Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adhu Thunbamaana Inbamaanathu!
Adhu Thunbamaana Inbamaanathu!
Adhu Thunbamaana Inbamaanathu!
Ebook140 pages1 hour

Adhu Thunbamaana Inbamaanathu!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580109901323
Adhu Thunbamaana Inbamaanathu!

Read more from Kanchana Jeyathilagar

Related to Adhu Thunbamaana Inbamaanathu!

Related ebooks

Reviews for Adhu Thunbamaana Inbamaanathu!

Rating: 4.4 out of 5 stars
4.5/5

10 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Nice story ......one of the best romantic novels. I enjoyed well.

Book preview

Adhu Thunbamaana Inbamaanathu! - Kanchana Jeyathilagar

http://www.pustaka.co.in

அது துன்பமான இன்பமானது

Adhu Thunbamaana Inbamaanathu!

Author:

காஞ்சனா ஜெயதிலகர்

Kanchana Jeyathilakar

For more books

http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

1

அவளுக்கு அது முதல் விமானப் பயணம். ஆனால் எந்தப் பதட்டமுமின்றியேத் தெரிந்தாள்.

உடலில் அநாவசிய சலனங்களோ முகத்தில் சஞ்சலமோ ஏதுமற்ற நிதானம்.

தன் சுபாவமே இப்படித்தானா அல்லது தன் படிப்பும் அதன் நிமித்தம் அளிக்கப்பட்ட பயிற்சிகளும் தன்னை இப்படி செதுக்கியதா என்பதை அறியாள்.

அவளது பயணம் திருச்சியிலிருந்து மங்களுருக்கு

அதிக தூரம் இல்லையெனினும் இடையே சென்னையைத் தொட்டு விட்டுத் தொடர்ந்த பயணம் என்பதால் ஏறக்குறைய மூன்று மணி நேரம். அத்தனையையும் அமைதியாய் ரசித்தாள்.

பெட்டிகளை ஸ்கேன் செய்து அனுப்பி, கைப்பையில் லக்கேஜ் - டாக் கட்டுவது, விமானம் வானில் எம்பும் போது அடிவயிற்றின் ச்சீலிர், சக பயணிகளின் பேச்சு, பணிப்பெண்களின் நளினம் அத்தனையம் சுவாரஸ்யந்தான்.

ஆனால் மேகங் களுக்கு மேல் பறந்த விமானம், மங்களுரை நெருங்கி, தாழ்ந்ததும் ஆதிசயித்துப் போனாள்.

தூத்துக்குடி, சென்னை போன்ற கடற்புர நகரங்களுக்குப் போன சமயங்களில் ஓரிரு முறை கடல் நீரில் அவள் கால் நனைத்ததுண்டு. ஆனால் பறந்தபடி பார்த்த கடலின் பிரமாண்டம் சிலிர்ப் பூட்டியது. மறுபக்கம் மலையின் கம்பீரம் மிரட்டியது.

நிலப்பரப்பை பசுமையாய் காட்டிய, பாக்கு, தென்னந்தோப்புகள்.

நீருக்குள் மூக்காய் நீண்டிருந்த மலை விளிம்பைத் தொட்டு, தவ்வி, ஒடி நின்றது விமானம்.

மற்ற பயணிகள் யாரும் மலையும் சமுத்திரமும் சேர்ந்த அந்த அபூர்வ நிலப்பரப்பைக் கவனித்த தாயும் கூட தோன்றவில்லை. பலர் அரைத் தூக்கத் திலும், சிலர் புத்தகத்திலோ பேச்சிலோ அமிழ்ந்திருந்தார்கள். நேர்கோட்டில் மறு கோடியில் உட்கார்ந்திருந்த பெண் மட்டும் நிலப்பரப்பின அழகை பார்ப்பது போலிருந்தது. உயர்த்திய கண்களால் இவளைத் தொட்ட அப்பெண் புன்னகைக்க இருவரும் இயல்பாய் புன்னகைகளைப் பரிமாறிக் கொண் டார்கள்.

'எனக்கு மங்களுரில் வேலை கிடைச்சிருக்குது சித்தி’ என்றிவள் சொன்னபோது, சித்திக்கு, அந்த ஊரின் பெயரேக் கூட பரிச்சயமாயில்லை!

பள்ளிப் படிப்பை முழுதாய் முடிக்காத சித்திக்கு பொது அறிவிலும் நாட்டமில்லையே.

பெங்களுரு தெரியும் - அதென்ன மங்களுரு?

அது கர்நாடகாவின் துறைமுகப் பட்டணம். பெங்களுரிலிருந்து 350 கிலோ மீட்டர்.

அப்பாவிற்குப் பேச முடிந்திருந்தால்,

‘மேற்கு மலைத் தொடரை ஒட்டி, அரேபியக் கடலோரமுள்ள அக்காலத்து துளு நாடு. இந்தியாவின் எட்டாவது சுத்தமான நகரம் கூட" என்று தகவல்களை அள்ளி தந்திருப்பார். புத்தக வாசிப்பது அப்பாவிடமிருந்து இவளுக்கு வந்திருந்த பரிசு.

பக்கவாதத் தாக்குதலுக்குப் பிறகு அப்பா படுக் கையில் தான். பேச்சும் குழற, அத்தியாவசியத்திற்குத் தவிர அவர் பேச முனைவதில்லை.

அம்மா,அதாவது அவரின் மூத்த மனைவி இருந்த போதும் கூட அப்பா கலகலப்பாய் பேசுபவரில்லை. அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதோடு சரி. ஆனால் முகம் தெளிவாய் இருக்கும்.

‘வயசுப் பொண்ணைத் தனியா வளத்திடுவியா நீ?" என்று உறவினர் அவருக்கு ஒரு பெண்ணை மறுபடி மனைவியாக்க முயன்று, ஜெயித்த பின்பு அவர் கண்களின் ஒளி மங்கி விட்டதாய் மகளுக்குப் பட்டது. பரிதாபப்பட்டதோடு ஒதுங்கிக் கொண்டாள்… வேறென்ன செய்ய?

ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு, பணியிலிருந்து அப்பா ஒய்ந்த பின் சித்தியின் பிடுங்கல் அதிகமானது

'மாத்திரை மாயம்னு செலவு மீறுதுல்ல? நர்ஸ் படிப்பு டாக்டருக்கும் மேலேம்பாங்க… ஆனா உன் சம்பளம் மட்டும் அடி மட்டத்துல கிடக்கே?'

அதற்காகத்தான் இவள் வேற்றுார்களுக்குப் போனது.

தங்குமிடமும் உணவும், இவள் நோயாளிகளுடனேயே தங்கி விடுவதால் செலவின்றிப் போக, காசு மொத்தமும் போவது சித்தியின் கைகளுக் குத்தான், அப்பா வாடிக் கொண்டே போனாலும் சித்தி செழிப்பாய் தெரிவாள். உடம்பில் நிறைய நகைகள்.

'எல்லாம் பழசு தான். பாலிஷு போட்டது’ என்று இவள் கேட்காவிட்டாலும் விளக்கம் வரும்.

சித்திக்குக் குழந்தைகளில்லை.

‘அதிலெல்லாம் ரொம்ப கவனம். மூத்த சம்சாரத்துக்கு ஒண்ணு. இளையவளுக்கு எதுவுமில்லன்னு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டாரு. எனக்கு மலடிங்கற பழி வந்தா அவருக்கென்ன? பரப்பிரம்மம்? செழித்த அவளது உடம்பு குலுங்கும்!

இவளும் சித்தியிடம் தன் வேலையைப் பற்றியோ, அதில் எழும் பிரச்சனைகளைப் பற்றியோ பகிருவதில்லை. சித்தி அது பற்றிய பேச்சை எடுத்ததுமில்லை.

ஊருக்கெல்லாம் சேவகம் பண்றா பொண்ணு. ஆனா இவ அப்பனுக்கு எல்லாம் நாந்தான் பாக்கணும். முதுகு ஒடியதுடா அப்பா

உடம்பை நெளித்து நிமிர்த்துவாள்.

ஆக இந்த மங்களூர் வேலை பற்றிச் சொன்ன துமே

திருச்சியிலேயே ஏதுங் கிடைக்காதாக்கும்? என்று முகம் தூக்கினாள்.

அங்கே நல்ல சம்பளம் தர்ரதாய்...

நல்லான்னா - மாசம் ஒரு லச்சமா?

சித்திக்கு மற்ற விவரங்கள் கம்மி என்றாலும் நக்கல் அதிகம்!

'முப்பதாயிரம், தங்குமிடம், உணவிற்குச் செலவில்லையே சித்தி? "

ஆக ஆறேழு மாசம் வேலை பாத்தாலே ரெண்டு லச்சம் கைக்கு வந்திடும்?

அந்தக் கேள்வி தான் அவளது சம்மதம்.

அப்பா முகம் திரும்பிக் கொள்வதைப் பார்த்தாள் - அழுகிறாரோ? அவரருகேப் போய் அமர்ந்து தலையையும் முதுகையும் நீவி விட்டாள். கைப் பற்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள். இவளுக்குமே அப்பாவை அருகிருந்து அவர் உடம்பைத் தேற்றத்தான் ஆசை. பிஸியோதெரப்பி, சரிவிகித உணவு, பாசமும் கரிசனையும் சேர்ந்தால் அப்பாவின் ஆரோக்கியம் நிற்கும். ஆனால் காசு கேட்டு சித்தி பிடுங்கி விடுவாள்.

மங்களூரிலிருந்து பேசிய முகமறியாத அந்த மூதாட்டியின் குரலிலும் பாசப் பதட்டம் இருந்தது.

டாக்டர். ராவ் உன்னைத்தாம்மா சிபாரிசு செய் தார். நீ வந்தால் எம் பேரன் தேறிடுவாங்கற மாதிரி டாக்டர் பேசினார். சீக்கிரம் வந்திடம்மா... ப்ளைட் டிக்கெட் அனுப்பிடறேன்.

*****

விமான நிலையத்தின் ஓய்வு அறைக்குச் சென்றவள் தனது தோற்றத்தை சீராக்கிக் கொண்டாள். சற்று எண்ணை வடிந்திருந்த முகத்தைக் கழுவித் துடைத்ததோடு சரி - பவுடர் ஒற்றவில்லை.

இரு பெட்டிகளையும் உருட்டியபடி வாசலுக்கு வந்தாள்.

பயணிகளை வரவேற்க அங்கே சிறு கூட்டம் நின்றது. சிலர் கைகளில் பெயர் அட்டைகள்.

தான் ப்ரீ - பெய்ட் டாக்ஸி ஒன்றை எடுத்து, 'கொடிவேரி’ போய்க் கொள்ள வேண்டியது.

இயல்பாய் அட்டையின் பெயர்களை நோட்டமிட்டவளின் கண் உறைந்தது. தன் பெயருள்ள அட்டையைக் கண்டதினால் மட்டுமல்ல. அதைப் பிடித்திருந்தவனைப் பார்த்ததும்தான்.

ஆள் அழகன்!

காற்றில் எம்பிய தலைமுடியுடன் இறுகிய காலர் டி-ஷர்ட், ஜீன்ஸில் அவன் கவர்ச்சி யாய் இருக்க, பலரின் கண்கள் அவனை நிதானமாய் தடவிச் சென்றதையும் கவனித்தாள்.

இவன் டாக்ஸி டிரைவர் போலில்லை. தான் வேலை செய்யப்போகும் வீட்டைச் சேர்ந்தவன். அவனது நிறமும் கவனமாய் செதுக்கப்பட்ட உடல்கட்டும், பெரிய இடத்துப் பிள்ளை என்கிறதே?

தான் கவனித்து சிகிச்சையளிக்க வந்தது இவனது மகன்...? இருக்காது அண்ணன், அக்காவின் பிள்ளைக்காய் இருக்கலாம்.

ஆக இவனோடு பழகி, ஒரே இடத்தில் தங்கி...

இவள் முகம் கட்டுப்பாட்டை இழந்து

Enjoying the preview?
Page 1 of 1