Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arivoottum Siruvar Kathaikal
Arivoottum Siruvar Kathaikal
Arivoottum Siruvar Kathaikal
Ebook153 pages1 hour

Arivoottum Siruvar Kathaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Collection of short stories for children.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580110801379
Arivoottum Siruvar Kathaikal

Read more from Udayadeepan

Related to Arivoottum Siruvar Kathaikal

Related ebooks

Reviews for Arivoottum Siruvar Kathaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arivoottum Siruvar Kathaikal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    அறிவூட்டும் சிறுவர் கதைகள்

    Arivoottum Siruvar Kadhaikal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    1. அகந்தை

    உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

    மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.

    இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.

    உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.

    அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.

    உடனே மன்னன், துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்! என்றார்.

    துறவி திரும்பாமல், போ! என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.

    மன்னனுக்குக் கோபம் வந்தது.

    துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே! என்று கத்தினான்.

    துறவி மீண்டும் திரும்பாமல், மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்! என்றார்.

    மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.

    மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.

    துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்? என்று கேட்டான் மன்னன்.

    நான் செத்த பிறகு வா! என்றார் துறவி.

    அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.

    நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது? என்று கேட்டான் மன்னன்.

    துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

    நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட ‘நான்’ என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்! என்றார் துறவி.

    தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன்.

    2. இதெல்லாம் எதுக்கம்மா?

    தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

    குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

    அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?

    தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

    நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு, வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு.

    குட்டி திரும்பவும் கேட்டது. அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே!... அது ஏன்?

    தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

    பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலயும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு.

    குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?

    அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான் என்று பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

    பல்லும் நாக்கும் இவ்வளவுக் கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்? - இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

    அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம்

    கடித்துச் சுவைத்துத் தின்ன வேண்டாமா?"

    இப்போது குட்டி பட்டென்று கேட்டது. அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டுப் பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?

    3. உங்க பேரைச் சொல்லி...

    கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.

    உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டார்.

    இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம், என்றனர்.

    ‘அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும்’ என்று நினைத்தார் கந்தசாமி.

    அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள், என்று கேட்டார்.

    அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார், என்றான் அவர்களில் ஒருவன்.

    இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச் செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன், என்றார் கந்தசாமி.

    நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம், என்றனர்.

    எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை, என்றார்.

    தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.

    உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.

    அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.

    பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.

    பண்ணையாரை வணங்கிய அவர், ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது. அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது. பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன், என்றார்.

    பணத்தை அவரிடம் நீட்டினார்.

    பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.

    "உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள்.

    மேலும் மேலும் உனக்கு வெற்றி கிடைக்கும்," என்று பாராட்டினார்.

    அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.

    அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.

    பண்ணையாரை வணங்கிய அவர், உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்று தந்தார்.

    அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

    அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.

    அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.

    இதை பார்த்த பண்ணையார், என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே? என்று கேட்டார்.

    "நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.

    இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்," என்றார் கந்தசாமி.

    நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா? என்று கோபத்துடன்

    கத்தினார் பண்ணையார்.

    "சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?...

    வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா?... இது என்ன நியாயம்?!...

    நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப் படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்," என்றார் கந்தசாமி.

    அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.

    வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளை அவர்களிடம் தந்தார். ‘பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே’ என்று வருந்தினார் பண்ணையார்.

    அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1