Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Therodum Veethiyiley
Therodum Veethiyiley
Therodum Veethiyiley
Ebook156 pages50 minutes

Therodum Veethiyiley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kove.Manisekaran has been publishing for more than 50 years. He has written 8 plays, 29 short story collections, 30 social novels, 50 historical novels and 8 essays. He is most noted for his historical novels. In 1992, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Kurrala Kurinji. He has also directed two Tamil and one Kannada film. He was an assistant to noted Tamil film director K. Balachandar for three years. His film Thennankeetru won the Tamil Nadu film fans association award and the Government of Karnataka's Neerikshe award.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545498
Therodum Veethiyiley

Read more from Ilakkiya Samrat Kove. Manisekaran

Related to Therodum Veethiyiley

Related ebooks

Related categories

Reviews for Therodum Veethiyiley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Therodum Veethiyiley - Ilakkiya Samrat Kove. Manisekaran

    http://www.pustaka.co.in

    தேரோடும் வீதியிலே

    Therodum Veethiyiley

    Author:

    இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன்

    Ilakkiya Samrat Kove. Manisekaran

    For more books
    http://www.pustaka.co.in/home/author/kove-manisekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    பாராட்டுக் கடிதம்

    அருட்செல்வர் நா. மகாலிங்கம்

    அன்புடைய திரு. கோவி. மணிசேகரன் அவர்கட்கு, வணக்கம்.

    உங்களுடைய ‘தேரோடும் வீதியிலே...’ என்ற பெருங்கதையைப் படித்தேன். மகிழ்வுற்றேன். திறமையுடனும் சிந்தனையுடனும் தமிழ் மக்களின் பழங்காலம் குறித்துக் கற்பனையை ஓட விட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

    தமிழனுடைய பழங்காலத்தைக் கற்கால அநாகரிக நிலையில் சிலர் எழுதுகிறார்கள்.

    பெங்களூரிலிருந்து நான் வந்த பின்னர் சந்திப்போம்.

    நீங்கள் பழந்தமிழ் மக்கள் சரித்திரம் பற்றி (லெமூரியா பற்றி) ஒரு பெரிய புதினம் ஒன்றை எழுதலாம் என்று கருதுகிறேன். நேரில் பேசி முடிவு செய்யலாம்.

    உங்கள் திறம் மேலும் வளர்ந்து தமிழ்த் தாய்க்குச் சிறப்பாக அமையப் பிரார்த்திக்கின்றேன்.

    அன்புடன்

    (ஒப்பம்) நா. மகாலிங்கம்

    1

    நீலவான் வீதியிலே கோலமா மணிப் பிழம்பு, ஒளி வண்ணத் தேரேறிக் கிழக்குமுகம் பொன் கொழிக்க வழக்கம் போல் பவனி வரத் தொடங்குகிறான்.

    புலர்ந்து விட்ட புத்துணர்வில் கண்மலர்ந்த புள்ளினங்கள் புறநீர்மையாய்ப் பண்ணிசைத்து விண்ணில் சிறகடித்து மண்ணைத் துயிலெழுப்புகின்றன.

    காலைப் போதின் பொற்கிரணங்கள் பட்டுத் தமிழ்ப் பெரும் தலைநகராம் கவாடபுரம், பொன்னனைய புதுப்பொலிவாய்த் திகழ்ந்து பூரித்துப் புளகிக்கிறது.

    குமரி நாட்டின் அழகை ஆயிரம் பிறவிகளாய்க் கவிஞராகப் பிறந்தும் ஆயிரம் நாவாலும் வருணித்து அலச முடியாதே என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார், இசைப் புலமை மேதை சிகண்டியார்.

    துயில் கலைந்த மன்னர் கடுங்கோன் பாண்டியன், மேன்மாடத்துக்குச் சென்று கதிரவனைக் காண்கின்றார்.

    அப்படியே தமது தலைநகரையும் கண்ணோட்டமிடுகிறார்.

    ஆ! இந்தக் கவாடபுரமாவது நிலைத்து நீடூழி வாழட்டும் என்று வாழ்த்திக் கொள்கிறார்.

    முதலாவது ஏற்பட்ட கடற்கோளால் பாண்டிய நாடு எவ்விதமாகவெல்லாம் அல்லல்பட்டு, தென் மதுரை அழிந்து, முதற்சங்கம் முறிவு கண்டு, பின்னர் ஏற்பட்ட தொல்லைகள்...

    அம்மம்மா....!

    இந்த இரண்டாம் தமிழ்ச் சங்கத்தைக் காக்க மீண்டும் எந்தவிதக் கடற்கோளும் ஏற்படக் கூடாது என்பது அவரது பிரார்த்தனையாக இருந்தது.

    காலைக் கடனை முடிக்க மேன்மாடத்தை விட்டு இறங்கி வருகிறார் கடுங்கோன் பாண்டியர்.

    அதற்குள்ளாகவே தமது மைந்தன் - பாண்டிய இளவரசன் செழியன், துயில் கலைந்து, காலைக்கடன்களைத் துப்புரவாக முடித்து, ஆடையலங்கார ஒப்பனைகளுடன் எங்குப் புறப்பட்டுவிட்டான்?

    ஓரிடமாக நின்று தமது ஒரே அருமந்த புதல்வனை நோக்குகிறார்.

    கொஞ்ச நாட்களாகவே தந்தைக்கும் மைந்தனுக்கும் ஒரு சின்ன விஷயத்தில் - சே! காதல் என்ன சின்ன விஷயமா? அது எத்தனை பெரிய விஷயம் - அது விஷயத்தில் மனக்கசப்பு கண்டிருந்தது. அந்தக் கசப்பை எவ்விதமாக இனிப்பாக்குவது என்பதில் இருவருமே இருவெறு கோணங்களில் தத்தமது சிந்தனைப் புரவிகளைச் செலுத்திப் பயணத்தின் முடிவைத் தேடி ஆராய்ந்து வந்தனர்.

    என்றைக்குமே இல்லாத விதத்தில் நன்கு அலங்கரித்துக் கொண்டு வெளியில் புறப்பட்ட பாண்டிய இளவரசன் செழியன், வழியில் நின்றிருந்த காவற் பணியாளனிடம் ஏதோ இரகசியமாகச் சொல்லுகிறான்.

    அதனையும் கூர்ந்து கவனிக்கிறார் கடுங்கோன் பாண்டியர்.

    என்ன சொல்லுகிறான்...?

    வெளியில் சென்ற இளவரசன் செழியன், தனக்கென்றே அயல் தேசத்திலிருந்து தருவித்திருந்த வெண்புரவியில் ஏறிக்கொண்டு கிழக்குமுகம் நோக்கி வேகமாக விரைகிறான்....

    அவனது அந்த விரைவை நோக்க, ஏதோ சூரியன் அவசரமாக வானவீதியில் ஏறிச் சென்று விடப் போகிறான்; அதற்குள் அவனை எட்டிப் பிடித்து இரண்டொரு வார்த்தை பேசிவிட வேண்டும் என்பது போல இருந்தது.

    மெல்ல அந்தக் காவற்பணியாளன் அருகே வந்தார், மன்னர் கடுங்கோன் பாண்டியன்.

    மன்னர் அருகே வந்ததும் மலைத்துப் போன அந்தக் காவற்பணியாளன், அங்கம் முழுவதும் நடுநடுங்கக் கரங்கூப்பித் தலைவணங்கினான்.

    இளவரசன் எங்குச் செல்கிறான்?

    அவன் பேந்த விழிக்கிறான்....

    ஏதோ இரகசியமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறானே? இத்தனை காலையில் எங்கே செல்கிறான்?

    மலயத் தீவுக்குச் செல்கிறார், அமைச்சர் பெருமானார் கேட்டால் செய்தி அறிவிக்குமாறு கட்டளையிட்டார். வருதற்கும் அந்தி சாய்ந்து விடும் என்று அறிவிக்கச் சொன்னார் மன்னர் பெருமானே!

    மலயத்தீவு என்றதும் மன்னருடைய சிந்தனைகள் மீண்டும் அலைமோதிக் கொள்கின்றன.

    ஓ... அந்தக் கறுப்புமுத்துவைக் காணச் செல்கிறான். அவளை இத்தனை காலையில் கண்டுகளிக்க என்ன இருக்கிறது?

    சிந்தனைப் போராட்டத்துடன், தமது காலைக்கடன்களை முடித்துப் பின்னர் அமைச்சர் பெருமானுடன் ஆய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று எண்ணி நடக்கிறார்.

    மிகவும் அதிவேகத்துடன் புறப்பட்ட செழியன் நேரே கடற்கரையை அடைகிறான்...

    அடைந்த வேகத்துடன் அந்த வெண்புரவியை விட்டிறங்கித் தட்டிக் கொடுத்தான். அளவுக்கு மீறிய வேகத்துடன் வந்ததால் குதிரையின் வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது.

    காலைக் கடற்கரைக் காற்றானாலும் விடிந்து பத்து நாழிகைக்கு மேலாய்விட்டதால் சூரியனின் வெப்பம் சுரீல் என்று தைத்தது. இளவேனில் காலத்து வெப்பம் கடற்கரைக் காற்றுடன் இணைகிற போது ஓர் அலாதியான சுகமாகவே அது இருந்தது.

    பரந்து விரிந்த நீலக்கடலைக் கவனிக்கிறான். தொலைவில் பெரிய நாவாய் ஒன்று வந்து கொண்டிருக்கிறது.

    தான் வருவதற்குள் இவர்கள் வந்திருப்பார்கள் என்று நினைத்தால் இத்தனை காலதாமதாமாக வருகிறார்களே, சோம்பேறிகள் என்று மனத்துள் முணகிக் கொள்கிறான்.

    சற்றைக்கெல்லாம் அந்த நாவாய் கரையை அடைகிறது.

    அதில் மூவர் அமர்ந்திருந்தனர்.

    காட்டுவாசிகளான அவர்கள் மேனியில் இடுப்பில் மட்டும் துணி இருந்தது. மற்றபடி சங்குகளாலும் வண்ணக் கிளிஞ்சல்களாலுமான ஆபரணங்களை அணிந்திருந்தனர். தலையில் தட்டு மாதிரியான ஒரு தலையணி. அதில் வண்ண வண்ணமான இறகுகள்.

    அந்நாளைய குமரிக்கண்டத்தில் தோற்றமளித்த பாண்டிய மன்னர்களையும், அவரைச் சார்ந்த பரிவாரங்களையும் தவிர ஏனைய மக்களினமே ஆதிவாசிகள் தாம். முன்தோன்றிய மூத்த குடி என்று தமிழிலக்கியங்கள் பறைசாற்றும் தமிழர்க்குடி, ஆதியில் குமரிக் கண்டத்தில்தானே தோற்றமளித்ததாக வரலாறு.

    ¹

    குமரிநாட்டின் இளவரசன் செழியனைக் கண்டதும் அந்த மலயத்தீவின் ஆதிவாசியினர் நாவாயை விட்டிறங்கி வந்து, காலில் விழுந்து வணங்குகிறார்கள். பின்னர் எழுந்து, பத்தடித் தொலைவில் போய் நிற்கிறார்கள்.

    ஏன், இவ்வளவு காலதாமதம் என்றான் பாண்டிய இளவரசன் செழியன். அவனது குரலில் கோபத்தின் கடுமை தெறிக்கிறது.

    மூவரில் ஒருவன் மெல்லக் கூறுகிறான்: "இடையில் ஒரு பிரச்சினை. எங்கள் இளவரசியின் தோழியர் செல்லியை எங்களுடன் அனுப்புவதா வேண்டாமா என்கிற பிரச்சினை. எங்கள் தலைவர்

    ² மலயமான் கீர்த்தி எண்ணமோ தோழிப்பெண் செல்லியை அனுப்பி வைத்து

    Enjoying the preview?
    Page 1 of 1