Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesam Narumanamai
Nesam Narumanamai
Nesam Narumanamai
Ebook95 pages47 minutes

Nesam Narumanamai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580109901443
Nesam Narumanamai

Read more from Kanchana Jeyathilagar

Related to Nesam Narumanamai

Related ebooks

Reviews for Nesam Narumanamai

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesam Narumanamai - Kanchana Jeyathilagar

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நேசம் நறுமணமாய்

    Nesam Narumanamai

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    மாடியிலிருந்து இறங்கிய அகிலா, தன் வீட்டின் வரவேற்பறையை ஒரு நோட்டமிட்டாள் சோபாவில் சரிந்திருந்த ஒரு பட்டு குஷனைக் கச்சிதப்படுத்தினாள்

    ஐம்பது வயதிற்கு அவளது தோற்றமுமே வெகு கச்சிதம்தான். ஊளை சதை வழியாத உடம்பில் உயர்தரப் பருத்திப் பட்டு. கழுத்தில் வைர முகப்பிட்ட தாலி. அதற்குப் பொருந்தும் கம்மல்கள். கையில் முத்து கோர்க்கப்பட்ட தங்க வளையல்கள். ரிம்லெஸ் மூக்குக் கண்ணாடி. நரைகள் மறைக்கப்பட்ட கூந்தலை சீராக வெட்டி கிளிப்பிற்குள் அடக்கியிருந்தாள்.

    பளபளத்த தன் வீட்டை தனி கர்வத்துடன் பார்த்தவளுக்கு எதுவும் நலுங்காதிருக்க வேணும்.

    உயர்தர நேர்த்தியிலிருந்து சிறிதும் மாறக்கூடாதென்ற பிடிவாதமுண்டு. படுத்து எழுந்த பத்தாம் நிமிடம் அவளது படுக்கை சீராக்கப்பட்டு விடும். சமையலுக்கு வேலையாள் உள்ளதால் அகிலாவிற்கு இதுதான் வேலை. தவிர வீட்டைக் கலைத்துப் போட்டு விளையாட இங்கே சிறு குழந்தைகளும் கிடையாதே.

    அவள் கணவர் முன்னணி தொழிலதிபர். இத்தம்பதிகளுக்குத் தோளை மிஞ்சிய இரு மகன்கள். மூத்தவன் கல்யாண வயதில்.

    அகிலாவிற்குமே வெறும் வீட்டை சிங்காரித்து அலுத்துவிட்டது. தளிர்நடைப் பழகியபடி, அத்தனையையும் கலைத்து சிரிக்க பேரப் பிள்ளைகள் வந்தால்தான் வீடு நிறைவாகுமோ என்றொரு சந்தேகம் அவளுக்குள் சமீபமாய்!

    தயாரான காலை உணவை வடிவான பீங்கான் பாத்திரங்களில் வைத்தவள், ஒரு ஆப்பிளை நறுக்கி மலரிதழ்போல பரப்பி வைத்தாள்.

    அடடே! இன்னைக்கு பூரிக் கிழங்கோடு முட்டைப் பொரியலா. க்ரேட் ஒரு பிடி பிடிச்சுடறேன். என்றபடி வந்தமர்ந்த மூத்தவனை முறுவலுடன் பார்த்தாள்.

    எங்கிருந்து திலீபனுக்கு இப்படியான உயரமும், கவர்ச்சியும் அமைந்தன? இவளும், கணவர் ராஜேந்திரனும் சாதாரண தோற்றமுள்ளவர்கள்தான். அகிலாவின் மாமனார் வாட்டசாட்டமானவர். இவள் தாயாரின் முக அம்சம் அலாதி. ஆக அந்த மரபணுக்களைப் பொறுக்கி தனதாக்கிக்கொண்டு பிறந்த பிள்ளை இவன்.

    இவர்களின் சமூகத்தில் இதற்குத் தோதான பெண் அமைவது சுலபமில்லை. சீக்கிரமே தேட ஆரம்பித்தால்தான் சிக்குவாள்!

    இன்னைக்கு சீக்கிரமே ரெடியாகிட்டே திலீப்?

    சீக்கிரமே ஆபீஸ் போனால்தான் வேலை கொஞ்சமேனும் நடக்குதும்மா. இல்லைன்னா, ‘ஹிஹறி சும்மா உங்களைப் பார்த்துட்டுப் போக வந்தேன்’னு நாலு பேர், ‘டொனேஷன்’னு ரெண்டு பேர் வர, மீதி நேரம் தபால்களைப் பார்த்து பதிலளிக்க, பேங்க் வேலைகள்னு நழுவிடுதே.

    சாப்பிட்டபடி பேச்சு தொடர்ந்தது,

    லஞ்ச்சிற்கும் நீ இப்பெல்லாம் வீடு வர்றதில்லையே திலீப். குறைபட்டாள் தாய்.

    டிராஃபிக் பயங்கரம்மா… போக, வர முக்கால் மணிநேரம் அவுட், அதான் ஆபீஸ் கான்ட்டீனில் ஒரு ஸாண்ட்விச்சோடு முடிச்சுக்கறேன். கூடவே ஒரு ஆரஞ்சு பழம், பிறகு காபி.

    உனக்கு பெண்டாட்டி வந்தால்தான் நீ வழிக்கு வருவேடா.

    அதுக்கு இன்னும் மூணு, நாலு வருஷம் போகணும்மா. இப்பவே ஏன் இந்த சின்ன, செல்லப் பையனை இப்படி பயமுறுத்தறிங்க?

    சிரித்தவனின் சீரான பல்வரிசையை பெருமிதமாய் பார்த்தாள் பெற்றவள். இதற்காகவே பெண் வீட்டார் வரிசையில் நிற்பார்களே!

    யாருடா சின்ன பையன்? உனக்கு வயசு 27. செல்லந்தான் கொஞ்சம் அதிகமாத் தந்துட்டேன்.

    ஸோ?

    இப்படி முரண்டு பிடிக்கறே. முன்னேல்லாம் பிஸினஸ் குடும்பங்களில் பசங்களுக்கு 24 வயசிலேயே கல்யாணமாயிடும்.

    அது சதி!

    சதின்னா, உடன்கட்டை ஏறுறதுடா

    மகன் தாயின் வேடிக்கைப் பேச்சை ரசித்துச் சிரித்தான்.

    அந்த வயசிலே, அதாவது இருபது அல்லது பதினெட்டு வயசுப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி ஆரம்பிக்கும் வாழ்க்கை பரிதாபம்மா. வாழ்க்கைன்னா என்ன, ஏதுன்னு புரிபடுவதற்கு முன், அதாவது நீச்சல் தெரியாதவனைத் தண்ணில் தள்ளுவதுபோல பரிதாபம்.

    போடா கோமாளி. தண்ணீரில் விழுந்தால்தானே நீந்தப் பழகலாம்? கண்களை உருட்டினாள் அகிலா.

    பாவம்மா அப்பா இன்னுமே தத்தளிச்சிட்டிருக்கார்!

    ஒரு ஆப்பிள் துண்டை மென்றபடி நமட்டமாய் சிரித்தான்.

    ரொம்ப பேசாதே. அப்புறம் கடுமையான பெண்டாட்டி வருவா. உன்னை சமாளிக்கறதுபோல.

    என்னம்மா, இன்னைக்குக் கல்யாண பேச்சு ஜாஸ்தியாயிருக்குது?

    தனியேயிருந்து எனக்கு அலுத்துருச்சுடா… மூணு ஆண்களோடு இருந்து சலிச்சிருச்சு.

    "சண்டை போட்டு வாழ்வை சுவாரஸ்யமாக்க மருமகள்

    Enjoying the preview?
    Page 1 of 1