Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Men Kalaikal
Men Kalaikal
Men Kalaikal
Ebook179 pages1 hour

Men Kalaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580105001395
Men Kalaikal

Read more from N. Chokkan

Related to Men Kalaikal

Related ebooks

Reviews for Men Kalaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Men Kalaikal - N. Chokkan

    http://www.pustaka.co.in

    மென் கலைகள்

    Men Kalaikal

    Author :

    என். சொக்கன்

    N.Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அறிமுகம்

    1. நேரம் எனும் பஜ்ஜி

    2. முடிவுகள் அல்ல, ஆரம்பங்கள்!

    3. தூண்டிலா, துப்பாக்கியா?

    4. நீயா, நானா, நாமா?

    5. கவனம்!

    6. வலது மூளை, இடது மூளை

    7. நூறு போதும்

    8. பஞ்ச(ம்) தந்திரம்

    9. பணத்தின் அருமை

    10. லவ் லெட்டர்

    11. மேதைமை

    12. மனத்துக்கும் பயிற்சி அவசியம்

    13. நம்ம வீட்டு நட்சத்திரங்கள்

    14. சொல்லக்கூடாத வார்த்தைகள்

    15. வண்ண வண்ணக் காலண்டர்

    16. இலக்கு எது?

    17. எது முக்கியம்?

    18. செக் லிஸ்ட்

    20. நீங்களே சொல்லுங்கள்

    21. திருந்தச் சொல்

    22. கேளுங்க, கேளுங்க

    23. நேரத்தின் மதிப்பு

    24. நமக்கு நாமே

    மென் கலைகள்

    அறிமுகம்

    'ஆய கலைகள் 64' என்று சொல்வார்கள். நடனம், பாட்டு, தையல் வேலை, விடுகதை, வசனம், தோட்ட வேலை என்று தொடர்கிற இந்தக் கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்களுக்குதான், அந்தக் காலத்தில் மரியாதை.

    அன்றைக்கு ‘ஆய கலைகள்' என்றால், இன்றைக்கு ‘மென் கலைகள்'. ஆங்கிலத்தில் 'Soft Skills' என்று அழைக்கப்படும் இந்த நவீன கலைகள்தான், இன்றைய நாகரிக வாழ்க்கையில் ஒரு தனி நபரின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

    பலரும் நினைப்பதுபோல், இந்த மென் கலைகள் அலுவலகச் சூழலுக்குமட்டும் சொந்தமில்லை. வீட்டிலும், நமது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களிலும்கூட இவற்றைப் பயன்படுத்திப் பெரிய அளவில் பயன் பெறமுடியும்.

    நவீன வெற்றி சூத்திரங்களான இந்த மென் கலைகளில் முக்கியமான சிலவற்றையும், அவற்றில் நாம் கைதேர்ந்தவர்களாவதற்கான ப்ராக்டிகள் டிப்ஸ் பலவற்றையும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்வோம்!

    இந்தச் சூத்திரங்களைத் தனித்தனியே சிறு கட்டுரைகளாக வாசிக்கும்போது ‘ரொம்பச் சாதாரணமா இருக்கே' என்று உங்களுக்குத் தோன்றலாம். 'இதையெல்லாம் பயன்படுத்திப் பலன் பெறமுடியுமா?' என்கிற சந்தேகம் வரலாம். அப்போதெல்லாம் ‘ப்ளஸ் ஒன்' என்று ஒருமுறை சொல்லிக்கொள்ளுங்கள்.

    ‘+1' என்றால் பதினொன்றாம் வகுப்பு அல்ல. நவீன யுகத்தில் அதற்கு அர்த்தமே வேறு.

    இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறோம், வேறோர் உயர்ந்த நிலைக்குச் செல்ல ஆசைப்படுகிறோம், ஆனால் அங்கே போவதற்கு நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டியிருக்குமே என்று யோசித்துத் தயங்குகிறோம்.

    அதற்குதான், ‘+1' ஃபார்முலா உங்களுக்கு உதவும். புதுப்புது விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்வதுதான் ‘+1', இதன்மூலம் ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று என்று படிப்படியாக முன்னேறி நூறையும் ஆயிரத்தையும் லட்சத்தையும் கோடியையும் தொடுவது சாத்தியமே!

    மேலாண்மைத் துறை நிபுணர்கள் இதனை ‘1% முன்னேற்றம்' என்கிறார்கள். அதாவது போன மாதம் நாம் எப்படி இருந்தோமோ அதில் இருந்து குறைந்த பட்சம் 1%ஆவது இந்த மாதம் முன்னேறவேண்டும், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மெருகேற்றிக்கொண்டால் தொடர்ச்சியான வளர்ச்சியும் வெற்றிகளும் நிச்சயம் என்கிறார்கள். இந்தப் புத்தகம் அதற்கான வழிகளை உங்களுக்குக் காட்டும்

    ***

    மென் கலைகள்

    1. நேரம் எனும் பஜ்ஜி

    சிலருக்கு, ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது.

    இத்தனைக்கும் இவர்கள் ஓர் இடத்தில் நிற்காமல் எந்நேரமும் காலில் இறக்கையைக் கட்டியதுபோல் பறந்துகொண்டிருப்பார்கள். அப்போதும் இவர்களால் அனைத்து வேலைகளையும் ஒழுங்காகச் செய்துமுடிக்க இயலாது. கோபத்தில் எல்லோர்மீதும் எரிந்து விழுவார்கள், அனைவருடைய வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வார்கள்.

    வேறு சிலர், இதற்கு நேர் எதிர். அவர்களிடம் எந்த வேலையை ஒப்படைத்தாலும், புன்னகையோடு ஏற்றுக்கொள்வார்கள், இருக்கிற ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவில் இதையும் திணித்து, எப்படியோ கஷ்டப்பட்டுச் செய்தும் முடித்துவிடுவார்கள்.

    நம் எல்லோருக்கும், நேரம் ஒன்றுதான். ஆனால் அதில் நாம் செய்துமுடிக்கிற வேலைகளின் எண்ணிக்கைமட்டும் வித்தியாசப்படுகிறதே அது எப்படி?

    விஷயம் ரொம்பச் சுலபம். நேர நிர்வாகம் என்கிற சூட்சுமத்தைப் புரிந்துகொண்டுவிட்டால், அதன்பிறகு காலம் நம்முடைய காலடியில் கிடக்கும்.

    இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமே இல்லை. நம் ஊரில் அநேகமாக எல்லா இல்லத்தரசிகளும் நேர நிர்வாகத்தில் புலிகள்!

    யோசித்துப்பாருங்கள், ஒரு வீட்டில் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிற குடும்பத் தலைவி, அதன்பிறகு பொழுது மங்கி எல்லோரும் தூக்கத்தில் சரிகிறவரையில் எத்தனை சிறிய, நடுத்தர, பெரிய வேலைகளைச் செய்து முடிக்கிறார்? பட்டியல் போட்டால் காகிதம் தாங்குமா?

    அதேசமயம், அந்தக் குடும்பத் தலைவியிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள், பத்து நாள், இருபது நாள் கழித்தும், அந்தப் புத்தகம் புரட்டப்படாமல் அப்படியே இருக்கும். கேட்டால், ‘நேரம் இல்லை' என்று பதில் வரும்.

    சில மணி நேரத்துக்குள் அத்தனை வேலைகளைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் அவருக்கா இந்த ஒரு வேலையைச் செய்வதற்கு நேரம் இல்லை? நம்புவது சிரமம்தான்.

    இப்படி ‘நேரம் இல்லை' என்கிற ஒரே காரணத்தால், தங்களுடைய மனத்துக்குப் பிடித்த பொழுதுபோக்குகளை அனுபவிக்கமுடியாமல், வெளி உலகத்தைத் தெரிந்துகொள்ளாமல், சமையலறை, வீடு என்று முடங்கிக் கிடக்கும் சகோதரிகள் ஏராளம். அவர்கள் தங்களுக்குத் தாங்களே அமைத்துக்கொண்டிருக்கிற விலங்குப் பூட்டுகளைத் திறக்கும் சாவி, இந்த நேர நிர்வாகம்.

    முதலில், நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். அதை நாம் எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய புத்திசாலித்தனம் இருக்கிறது.

    சில ஆண்கள், அலுவலக வேலையில் சூட்டிகையாக இருப்பார்கள், அங்கே எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவார்கள், ஆனால் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிடக்கூட முடியாமல் திணறுவார்கள்.

    இதன் அர்த்தம், அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தையெல்லாம் அலுவலகத்துக்காகச் செலவிட்டுவிடுகிறார்கள். தனிப்பட்ட நேரம், ஓய்வு, கேளிக்கை என்று எதுவும் இல்லாத வாழ்க்கை சீக்கிரத்தில் சலித்துப்போய்விடுகிறது.

    நேர நிர்வாகத்தின் அடிப்படை, நம் கையில் உள்ள நேரம், வேலைகள் இரண்டையும் சம அளவில் பங்கு போடுவது, எந்தப் பக்கமும் குறை வைக்காமல் இருக்கிற நேரத்தில் அனைத்து வேலைகளைச் செய்து முடிப்பது, மிஞ்சிய நேரத்தில், நமது தனிப்பட்ட ஓய்வு, பொழுதுபோக்குகள், வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது.

    இப்போது, நம் வீட்டில் வாழைக்காய் பஜ்ஜி செய்கிறோம். ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கரைத்துக்கொள்கிறோம், இன்னொரு தட்டில் வாழைக்காயை நீள நீளமாகச் சீவிப் போடுகிறோம்.

    அடுத்தபடியாக, ஒவ்வொரு காய்த் துண்டையும் எடுத்து, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மாவு காலியாகிக்கொண்டிருக்கிறது, காயும் தீர்ந்துகொண்டிருக்கிறது.

    கடைசியாக, நாம் பஜ்ஜி தயாரித்து முடிக்கும்போது, மாவும் மிச்சம் இருக்காது, காயும் மீதி இருக்காது. அப்போதுதான் நாம் ஒழுங்காக பஜ்ஜி செய்திருக்கிறோம் என்று அர்த்தம்.

    நேர நிர்வாகமும் இதேமாதிரிதான், சட்டியில் எவ்வளவு மாவு இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டு பஜ்ஜியின் அளவு சிறியதா, பெரியதா என்று தீர்மானிக்கிறோமே, அதுபோல ஒவ்வொரு வேலையின் முக்கியத்துவம் கருதி அதற்கு ஏற்ப நேரத்தை ஒதுக்கப் பழகவேண்டும்.

    இதற்கு ஓர் எளிய சூத்திரம் இருக்கிறது. புகழ் பெற்ற மேலாண்மை நிபுணர் ஸ்டீஃபன் கோவி (குtஞுணீடஞுண கீ இணிதிஞுதூ) அறிமுகப்படுத்திய நேர நிர்வாக உத்தி இது.

    முதலில், நமக்கு வருகிற வேலைகளை இரண்டுவிதமாகப் பிரிக்கவேண்டும்: முக்கியமானவை, முக்கியமில்லாதவை!

    அடுத்து, இந்த வேலைகளில் சிலவற்றை நாம் உடனே செய்யவேண்டியிருக்கும், வேறு சிலதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டுப் பின்னால் செய்துகொள்ளலாம், அவசரம் இருக்காது.

    இதன் அடிப்படையில் அதே வேலைகளை இன்னும் இரண்டுவிதமாகப் பிரிக்கிறோம்: அவசரமானவை, அவசரமில்லாதவை!

    ஆக, நம் கையில் இருக்கும் எந்த ஒரு வேலையையும், இந்த நான்கு வகைகளுக்குள் அடக்கிவிடமுடியும்:

    ·      வகை 1: முக்கியமானவை, அவசரமானவை

    ·      வகை 2: முக்கியமானவை, ஆனால் அவசரம் இல்லை

    ·      வகை 3: முக்கியமில்லாதவை, ஆனால் அவசரம்

    ·      வகை 4: முக்கியமில்லை, அவசரமும் இல்லை

    ஒரு நிமிடம், இந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு நாளைக்கு நாம் எத்தனை ‘வகை 1' வேலைகளைச் செய்கிறோம்? அதோடு ஒப்பிடும்போது, மற்ற மூன்று வேலைகளுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம், அது சரிதானா?

    உதாரணமாக, சிலருக்குத் தொலைக்காட்சித் தொடர்களைத் தவறாமல் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அது முக்கியமானதா? அவசரமானதா? நான்காவது வகையைச் சேர்ந்த அந்த 'வெட்டி' வேலைக்கு, ஒரு நாளில் பல மணி நேரங்களைச் செலவிடுவது நியாயமா? பிறகு எப்படி நிஜமாகவே முக்கியமான வேலைகளைச் செய்ய நமக்கு நேரம் கிடைக்கும்?

    அடுத்து, இரண்டாவது வகை வேலைகளைக் கவனியுங்கள். இவை முக்கியமானவை, ஆனால் இவற்றை உடனே செய்யவேண்டும் என்று அவசரம் இல்லை. அப்படியானால், நாம் என்ன செய்வோம்?

    ரொம்பச் சுலபம். அதுதான் அவசரம் இல்லையே என்று அந்த வேலையைத் தள்ளிப்போட்டுவிடுவோம். அப்போதுதானே முக்கியமில்லாத மூன்றாவது, நான்காவது வகை வேலைகளில் நேரத்தை வீணடிக்கமுடியும்?

    ஆனால், இப்படித் தள்ளிப்போடுவது எத்தனை பெரிய ஆபத்து என்று நாம் அப்போது உணர்வதில்லை. பின்னால் அது ஒரு பிரம்மாண்டமான பிரச்னையாக மாறி

    Enjoying the preview?
    Page 1 of 1