Nilavey Mugam Kattu
By Devibala
5/5
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nilavey Mugam Kattu
Related ebooks
Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Unakkalla Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsNesam Nenjukkulle Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Pootha Nila Rating: 0 out of 5 stars0 ratingsUrugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Oru Vidhaiyin kathai! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Kannadi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsIni Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsVithi Pichai Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nilavey Mugam Kattu
1 rating0 reviews
Book preview
Nilavey Mugam Kattu - Devibala
http://www.pustaka.co.in
நிலவே முகம் காட்டு
Nilavey Mugam Kaattu
Author :
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
நிலவே முகம் காட்டு
என்னுரை
நிலவே முகம் காட்டு
உஷா வார இதழில் தொடராக வெளி வந்தது.
ஏற்கனவே அந்தப் பத்திரிகையில் பிச்சிப்பூ வச்சகிளி
தொடரின் மூலம் கணிசமான வாசகர்களை நான் பெற்றிருந்த நேரம் அது. வித்தியாசமான ஒரு முக்கோண காதல் கதை வேண்டும் என்று கேட்டார் அதன் உரிமையாளர் இயக்குநர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள்.
இயக்குநர் ஸ்ரீதர் காலத்திலிருந்தே முக்கோண காதல் கதை சினிமாவில் பிரசித்தம். நாவல் உலகத்தில் பிரபல நாவலாசிரியர்கள் எவருமே இந்த முக்கோணக் காதல் மயக்கத்திலிருந்து தப்பியதாக சரித்திரமே இல்லை!
என்னையும் இந்த மயக்கம் பற்றிக் கொண்டது.
சிந்திக்கத் தொடங்கினேன்!
காதலர்களை சமாதி கட்டிய காவியக் காதல்கள் உண்டு! அந்தக் காதலையே சமாதியாக்கினால் என்ற கேள்வி புறப்பட்டது.
அதுமட்டுமல்ல!
காதல் தோல்வியடைந்தாலும், இதயத்தில் குடியேறிய அந்த முதல் காதலை அத்தனை சுலபத்தில் யாராலும் உதற முடியாது என்பதுதான் நிஜம்!
இந்தக் கதையின் நாயகன், தன் காதல் நிறைவேறாது என்று தெரிந்ததும் நடந்தும் கனவுக் குடித்தனம்தான் அவனது காதலின் சிறப்பு.
தொடங்கும்போது வெகு சாதாரணமாக இருந்த இந்த நாவல், என்னை ஒரு மாதிரி ஆளத் தொடங்கி விட்டது. எழுத எழுத அதற்குள் ஐக்கியமாகி என்னை மறந்து எழுதிய நாவல் இது!
என்னை அது செலுத்தத் தொடங்கி விட்டது.
மடிசார் மாமிக்கு
பிறகு என்னை வெகுவாக பாதித்த என் படைப்பு இது!
பல இளம் வாசகர்களை எனக்குத் தேடித்தந்த புதினம் இது.
இந்த நாவலின் சிறப்பே –
முற்றிலும் எதிர்பாராத இதன் உச்ச கட்டம் தான்.
அதை எழுதிவிட்டு நானே வெகு நேரம் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்து விட்டேன். அதன் பாதிப்பும், ஏக்கமும் இன்னமும் நீங்கவில்லை என்கிறார்கள் வாசகர்கள் பலர்.
இந்த நிலவே முகம் காட்டு
நாவல்தான் சித்திரம் பேசுதடி
என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக சென்னைத் தொலைக் காட்சி முதல் அலைவரிசையில் பகல் நேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முடிவடையும் கட்டம்தான்.
கொஞ்சமும் பாசாங்கு கலக்காத, யதார்த்தமான காதல் கதை என்று வாசகர்களின் கடிதம் எனக்கு வந்த போதுதான் இதன் வெற்றியை நான் புரிந்து கொண்டேன்.
இந்த நல்ல காதல் நவீனத்தை புத்தகமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நர்மதா பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு நல்ல பதிப்பகத்தில் இந்த நாவல் வெளிவருவது இந்த நாவலுக்கும் பெருமை, அதை எழுதிய எனக்கும் சிறப்பு!
நன்றி!
தேவிபாலா
சென்னை – 17
நிலவே முகம் காட்டு
1
கௌரி ரெடியா சுசீலா?
ம்! ரெடியாயிட்டு இருக்கா.
அவளை நெருங்கிக் குரலைத் தழைத்துக் கொண்டான் சாரங்கன்.
அவளை எ...என்ன செஞ்சே?
பக்கத்து வீட்ல காலைல கொண்டு போய் விட்டாச்சு. அவங்க என்ன பண்றாங்களோ தெரியலை.....!
சமாளிப்பாங்க இல்லையா?
அதனால் தான் கொண்டு போய் விட்டேன்.
இதை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் சுசீ?
தெரியலை. கௌரி கழுத்துல தாலி ஏறட்டும். அதுவரைக்குமாவது மறைக்க முயற்சிப்போம்!
அண்ணி!
உள்ளேயிருந்து குரல் வந்தது.
வர்றேன் கௌரி!
சுசீலா உள்ளே வந்தாள்.
என்ன நீ? ஒரு அலங்காரமும் பண்ணிக்கலையா? பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாச்சு!
எனக்கு பயம்மா இருக்கு அண்ணி!
எதுக்கு?
முக்கியமானதை பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட மறைக்கறோம். நாளைக்குத் தெரிய வந்து ஏன் மறைச்சீங்கனு கேட்டா?
உன் கல்யாணம் முடியற வரைக்கும் தாண்டி. முதல் ரெண்டு முறை நிஜம் சொன்னோம். வந்த வரன் தட்டிப்போச்சு. இந்த நிலை தொடர்ந்தா நீ நின்னு போக வேண்டி வரும். அதனால தான் அவளை வீட்டுல வச்சுக்கலை. இப்போதைக்கு நிஜமும் பேசலை. புரியுதா?
எனக்கென்னவோ....
வாசலில் ஆட்டோக்களின் பிளிறல்.
சீக்கிரம் ஆகட்டும் கௌரி. நான் அவங்களை வரவேற்கப் போறேன்!
ஓடினாள் சுசீலா.
இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் சகிதம் அந்த இளைஞன் ஆட்டோவை விட்டு இறங்கினான்.
சாரங்கன் வரவேற்க, சுசீலாவும் வாசலுக்கு வந்து விட்டாள்.
ஆரம்ப அறிமுகம் எல்லாம் ஆனதும்,
பெண்ணை வரச்சொல்லுங்க!
கூட்டிட்டு வா சுசீ!
சுசீலா உள்ளே வந்தாள். கௌரி தயாராக இருந்தாள். காஃபி ட்ரேயைத் தர்றேன். எடுத்துட்டுப்போ கௌரி!
நாலு டம்ளர்களை ட்ரேயில் வைத்து லேசான நடுக்கத்துடன் கௌரி நடந்து வந்தாள். நமஸ்கரித்தாள்.
உட்காரம்மா இப்படி!
வயதான பெண்மணி அவளை உட்கார வைக்க, இன்னொருத்தி இளைஞனின் சகோதரி போலும்.... கௌரியைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.
எத்தனை வருஷமா வேலைக்குப் போறே?
டிகிரி முடிச்சதும் வேலை கிடைச்சாச்சு. நாலு வருஷம் சர்வீஸ் ஆயாச்சு!
பாடுவியா?
ம்! ஒரளவு!
சமைக்கத் தெரியுமான்னு கேளும்மா!
சுசீலா குறுக்கிட்டாள் ---
பிரமாதமா பண்ணுவா. வாரக் கடைசில எப்பவுமே அவ சமையல்தான் வீட்ல!
சாரங்கன் பக்கம் திரும்பினாள் அம்மா.
அப்பா, அம்மா இல்லையா?
இல்லை, பத்து வருஷம் முன்னால ஒரு விபத்துல காலமாயிட்டாங்க.
இந்த ஒரு தங்கைதானா உங்களுக்கு?
இல்லை... இன்னொருத்தி இவளை விட சின்னவள் உண்டு. மாமா வீட்டுக்கு போயிருக்கா.
அம்மா தன் மகனை திரும்பி பார்த்தாள்.
அவன் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
சரி! என் பிள்ளைக்குப் பிடிச்சிருக்கு. உனக்குப் பிடிச்சிருக்கா கௌரி?
கௌரி கூச்சத்துடன் தலையசைத்தாள்.
நீ போ கௌரி!
சாரங்கன் சொல்ல, அவள் எழுந்து உள்ளே வந்து விட்டாள்.
சரி மேற்கொண்டு பேசலாமா?
சொல்லுங்க!
சாரங்கன்! எங்களுக்கு ஒரே பிள்ளை. அதனால நிறையப் பேரை நாங்க அழைக்கணும் இந்தக் கல்யாணத்துக்கு!
அவசியம்தானே!
கையில பதினஞ்சாயிரம் குடுத்துடுங்க! நகைகள் முப்பது சவரன் போடணும். தவிர வைரத்தோடு சேலைகள் நல்லா வாங்கணும். மூணு சவரன்ல செயின் போட்டுடுங்க, தவிர மோதிரம், வந்தவங்களை பிரமாதமா கவனிக்கணும். சரியா?
சுசீலாவைப் பார்த்தான் சாரங்கன்.
உங்க மனைவியைக் கலந்துட்டு நீங்க பதில் சொல்லலாம். ஆனா நாங்க அதிகமா கேட்கலை!
சாரங்கன் மெலிதாகச் சிரித்தபடி உள்ளே வந்தான்.
இவங்க சொல்ற பட்ஜெட்டை நிறைவேத்தணும்னா மேலும் ஒரு லட்சம் கடன் வாங்கணும்ங்க. முடியுமா?
முடிஞ்சுதான் ஆகணும் சுசீ. எல்லாம் சரியா இருக்கு. நம்ம வீட்ல ஆயிரம் வில்லங்கம் இருக்கு. கௌரியை எத்தனை நாள் வீட்டுல வச்சுக்க முடியும். இவ ஒருத்தி கல்யாணம்தானே? செஞ்சிரலாம்.
சாரங்கன் வெளியே வரும் நேரம்.
பக்கத்து விட்டம்மா உள்ளே நுழைந்தாள்.
சுசீலா..... எங்களால ராதாவை வச்சிட்டு சமாளிக்க முடியலை. நீ உடனே வா!
சாரங்கனின் முகம் வெளிறி விட்டது. சுசீலாவைப் பார்த்தான்.
தோ வந்துட்டேன்மா!
சுசீலா அவசரமாக வெளியேற,
யாரு ராதா?
மெல்லிய குரலில் பிள்ளையின் அம்மா கேட்க, சாரங்கன் ஒரு நொடி தயங்கினான்.
எப்படியும் நாளை தெரிந்து விடும். அது இன்றே தெரிந்து விட்டுப்போகட்டுமே!
ராதா என்னோட ரெண்டாவது தங்கை!
மாமா வீட்டுக்குப் போயிருக்கறதா சொன்னீங்க மாமா வீடு பக்கத்துலதானா?
இ.... இல்லைம்மா.... அது வந்து....!
வாசலில் காலடி சப்தம் கேட்டது.
எல்லாரும் திரும்ப ---
அந்தப் பெண்ணைப் பிடித்த தரதரவென இழுத்தபடி சுசீலா வந்து கொண்டிருந்தாள்.
எ... என்னை விடு அண்ணி!
அவள் முரண்டு பிடிக்க,
சுசீலா அவளை உள்ளே கொண்டு போய்த் தள்ளி கதவைத் தாளிட்டாள்.
சிணுங்கியபடி கூடத்தைக் கடந்து போன ஒரு நொடியில் அவளை அத்தனை பேரும் கவனித்தார்கள்.
ஒரு தேவதை போலிருந்தாள்.
அழகென்றால் அப்படி ஒரு கொள்ளை அழகு.
சமீபத்தில் அத்தனை ஒரு வசீகரமான பெண்ணை நிச்சியம் பார்த்திருக்க முடியாது.
சுசீலா வெளியே வந்தாள்.
ஏன் அந்தப் பெண்ணை....?
சொல்றோம்மா, உங்ககிட்ட எதுக்காக மறைக்கணும்? என்ன லாபம் எங்களுக்கு?
சாரங்கன் கவலையுடன் சுசீலாவைப் பார்க்க,
அவளே தொடங்கினாள்.
ராதாவுக்கு மூளைக் கோளாறு உண்டு!
அ...அப்படியா?
ஆமாம், எட்டு வயசுல ஒரு மூளைக் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாய் ஆஸ்பத்திரில இருந்தா ஒரு மாசகாலம். அதுல மூளை பாதிக்கப்பட்டது.
இப்ப என்ன வயசு அந்தப் பொண்ணுக்கு!
இருபது!
பன்னிரண்டு வருஷமா பைத்தியமா இருக்காளா?
பைத்தியம்னு இல்லை....
மூளைக் கோளாறுன்னா பைத்தியம்தான். சிகிச்சை எதுவுமே நீங்க எடுக்கலையா?
சுசீலாவுக்கு எரிச்சலாக இருந்தது.
எடுக்காம இருப்பமா? தண்ணி மாதிரி பணம் செலவு பண்றார் இவர். கடவுள்தான் வழிகாட்டணும்!
நம்பி! போகலாமா?
மேற்கொண்டு பேசாம போறீங்களே!
இனி பேச எதுவும் இல்லை. எனக்கு மறைச்சுப் பேசிப் பழக்கமில்லை. நீங்க வேற இடம் பார்த்துக்கலாம்!
அம்மா ஒரு நிமிஷம்!
சுசீலா அருகில் வந்தாள்.
என்ன?
நீங்க மருமகளா ஒப்புக்கப் போறது கௌரியை. அவ நல்லாத்தானே இருக்கா. உங்களுக்குப் பிடிச்சும் இருக்கு. அப்புறம் ஏன் நிறுத்தறீங்க இதை!
ஒரு பொண்ணைக் கட்டிக்கும் போது அவளை மாத்திரம் பார்த்தாப் போதுமா? தங்கச்சி பைத்தியம்!
ப்ளீஸ்மா, அப்படி சொல்லாதீங்க. சரி, நீங்க அப்படியே சொன்னாலும் ராதா எங்க கூடத்தானே இருக்கா. உங்களை, கௌரியை எந்த விதத்துல அது பாதிக்கும்?
நல்லா இருக்கே! நாளைக்கு பைத்தியகார மச்சினி ஒருத்தி என் பிள்ளைக்கு இருக்கறதா எல்லாரும் பேசினா, அவன் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?
அதனால?
இந்த வரன் வேண்டாம். நாங்க வர்றோம்!
ஒரு நிமிஷம்!
என்ன?
இன்னும் பத்த சவரன் போட்டு கையில மேலும் இருபதாயிரம் தந்தா கட்டிப்பீங்களா எங்க கௌரியை?
என்ன திமிர்? என் பிள்ளையை விலைக்கு வாங்கற உத்தேசமா?
கையில பதினஞ்சாயிரம், முப்பது சவரன் நகை இதெல்லாம் நீங்க பேசினா அது வியாபாரமில்லையா? நாங்க அதிகப் பணம் தந்தா பிள்ளையை விலை பேசத்தான் செய்வோம்!
சுசீலா!
சாரங்கன் கர்ஜிக்க,
அவர்கள் எழுந்து போய் விட்டார்கள்.
என்ன பேசற நீ!
என்னங்க! வாய்க்கு வாய் பைத்தியம்னு நம்ம ராதாவை அவங்க மட்டும் பேசலாமா?
சொல்லிவிட்டு சரேலென அழத்தொடங்கினாள் சுசீலா.
கௌரி வெளியே வந்தாள்.
அண்ணீ!
சுசீலாவின் அழுகை பெரிதானது.
இந்த வரன் போனாப் போகட்டும் அண்ணி!
ராதாவை மத்தவங்க கண்டபடி பேசினா, என்னால தாங்க முடியலைடி கௌரி!
உண்மை அது தானே, அண்ணீ!
அவளை வச்சிட்டு உன்னை நான் எப்படி கரையேத்தப் போறேன்னு தெரியலை!
இப்ப நான் கடல்ல நிக்கல அண்ணி. விட்டுத் தள்ளுங்க!
கௌரி போய் பக்கத்து அறைக் கதவைத் திறக்க,
ராதா வெளிப்பட்டாள்.
ஹய், நெய் வாசனை மூக்கை துளைக்குது!
சமையல் கட்டுக்குள் நுழைந்தாள். கொஞ்சம் கேசரியை அள்ளிப் போட்டுக் கொண்டு கூடத்தக்கு வந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டாள்.
சுசீலா வந்தாள். எதிரே உட்கார்ந்தாள்.
ராதா!
நிமிர்ந்தாள்.
என்ன அண்ணி?
காலைல உன்னைக் கொண்டு போய் அந்த மாமி வீட்ல விடும்போது நான் என்ன சொன்னேன்?
என்ன சொன்னே?
நீ நல்ல பெண்ணா இருக்கணும். யார் தொந்தரவுக்கும் போகக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?
ம்!
பின்ன ஏன் கலாட்டா பண்ணினே?
நான் பண்ணலையே!
பொய் சொல்லக் கூடாது ராதா.
இல்லை அண்ணி. நான் யாரையும் கஷ்டப்படுத்தலை. அந்த மாமியோட மகன் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டுத்தானே இருந்தேன், அதுவும் உன் அறைல!
என்ன விளையாடினே?
அவன் வந்தான். மாமி கோயிலுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. உள் ரூம்ல நான் வீடியோ பார்த்துட்டு இருந்தேன். அவன் நுழைந்தான்.
தனியா இருக்கியா ராதா?
ம்!
இப்ப ரெண்டு பேரும் ஒரு விளையாட்டு விளையாடலாமா?
என்ன விளையாட்டு?
நான் செய்யற மாதிரியெல்லாம் நீ செய்யணும்!
சரி!
சட்டையை அவன் அவிழ்த்தான்.
அவள் கொஞ்சமும் யோசிக்காமல் தாவணியை அவிழ்த்து மறுபுறம் வீசினாள்.
வெரிகுட். இப்ப கவனி!
உள்பனியனை அவிழ்த்தான்.
நான் எதைக் கழட்டறது?
ரவிக்கையை!
சரி!
வெகு இயல்பாக தன் ரவிக்கையை அவிழ்த்து வீசிவிட்டு ப்ராவுடன் அவள் நிற்க,
இப்பப் பாரு!
தன் கால் சட்டையை அவன் கழட்டி விட்டு ஷார்ட்ஸூடன் அவளை வேகமாக நெருங்கினான்.
நானே கழட்டி விட்டுடவா?
உரிமையுடன் அவள் ப்ரா ஹூக்கில் கையை வைத்தான்.
உற்சாகமாக அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு ராதா நிற்க, கதவு தட்டப்பட்டது.
2
அவசரமாக அவள் மேல் தாவணியை வீசிவிட்டு அவன் எழுந்து போய் கதவைத் திறந்தான்.
கதவைச் சாத்திட்டு என்ன பண்ற நீ? ராதா எங்கே?
உள் பக்கம் கைகாட்டி விட்டு அவன் விலக,
அந்தம்மா எட்டிப் பார்த்தாள். பாதி அவிழ்ந்த பிராவுடன் ராதா தலையைச் சொறிந்து கொண்டு சிரிக்க,
என்னடி இது கோலம்?
போங்க ஆன்ட்டி! பாதி விளையாட்டுல உங்க பிள்ளை என்னை விட்டுட்டுப் போயிட்டான்!
அடிப்பாவி! எதுவும் நடக்கலை! நான் தப்பிச்சேன். எதாவது நடந்திருந்தா, உங்க அண்ணிக்கு எப்படி நான் பதில் சொல்வேன்?
-- அப்படீன்னு கேட்டுட்டு அந்தம்மாதான் இங்கே ஓடி வந்தாங்க அண்ணி, நான் ஒரு தப்பும் செய்யல!"
சுசீலாவும், சாரங்கனும் வெளிறிப் போயிருந்தார்கள். சற்றுத் தள்ளி கௌரியும் நின்று கொண்டிருந்தாள்.
அண்ணி!
ம்!
நீ சில சமயம் ப்ராவுக்கு ஹூக் போடுவியே எனக்கு!
ம்!
அப்பல்லாம் நல்லாவே இல்லை. அந்த ஆன்ட்டியோட பிள்ளை தொட்டப்ப நல்லா இருந்தது. பாதில விளையாட்டு நின்னு போச்சு.
ராதா!
சாரங்கன் கர்ஜிக்க,
நீங்க வாங்க! கௌரி, ராதாவுக்கு டிபன் எடுத்துக் குடு!
சுசீலா மொட்டை மாடிக்கு படியேறினாள். சாரங்கன் பின்தொடர்ந்தான்.
வெயில் குறைந்து லேசான மழையின் ஆரம்பம் இருந்தது.
இத்தனை நாளைக்கு இல்லாத பயம் இப்ப வந்திருக்கு சுசீ எனக்கு.
என்ன பயம்?
இவளை எப்படி பாதுகாக்கப் போறோம்?
சுசீலா பேசவில்லை.
மண்டைல தெளிவில்லை. ஆனா உடம்புக்கு அது தெரியுமா?
அதுக்காக அவனைப் பூட்டி வைக்க முடியுங்களா!
பூட்டத்தான் வேணும்!
கூச்சல் போடுவா, எட்டு ஊருக்குக் கேட்கும். இன்னும் தெருவுல நம்ம பேர் நாறும்!
வேற வழியில்லை சுசி!
த பாருங்க! நீங்களும் கௌரியும் விடிஞ்சா ஆபீஸ் போயிடுவிங்க. நானில்லை இவளைக் கட்டிட்டு அழ வேண்டியிருக்கு!
நிஜம்தான் சுசீலா. நீ இந்த வீட்டுக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. உனக்குன்னு ஒரு சுகமும் இல்லை. நமக்கொரு பிள்ளையும் பிறக்கலை. என் தங்கைகளைக் கட்டிட்டு அழ உனக்கென்ன தலையெழுத்து?
என்னப்பா பேசறீங்க?
நிஜம்தானே சுசிலா
நான் பேசினதை நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க. நான் சலிப்புல சொல்லலை. வேதனைல சொன்னேன். ரெண்டு பொண்ணுகளையும் எப்படி வாழ வைக்கப் போறாம்னு தெரியலை. தவிக்குது மனசு. இந்தக் குடும்பத்துல உயிரையே வச்சிருக்கேன். நாத்தனார்களை என் சொந்த தங்கைகளாகத்தான் நினைக்கிறேன். ஒரு நிமிஷத்துல பிரிச்சிட்டீங்களே!
ஸாரிமா!
அவளை நெருங்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். ஒரு நொடி போல அவன் மார்பில் சரிந்தவள், சட்டென விடுபட்டாள்.
ஏன் சுசி?
ஏற்கனவே சரியில்லை ராதா, இதை வேற பார்க்க வேண்டாம். நாளைக்கே டாக்டர் கிட்டப் போகணும்!
எதுக்கு சுசி?
சொல்றேன்!
அவள் பிறகு சொல்வாள் என்று சாரங்கன் விட்டு விட்டான். மறுநாள் காலை ராதாவைத் தயார் செய்தாள் சுசீலா.
எங்கே அண்ணி போறோம்?
கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது. பேசாம வரணும் என்கூட!
சரி!
நான் ஆபீஸ் போறேன் அண்ணி!
கௌரி புறப்பட்டுப் போய்விட்டாள்.
என்னங்க! நீங்க ரெடியா?
வந்துட்டேன் சுசிலா!
அரை மணி நேரத்தில் அந்தமனோதத்துவ க்ளினிக் வாசலில் இருந்தார்கள்.
டாக்டர் இன்னும் வரலை, உட்காருங்க!
இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள்.
எதிரே உட்கார்ந்திருந்த குழந்தை பழிப்பு காட்ட, ராதாவும் தொடங்கி விட்டாள்.
அது கையை ஆட்டியது.
இவளும் அதையே செய்தாள்.
ராதா சும்மாயிரு!
சுசிலா அதட்டல் போட, ராதா அடங்கிப் போனாள்.
டாக்டர் வந்துவிட்டார். ஐந்து நிமிடங்கள்.
சாரங்கன் யாரு?
இவர்கள் மூவரும் எழுந்து உள்ளே போனார்கள்.
வாங்க! எப்படியிருக்கா ராதா?
அப்படியேதான் இருக்கா டாக்டர்!
"மருந்துகளையெல்லாம் தந்துட்டு வர்றீங்க இல்லையா?
ஆமாம் டாக்டர்!
நர்ஸ்!
அவர் அழைக்க, நர்ஸ் ஓடி வந்தாள்."
இந்த பொண்ணைக் கூட்டிட்டுப் போங்க. ஒரு ஸ்கேன் பாத்துரலாம்!
வாம்மா!
எங்கே கூட்டிட்டுப் போறே?