Poovey… Poovey!
By Rajesh Kumar
5/5
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5
Related to Poovey… Poovey!
Related ebooks
Mannikkathey Marakkathey Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsVilaikku Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsSangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsVivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Abaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Naan Nanalla Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Mari Vida Asai Rating: 0 out of 5 stars0 ratingsFebuary - 30 Rating: 3 out of 5 stars3/5Puthiya Thisaigal Rating: 5 out of 5 stars5/5Miss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5January Maranangal Rating: 4 out of 5 stars4/5Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril Rating: 5 out of 5 stars5/5Xerox Kathali Rating: 5 out of 5 stars5/5Maranathai Varainthavan Rating: 5 out of 5 stars5/5Singapore Vinaadigal and Thigil Kaalam Rating: 4 out of 5 stars4/5Puthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5November Rathirigal Rating: 5 out of 5 stars5/5Kuri Rating: 5 out of 5 stars5/5Hello Dead Morning Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Lekha! En Lekha! Rating: 3 out of 5 stars3/5Ulagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5
Reviews for Poovey… Poovey!
4 ratings2 reviews
- Rating: 4 out of 5 stars4/5very interesting, I love this story, some interesting twists really good
- Rating: 5 out of 5 stars5/5Thrilling novel from the beginning to end. Enjoyed reading. Keep it up.
Book preview
Poovey… Poovey! - Rajesh Kumar
http://www.pustaka.co.in
பூவே… பூவே!
Poovey… Poovey!
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For other books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
பூவே… பூவே!
- ராஜேஷ்குமார்
1
நேத்ரா அந்த இன்டர்வியூ ஹாலுக்குள் நுழைந்த போது வரிசையாய்ப் போடப்பட்டிருந்த பாலிமர் நாற்காலிகளில் நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது தான் பறித்த ரோஜாப் பூக்களைப் போல் தெரிந்தார்கள். உடனே மனசுக்குள் ஒரு பயம் முளைத்து வயிற்றைப் புரட்டியது. தலை மெல்லச் சுழன்றது.
‘இருக்கிற ஒரு ஸ்டெனோ போஸ்ட்டுக்கு இத்தனை பேர் படை எடுத்து இருக்கும்போது, எனக்கு இந்த வேலை எப்படிக் கிடைக்கப்போகிறது…?’
கையில் வைத்திருந்த சர்ட்டிபிகேட்ஸ் பைலோடு தயக்கமாய் ஹாலுக்குள் நுழைந்த அவளை ‘டை’ கட்டிய ஒரு நடுத்தர வயது நபர் எதிர்கொண்டார்.
இன்டர்வியூக்கு வந்தியாம்மா?
ஆமாம் சார்…
தன் கையில் இருந்த பேப்பர் தாள்களைப் புரட்டினார். உன்னோட பேர் என்னம்மா?
நேத்ரா…
உன்னோட ரெஜிஸ்ட்ரேசன் நம்பர் முப்பத்திரண்டு. அந்த நெம்பர் எழுதப்பட்ட நாற்காலியில் போய் உட்கார்ந்து ‘வெய்ட்’ பண்ணம்மா…
ச…சார்..
நேத்ரா குரலை இழுத்தாள்.
என்னம்மா…?
"இத்தனை பேரும் இன்டர்வியூக்கு வந்து இருக்கிறவங்களா…சார்?’
டைகட்டிய பேர் வழி சிரித்தார். பின்னே என்னம்மா… கல்யாணத்துக்கு வந்தவங்களா…? போய் உட்காரம்மா! இன்னும் கொஞ்ச நேரத்துல இன்டர்வியூ ஆரம்பமாயிடும்… எம்.டி. வர்ற நேரம்…
சொல்லிவிட்டு அவர் போய்விட, நேத்ரா 32-ஆவது எண் ஒட்டப்பட்ட நாற்காலியைத் தேடிக்கொண்டு போனாள்.
‘கடவுளே! இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் இந்த வேலை கிடைக்காது போலிருக்கிறதே…! இதில் பாதிப்பேராவது சிபாரிசு லெட்டரோடு வந்து இருப்பார்கள்..’ – மனசுக்குள் புலம்பிக்கொண்டே நேத்ரா தன்னுடைய நாற்காலியைக் கண்டு பிடித்துப்போய் உட்கார்ந்தாள். பக்கத்தில் இருந்த ஒரு பெண் பெர்ப்யூம் வாசனையோடு மணத்தாள். நேத்ராவைப் பார்த்ததும் சிநேகமாய்ப் புன்னகைத்தாள்.
அயாம் கோமதி…
நான் நேத்ரா…
இதோ ஊரா…?
ஆமா… அண்ணா நகா வெஸ்ட்…நீங்க?
நான் தாம்பரம்…
தொடர்ந்து சில விநாடி நேரம் நிலவிய மவுனத்தை நேத்ராவே கலைத்தாள்.
ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவு பேரா…?, நான் இப்படியொரு கூட்டத்தை எதிர்பார்க்கலை…
ஒரு போஸ்ட்டானாலும் பவர்புல் போஸ்ட் ஆச்சே…!
ஸ்டெனோ போஸ்ட்தானே?
பேருக்குத்தான் ஸ்டெனோ போஸ்ட்… உண்மையில் இது இந்த கம்பெனியின் எம்.டி.தருண் குமாரின் பர்சனல் செக்ரட்ரிக்கான போஸ்ட்…
வேலைக்கான விளம்பரத்தில் அப்படி ஏதும் மென்ஷன் பண்ணலையே?
பண்ணலைன்னாலும் அதுதான் உண்மை…
"இந்த உண்மை உங்களுக்கு எப்படித் தெரிந்தது?
இந்த கம்பெனியின் அக்கவுண்ட் செக்ஷனில் வேலை பார்க்கிற ஒரு பெண் என்னோட சிநேகிதி. அவதான் சொன்னா…! நீங்க இந்த கம்பெனியோட எம்.டி.யைப் பார்த்து இருக்கீங்களா?
இல்லை…
உங்களுக்கு இடது கை பக்கமாய் இருக்கிற சுவரைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்க…
நேத்ரா திரும்பிப் பார்த்தாள். சுவரில் அந்தப் பெரிய போட்டோ லேமினேஷனில் பளபளத்தது.
போட்டோவில் ஒரு இளைஞன் அழகாய்ச் சிரித்தபடி அப்துல் கலாமின் கைகளிலிருந்து ஏதோ விருது ஒன்றைப் பெற்றுக்கொண்டு இருந்தான். வயது முப்பதுக்குள் இருக்கும். அடர்த்தியான சுருண்ட கிராப்பும், பளிச்சென்ற முகமும், செதுக்கியது போன்ற மோவாயும், திரட்சியான தாடையும் நேரிலும் பார்க்க அழகாய் இருப்பான் என்று அடித்துச் சொல்லியது.
அந்தக் கோமதி சிரித்தாள்.
ஆள் எப்படி…ஹீரோ மாதிரி இல்லை?
பதவி, பணம், சந்தோஷம் இந்த மூணும் யார் கிட்டயிருந்தாலும் அழகாய்த்தான் இருப்பாங்க…
நேத்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹாலின் மையத்தில் இருந்த மேடையின் மேல் டை கட்டிய அந்த நடுத்தர வயது நபர் ஒருவர் கையில் உருண்டை மைக்கோடு தோன்றினார்.
சைலன்ஸ் ப்ளீஸ்…
என்றார்.
உடனே ஹால் மொத்தமும் அமைதியாயிற்று.
அவர் குரலை உயர்த்திப் பேசினார்.
நேர்முகத் தேர்வுக்கு வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும் ‘தருண்குரூப்ஸ்’ கம்பெனியின் வணக்கம். நான் இப்போது சொல்லப்போகும் ஒரு விஷயம் உங்களில் பல பேர்க்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். இருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயம். டெல்லியில் இன்று மாலை குடியரசுத் தலைவரின் தலைமையில் நடைபெற இருக்கும் தொழில் வளர்ச்சி மாநாட்டில் இந்த கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் தருண்குமார் அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்காக அவர் டெல்லி புறப்பட்டுச் செல்ல வேண்டும். எனவே இன்று நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு அடுத்தவாரத்தில் ஒரு நாள் நடைபெறும். அது எந்த நாள் என்பதை தபால் மூலம் தெரியப்படுத்துவோம்.
ஹாலில் சலசலவென்று பேச்சொலி கிளம்பியது. மைக்கில் மறுபடியும் அவர் பேசினார்.
இப்போதுதான் டெல்லியிலிருந்து தொழில்துறை அமைச்சரின் பி.ஏ. பேசினார். எனவே தவிர்க்க முடியாத இந்தச் சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டுகிறேன்… உங்களுக்கு நேரிட்ட அசவுகரியத்துக்காக நிர்வாகம் வருந்துகிறது…!
எல்லோரும் வேண்டாத ஒரு நிர்பந்தத்தோடு ஹாலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்க, நேத்ரா அசையாமல் அதே நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.
கோமதி அவளுடைய தோளைத் தொட்டாள்.
நீங்க கிளம்பலை..?
இல்லை..நீங்க கிளம்புங்க…
குழப்பப் பார்வையொடு அவள் போய்விட, நேத்ரா தலை குனிந்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
ஹால் இரண்டே நிமிடத்தில் வெறிச்சோடிப் போக, கையில் மைக் வைத்து இருந்த நபர் அவளுக்குப் பக்கத்தில் வந்தார். என்னம்மா…! உனக்குத் தனியா ஒர தடவை சொல்லணுமா…? கிளம்பும்மா… தபால் அனுப்புவோம்… அப்ப வந்தா போதும்…!
நேத்ரா நிமிர்ந்தாள்.
சார்…! இது உங்களுக்கே சரியாப்படுதா…? இதனால எத்தனை பேர்க்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டு இருக்கும்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா?
அதுக்குத்தான் மன்னிப்புக் கேட்டோமே!
மன்னிப்புக் கேட்டா எல்லாம் சரியாயிடுமா?
என்னம்மா! தகராறு பண்றதுக்கு வந்தியா…? நீ இப்பத்தான் வந்தே…! உனக்கு முன்னாடி வந்து ஒரு மணி நேரமாய் வெயிட் பண்ணிட்டு இருந்தவங்க கூட சத்தம் காட்டாமே எந்திரிச்சுப் போய்ட்டாங்க… நீ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வந்துட்டு இவ்வளவு ஆட்டம் போடறே…?
ஆட்டம் போட்டது நான் இல்ல சார்… நீங்க…
நீ இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா லிஸ்ட்டிலிருந்து உன்னோட பேரை எடுக்க வேண்டியிருக்கும்…
நான் உங்க எம்.டி.யைப் பார்க்கணும்.
அவரைப் பார்க்க முடியாது… டெல்லி புறப்பட்டுப் போகத் தயாராய் இருக்கார்.
ஒரு ரெண்டு நிமிஷம் அவரைப் பார்த்துட்டுப் போயிடறேன்.
இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா நீ சரிப்பட்டு வர மாட்டே… செக்யூரிட்டியைக் கூப்பிட வேண்டியதுதான்.
அவர் கோபமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நேத்ரா எம்.டி. இருந்த அறையை நோக்கி வேகமாய்ப் போனாள்.
இந்தாம்மா…நில்லு…!
நேத்ரா புயலாய் நடந்தாள். வரும்போது வராந்தாவில் பார்த்த எம்.டி. அறைக்கு முன்பாய்ப் போய் நின்றாள்.
அந்த நபர் கத்தினார்.
செக்யூரிட்டி…! இங்கே வாங்க… இந்தப் பெண்ணைப் பிடிச்சு…வெளியே…
வேக வேகமாய் இரண்டு செக்யூரிட்டிகள் அவளை நோக்கி வந்து கொண்டிருக்க, நேத்ரா ஆவேசத்தோடு கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனாள்.
ஒரு பெரிய கண்ணாடி மேஜைக்குப் பின்னால் தருண்குமார் செல்போனில் பேசியபடி தெரிந்தான். நேத்ராவைப் பார்த்ததும் போனில் பேசுவதை நிறுத்தி எஸ்…
என்றான்.
எக்ஸ்க்யூஸ்மீ சார்…நான் ரெண்டு நிமிஷம் உங்ககிட்டே பேசணும்…
நேத்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த மைக் பேர்வழி பதட்டமாய் உள்ளே நுழைந்தார்.
ஸார்… இந்தப் பொண்ணு பிரச்சனை பண்ணுது. நாம் இன்னிக்கு நடத்த இருந்த இன்டர்வியூவை கான்ஸல் பண்ணினதுக்காகக் கோபப்பட்ட அடாவடித்தனமாய்…
அவர் பேசப் பேச, தருண்குமார் கையமர்த்தினான்.
"நீங்க போங்க ஜெயராமன்…நான் இந்தப் பொண்ணு கிட்டே
பேசிக்கிறேன்…"
எஸ்…சார்…
ஜெயராமன் நேத்ராவை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.
தருண்குமார் செல்போனை அணைத்துவிட்டு நேத்ராவை ஏறிட்டான்… சொல்லுங்க…என்ன விஷயம்..?
நேத்ரா படபடத்தாள். சார்… இது எந்த வகையில் நியாயம்? நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை இன்டர்வயூக்குக் கூப்பிட வேண்டியது. உங்களுக்கு ஏதாவது அவசர வேலை வந்துட்டா அந்த இன்டர்வியூவைக் கான்சல் பண்றது. பணம், அதிகாரம், ரெண்டும் இருந்துட்டா எந்த அட்டூழியத்தை வேணும்னாலும் பண்ணுவீங்களா?
தருண்குமார் புன்னகையோடு அவளைப் பார்த்தான். நீங்களும் இன்டர்வியூவில் கலந்துக்க வந்தீங்களா?
ஆமா…
உங்க பேர்…?
நேத்ரா…
தருண்குமார் தன் மேஜையின் ட்ராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான்.
இந்தாங்க நேத்ரா…
என்ன இது..?
வேலைக்கான அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர். இப்படி ஒரு தெளிவான, துணிச்சலான பெண்ணை செலக்ட் பண்ணத்தான் இன்னிக்கு நடக்க இருந்த இன்டர்வியூவை கான்சல் பண்ற மாதிரி நடிச்சேன். இது ஸ்டெனோ போஸ்ட் மட்டும் இல்லை. என்னோட பி.ஏ.வுக்கான போஸ்ட்டும் கூட. எனக்கு பி.ஏ.வாய் வரப் போகிற பொண்ணுக்கு பயம்ன்னா என்னான்னே தெரியக் கூடாது. உங்களோட துணிச்சல் எனக்குப் பிடிச்சிருக்கு. இன்னியிலிருந்தே நீங்க வேலைக்குச் சேர்ந்துடலாம்…
நேத்ரா அயர்ந்து போயிருந்தாள்.
2
தருண்குமார் தன் புன்னகையின் பரப்பளவைப் பெரிதுபடுத்திக் கொண்டே நேத்ராவைப் பார்த்தான்.
என்ன மிஸ் நேத்ரா, அயாந்து போயிட்டீங்க! ம். இந்தாங்க பிடிங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். உங்களை மாதிரியான ஒரு துணிச்சலான பெண்தான் எனக்கு பி.ஏ.வாக இருக்கவேண்டும். பொதுவாக நான் நடத்தும் நேர்முகத் தேர்வுகள் எல்லாமே இப்படித்தான் இருக்கும். நீங்க என்னிக்கு வேலைக்குச் சேர்றிங்க?
நேத்ரா, சாரி!
என்றாள்.
எதுக்கு சாரி?
இந்த அப்பாயிண்ட்மெண்ட ஆர்டரை நான் வாங்கிக்கப்போறதில்லை.
ஏன்?
ஏன்னா எனக்கு இந்தவேலை பிடிக்கலை…
என்னது! வேலை பிடிக்கலையா? இந்த பி.ஏ.போஸ்ட் பவர்புல் போஸ்ட். உங்களைத்தாண்டி யாரும் வந்து என்னைப் பார்த்துட முடியாது. கிட்டத்தட்ட நீங்க என் வலது கை மாதிரி. உங்களுக்கு இங்கே சம்பளம் நாற்பதாயிரம் ரூபாய். கம்பெனிக்குப் பின்னாடி இருக்கிற குவார்ட்டர்ஸில் நீங்க தங்கிக்கலாம். பி.எப்., மெடிக்கல் அஸிஸ்டன்ஸ், எச்.ஆர்.ஏ எல்லாமே உண்டு. இது தவிர கம்பெனியில் இருக்கும் மாருதி காரை நீங்கள் உங்க சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும்…
நேத்ரா கையமர்த்தினாள்.
பட்டியல் போட்டது போதும். எனக்கு இந்த வேலையே வேண்டாம்னு சொல்லும்போது எதுக்காகப் பேசி நேரத்தை வீணாக்கணும்? நான் வர்றேன்.
சொல்லிவிட்டு நேத்ரா நடக்க முயல, தருண்குமார் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தான்.
ஒரு நிமிஷம் நேத்ரா.
நின்றாள்.
இந்த வேலை வேணும்னுதானே கம்பெனிக்கு அப்ளை பண்ணீங்க… இப்ப வேலை வேண்டாம்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்?
"இந்த கம்பெனியில் மனிதாபிமானம் இல்லைன்னு அர்த்தம். எந்த ஒரு கம்பெனியும் இப்படி ஒரு இன்டர்வியூ நடத்தி நான் பார்த்தது இல்லை.
இன்டர்வியூங்கிறது கேட்ட கேள்விக்குப் பதில் சொல்றதும், பரிட்சை எழுதறதும் மட்டும் இல்லை. எனக்கு வரக்கூடிய பி.ஏ. ஒரு டைனமிக் பர்சனாய் இருக்கணும். எதுக்கும் பயப்படாது எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலாய் எதிர்கொள்கிற மனோதிடம் கொண்ட நபராய் இருக்கணும்னு நான் நினைச்சது தப்புன்னு நீ சொல்றது எந்த விதத்துல நியாயம்?
நீங்க செஞ்சது உங்களுக்கு நியாயமாய் இருக்கலாம். எனக்கு அது இந்த இன்டர்வியூவில் கலந்துகிட்ட பெண்களுக்கு பண்ணின துரோகமாய்த் தெரியுது. எனக்கு இந்த வேலை வேண்டாம். மறுபடியும் இன்டர்வியூவை ஒழுங்காய் நடத்தி அறிவுப்பூர்வமான முறையில் ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்து உங்களுக்கு பி.ஏ.என்கிற அந்தஸ்தைக் கொடுங்க. நான் வர்றேன்…குட். பை…
சொன்ன நேத்ரா, ஒரு புயலாய் கிளம்பி வெளியேறினாள். தருண்குமார் சில வினாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு இன்டர்காம் ரிஸீவரை எடுத்து ஒரு பட்டனைத் தட்டி ஜெயராமன்! உள்ளே ஒரு நிமிஷம் வந்துட்டுப் போங்க.
என்று சொல்லி ரிஸீவரை வைத்தான்.
சில வினாடிகளுக்குப் பிறகு ஜெயராமன் உள்ளே வந்தார். தருண்குமார் தனக்கு எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினான்.
உட்காருங்க மிஸ்டர் ஜெயராமன்.
அவர் உட்கார்ந்தார்.
தருண்குமார் பேப்பர் வெயிட்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டிக்கொண்டே பேசினான்.
ஜெயராமன் , இந்த கம்பெனியில் உங்களுக்கு எத்தனை வருஷ சர்வீஸ்?
இருபது வருஷம் சார்.
இதில் மானேஸர் போஸ்ட்டுக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?
அஞ்சு வருஷம் சார்.
சரி. நான் இப்ப விஷயத்துக்கு வர்றேன். எனக்கு பி.ஏ.வா வரப் போகிற பொண்ணுக்குத் துணிச்சலும் தைரியமும் இருக்கணும். அப்பேர்ப்பட்ட பொண்ணைத்தான் செலக்ட் பண்ணணும்னு நான் சொன்னப்ப நீங்க ஒரு யோசனை சொன்னீங்க. அந்த யோசனைப்படி இன்டர்வியூவை ஏதோ ஒரு காரணம் சொல்லி கான்சல் பண்ணினால் எந்தப்பெண் அதை அநியாயம்ன்னு சொல்லித் தட்டிக் கேட்கிறாளோ, அவளை பி.ஏ.போஸ்ட்டுக்கு செலக்ட் பண்ணிடுவோம்னு சொன்னீங்க, இல்லையா?
ஆமா சார்.
உங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் இப்படிப்பட்ட அற்பத்தனமான யோசனை வரலாமா
?
ச…சார்ய்! நான் அந்த யோசனையைச் சொன்னபோது நல்ல ஐடியான்னு பாராட்டினீங்களே சார்?
நான் ஏதோ ஒரு வேகத்துல பாராட்டிட்டேன். அதுக்குக் காரணம் என்னோட வயசும் ஆர்வக்கோளாறும். பட்.நீங்களும் அதே மாதிரி இருக்கலாமா? ஒரு யோசனையைச் சொல்லும்போது அதனோட பின் விளைவு எப்படியிருக்கும்ன்னு யோசிச்சுப் பார்க்க வேண்டாமா?
ஸார்…அதுல வந்து…
தருண்குமார் அவரைக் கையமர்த்தினான். மிஸ்டர் ஜெயராமன், நீங்க எதையும் சொல்லி என்னைச் சமாதானப்படுத்த முயற்சி பண்ண வேண்டாம். என்னை விடச் சின்னப்பொண்ணு அந்த நேத்ரா. அவளுக்கு நீங்க சொன்ன யோசனையின் பின் விளைவுகள் பிடிபட்டிருக்கு. கம்பெனிக்கு மானேஜராய் இருக்கிற உங்களுக்கு அது பிடிபடலை.
சாரி சார்.
நான் கொடுத்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை அந்தப்பொண்ணு நேத்ரா வாங்கியிருந்தாக்கூடப் பரவாயில்லை. வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டா. எனக்கு வேலை கிடைச்சுட்டா போதும்ன்னு நினைக்கிற இந்தக் காலத்துல இப்படியும் ஒரு பெண். நினைக்கும்போதே பெருமையா இருக்கு…
தருண்குமார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்டர்காம் அழைத்தது. ரிஸீவரை எடுத்தான். எஸ்.
மறுமுனையில் அம்மா மங்கையர்க்கரசியின் குரல் கேட்டது. டேய் தருண், நான் இப்போ நம்ம ஆபீஸ் ரிசப்ஷன்ல இருக்கேன். உன்கூட ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும். அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?
என்னம்மா இப்படியெல்லாம் பேசி இன்சல்ட் பண்றே? ஆபீஸீக்கு வந்தா நேரா என்னோட ரூமுக்கு வர வேண்டியதுதானே?
நீ பிஸியாய் இருக்கிறதாய் ரிசப்ஷனிஸ்ட் பெண் சொல்லிச்சு. அதான்.
உடனே வாம்மா.
சொல்லிவிட்டு ரிஸீவரை வைத்த தருண்குமார் எதிரே நின்றிருந்த மானேஜரைப் பார்த்தான்.
மிஸ்டர் ஜெயராமன், இனிமேலாவது யோசனை சொல்லும்போது அதன் பின் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் யோசனை பண்ணுங்க. மறுபடியும் ஒரு தேதியை அந்த இன்டர்வியூக்கு பிக்ஸ் பண்ணி எல்லார்க்கும் கார்டு அனுப்புங்க. அந்த இன்டர்வியூவை முறைப்படி நீங்களே நடத்துங்க.
எஸ் சார்.
போய் வேலையைப் பாருங்க.
மானேஜர் ஜெயராமன் தலையாட்டிவிட்டு வெளியே போக, அடுத்த சில நிமிடங்களில் மங்கையர்க்கரசி உள்ளே வந்தாள்.
ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த மங்கையர்க்கரசிக்கு இரட்டை நாடி உடம்பு. மஞ்சள் நிற பட்டுப்புடவையில் பளிச்சென்று பெரிய சைஸ் குங்குமப் பொட்டோடு தெரிந்தாள். தருண்குமாருக்கு எதிரேயிருந்த நாற்காலிக்கு வந்து ஒரு பெருமூச்சோடு சாய்ந்தாள்.
ஏம்மா! இந்த வெயில்லே எங்கே போயிட்டு வர்ற?
ஒரு தூரத்துச் சொந்தத்தோட கல்யாணம். உன்னோட அப்பா வர மாட்டேன்னு சொல்லிட்டார். நான் மட்டும் போனேன்.
போனது சரி, போயிட்டு மண்டபத்திலிருந்து நம்ம வீட்டுக்குப் போயிருக்க வேண்டியதுதானே.
மண்டபத்திலிருந்து நான் நேரா இங்கே வந்ததுக்குக் காரணம் இருக்குடா?
என்ன காரணம்?
"கல்யாண வீட்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன். லட்சணம்னா அப்படியொரு லட்சணம். பொன்னை உருக்கி வார்த்த மாதிரி நிறம். பொண்ணு பேரு நிதர்சனா. குடும்பமும் அந்தஸ்தான குடும்பம்.