Ithu Enna Maayam..?
3.5/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsVazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsKaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsInbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Manakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5
Related to Ithu Enna Maayam..?
Related ebooks
Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Vaanam Thodatha Nilavu! Rating: 3 out of 5 stars3/5Thazham Poovum Thanga Nilavum! Rating: 5 out of 5 stars5/5Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 2 out of 5 stars2/5Nesa Nadhikaraiyil Rating: 3 out of 5 stars3/5Minsara Poove... Rating: 1 out of 5 stars1/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Swasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Ival Vera Maathiri.. Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Azhage Aaryuire! Rating: 3 out of 5 stars3/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Natchanthirangalin Nadanam! Rating: 4 out of 5 stars4/5Antha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5
Reviews for Ithu Enna Maayam..?
7 ratings2 reviews
- Rating: 3 out of 5 stars3/5Well.i like kj novels always
Its dialogue is attracting me - Rating: 5 out of 5 stars5/5I want to download it please help me please please
1 person found this helpful
Book preview
Ithu Enna Maayam..? - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
இது என்ன மாயம்..?
Ithu Enna Maayam..?
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jayathilakar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
இது என்ன மாயம்..?
1
யப்பா, ஜோடிப் புறாவைப் போல கச்சிதமான பாதங்கள் உனக்குப் புனிதா. வடிவும் நிறமுமாய்
மருதாணி 'கோன்' வைத்து சிநேகிதியின் பாதங்களில் வரைந்து கொண்டிருந்த அருணா சிலாகித்தாள்.
முக்கால் மணி நேரமெடுத்து தான் இட்ட மருதாணி ஒவியத்தை, சில விநாடிகள் ரசித்தவளிடம்,
இது பரம்பரையாய் வந்தது அருணா. எனக்கு இன்னும் நினைவிலிருப்பது என் அப்பாவோட பாதங்கள்தான். காலைத் தூக்கி ஸ்டூலில் வைத்து சாய்ந்தபடி அவர் பேப்பர் வாசிக்க, அந்தப்பாதங்களின் அழகும் ரோஜா நிற நகங்களும் இன்னும் என் ஞாபகத்திலுண்டு. அப்பாவின் முகம் கூட நினைவில் இல்லாதபோதும்...
மறுநாள் திருமணமாகப் போகும் பெண் இப்படி சோக நினைவில் மூழ்குவது சரியில்லை எனத் தோன்ற, அருணா பேச்சை மாற்றினாள்.
நிச்சயமாய் உன் கைகளில் மருதாணி இட வேணாமா? உங்கையும் அழகுதானே?
யாரேனும் வந்து போவாங்கல்ல அருணா? பாஸ்டர் வந்து என்னிடம் ஏதேனும்… ஒரு கையெழுத்து கேட்கலாம். நான் தனியால்ல இருக்கேன் இன்னும் சாப்பிடவும் இல்லை.
"வெஜிடபிள் பிரியாணியும், நெத்திலி மீன் வறுவலும் வாங்கி வச்சிருக்கேன் - மறக்காம சாப்பிட்டிரு. கனவில் மூழ்கிராத என்ன? சிரியேன். ஏன் இப்படி முழிக்கறே?
எழுந்து நின்ற அருணா குனிந்து தோழியைக் 'கிச்சு கிச்சு' மூட்டினாள்.
நெளிந்து நழுவிய புனிதாவிற்குள் கசப்பான சிந்தனை
'இப்படித்தான் சிரிக்க முடியும், தான்' என்று!
ச்சே. கல்யாண பெண்ணைத் தனியே விட்டுட்டு கிளம்ப வேண்டியிருக்கேன்னு நினைச்சா கொடுமைதான். உதவிக்கு இல்லைன்னாலும் பேச்சுத் துணைக்கேனும் நான் உன்னோடு இருந்திருக்கணும். ஆனா பாட்டிக்கு நான் போய்தான் மருந்து தரணும். அம்மா வேலையிலிருந்து வரதுக்குள்ளே சமைச்சு வைக்கணும். கிளம்பறேன். நாளைக்கு சீக்கிரமே வந்துடறேன் என்ன?
-தன் பெரிய தோள்பையை எடுத்தப்படி விடை பெற்றாள் அருணா.
ஒரு நிமிடம் நாளை மணமாகப் போகும் தன் தோழியைப் பார்த்தவள், கட்டி அணைத்து விட்டு, கையாட்டியபடி விலகினாள்.
இருவரும் பள்ளித் தோழிகள் என்றாலும் சிறு வயதில் அத்தனை நெருக்கமில்லை. ஐந்து வருட இடைவெளியில் படிப்பை முடித்து, வெளியில் மீண்டும் ஒரே ஐ.டி கம்பெனியில் வேலைக்காக சேர்ந்தபோது ஆர்வமாய் ஒட்டிக் கொண்டார்கள்.
இருவருக்குமே குடும்பத்தில் பல சிக்கல்கள்.
அதைப் பகிர்வதும், சில பொழுது வேறு பேச்சில் அந்தக் கவலைகளை மறக்க முடிவதும் அவர்கள் நட்பின் வசதி.
அருணாவிற்கு அப்பா இல்லாத வீடு என்றால் புனிதாவின் பெற்றோர் இருவருமே இல்லை. விபத்தில் ஒரு சேர அவர்களைப் பிரிந்தவளுக்கு கடவுளின் கருணை இல்லாமற் போகவில்லை. அன்பும் அக்கறையுமான தாத்தா பாட்டி இருந்தார்கள் -அவளது தகப்பன் வழியில்.
தாத்தா செல்லதுரையை விட பாட்டி சரோஜா ஒன்பது வயதிற்கு இளையவர்.ஆக வீடு பாட்டியின் பொறுப் பில்தான்.
தாத்தாவிற்கு அல்ஜீமர்ஸ் நோயின் ஆரம்பநிலை என்பதால் அவருக்கு மற்றெதிலும் நாட்ட மில்லை.
சரோ… நம்ப கல்யாணம் எந்த வருஷம் நடந்தது?
என்ற அளவில் ஆரம்பமான மறதி நோய்,
'நம்ப பிள்ளைங்க நம்மை ஏன் வந்து பார்க்கறதே யில்லை?" என்று குழம்பும் அளவிற்கு மோசமாகி விட்டது.
புடவை முந்தானையால் துயரத்தில் துடிக்கும் உதடுகளை மூடியபடி பாட்டி –
'இனி நாமதாங்க அதுகளைக் காண மோட்சம் போகணும். அதுக்குள்ளார நம்ப புனிதா குட்டிக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடணும்' என்பார்.
பிறகு அவளும் இங்கே வர்ர மாட்டால்ல?
குழந்தையைப் போல குறைபடுவார் செல்லதுரை.
'பிள்ளைக் குட்டிகளோட வந்து போவா. கொள்ளுப் பேரப் பசங்களுக்கு அரிச்சுவடி நீங்கதான் கத்துத் தரணும் - எல்லாம் ஞாபகத்தில் வச்சுக்கோங்க - சரிதானா?'
தாத்தாவின் நரைத்த தலையை நேசமுடன் நீவுவார் பாட்டி.
தினம் வயோதிகத்தினுள் தளர்ந்து முன்னேறிய அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு, தான் கணவனோடு சந்தோஷமாய் வாழ்ந்து குழந்தை களைப் பெற்றுக் கொள்ளும் எண்ணமே புனிதாவிற்கு ஆகவில்லை.
'ரெண்டு வருஷமேனும் ஆகட்டுமே பாட்டிம்மா? கெஞ்சுவாள்.
ஆனால் பாட்டி பார்த்தவர்களிடமெல்லாம் வரனுக்காகச் சொல்லி வைத்திருந்தார்.
ஒரு மாப்பிள்ளைப் பையன் பற்றி வந்த தகவலில் ஆர்வமானவர் அது சம்பந்தமாய் போனபோது நேர்ந்த சாலை விபத்தில்தான் பாட்டியின் இடுப்பு எலும்பு நொறுங்கிப் போனது!
அதை இணைப்பதற்கான அறுவை சிகிச்சையின் சமயம் தரப்பட்ட மயக்க மருந்தின் அளவு அதிகமானதில், மயக்கத்திலிருந்து மீளாமலேயே போய் சேர்ந்துவிட்டார் அந்த குணவதி.
நினைவு பிறழ்ந்த கணவனும், இளவயது பேத்தியும் படப் போகும் இன்னல்களை எல்லாம் காணாமல் தப்பித்துக் கொண்டார்.
மனைவியின் மறைவிற்குப் பிறகு தாத்தா சடாரென சரிந்து போனார்.
மற்றவர்கள் முகங்கள் எல்லாம் அவரை மருட்டின.
'நீ யாரு... எதுக்கு இங்க நிக்கிறே? போ... போயிடு' என்று சகலரையும் சந்தேகத்துடன் சிடுசிடுத்தார்.
"சரோவை வரச் சொல்லு. அவ போட்டாத்தான் நான் சாப்பிடுவேன்' என்று வீம்பு காட்டியவரை மருந்து மாத்திரைகளை விழுங்க வைப்பதற்குள் தடுமாறி விட்டாள் பேத்தி புனிதா.
வீட்டில் வயோதிகரை தனியே விட்டு பூட்டி விட்டு, வேலைகளை முடித்து ஓடி வரும் வரை தவித்துப் போவாள்.
சென்னையைத் தாண்டிய 'தாம்பரம்' பகுதியில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுப்பப்பட்ட ஒட்டு வீடு அது.
அதன் பின்புறமுள்ள காலி மனையை விற்றுத்தான் புனிதாவைப் படிக்க வைத்தார்கள்.
சமீப காலமாய் பாட்டியிடம் பல வீட்டுத் தரகர்கள் அந்த ஓட்டு வீட்டிற்கும் விலை பேசியதுண்டு.
'எதிர்க்க நல்ல ஹோட்டல் வந்திருக்கு. இங்கே ஒரு சின்ன 'மால்' கட்டிவிட்டா நல்லாப் போகும். இங்கே உள்ளவங்களுக்கும் வசதிதானே? ஒரு கோடி வரை தர பார்ட்டி ரெடி - என்ன சொல்றீங்க?' என்ற ஆசைக்காட்டல்களுக்கு பாட்டி மசியவில்லை.
'பழகின, வாழ்ந்த வீடுப்பா. பெரியவருக்கு மறதி அதிகம். புது இடம் போய் நாங்க பழகி புழங்கறது சிரமம். ஆக இதை விற்கறதாயில்லை என்று முதலில் நியாயமாகவும் பின் கடினமாயும் பதிலளித்து விரட்டி விட்டார், சரோஜா.
பாட்டி இறந்த சில வாரங்கள் புனிதாவால் சமாளிக்கத்தான் முடியவில்லை
ஆனால் துக்கம் விசாரிக்க வந்த சுந்தரம், நிலைமை புரிந்து உதவ முன் வந்தார்.
'ப்யூனாய் எனக்கு தன் ஆபீஸில் ஐயாதான்ம்மா வேலை போட்டுக் கொடுத்தாங்க - அப்ப எனக்கு முப்பது வயசு, அந்த வேலையை வச்சுதான் எனக்குக் கல்யாணமே ஆச்சு. இது ஏறக்குறைய முப்பது வருஷத்துக்கு முந்தின கதை. இப்ப நானுமே ரிடையர் ஆயாச்சு. நான் வந்து ஐயாவுக்குத் துணையாய் இருக்கேன். நீங்க வேலைக்குப் போகணுமில்லையா?"
இவள் வீடு திரும்பியபின் சுந்தரம் தன் வீட்டிற்குப் போய் விடுவார். ஒரு கணிசமான தொகையை புனிதா அவருக்கு தந்து விடுவாள். அவருக்கும் குடும்பம், பேரப்பிள்ளைகள் எல்லாரும் உண்டே…
சுந்தரம் சமைப்பதோடு பெரியவரைச் சாப்பிடவும் வைத்து விடுவதில் பேத்திக்குப் பெரும் நிம்மதி.
ஆனால் ஒரு நாள் மாலை வீடு திரும்பியவளிடம் பிளாஸ்டிக் பை ஒன்றைத் திணித்தார் செல்லதுரை.
பாரேன்
- என்றபடி.
என்ன தாத்தா இது?
கேட்டபடி பிரித்தவள் விக்கித்துப் போனாள்.
கட்டுக் கட்டாய் பணம்!
அதன் ஊடாய் கிடந்த சிறு தாளில் ஒரு தொலை பேசி எண் குறிக்கப் பட்டிருந்தது.
குழப்பமாய் அதனை அழுத்த, அந்தப் பணத்திற்கான விவரம்