Ithayathil Nee
2.5/5
()
About this ebook
Read more from Arunaa Nandhini
Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5En Uyiril Kalantha Uyire Rating: 5 out of 5 stars5/5Malarey Ennidam Mayangathey Rating: 4 out of 5 stars4/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Ninaikka Therindha Manamey! Rating: 3 out of 5 stars3/5Nalai Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Poomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 4 out of 5 stars4/5Mannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Radha Kaadhal Varatha Rating: 4 out of 5 stars4/5En Vasam Naanillai Rating: 3 out of 5 stars3/5Sonna Sollai Marandhidalamo… Rating: 4 out of 5 stars4/5Endhan Uyirallavo Kanmani... Rating: 5 out of 5 stars5/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Neeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsVaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5
Related to Ithayathil Nee
Related ebooks
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Pookolam Podavaa... Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Nilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Aanandamadi Aanandhi! Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsRadha Kaadhal Varatha Rating: 4 out of 5 stars4/5En Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Athu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Aboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Aval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Unakkena Thavamirunthen Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Imaiyaga Naaniruppen...! Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Ithayathil Nee
3 ratings0 reviews
Book preview
Ithayathil Nee - Arunaa Nandhini
http://www.pustaka.co.in
இதயத்தில் நீ
Ithayathil Nee
Author:
அருணா நந்தினி
Aruna Nandhini
For more books
http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
இதயத்தில் நீ
1
உலகமே அவசரகதியில் இயங்கும் காலைப்பொழுதில், வேணுகோபால் தன் மனைவியிடம் வந்து அந்தச் செய்தியைச் சொன்னார்.
வேறொன்றும் இல்லை...அவருடைய நண்பரின் மகன் பரத் வருகிறான்!
சரோ... மாடியை சுத்தப்படுத்தி வை... பையன் அங்கே தங்கிக்கொள்ளட்டும்.
என்ன... இங்கே தங்கிப் படிக்கப்போகிறானா?
சமையல் அறையில், காய்கறிகளை வதக்கிக்கொண்டிருந்த சரோஜா கேட்டாள். மகள்கள் இருவரும் புறப்படுவதற்குமுன், எல்லாம் தயாராக வேண்டுமே என்ற அவசரம் அவளது நெற்றியில் வியர்வையை வழியச் செய்தது.
படிப்பா... அவன் வளர்ந்த பிள்ளைடீ... வயசு இருபத்தெட்டு இருக்கும். ஏதோ வியாபார விஷயமா வருகிறானாம். நம்மை நம்பி அனுப்பி வைக்கிறான், கோவிந்தன்.
கரண்டியை அப்படியே நிறுத்திவிட்டு கணவர் பக்கம் திரும்பினாள், சரோஜா. அவள் கண்களில் திகைப்பு! என்னங்க இது... வயசுப் பெண்கள் ரெண்டு பேரை வச்சிருக்கோம். இங்கேயா வாலிபப் பையனைத் தங்க வைக்கிறது?
வேணுகோபால் சிரித்தார். அடி அசடு... என் நண்பன் இங்கு அனுப்பி வைக்கும் நோக்கமே அவனை நம்ம வீட்டு மாப்பிள்ளையாக்கத்தான். அவன் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்கிறானாம்.
இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பிள்ளையா? விடலைப் பருவத்திலேயே பொண்ணுங்க பின்னால் பசங்க சுத்தறப்போ கல்யாண வயசுப் பையன் இப்படி பேசுகிறான் என்றால் அதிசயம்தான்.
என்ன சொல்ல... இந்தக் காலத்துப் பொண்ணுங்க சரி யில்லைங்கிறான். நாகரீக மோகமும், உல்லாச வாழ்க்கையும்தான் குறின்னு அலைகிற பொண்ணுகளைப் பார்த்து அவனுக்கு வெறுப்பே வந்துவிட்டதாம். தாரமாக வரு பவள் தன் அம்மா மாதிரி அடக்க ஒடுக்கமாக இருக்கணும்ன்னு தேடுறான். இன்னும் கண்ணில் அகப்பட வில்லையாம். அதனால் கல்யாணமே வேணாம்ன்னு சொல்கிறான். எப்படியாவது அவனை மடக்கிப் போட்டு மாப்பிள்ளை ஆக்கிக்கோன்னு நச்சரிக்கிறான், கோவிந்தன்.
தண்ணீர் குறைந்து காய்கறிகள் அடிப்பிடிக்கும் மணம் வரவும் அடடா... பேச்சு சுவாரஸ்யத்தில் இதை கவனிக்கலையே?
என்று புலம்பியவாறு கொஞ்சம் நீர் விட்டு, தொடர்ந்து வதக்க ஆரம்பித்த சரோஜா அப்படியே பேச்சைத் தொடர்ந்தாள்.
"அதுசரிங்க... நம்ம வீட்டுப் பொண்ணுகளும் நாக ரீகம்தானே. அதுவும் பெரியவள் அதி நாகரீகம் ஆச்சே, வேணும்னா சின்னவள் சரிப்படுவா. அவ கொஞ்சம்... கொஞ்சம் என்ன.... நிறையவே அடக்கம். இந்தக் காலத்தில் யாரு தாவணியும் சேலையும் உடுத்துறா? சுடிதார் தானே.
அதுவும் கூடாதுன்னாஅவன் ஏதாவது கிராமத்துக்குப் போய் ஒரு அருக்காணியையோ... சொக்கியையோ தான் தேடி மணக்கணும். இப்போ அவங்ககூட நாகரீகம் கத்துகிட்டாச்சு... காஞ்சிப் பட்டு உடுத்தி, கண்நிறைய மை தீட்டி, நெற்றி நிறைய குங்குமம் வச்சு வரணும்ன்னு ஆசைப்பட்டா... அவன் அதோகதிதான்."
பார்த்துப் பேசு சரோ… நம்மோட வருங்கால மாப்பிள்ளை அவன்.தனக்கு வருகிற மனைவி நாகரீக பெண்ணாக இருக்கணும்ன்னு எதிர்பார்க்கிற பசங்க மத்தியில் இப்படியும் ஒருத்தன்னாஅதை மெச்சணும். இந்த வீட்டு வருங்கால மாப்பிள்ளையை ராஜமரியாதையோடு நாம கவனிக்கணும், தெரிஞ்சுக்கோ.
மாப்பிள்ளை... யாருக்குப்பா?
சாப்பாட்டு மேசை முன் வந்து அமர்ந்துகொண்ட மூத்தவள் சுஜிதா கேட்டாள்.
அவளைப் பார்த்து முகம் சுளித்தாள், தாய். ஜீன்ஸ் பனியன்! பேய்பிடித்தவள் மாதிரி கூந்தலை விரித்துப் போட்டிருந்தாள்... இதழ்களில் கொஞ்சம் அதிகமாகவே உதட்டுச்சாயம்…
என்னடீ இந்த அவதாரம்.. கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருக்கக்கூடாதா? இந்தக் கண்றாவி உடையை கழட்டி போட்டுட்டு நல்ல சேலையை உடுத்திக் கோயேன்
எரிச்சலுடன் சொன்னாள், சரோஜா.
ஏன்... இந்த உடைக்கு என்னவாம்? நல்லாதானே இருக்கு. சரி... மாப்பிள்ளை... ராஜமரியாதைன்னு காதில் விழுந்ததே, என்னப்பா அது?
என் நண்பனோட மகன் வர்றான்ம்மா... இங்கே ஒரு ஆறேழு மாதம் தங்குகிறதா உத்தேசமாம். அவனைத் தான் மாப்பிள்ளைன்னேன்... நாளைக்கு மாப்பிள்ளையாகப் போகிறவன்தானே!
அய்யோ அப்பா... என்னை மனசில் வச்சு பேச வேண்டாம். என் கனவெல்லாம் ஆகாயத்தில் பறக்கிறது தான். அதாவது விமானப் பணிப்பெண்ணாக வேண்டும். கூடிய சீக்கிரம் கிடைத்துவிடும். அதுக்கு இந்தக் கல்யாணம், குடும்பம் எல்லாம் ஒத்துவராதுப்பா... வேணும்னா உங்க இளைய மகளுக்கு கட்டி வையுங்க. அம்மா! கொஞ்சம் வெங்காய சட்னி வை.
ஆமாம்.... நீ கல்யாணம் பண்ணிக்காமல் இப்படியே இருந்துடுவியா?
பண்ணிப்பேன்... இல்லைன்னு சொல்லலைம்மா.. ஆனா இப்போ கிடையாது.
ஓகோ! அவ்வைக் கிழவியாக ஆனதுக்கு அப்புறம்ங்கிறே.. அதுக்கு ஏத்த மாதிரி தாத்தா கிடைக்கணுமேடி... முடியுமா?
ஆனாலும் உங்க பொண்டாட்டிக்கு ரொம்பத்தான் கொழுப்புப்பா... நக்கலைப் பாருங்களேன்!
இட்லியை சட்னியில் தோய்த்து வாயில் போட்டவாறு சொன்னாள், சுஜிதா.
பின்னே... பிடி கொடுக்காம பேசினால் உன் அம்மாவுக்கு கோபம் வராதா? ஏற்கனவே இரத்த அழுத்தம்! உன் பேச்சில் இன்னும் சூடாகி, இரத்தம் கொதித்து உச்சத்துக்கு அழுத்தம் எகிறிடுமே?
அதுசரி.. நீங்க எப்படி உங்க மனைவியை விட்டுக் கொடுப்பீங்க?
அது முடியாதும்மா... நீங்க கல்யாணம் ஆனதும், கணவனோடு போயிடுவீங்க... நான் அம்மாவோடுதானே இருக்கணும். அவளைப் பகைச்சிட்டு இருக்கமுடியுமா? சொல்லு.
சரோஜா, கணவனை முறைத்தாள்.
இதுக்குப் பேருதான் வஞ்சகப் புகழ்ச்சிங்கிறது... ஏத்துற மாதிரி இறக்கிறது. ஒத்து ஊதுறமாதிரி ஊதி காலை வாருவது. இதுக்கு என்ன தண்டனை தெரியுமா? வாய்க்கு சுவையாக சமைச்சு போடுறதை நிறுத்திட்டு, உப்பு - சப்பு இல்லாம வடிச்சு கொட்டுறதுதான். இருங்க, பண்ணுறேன்.
பார்த்தாயா இதுக்குத்தான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கக்கூடாதுன்னு சொல்றது... உங்க அம்மாவுக்கு கோபம் வந்தா வீடு தாங்காதுன்னு தெரியாதா, சுஜி?
அப்பா... ரொம்பத்தான் ‘பாவ்லா’ காட்டுறீங்க. சரி, உங்க அருமை மாப்பிள்ளை எங்கிருந்து குதிக்கப் போகிறார்? வானத்திலிருந்தா? இந்திரலோகத்தி லிருந்தா?
எங்கும் இல்லை... ஆந்திராவிலிருந்து.
ஓ! குல்டி!
வாயிலே போடுவேன்... என்னடீ குல்டீ?
என்னம்மா... ஏதோநான் வைச்ச பேருமாதிரியில்லே குதிக்கிறே? எல்லோரும் சொல்றதுதான். ஆங்கிலத்தில் ‘தெலுகு’ என்பதை திருப்பிப்போட்டா ‘குல்டி’ன்னு வரும். ஏம்ப்பா… ஆந்திரான்னா அவங்களுக்கு தமிழ் வராதோ?
அவர்களும் நம்மளை மாதிரி தமிழர்கள்தான். ஆந்திராவில் போய் குடியேறிட்டாங்க. நிறைய நிலம் இருக்கு. நெல் விளைச்சல் அமோகமா இருக்கு. மாந்தோப்பு, தென்னந்தோப்புன்னு ஏகப்பட்ட சொத்து.... பத்தாதுக்கு சூரியகாந்தி எண்ணெய் வியாபாரம் வேறு. அவங்க, பரம்பரை கோடீஸ்வரங்கம்மா. இங்கே சென்னையிலும் அவர்களது வியாபாரக் கிளைகள் இருக்கு. அவர்களுடைய விற்பனையை விரிவுபடுத்த வேண்டி அந்தப் பிள்ளை இங்கு வருகிறான்.
சுஜிதா எழுந்தாள்.
என்னம்மா எழுந்துட்டே?
"போங்கப்பா... நீங்க சொல்றதைப் பார்த்தா ஏதோ அலுத்துப்போன அசமந்தமாகத் தெரியுது. பேரு என்ன... பிச்சுமணியா? அரிசி... சூரியகாந்தி, தென்னந்தோப்புங்கிறீங்க. தெலுங்குப் படத்தில் வேட்டியை தார்ப்பாய்ச் சிக்கிட்டு ஜெயப்பிரதாவோடு ‘டூயட்’ பாடிய என்.டி.ஆர். நினைவுதான் வருகிறது.
பார்த்துகிட்டே இருங்க... உங்க நண்பரோட பையனும் அப்படித்தான் வந்த இறங்கப்போகிறான். ஆகா... ஒகோன்னு புகழ்ந்துதள்ளும் நீங்க வாயடைச்சு நிக்கப் போறீங்க... சுத்த போர் நான் வர்றேன்."
கைப்பையை சுழற்றியவாறு சென்ற மகளைப் பார்த்துவிட்டு மனைவியை ஏறிட்டார், வேணுகோபால்.
‘‘எதுக்குங்க யோசனை? முதல்ல அந்தப் பிள்ளை