Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalai Vaa Nila
Nalai Vaa Nila
Nalai Vaa Nila
Ebook93 pages46 minutes

Nalai Vaa Nila

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580104901391
Nalai Vaa Nila

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Nalai Vaa Nila

Related ebooks

Reviews for Nalai Vaa Nila

Rating: 4 out of 5 stars
4/5

9 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalai Vaa Nila - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    நாளை வா நிலா

    Nalai Vaa Nila

    Author:

    அருணா நந்தினி

    Aruna Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    நாளை வா நிலா

    1

    மாவிலைத் தோரணமும், மலர் அலங்காரமும் கொண்டு அந்த கல்யாணச் சத்திரம் களையுடன் விளங்கியது.

    மணமகள் தேவிகா… மணமகன் ஆனந்தன்... மலர் அலங்காரத்தில் புதுமணமக்களின் பெயர்கள் சிரித்தன.

    கல்யாண வைபவங்களில் மட்டுமே சந்திக்க முடிகின்ற உறவினர்கள் கிடைத்த இரண்டொரு நாட்களையும் வீணாக்காமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

    மணமேடையும் தேர் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மணமகளின் வரவுக்காக மணமேடை காத்துக் கொண்டிருந்தது.

    மணமகள் தேவிகா அறையினுள் நெளிந்து கொண்டு இருந்தாள். அவளுடைய பெரிம்மாவின் பெண் சுமதி அவளுக்குச் சேலையை அணிவித்துக் கொண்டிருந்தாள்.

    நெளியாதடி... பாரு... கொசுவம் வரவில்லை... இப்படியே தாமதம் செய்தால் ஆனந்தன் இங்கேயே வந்து தாலிகட்டிவிடுவார் என்று கேலியாய் சொன்னாள்.

    கூசுதக்கா...

    கூசுதா...? ஆமாம்... நான் தொட்டால் கூசத்தான் செய்யும்... உன் அவர் தொடுவார் பாரு... அப்போ...

    அய்யே... என்னக்கா... வெட்கத்தில் முகம் சிவந்து போனாள் தேவிகா.

    அட... பொண்ணுக்கு வெட்கத்தைப் பாரு... உம்... பார்க்கலாம். இன்னும் எத்தனை நாளைக்கு என்று... பதிலுக்குப் பரிகாசம் செய்தாள் சுமதி.

    போக்கா... இன்னும் நாணிக்கோணிக் கொண்டவளை சிறு தட்டு தட்டி சேலையின் தலைப்பை சரிபண்ணினாள்.

    அலங்காரம் ஆச்சாடீ... சீக்கிரம் அழைத்துவா... சுமதியின் தாய் வந்து அவசரப்படுத்திவிட்டுச் சென்றாள்.

    தயாராய் இருந்த ரோஜா மாலையை தேவிகாவின் கழுத்தில் போட்டுவிட்டு அவளை அப்படியும் இப்படியு மாய் திருப்பிப் பார்த்து அவளது அழகை ரசித்தவள் தன் கண்ணிலிருந்த மையைத் தொட்டு தேவிகாவின் கன்னத்தில் சிறு பொட்டிட்டாள்.

    ம்ம்... இப்போ போகலாம் வா...

    அவசரமாய் நடக்க ஆரம்பித்தவளை நிறுத்தி, ஏய். நீ மணப்பெண்ணாக்கும். அழகாய். ஒயிலாய், நிதானமாய் நடந்து செல்லணும்... ஒடற ஓட்டத்தைப் பார்த்தால் பறந்து போய் ஆனந்தனிடம் ‘ம்ம்... தாலியைக் கட்டுங்கள்’ என்று கழுத்தை நீட்டுவாய் போலிருக்கே... இன்னிக்கு ஒரு நாளம்மா... எங்கப் பேச்சுக்கும் கட்டுப்பட்டு இருக்கணும். நாளையிலிருந்து நாங்கள் எல்லோரும் யாரோ.. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்று பாட ஆரம் பித்துவிடுவாய்...

    சுமதியின் கேலிப் பேச்சை ரசித்துக் கொண்டே தேவிகா நடந்தாள்.

    நடக்க நடக்க மணமேடை தள்ளிச் செல்கிறதோ என்று அவளுக்குத் தோன்றியது.

    பின்னலிடும் கால்களைச் சிரமப்பட்டு பிரித்து எட்டு வைத்தாள்.

    அனைவரும் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு என்னவோ செய்தது.

    திருமணம் என்றால் சும்மாவா?..? அந்த நிகழ்ச்சியின் நாயகி அவள் அல்லவா?

    பார்வை அம்புகளின் தாக்குதல் அவளை நிலை குலையச் செய்தாலும் சுமதியின் கைத்தாங்கலில் சமாளித்து நடந்து வந்தாள்.

    ஒருவழியாய் மணமேடையை அடைந்து வலமாய் சுற்றி வந்து மனைமீது அமர்ந்ததும் ‘அப்பாடா?’ என்று இருந்தது.

    பக்கத்தில் மணமகன் கோலத்தில்... பட்டு வேட்டி பட்டு சட்டையில் ஆனந்தன் கம்பீரமாய்த் தெரிந்தான்.

    அவனது முகத்தில் என்ன உணர்ச்சி... என்ன பாவம் இழையோடி இருக்கும்… சந்தோஷத்தின் அறிகுறியா? இல்லை பயத்துடன் கூடிய பரபரப்பா... தன்னைப் போலவே...

    ஒரக்கண்ணால் பார்க்கவும் வெட்கம்… நிமிர்ந்து எங்கே அவனைப் பார்ப்பது?

    சுமதி இடையை நிமிண்டினாள்.

    இன்னும் தள்ளி உட்காரேன்... இல்லாவிட்டால் மாப்பிள்ளைக்கு ஏமாற்றம்!

    இன்னும் தலையைக் குனிந்து கொண்டு நகர்ந்தாள். சடங்குகள் வரிசைக் கிரமத்தில் நடந்தன.

    கெட்டி மேளத்தின் முழக்கத்தில் நாதசுவர ஓசையுடன் மலர்களும் மஞ்சள் அரிசியும் மழையாய் மாற ஆனந்தன் தேவிகாவின் சங்குக் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

    குனிந்த பார்வையில் தெரிந்த மஞ்சள் சரடும் அதில் அழகாய் மின்னும் தாலியும் கண்டு தேவிகா உள்ளமும் உடம்பும் சிலிர்த்துப் போனாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1