ணா கொஞ்ச நாள் ஜாலியா இருக்கட்டுமே. அதுக்குள்ள இவகிட்ட மாட்ட சொல்லறிங்க என்று இடையிட்டாள் பிரியா.

    ஏய். உன்ன வாய வைச்சுகிட்டு சும்மா இருக்க சொன்னேன் என்றாள் மதி.

    விடு மா என்ற சுப்பையா ஏல பிள்ளைங்கள கூட்டி போய் அங்கன தோட்டத்து வீட்டுல பாரதி கூட விடு. சாப்பிட குடிக்க ஏதாவது தா. பாவம் ரா முழுக்க கண் விழிச்சு வந்துருக்குங்க என்று மனைவி ராணியிடம் சொன்னார்.

    ராணி அவர்களை தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    ஏய் மதி என பாரதி ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

    என்னமாக் கல்யாண பொண்ணு? எப்படி இருக்க?

    நல்லா இருக்கேன் மதி. நீ எப்படி இருக்க?

    ஏய் இங்க நாங்க ரெண்டு பேர் இருக்கோம் என்று பிரியா கூற,

    அதானே, என்ன மறந்துட்டியா? என்றாள் ராதி.

    ஹே அப்படி இல்ல மா! சரி வாங்க குளிக்கப் போலாம்

    இந்த வீடு சூப்பர் பாரதி

    இது எங்க பெரியய்யா வீடு மதி. எங்க வீடு பத்தாதுன்னு அப்பாரு இங்க தங்கக் கேட்டாக!

    என்னடி இங்க வந்ததும் பாஷை மாறிடுச்சு என பிரியா கிண்டல் அடிக்க,

    ஏய் இது தான் அவ ஒரிஜினல் பாஷை என ராதிகா கூறினாள்.

    பின் அனைவரும் அங்கிருந்த குளியல் அறையில் குளித்து, உணவருந்தி குட்டி தூக்கம் போட்டு எழுந்து மதிய உணவு அருந்தி கலகலத்துக் கொண்டு இருந்தனர்.

    அன்று மதியம் மேல் பாரதிக்கு நலங்கு வைத்து வளையல் அடுக்கினர்.

    இவர்கள் மூவரும் வளையல் அடுக்கி முடித்து அங்கிருந்த சிறு சிறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ராணி அவர்களை அழைத்து, நீங்க சும்மா வேடிக்கை பாருங்க பிள்ளைகளா. இங்கன சிலர் சம்பிரதாயம் பார்ப்பாக. தப்பா எடுத்துக்காதீங்க

    சரிங்கம்மா என்றவர்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் போர் அடிக்க, காலாற நடந்து வர முடிவு செய்தனர்.

    ராணியிடம் சொல்லிவிட்டு, மூவரும் உலவச் சென்றனர். ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தனர்.

    அருகில் ஒரு தென்னந்தோப்பை பார்த்த மதி, ஹே இங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் பா. என்னால இதுக்கு மேல நடக்க முடியாது என்று அந்த தோப்புக்கு அருகில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்தாள்.

    நீ இங்கயே இரு. நாங்க இந்த பக்கம் ஒரு ரவுண்ட் அடிக்கறோம். என்றாள் பிரியா.

    சரி பத்திரம் என்ற மதி போனை நோண்ட ஆரம்பித்தாள்.

    அங்கு இருந்த ஆட்களிடம் சலசலத்துக் கொண்டே ராதியும், பிரியாவும் அந்த தோப்பில் ரவுண்ட் அடித்துக் கொண்டு இருந்தனர்.

    என்னங்க. இங்க உட்கார்ந்து இருக்கீங்க. உள்ள போலாம்ல? என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட மதி காலையில் தன் மீது மோதியவனைக் கண்டு எழுந்தாள்.

    நான் தாங்க. காலைல மோதிக்கிட்டோமே. என் பேர் சின்னத்துரை

    மெலிதாக புன்னகைத்தவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.

    நான் ஒன்னும் கடிச்சு திங்க மாட்டேன். கவலைப் படாதிங்க என்று அவன் சிரித்தான்.

    அப்படிலாம் ஒன்னும் இல்லை சார். லேட் ஆச்சு! அதான் என்றவள் ராதிக்கு அழைத்தாள், ஏய், வாங்கடி போகலாம்

    வரோம் டி என்ற ராதி ஹே வா போலாம். பாவம் அவள தனியா விட்டுட்டு வந்துட்டோம் என்று பிரியாவிடம் கூறினாள்.

    போனை கட் செய்த மதி, ஓகே சார். என்று அவனது பதிலுக்கு கூட காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

    ஹலோ. ஒன் மினிட்

    என்ன என்பது போலத்

    Enjoying the preview?
    Page 1 of 1