Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannellam Unnodudhaan
Kannellam Unnodudhaan
Kannellam Unnodudhaan
Ebook196 pages1 hour

Kannellam Unnodudhaan

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.[1][2]

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580100401366
Kannellam Unnodudhaan

Read more from Rajesh Kumar

Related to Kannellam Unnodudhaan

Related ebooks

Reviews for Kannellam Unnodudhaan

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannellam Unnodudhaan - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கண்ணெல்லாம் உன்னோடுதான்

    Kannellam Unnodudhaan

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    என்னுரை

    என் இனிய வாசக உள்ளங்களுக்கு அன்பான வணக்கம்!

    உங்களுடைய கரங்களில் இடம் பிடித்து இருக்கும் ‘கண்ணெல்லாம் உன்னோடுதான்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தில் இடம் பிடித்துள்ள நாவல்கள் எல்லாமே வேகமும் விறுவிறுப்பும் நிறைந்தவை. பொதுவாகவே என்னுடைய நாவல்கள் க்ரைம் சம்பந்தப்பட்டவைகளாக இருந்தாலும் அதில் சமுதாய நலனும் கலந்து இருக்கும்படியாய் பார்த்துக் கொள்வேன். ஒரு நாவலைப் படித்து முடித்ததும் நல்லபடியாய் நேரம் ஒழிந்தது என்ற எண்ணத்தைக் காட்டிலும் ‘இந்த நாவலில் இருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்’ என்று ஒரே ஒரு வாசகர் சொன்னாலும்கூட போதும்; அது என் எழுத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றியாய் எடுத்துக் கொள்வேன். ‘கண்ணெல்லாம் உன்னோடுதான்’ என்ற நாவலில் கண்தானம் என்கிற ஒரு விஷயம் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு கதையையும் நகர்த்திச் செல்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்பொழுது எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். போலீஸ் துறையில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் என்னை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. நாட்டில் நடக்கிற எல்லாக் குற்றங்களுக்கும் காரணம் மனிதர்களிடம் உள்ள பேராசைதான். போதும் என்ற மனம் யாரிடம் இருக்கிறதோ அந்த நபர் குற்றவாளியாக மாற என்றைக்குமே வாய்ப்பு இல்லை. அதே மனோபாவம் எல்லா மக்களிடமும் இருந்துவிட்டால் நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும் என்று சொன்னார். அப்படியொரு நிலைமை வருமா என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    இதே புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இன்னொரு கதை ‘காணாமல் போன ஆகாயம்!’ இது கேரளாவின் பிரபல வார இதழான மங்களம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. மங்களாவின் தமிழ் பதிப்பில் நான் எழுத ஆரம்பித்த ஒரு மாதத்துக்குள்ளாகவே கதையின் கரு ஆசிரியர்க்குப் பிடித்துப்போகவே கதையை உடனடியாக மலையாளத்தில் மொழி பெயர்த்து மங்களம் மலையாளப் பதிப்பில் வெளியிட்டார். பிறகு மலையாளத்திலிருந்து இதே கதை கன்னடப் பதிப்பு மங்களாவுக்கும் போயிற்று. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் வெளிவந்த தொடர்கதை அநேகமாய் இதுவாகத்தான் இருக்கும்.

    பொதுவாக எல்லா குற்றங்களுமே மூன்றே மூன்று காரணங்களுக்காகத்தான் நடக்கின்றன. 1) பெண், 2) மண், 3) பொன். அதை நம் முப்பெருங்காப்பியங்களும் (மஹாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம்) மெய்ப்பித்துக் காட்டியுள்ளன.

    ‘காணாமல் போன ஆகாயம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த நாவல் பெண்ணாசை கூடாது என்று வலியுறுத்துகிற நாவல். ஒவ்வொரு ஆணும் மனைவியின் உதவியோடுதான் காமனை வெற்றிக் கொள்ள வேண்டுமே தவிர பிற பெண்களோடு அல்ல என்பதையும், அந்த எல்லையை மீறினால் அதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமாய் இருக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லுகின்ற நாவல். இந்த இரண்டு நாவல்களையும் படித்தபின் உங்களுடைய கருத்துக்களை பூம்புகார் பதிப்பகத்தின் வாயிலாக எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

    ‘கண்ணெல்லாம் உன்னோடுதான், காணாமல் போன ஆகாயம’’, இந்த இரண்டு நாவல்களையும் பால் போன்ற தாளில் அழகாய் அச்சிட்டு தமிழ் அறிந்த வாசகர்களுக்கு வழங்கிய பூம்புகார் பதிப்பகத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகின்றேன். வாசக உள்ளங்களுக்கு மீண்டும் என் வணக்கம்.

    மிக்க அன்புடன்,

    ராஜேஷ்குமார்.

    கண்ணெல்லாம் உன்னோடுதான்

    -ராஜேஷ்குமார்

    1

    வாழ்த்துக்கள்!

    அழகிரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுக்கினான், ராஜேந்திரன். அழகிரி அவனை முறைத்தான். முதுகில் செல்லமாய் அடித்தான்.

    ஏண்டா திருமணம் நடந்து சுத்தமா பத்து மணி நேரம் ஓடிப்போச்சு… இப்ப வந்து வாழ்த்து சொல்றியா…? உன்னை…! வயிற்றில் குத்தினான்.

    சாரிடா அழகிரி… ராத்திரி ரெயிலை தவறவிட்டுட்டேன்… அதான் காலையில் முகூர்த்தத்துக்கு வந்து சேர முடியலை…

    சரி… உன்னோட மனைவி எங்கே…?

    அவளுக்கு உடம்பு சரியில்லை. அவங்க அம்மா வீட்ல இருக்கா…

    எதைக் கேட்டாலும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுடா பாவி…! சரி… வா… என் புத்தம்புது பெண்டாட்டியை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்… அழகிரி ராஜேந்திரனின் கையைப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள் கூட்டிப் போனான்.

    டேய்… அழகிரி…

    ம்…

    உன் மாமனார் வீடு சின்னதாயிருந்தாலும்… அழகாயிருக்கு…

    ஒரு காலத்தில் ‘ஓ கோ’ன்னு வாழ்ந்த குடும்பம்… இன்னிக்கு அவங்க நிலைமை சரியில்லை…

    சரி… மாமனார் வீட்ல எத்தனை நாள் கேம்ப்…?

    நாளைக்கு காலையில் பத்து மணிக்கெல்லாம்… பெங்களூர் கிளம்பிடுவோம்… அம்மாவும் அப்பாவும் இன்னிக்கு இராத்திரியே புறப்படணும்ன்னு சொன்னாங்க… நான்தான் இராத்திரி தங்கிட்டு நாளைக்கு காலையில் புறப்பட்டுடலாம்ன்னு சொன்னேன்…

    ராஜேந்திரன் கண்களை சிமிட்டினான்.

    அந்த இராத்திரி எப்போ…?

    அந்த வயித்தெரிச்சலை ஏண்டா கேக்கிறே…?

    ஏன்… என்னாச்சு…?

    இன்னும் ஒரு வாரத்துக்கு நாள் சரியில்லையாம்… ‘அஷ்டமி, நவமி, கரிநாள், கீழ்நோக்கு நாள்’ன்னு ஜோசியர் எதை எதையோ சொல்லி வர்ற ஞாயிற்றுக்கிழமைக்கு அந்த இராத்திரியை கொண்டு போயிட்டார். மனுசன் கைக்கு கிடைச்சா கட்டி வெச்சு உதைக்கணும் போலிருக்கு…

    பொண்ணோட பேரென்ன…?

    தாரா…

    மாடிப்படியில் ஏறினார்கள். பட்டு வேட்டியும் - அங்கவஸ்திரமும் அணிந்த ஒரு வழுக்கைத்தலை மனிதர் எதிர்பட - அழகிரி சொன்னான்.

    இவர் தாராவோட அப்பா… அந்த காலத்திலேயே ராஜா சர் பட்டம் வாங்கினவர்…

    வணக்கம் தம்பி…

    மாமா…! இவன்… எனக்கு நெருங்கின… சிநேகிதன். இராத்திரி ரெயிலை தவறவிட்டதால… முகூர்த்தத்துக்கு வரமுடியாமே போச்சு…

    அப்படியா… ரெண்டு நாளைக்கு முந்தியே வந்திருக்க வேண்டியதுதானே… தம்பி…?

    ஆபீஸ்ல லீவு கிடைக்கலை… சார்…

    இராத்திரிக்கு இருந்து விருந்து சாப்பிட்டுத்தான் போகணும்.

    பேஷா…

    மேலே போனார்கள். ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிற உறவுக்காரர்களின் கூட்டம் பரவலாய் தெரிந்தது.

    எங்கடா… உன் பெண்டாட்டி…?

    இதோ வந்துட்டோம்.

    மாடி வராந்தாவுக்கு வந்து - எதிர்பட்ட முதல் அறைக்குள் நுழைந்தான் அழகிரி.

    நான்கைந்து பெண்கள் சூழ உட்கார்ந்திருந்த – மணப்பெண் தாரா நாணத்தோடு எழுந்து நின்றாள். அழகிரி சிரிப்போடு சொன்னான்.

    இதுதாண்டா… என் பிரியத்துக்குரிய பெண்டாட்டி…

    தாராவை ஏறிட்ட ராஜேந்திரன் அதிர்ந்தான்.

    அழகாய் - செண்பகப்பூ நிறத்தில் இருக்கும் அழகிரிக்கு இப்படியா ஒரு பெண் மனைவியாய் வாய்க்க வேண்டும்…?

    கறுப்பாய் - முன்வரிசை பல் லேசாய் தூக்கிக்கொண்டு - சற்றே மேடான நெற்றியோடு - சதை பிடிப்பு இல்லாத உடம்பில் - ஏராளமான நகைகளை பூட்டிக்கொண்டு - எண்ணெய் வழிகிற முகமாய்-

    வணக்கம்…

    வணக்கம்…

    அழகிரி உற்சாகமாய் சொன்னான். தாரா! இவன் என்னோட நெருங்கிய நண்பன். பேர் ராஜேந்திரன்… என்கூட ஒண்ணா படிச்சான். படிக்கிற காலத்திலேயே… ஒரு பெண்ணை காதல் பண்ணி திருமணமும் செஞ்சு… இப்ப ஒரு குழந்தைக்கு அப்பா…

    ராஜேந்திரன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவஸ்தையாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

    ‘இந்த கரிக்கட்டையை மனம் ஒப்பி எப்படி கல்யாணம் செய்து கொண்டான் அழகிரி?’

    அழகிரி ராஜேந்திரனின் தோளில் தட்டினான். "என்னடா

    கிளம்பலாமா…? என் பெண்டாட்டி ரொம்பவும் வெட்கப்படறா…"

    வ…வர்றேன் சிஸ்டர்… ராஜேந்திரன் மறுபடியும் கைகளை குவித்து விட்டு வெளியே வந்தான்.

    வாடா… மொட்டை மாடிக்கு போயிடலாம்… ஒரு மணி நேரமா சிகரெட்டை தொடவே முடியலை…

    இருவரும் மொட்டைமாடிக்கு வந்தார்கள். அழகிரி சிகரெட் ஒன்றை உதட்டுக்கு கொடுத்துக்கொண்டே மவுனமாயிருக்கும் ராஜேந்திரனை ஏறிட்டான்.

    என்னடா… ஆள் என்னவோ மாதிரி ஆயிட்டே…?

    ஒ… ஒண்ணுமில்லையே…

    ஏண்டா உன்னோட முஞ்சியைப் பத்தி எனக்குத் தெரியாது? டூத்பேஸ்ட் தீர்ந்துபோன டியூப் மாதிரி ஆயிடுச்சி உன்னோட முகம்…

    அ… அழகிரி…

    ம்…

    எனக்கு அதிர்ச்சியா இருக்குடா...

    "எதுக்கு… அதிர்ச்சி…?

    நீ திருமணம் பண்ணிக்கிற விஷயத்தில் கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கலாம்…

    எதனால அப்படி சொல்றே…?

    தாரா உனக்கு ஏற்ற ஜோடி இல்லை…

    அழகிரி சிரித்தான். நீ நிறத்தையும் அழகையும் வைச்சு சொல்றேன்னு நினைக்கிறேன்! எனக்கு வர்ற பெண் அழகாய் இருக்கக் கூடாதுன்னு… புரோக்கர்கிட்டே சொல்லி நாலைஞ்சு பெண்களைப் பார்த்த பின்னாடிதான் இந்த தாராவை கல்யாணம் பண்ணிகிட்டேன்… கல்லூரி நாட்களில் இருந்தே என்னோட எண்ணங்களும், செயல்களும், வித்தியாசமானதுன்னு உனக்குத் தெரியும். அந்த வித்தியாசமான செயல்களில் இதுவும் ஒண்ணு… ஒவ்வொரு ஆணும் தனக்கு வரக்கூடிய பெண் அழகா இருக்கணும்ன்னு நினைச்சுட்டா… அப்புறம் தாரா மாதிரியான பெண்களுக்கு கல்யாணம் எப்படி ஆகும்…?

    ராஜேந்திரன் பெருமூச்சோடு தலையாட்டினான். நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் சரி… கல்யாண விஷயத்தில் நீ தப்பான முடிவை எடுத்துட்டே… இப்போதைக்கு இது ஒரு தியாகமா தெரியலாம்… ஆனா திருமணங்கிறது ஒரு நாளோடு முடிஞ்சு போயிடற விஷயமில்லை… வாழவேண்டிய நாட்கள் நிறைய இருக்கு…

    சரி சுவாமிகளே! உங்களுடைய உபதேசத்திற்கு நன்றி!

    அழகிரி! நான் சீரியசா பேசிட்டிருக்கேன்…

    "சரி… நானும் சீரியசாவே சொல்றேன்… அழகில்லாத தாராவை நான் கல்யாணம் பண்ணிகிட்டதுக்காக - என்னிக்குமே வருத்தப்படமாட்டேன். அவளும் நானும்

    Enjoying the preview?
    Page 1 of 1