Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Peraanmai
Peraanmai
Peraanmai
Ebook89 pages49 minutes

Peraanmai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kove.Manisekaran has been publishing for more than 50 years. He has written 8 plays, 29 short story collections, 30 social novels, 50 historical novels and 8 essays. He is most noted for his historical novels. In 1992, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Kurrala Kurinji. He has also directed two Tamil and one Kannada film. He was an assistant to noted Tamil film director K. Balachandar for three years. His film Thennankeetru won the Tamil Nadu film fans association award and the Government of Karnataka's Neerikshe award.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545511
Peraanmai

Read more from Ilakkiya Samrat Kove. Manisekaran

Related to Peraanmai

Related ebooks

Reviews for Peraanmai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Peraanmai - Ilakkiya Samrat Kove. Manisekaran

    http://www.pustaka.co.in

    பேராண்மை

    Peraanmai

    Author:

    ராட்சஸன்

    Raatchasan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/kove-manisekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    விடிவு கிடைக்காத ஏழைகளுக்கு விடிந்தென்ன மடிந்தென்ன என்பது போல் அந்தக் காலைப்போது அழுது கொண்டே பிறந்தது.

    வெளியில் கார்த்திகை மாதத்து மழை அடம் பிடித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலும் குடிசைவாழ் பகுதியாதலால் ஒவ்வொருவரும் அந்த மழையைத் தங்கள் நோக்கம், பிழைப்பு, வாழ்வு கருதி வயிற்றெரிச்சலுடன் வசைமாரிப் பொழிந்து கொண்டார்கள்.

    அந்தப் பகுதியின் ‘பிஸ்தா’ ராமு கண்ணு, ….த்தா எங்கேயோ பேய வேண்டிய மழை இங்கே பெஞ்சு நாசம் பண்ணுது… இது எப்போ நிக்கிறது. தொயில பாக்கறது? என்று தனது பகுதிக்கே உரிய பாஷையில் முணு முணுத்துக் கொண்டான். அணைந்து அணைந்து பேஜார் பண்ணிக் கொண்டிருந்த பீடி முனையைத் தனது முன்பல்லால் கடித்துத் துப்பி மீண்டும் பற்ற வைத்தான்.

    சற்றே தள்ளிச் சில ஓடு வீடுகள்

    அவற்றுள் ஒன்றின் வாழ்க்கை நடத்துபவன் தான் ‘அலேக்’ நிரஞ்சன்.

    ஒரு வாரமாக நாடகமில்லை.

    அடுப்பில் மழைநீர் கொட்டிக் கொண்டிருந்தது.

    வேறு சில இடங்களில் அலுமினிய பாத்திரங்கள், ஓடுகளின் ஒழுக்கல்களை ஆங்காங்கே நிறைவு செய்து கொண்டிருந்தன.

    அகோரமான பசி: அத்துடன் இந்தக்கோரம் வேறு.

    கௌசல்யாவின் கண்களில் நீர் சொட்டுகள்.

    ‘இந்த மாசமே எரிச்சலைக் கொட்டிக்கொள்கிற மாசம்: அதுதான் எரிச்சலைத் தணிக்க மழை பெய்கிறது’ என்று மனத்துள் முனகிக் கொண்டே அன்றைய தினம் பத்திரிகையில் அந்த வார பலனைப் படித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

    தெனம் பேப்பர் வாங்கறதில கொறைச்சல் இல்லே கௌசல்யாவின் முனகல் காதுகளில் நுழைகிறது. அவன் கண்டு கொள்ளவில்லை. இந்த மாதம் முழுவதும் ஒருவேளைச் சோற்றை உருப்படியாகச் சாப்பிடவில்லை. சில நாட்களில் மூன்று வேளையும் இட்லி, மிளகாய்ப்பொடி.

    அவள்தான் என்ன செய்வாள்?

    கௌசல்யாவின் அழகு, கவிதையில் எழுதவேண்டியது அவளது ஒவ்வொரு அங்கங்களும் புதுக்கவிதைகள்.

    கௌசல்யா சுப்ரபாதத்துக்கு எத்தனை மிகுந்த மதிப்பு இருக்கிறதோ அத்தனை மதிப்பை அவளிடம் வைத்திருக்கிறான் நிரஞ்சன்.

    நல்ல குடும்பத்தில் பிறந்து ஒரு நாடக நடிகனுக்கு வாழ்க்கைபட்டுவிட்டாள். படலாமா? செருப்பால் அடித்துக் கொள்ளக் கூடிய தண்டனையல்லவா அது?

    எப்படியும் தன்னுடைய கைத்தலம் பற்றிய கணவர், சினிமாவில் மிகப்பெரும் காமடி நடிகனாவார்: கஷ்டங்களின்றி காரில் பறக்கலாம் என்று கனாக் கண்டவள். இப்போது கனவு சரிந்து கதையே முடிந்து போகுமோ என்கிற நிலை வந்த போது…

    பாவம்! கௌசல்யா என்ன செய்வாள்?

    நிரஞ்சன் நாடகத்தில் காமடி செய்வதில் அசகாயசூரன். சந்தர்ப்பங்களில் ‘ஸ்பாண்டேனியஸ் பஞ்ச்’ அடிப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான். ‘முந்திரிக்கொட்டை’ என்ற நாடகத்தில் அவன் எதற்கெடுத்தாலும் முந்திக் கொண்டு ‘அலேக் அலேக்’ என்று அடிக்கொரு தடவை உச்சரித்த வசனம்…

    ஆ! சபாஷ் போடாத வாய்களில்லை.

    அது முதற்கொண்டு அவனுக்கு ‘அலேக்’ நிரஞ்சன் என்கிற பட்டம்… தேங்காய் சீனிவாசன் என்பது போல…

    நாடகத்தில் சபாஷ் வாங்குகிறானே தவிர, ஒரு சினிமா தயாரிப்பாளர் இந்தச் சபாஷூக்கு முழுதான அர்த்தம் கற்பித்துத் தூக்கிவிட வேண்டுமே!

    ஆண்களாக வருகிற புதுமுகங்கள் படுகிற பாட்டையெல்லாம் பட்டு அலுத்துப் போனவன் நிரஞ்சன்.

    பெண்ணா? சினிமாவில் எப்படியும் வாய்ப்பு பிடித்து விடலாம் என்பதற்கு? அதுவும் அழகான பெண்ணாக இருந்தால் கதையே வேறு…

    நிரஞ்சனைப் போன்றவர்களைப் பேட்டிகாணத் தொடங்குவார்களேயானால் வருடந்தோறும் பத்திரிகைகளுக்குத் தீனி கிடைக்கும்.

    பேட்டி காண்பார் யார்? அதற்கும் பெண்கள்தான்!

    சிவப்பு ரோஜா மன்னன் புஷ்பா தங்கத்துரையும் கூட, அவர்களைப் பற்றித்தானே சிந்திக்கிறார்! எழுதுகிறார்!’ என்று சலித்துக் கொள்வான் நிரஞ்சன்.

    பக்கத்து வீட்டுக்காரப் பையன் டீக்கடையிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1